Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Neenga Yaar Pakkam?
Neenga Yaar Pakkam?
Neenga Yaar Pakkam?
Ebook103 pages1 hour

Neenga Yaar Pakkam?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வாரிசுகள் வெளிநாட்டில் இருந்தால் அவர்களின் அழைப்பின் பேரில் பெற்றவர்கள் அங்கு போவது இயல்பு. ஆனால் சிவராமன் அதற்கு நேர் எதிர். வெளிநாட்டில் இருக்கும் மகன் அவரை வரும்படி அழைக்கிறான்.. அவர் மைலாப்பூர் தான் யதாஸ்தானம் என்று போக மறுக்கிறார்.. இவர்களின் மோதலை நகைச்சுவையாக சித்தறிப்பதே நீங்க யார் பக்கம் என்ற நாடகம். திரு. காத்தாடி ராமமூர்த்தி அவர்களின் “ஸ்டேஜ் க்ரியேஷன்ஸ்” குடும்பத்தினரால் பல பல மேடைகளைக் கண்ட.. விருதுகளைக் குவித்த மேடை நாடகம்.

Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580142306696
Neenga Yaar Pakkam?

Read more from Sl Naanu

Related to Neenga Yaar Pakkam?

Related ebooks

Reviews for Neenga Yaar Pakkam?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Neenga Yaar Pakkam? - SL Naanu

    https://www.pustaka.co.in

    நீங்க யார் பக்கம்?

    Neenga Yaar Pakkam?

    Author:

    SL நாணு

    SL Naanu

    For more books

    https://www.pustaka.co.in/home/author/sl-naanu

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    காட்சி-1

    காட்சி-2

    காட்சி-3

    காட்சி-4

    காட்சி-5

    காட்சி-6

    காட்சி-7

    காட்சி-8

    காட்சி-9

    காட்சி-10

    காட்சி-11

    காட்சி-12

    காட்சி-13

    காட்சி-14

    காட்சி-15

    காட்சி-16

    காட்சி-17

    காட்சி-18

    சமர்ப்பணம்

    என்னை இந்த உலகுக்கு அறிமுகப்படுத்திய எனது தகப்பனார் திரு. சகஸ்ரநாமன் மற்றும் எனது தாயார் திருமதி சிவகாமி அவர்களுக்கு

    காட்சி-1

    இடம்: சிவராமனின் வீடு

    பாத்திரங்கள்: 1. சிவராமன், 2. லலிதா, 3. ராகவன், 4. சுரேஷ், 5. நந்தினி

    (நடுத்தர வர்கத்தின் வீட்டிற்கான அமைப்பு. சுவரில் சுவாமி படங்கள் .... மேடையின் வலது பக்க மூலையில் சின்னப் பகுதியாக திரை போடப் பட்டிருக்கிறது. காட்சியின் ஆரம்பத்தில் பின்னணியில் நாதஸ்வரம் ஒலிக்கிறது.... ராகவன் அவசரமாக வெளியிலிருந்து வந்து)

    ராகவன்:(உள்ளே பார்த்து)லலிதா! . லலிதா!.... ஆரத்தி ரெடியா?

    (லலிதா உள்ளிருந்து வந்து)

    லலிதா: எப்பவோ ரெடி....

    ராகவன்: மாலை .... ஸ்வீட்லாம் ரெடியா?

    லலிதா: அண்ணா ... ஏதோ கல்யாணமாகி புது மாப்பிள்ளை வர மாதிரினா கேட்டிண்டிருக்கே?

    ராகவன்: வரது யாரு? சிவராமன் .... உன் ஹஸ்பெண்ட்!! சாதாரணமா வந்தாப் பரவாயில்லை ... ஆனா இன்னிக்கு ......

    (என்றவுடன் வாசலில்பேண்ட் வாத்தியம் கேட்க லலிதா உள்ளே சென்று ஆரத்தி எடுத்து வர சிவராமன் தலையில்கிரீடம், கழுத்தில் மாலை, தோளில் சால்வை, கையில் பூச்செண்டு மற்றும் ஒரு பெரியபரிசுப் பெட்டியுடன் வெளியே பார்த்தபடி பேசிக்கொண்டு வந்துக் கொண்டே)

    சிவராமன்: தேங்ஸ்பா ... ரொம்ப தேங்ஸ்... இனிமே நான் பார்த்துக்கறேன்....

    (என்றதும் லலிதா ஆரத்தி எடுக்க)

    ராகவன்: என்ன சிவராமா? ஆபீஸ்ல ரிடையர்மெண்ட் பார்ட்டி நன்னா நடந்துதா?

    சிவராமன்: என்னைப் பார்த்தாலே தெரியலை? இந்த கிரீடம், மாலை, சால்வை... அட்டகாசம் போ....

    லலிதா: ஏன்னா.... இதுக்கெல்லாம் எவ்வளவு பணம் கொடுத்து வாங்கினேன்?

    சிவராமன்: ஏய்... இதெல்லாம் நான் வாங்கலை... ஆபீஸ்ல கொடுத்தா...

    லலிதா: சரி.... அதுக்காக... இது எல்லாத்தையும் மாட்டிண்டேவா தெருவுல வந்தேள்?

    சிவராமன்: பின்ன? எல்லாருக்கும் தெரியவேண்டாமா... நான் ரிடையர் ஆயிட்டேன்னு ...

    ராகவன்: ஏண்டா.... இதென்ன பத்மபூஷன் விருதா.... எல்லாருக்கும் தெரியப் படுத்த?

    சிவராமன்: அடப்போடா.... ரிடையர் ஆறதுங்கறது எவ்வளவு பெரிய விஷயம்? அதுவும் முப்பத்தஞ்சு வருஷம் சர்வீஸ் போட்டுட்டு இன்னிக்கு ரிடையர் ஆகி வந்திருக்கேன். அதை அனுபவிக்க வேண்டாமா? ஆபீஸ்ல கார்ல டிராப் பண்ணறேன்னு சொன்னா.... நான் வேண்டாம்னுட்டேன்.... தெருவுலநான் இப்படியே நடந்து வர.... எனக்கு முன்னால் என் கலீக்ஸ் ஏற்பாடு பண்ணியிருந்த பேண்ட் பார்ட்டி பேண்ட் வாசிச்சிண்டே வர.... அப்படியே பார்க்க...

    லலிதா: கோமாளித்தனமா இருந்திருக்குமே...

    சிவராமன்: நீ வேற.... எல்லாரும்ஆச்சர்யமாப் பார்த்தா .... சில பேர் நான் ஏதோ அரசியல் தலைவர்னு நினைச்சு என் காலுல விழுந்துட்டுப் போனா ... நான் யாருன்னு தெரியாமலயே வாழ்க கோஷம் போட்டுண்டு என் பின்னால்ல ஒரு கும்பல்....

    ராகவன்: வெரி குட்.... ரிடையர் ஆயாச்சு ... கும்பல் சேர்க்க ஆரம்பிச்சுட்டே... பேசாம அரசியல்ல சேர்ந்துரு....

    லலிதா: ஆமா.... அது ஒண்ணு தான் குறைச்சல்....

    சிவராமன்: லலிதா... ரிடையர்மெண்ட் பார்ட்டிக்கு நீ வராம போயிட்டியே.... நீ மட்டும் வந்திருந்தா...

    லலிதா: என் தலைலயும் ஒரு கிரீடத்தை வெச்சு கோமாளித் தனமா தெருவுல நடக்க விட்டிருப்பேன் விட்டிருப்பேள்.

    சிவராமன்: அதெல்லாம் அநாவசியமா மத்தவாளுக்கு செலவு பண்ண மாட்டா... சொல்றதை கேளு... என்னைப் பத்தி எல்லாரும் புகழ்ந்து பேசினதைக் கேட்டா நீ அசந்து போயிருப்போபோயிருப்பே.... ஒரே சமயத்துல இவ்வளவுபேரால் இவ்வளவுபேரால எப்படி பொய் சொல்ல முடிஞ்சுதுன்னு எனக்கே ஆச்சர்யமா இருந்தது... பிரமாதமா கவிதைலாம் வேற படிச்சா.... ஆனா அர்த்தம் தான் புரியலை... எழுதினவனைக் கேட்டேன்...அவன் தனக்கும் தெரியலைன்னுய சொல்லிட்டான்....

    லலிதா: ஹும்.... வழக்கமா எல்லாரும் ரிடையர் ஆனா ரிடையர் ஆயிட்டோமேன்னு டல்லா வருவா.... இப்படி தடபுடலா ஆரவாரத்தோட வரது இவரா மட்டும் தான் இருக்கும்.

    ராகவன்: இல்லையா பின்ன? இந்த நாளுக்காகத் தானே சிவராமன் காத்திண்டிருந்தான்....

    லலிதா: ஆபீஸ்ல இவருக்குரெண்டு வருஷம் extension தரேன்னு சொன்னாளாம்... அதுக்கு இவர் உங்க extension யாருக்கு வேணும்? எனக்கு ரிடையர்மெண்ட் தான் வேணும்னு சொல்லியிருக்கார்... இப்படியும் யாராவது இருப்பாளா?

    ராகவன்: அதான் சிவராமன்.... One and only Sivaraman... சிவராமா எது எப்படியோ.... நீ ஆசைப் பட்ட மாதிரியே ரிடையர்ஆயாச்சு ...

    சிவராமன்: ஆசைப் படலை....ஏங்கிண்டிருந்தேன், என்னிக்கு இந்த நாள் வரப் போறதுன்னு...

    ராகவன்: எனக்குத் தெரிஞ்சுரிடையர்மெண்டுக்கு ஏங்கின முதல் ஆள் நீ தான் ....

    சிவராமன்: பின்ன சும்மாவா? பதிமூணு வயசுல உழைக்க

    Enjoying the preview?
    Page 1 of 1