Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaliyuga Raavanan
Kaliyuga Raavanan
Kaliyuga Raavanan
Ebook76 pages31 minutes

Kaliyuga Raavanan

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்த உலகில் பிறக்கும் அனைத்து மனிதர்களுமே நல்லவர்கள் தான். இங்கு அவர் அவர் எதிர்கொள்ளும் சூழ்நிலைகளும் அதன் விளைவால் அவர் செய்யும் செயல்களுமே தாம் யார் என்பதை உலகத்திற்கு வெளிச்சமிட்டு காட்டுகின்றன. இந்த சமூகத்தில் ஒருவன் குற்றவாளி ஆகிறான் என்றால் அதற்கு அடிப்படை காரணம் சமூகத்தின் ஒரு அங்கமாக இருக்கும் நாமாக தான் இருப்போம். உழைத்து வாழ எண்ணும் ஒருவனுக்கு வேலையும் உணவும் மறுக்கப்படும் போது தான் அவன் திருட தொடங்குகிறான். இங்கேயும் ஒருவன் திட்டமிட்டு திருட எண்ணுகிறான். அவனுக்கு அவ்வாறு திருட வேண்டும் என்ற எண்ணம் எவ்வாறு எழுந்தது...???? அதற்கு முதலில் பிள்ளையார் சுழி போட்டது யார்...??? என்பதை விளக்குவதே இந்த "கலியுக ராவணன்" கதையின் சாராம்சமாகும்...

வாருங்கள் பயணிப்போம்

Languageதமிழ்
Release dateSep 28, 2021
ISBN6580148307502
Kaliyuga Raavanan

Related to Kaliyuga Raavanan

Related ebooks

Reviews for Kaliyuga Raavanan

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaliyuga Raavanan - Saroshva

    https://www.pustaka.co.in

    கலியுக ராவணன்

    Kaliyuga Raavanan

    Author:

    சரோஷ்வா

    Saroshva

    For more books

    https://www.pustaka.co.in/home/author/saroshva

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    பாகம் – 1

    பாகம் – 2

    பாகம் – 3

    பாகம் – 4

    பாகம் – 5

    பாகம் – 6

    பாகம் – 7

    பாகம் – 8

    பாகம் – 9

    பாகம் – 10

    பாகம் – 11

    பாகம் – 12

    பாகம் – 13

    என்னுரை

    இக்கதைக்கு இன்று வரை பேராதரவு தந்து கொண்டிருக்கும் வாசக பெருமக்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

    ஒரு சிறந்த எழுத்தாளன் என்பவன் வாசகர்களால் உருவாக்கப்படுகிறான், என்ற கோட்பாட்டின் அடிப்படையில் உங்களால் செதுக்கப்பட்டவன் நான். இக்கதைக்கு கிடைக்கும் வெற்றியானது என் விரல்களை அடுத்தடுத்த பாகங்கள் எழுத ஊக்கமளித்த வாசக நெஞ்சங்களையே சாரும்.

    தாங்கள் அனைவருக்கும் என் எழுத்தின் மேல் நம்பிக்கை இருக்கும் பட்சத்தில் எனது அடுத்த படைப்பினையும் உங்கள் பேராதரவுடன் தொடங்க சித்தமாய் உள்ளேன்.

    தங்களின் மதிப்பு மிக்க மேலான கருத்துக்களை இங்கே தவறாது பதிவு செய்யவும்.

    நன்றி

    பாகம் – 1

    உள்ள வாங்க சார், இன்டர்வியூக்காக வந்திருக்கீங்களா?

    ம்ம்ம்ம்... ஆமா... இன்டர்வியூ எத்தனை மணிக்கு ஸ்டார்ட் ஆகும்?

    9 மணிக்கு HR வருவாங்க..10 மணிக்கு ஸ்டார்ட் ஆகும்? ஏன் சார் உங்களுக்கு வெளில வேற எதும் வேலை இருக்கா என்ன?

    அதெல்லாம் ஒன்னும் இல்ல, ஹோட்டல் போய் சாப்பிட்டு வரலாமேன்னு நினைச்சேன் அதான்

    தாராளமா சார்... இன்டர்வியூக்கு இன்னும் டைம் இருக்கு நீங்க போய் சாப்பிட்டு வர்றதா இருந்தா சாப்பிட்டு வாங்க என்றான் குமார்.

    சரியாக 9.30 மணியளவில் குமார் அங்கு வந்த அனைவரிடமும் இன்டர்வியூக்கு யாரு முதல்ல வந்தீங்களோ அவங்கள்ள இருந்து மத்த எல்லாரும் ஒருத்தர் பின் ஒருத்தரா வரிசையா உட்காருங்க. HR வர்ர நேரமிது

    அவன் சொன்னபடி அனைவரும் வரிசையாக ஒருவர் பின் ஒருவராக அமர்ந்தனர்.

    10 மணி ஆனது, HR சுந்தரம் தம் அறைக்கு வருகை தந்தார்.

    சார் நீங்கதான் காலையில இன்டர்வியூவுக்கு முதல்ல வந்தீங்க, நீங்க உள்ள போகலாம்

    அவன் உள்ளே சென்று பணிவாக அமர்ந்தவனாய் சுந்தரத்திடம் தனது சான்றிதழ்களை கொடுத்தான்.

    அதை வாங்கி பார்த்த அவர் அதில் உள்ள பெயரினை கண்டு விழிகளை விரித்தவராக.

    ராவணன்... உங்க பேரே அதிரும்படியா இருக்கே.. நீங்க இலங்கைய சேர்ந்தவரா? என்றார்.

    இல்ல சார்... எனக்கு பூர்வீகமே சென்னை தான்… என் அப்பா தமிழ் மீது அதிக ஈடுபாடு கொண்டவர். அவர் கம்பராமயணத்துக்கு விளக்க உரை எழுதும் போது ராவணனின் மீது கொண்ட ஈர்ப்பின் காரணமாக எனக்கு இந்த பேர் வச்சாங்க என்றான் சாந்தமாக.

    பின்பு அவன் துறை சார்ந்த கேள்விகள் மற்றும் பணி அனுபவம் போன்றவற்றை விளக்கமாக கேட்டறிந்த சுந்தரத்திடம் சரியான பதில் அளித்தான் ராவணன்.

    அவனளித்த பதில்கள் யாவும் அவருக்கு மிகவும் திருப்திகரமாக இருக்கவே.

    அருமை... பொதுவா இங்க நடக்குற இன்டெர்வியூல எல்லார்கிட்டயும் கேள்வி கேட்டு கடைசியா தான் ஆட்களை தேர்வு செய்வோம்... ஆனா இன்னைக்கி இன்டெர்வியூ வந்த முதல் ஆளே தேர்வாகுறது இது தான் முதல் முறை

    வாழ்த்துக்கள் ராவணன், உங்களுக்கு இந்த வேலை உறுதியாடுச்சு..

    ராவணன் என்ற பெயரோட இருக்குற நீங்க இந்த நிறுவனத்துல ஒரு நல்ல மனிதரா இங்க உள்ள அனைவரிடத்திலும் கண்ணியமான முறையில நடந்துபிங்கன்னு நம்புறேன்.

    வர்ற திங்கட்கிழமையில இருந்து நீங்க உங்க பணியை இங்க தொடங்கலாம் என்றவராய்,

    தனது டேபிளில் உள்ள காலிங் பெல்லை அழுத்தினார். அனிதா உள்ளே வந்தாள்.

    நாம ப்ரொஜெக்ட் மேனேஜர இங்க வர சொல்லுங்கமா

    Yes சார், அனிதா

    Enjoying the preview?
    Page 1 of 1