Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Purusha Vettai
Purusha Vettai
Purusha Vettai
Ebook82 pages40 minutes

Purusha Vettai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ரஞ்சினி - ராமச்சந்திரன் திருமண நிச்சயதார்த்தம் சிறப்பாக நடைபெறுகிறது. தன் வருங்காலக் கணவனின் அழகை, அந்தஸ்தை அறிந்து தான் ரொம்பவும் அதிர்ஷ்டசாலி என்று பெருமைப்பட்டுக் கொள்கிறாள் ரஞ்சனி. ராமச்சந்திரனுக்கு - ஏற்கனவே திருமணமாகி ஏதோ காரணத்தால் விவாகரத்து பெற்றவன் என்கிற உண்மை தெரிய வருகிறபோது இரண்டாந்தாரமாக இருக்க விரும்பாத ரஞ்சனி ராமச்சந்திரனை மணந்து கொள்ள மறுத்து விடுகிறாள். தாய் தந்தை, சமாதானத்தையும் ஏற்றுக் கொள்ளவில்லை. மனம் வெறுத்து வேலைக்குச் செல்ல நினைத்து வேலைக்கு விண்ணப்பித்து வேலையில் சேரும் போது தான் மறுத்த ராமச்சந்திரனே தனது மேலதிகரியாகக் காண்கிறாள்.

அதே அலுவலகத்தில் வேலை செய்யும் கௌசிக்கை ரஞ்சனி விரும்ப, கெளசிக்கும் ரஞ்சனியை விரும்புகிறான். அவர்கள் திருமணம் நடைபெற ராமச்சந்திரனும் பெரிதும் உதவுகிறான். ஆனால் அதன் பின் நடப்பது... நினைத்தே பார்க்க முடியாத நிகழ்ச்சிகள். ஒரு குடும்பக் கதையைக் கூட இவ்வளவு திருப்பங்களுடன் சுவையாக எழுத்தாளர் இந்திரா சௌந்தர ராஜனால் மட்டும்தான் எழுத முடியும் என்பது மீண்டும் உறுதியாகிறது. சிறிய நாவல் என்றாலும் சிந்திக்க வைக்கும் நாவல். ஆண்களின் நல்ல மனத்தைப் பார்க்காமல் இரண்டாம்தாரம் என்ற ஒன்றை மட்டும் வைத்து திருமணத்திற்கு மறுத்து விடும் பெண்களுக்கு இந்நாவல் ஒரு நல்ல படிப்பினை. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100703550
Purusha Vettai

Read more from Indira Soundarajan

Related to Purusha Vettai

Related ebooks

Reviews for Purusha Vettai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Purusha Vettai - Indira Soundarajan

    http://www.pustaka.co.in

    புருஷ வேட்டை

    Purusha Vettai

    Author:

    இந்திரா செளந்தர்ராஜன்

    Indira Soundarajan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/indira-soundarajan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    முன்னுரை

    ரஞ்சினி - ராமச்சந்திரன் திருமண நிச்சயதார்த்தம் சிறப்பாக நடைபெறுகிறது. தன் வருங்காலக் கணவனின் அழகை, அந்தஸ்தை அறிந்து தான் ரொம்பவும் அதிர்ஷ்டசாலி என்று பெருமைப்பட்டுக் கொள்கிறாள் ரஞ்சனி. ராமச்சந்திரனுக்கு - ஏற்கனவே திருமணமாகி ஏதோ காரணத்தால் விவாகரத்து பெற்றவன் என்கிற உண்மை தெரிய வருகிறபோது இரண்டாந்தாரமாக இருக்க விரும்பாத ரஞ்சனி ராமச்சந்திரனை மணந்து கொள்ள மறுத்து விடுகிறாள். தாய் தந்தை, சமாதானத்தையும் ஏற்றுக் கொள்ளவில்லை. மனம் வெறுத்து வேலைக்குச் செல்ல நினைத்து வேலைக்கு விண்ணப்பித்து வேலையில் சேரும் போது தான் மறுத்த ராமச்சந்திரனே தனது மேலதிகரியாகக் காண்கிறாள்.

    அதே அலுவலகத்தில் வேலை செய்யும் கௌசிக்கை ரஞ்சனி விரும்ப, கெளசிக்கும் ரஞ்சனியை விரும்புகிறான். அவர்கள் திருமணம் நடைபெற ராமச்சந்திரனும் பெரிதும் உதவுகிறான். ஆனால் அதன் பின் நடப்பது... நினைத்தே பார்க்க முடியாத நிகழ்ச்சிகள். ஒரு குடும்பக் கதையைக் கூட இவ்வளவு திருப்பங்களுடன் சுவையாக எழுத்தாளர் இந்திரா சௌந்தர ராஜனால் மட்டும்தான் எழுத முடியும் என்பது மீண்டும் உறுதியாகிறது. சிறிய நாவல் என்றாலும் சிந்திக்க வைக்கும் நாவல். ஆண்களின் நல்ல மனத்தைப் பார்க்காமல் இரண்டாம்தாரம் என்ற ஒன்றை மட்டும் வைத்து திருமணத்திற்கு மறுத்து விடும் பெண்களுக்கு இந்நாவல் ஒரு நல்ல படிப்பினை. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

    *****

    1

    ஒரு வழியாகக் கல்யாண நிச்சயதார்த்தம் களேபரமாக முடிந்தது. எல்லாரும் கிளம்பிக் கொண்டிருந்தார்கள். சின்ன வீடு - ஆனால் நல்ல கூட்டம் - அதனால் உரசாமல் கொள்ளாமல் நடக்க முடியவில்லை.

    எல்லார்க்கும் மறக்காம வெத்தல பாக்கு, பழம் வெச்சுக் கொடுத்துடும்மா... ராமச்சந்திரன் தன் மனைவி தர்மாம்பாளிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

    எல்லாம் நான் பார்த்துக்கறேன். நீங்க போய் சம்பந்தியோட பேசிண்டிருங்கோ. தனியா உக்காந்திண்டுருக்கார் பாருங்கோ...

    சம்பந்தி பிச்சுமணி அய்யர் தனியாகத்தான் உட்கார்ந்திருந்தார்.

    பார்க்கப் பூர்ணம் விஸ்வநாதன் ஜாடை! கண்களில் நொடிக்கொரு சிமிட்டல்.

    ஆமாம் எங்கே மாப்பிள்ளைப் பையன் கல்யாண ராமன்?

    அவர் பார்வைத் துழாவலில் அவன் அவனோடு வந்திருந்த நண்பர்களோடு வீட்டுக்கு முன்னால் தெருவில் நின்று பேசிக் கொண்டிருந்தான்.

    நல்ல உயரம், பருமன்!

    ஒரு ஸ்டண்ட் நடிகனுக்குண்டான தோரணை...

    பொதுவில் பிராம்மண இளைஞர்களில் இப்படி ஒரு திடகாத்திரம் அசாத்யம். கூடவே யூரியா போட்டு வளர்த்த மாதிரி மீசை. அதோடு கையைக்காலை ஆட்டிக் கொண்டு அவன் பேசிக் கொண்டிருப்பதை ராமச்சந்திரன் ஒரு சில வினாடி நின்று ரசிக்கிறார்.

    பின் அவனது அப்பாவும் தனது சம்பந்தியாகப் போகிறவருமான அந்தக் கண்சிமிட்டல்காரரை நெருங்கிப் பணிவாகப் பேச ஆரம்பிக்கிறார்.

    எதுவும் குறைபாடில்லியே?

    குறையா... சேச்சே! ரொம்பப் பிரமாதம்.

    காபிதான் கொஞ்சம் சரியில்லை. கொட்டையைச் சரியா வறுக்காம அரைச்சிப்பிட்டான் போலிருக்கு.

    இதெல்லாம் விஷயமான்ன ஸ்வாமின். நிச்சயதார்த்தம் தானே?

    ஆனா அதையே ஒரு கல்யாணம் மாதிரி நடத்தணும்கறது என் ஆசை. ஒரு பொண்ணு - அவ விஷயத்துல எல்லாத்தையும் பார்த்துண்டாதானே?

    நன்னா பாரும்... ஆமா ரஞ்சனிகிட்ட அந்த விஷயத்தப் பேசிட்டேளோ?

    சம்பந்தி ஸ்வாமி கண்சிமிட்டல் குன்றாதபடி கேட்கவும், ஸ்பீட் பிரேக்கரில் முட்டி மோதிய டுவீலராட்டம் ஒரு கணம் தடுமாறுகிறார் ராமச்சந்திரன்.

    என்ன சொல்லலியா?

    சம்பந்தியிடம் கணிசமான பதற்றம்.

    சொல்லச் சரியான வேளை வரல அதான்...

    ஐய்யய்யோ... என்னய்யா இப்படிப் பண்ணிட்டீர். அவகிட்ட சொல்லாத நிலைல பாக்கு வெத்தலை மாத்திண்டுட்டோமே?

    அதனால என்ன... நான் சமயம் பார்த்துச் சொல்லிக்கறேன்.

    "என்னய்யா நீர்... படிச்சுப் படிச்சுச் சொன்னேனே முதல்ல இந்த விஷயத்தைச் சொல்லுங்கோ கோர்ட்

    Enjoying the preview?
    Page 1 of 1