Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Appa Appappa
Appa Appappa
Appa Appappa
Ebook131 pages41 minutes

Appa Appappa

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வழக்கமாக இந்தக் காலத்து இளைஞர்களைக் குறை சொல்வது தான் நம் வழக்கம். ஆனால் மாறி வரும் கால கட்டத்தில் பெரியவர்களும் இளைஞர்களின் பிரச்சனைகளைப் புரிந்துக் கொண்டு காலத்திற்க்கேற்ப தங்களைக் கொஞ்சம் மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற யதார்த்தத்தைக் கூறும் நகைச்சுவை நாடகம். திரு. காத்தாடி ராமமூர்த்தி அவர்களின் “ஸ்டேஜ் க்ரியேஷன்ஸ்” குடும்பத்தினரால் வெற்றிகரமாக பல மேடைகள் கண்ட பல விருதுகள் பெற்ற மேடை நாடகம்.
Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580142306693
Appa Appappa

Read more from Sl Naanu

Related to Appa Appappa

Related ebooks

Reviews for Appa Appappa

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Appa Appappa - SL Naanu

    https://www.pustaka.co.in

    அப்பா அப்பப்பா

    Appa Appappa

    Author:

    SL நாணு

    SL Naanu

    For more books

    https://www.pustaka.co.in/home/author/sl-naanu

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    காட்சி-1

    காட்சி-2

    காட்சி-3

    காட்சி-4

    காட்சி-5

    காட்சி-6

    காட்சி-7

    காட்சி-8

    காட்சி-9

    காட்சி-10

    காட்சி-11

    காட்சி-12

    காட்சி-13

    காட்சி-14

    காட்சி-15

    காட்சி-16

    காட்சி-17

    காட்சி-18

    காட்சி-19

    சமர்ப்பணம்

    என்னை இந்த உலகுக்கு அறிமுகப்படுத்திய எனது தகப்பனார் திரு. சகஸ்ரநாமன் மற்றும் எனது தாயார் திருமதி சிவகாமி அவர்களுக்கு

    காட்சி-1

    இடம்: சிவராமன் வீடு

    பாத்திரங்கள்: 1. சிவராமன், 2. லலிதா, 3. சுரேஷ், 4. நந்தினி,  5. பாலாஜி, 6. மாணிக்கம், 7. கணேசன்

    (பின்னணியில் கிருஷ்ணா நீ பேகனே பாரோ என்ற பாட்டு ஒலித்துக் கொண்டிருக்க லலிதா கடவுள் படத்தின் முன் நின்று)

    லலிதா: ஆண்டவனே.. எல்லாம் நல்லபடியா நடக்க நீதாம்பா அருள் புரியணும்....

    (என்றவுடன் சுரேஷ் உள்ளிருந்து வந்து)

    சுரேஷ்: அம்மா.. அப்பாவைப் பார்த்தியா?

    லலிதா: முப்பது வருஷம் முன்னாலயே பார்த்துட்டேன்.. என்னைப் பொண்ணு பார்த்த அன்னிக்கு..

    சுரேஷ்: அதைக் கேட்கலை.. அப்பா எங்க போயிருக்கார்?

    லலிதா: கோவிலுக்கு.. இன்னிக்கு அவரோட ஜன்ம நட்சத்திரமாச்சே..

    சுரேஷ்: ஆஹா.. மறந்திட்டேனே.. அதான் அப்பாவுக்குப் பிடிச்ச கிருஷ்ணா நீ பேகனே பாட்டு போட்டிருக்கியா?.. அப்படியே அப்பாவுக்குப் பிடிச்ச பால் பாயசமும் பண்ணியிருப்பியே..

    லலிதா: முந்திரி பருப்பு வருத்துப் போட்டுப் பண்ணியிருக்கேன்..

    சுரேஷ்: அம்மா.. சும்மா சொல்லக் கூடாது.. இந்த வயசுலயும் உங்க ரெண்டு பேருக்குள்ள அந்த Romantic Mood போகலை பாரு..

    லலிதா: Romantic Mood இல்லை.. ருமாட்டிக் pain..

    (என்றதும் நந்தினி உள்ளிருந்து வந்து)

    நந்தினி: அம்மா.. எல்லாம் ரெடியா எடுத்து வெச்சிட்டேன்.. அப்பா வந்தா தட்டைப் போட்டுரலாம்..

    லலிதா: நந்தினி.. இன்னிக்கு தட்டுல மொதல்ல பாயசத்தைப் போடு.. மறந்துராதே.. பழக்க தோஷத்துல உப்பை வெச்சுரப் போறே..

    நந்தினி: சரிம்மா.. (சுரேஷிடம்) ஏன்னா.. நீங்க குளிச்சேளோ?

    சுரேஷ்: எப்பவோ குளிச்சாச்சு..

    நந்தினி: பார்த்தாத் தெரியலை.. வேணும்னா சந்தேகத்துக்கு இன்னொரு தடவை குளிச்சிட்டு வந்துருங்கோ..

    லலிதா: அவன் சந்தேகத்துக்குக் குளிக்கறது இருக்கட்டும்.. நீ எப்போ குளிக்காம இருக்கப் போறே?

    நந்தினி: எல்லாம் நேரம் வரும்..

    (என்று நந்தினி உள்ளே போக பாலாஜி எதிர்பக்கத்திலிருந்து வந்து)

    பாலாஜி: அம்மா.. அப்பா இன்னும் கோவில்லேர்ந்து வரலையா? புது வேஷ்டி சட்டைலாம் வாங்கி வெச்சிருக்கேன்..

    லலிதா: ஏன்.. அப்பாவுக்கு மட்டும் தான் வேஷ்டி சட்டையா? எனக்குக் கிடையாதா?

    சுரேஷ்: நீ எப்பம்மா வேஷ்டி சட்டை போட்டுக்க ஆரம்பிச்சே?

    லலிதா: வேஷ்டி சட்டை இல்லை.. புடவை கட்டிப்பேனோல்யோ.. உங்கப்பாவுக்கு பிறந்த நாள்னா மட்டும் ஸ்பெஷலா வாங்கித் தருவீங்களோ?

    பாலாஜி: அம்மா.. உனக்குப் புடவை வேண்டாம்.. ஜீன்ஸும் டாப்ஸும் வாங்கித்  தரேன்.. போட்டுக்கறயா?

    லலிதா: தாராளமாப் போட்டுக்கறேன்.. என்ன.. அப்புறம் என்னை நந்தினிக்கு தங்கைன்னு சொல்லுவா..

    சுரேஷ்: அம்மா.. இது உனக்கே ஓவராத் தெரியலை..

    (என்றதும் பாலாஜி உள்ளே போக தொடர்ந்து கிருஷ்ணா நீ பேகனே பாட்டு ஒலிக்க.. தலை முடி கலைந்து கிழிந்த சட்டையுடன் சிவராமன் பரிதாபமாக வாசலில் நிற்க.. எல்லோரும் அதிர்ச்சியுடன் அவரைப் பார்க்க.. அவர் மெதுவாக உள்ளே வர)

    லலிதா: ஐயையோ.. என்னாச்சு?

    (என்றதும் சிவராமன் எதுவும் சொல்லாமல் அப்பாவியாகத் தலையைக் குனிந்துக் கொள்ள)

    சுரேஷ்: அப்பா.. என்னாச்சுன்னு சொல்லுங்கோளேன்..

    சிவராமன்: ஏண்டா அலர்றே? ஒண்ணும் ஆகலை.. எனக்கு இன்னிக்குப் பிறந்த நாளா.. கோவில்ல உருண்டு உருண்டு அங்கப் பிரதட்சணம் பண்ணினேன்.. கோவில் தரை கரடு முரடா இருந்துதா.. அதான் சட்டை இப்படிக் கிழிஞ்சு போச்சு..

    (என்றதும் கணேசன் உள்ளே வந்து)

    கணேசன்: புளுகாதேடா..

    சுரேஷ்: வாங்கோ கணேசன் மாமா..

    கணேசன்: கோவில்ல அங்கப் பிரத்தட்சணம் பண்ணினதுனால உன் சட்டை கிழியலை.. உன்  அதிகப் பிரசங்கித் தனத்துனால கிழிஞ்சுது..

    லலிதா: என்ன சொல்றேள்?

    கணேசன்: லலிதா.. கோவில்லேர்ந்து வரும்போது.. ஒரு பைக் இவனை லேசா உரசிட்டுப் போச்சு.. இவன் சும்மா இல்லாம பைக்கை ஓட்டினவனை கண்டபடி திட்ட ஆரம்பிச் சுட்டான்.. அவன் ரௌடி.. பைக்கை நிறுத்திட்டு வந்து.. பெரிசு, என்ன சொன்னேன்னு கேட்க.. அவன் ஏதோ ரிபீட் டெலிகாஸ்ட் கேட்கறான்னு நினைச்சு மறுபடியும் ஒண்ணு விடாம திட்டித் தீர்த்து ட்டான்.. அவ்வளவு தான்.. அடுத்த ரெண்டு நிமிஷம் என்ன ஆச்சுன்னே புரியலை.. கண்ணைத் துடைச்சுண்டு பார்த்தா இவன்  இந்தக் கோலத்துல நிக்கறான்..

    சுரேஷ்: உங்களுக்கு எதுக்குப்பா இந்த வம்பெல்லாம்?

    சிவராமன்: எதுடா வம்பு? அவன் கண்டபடி வண்டி ஓட்டி மேல இடிச்சிட்டுப் போவான்.. அதைப் பார்த்துண்டு நான் சும்மா இருக்கணுமா?  விட மாட்டேன்.. உடனே போலீஸ்ல complaint கொடுக்கப் போறேன்..

    கணேசன்: போலீஸ் complaint கொடுக்கணும்னா வண்டி நம்பர் தெரியணும்.. வண்டி நம்பர் நோட் பண்ணியிருக்கியா?

    சிவராமன்: ஓ.. அப்படி ஒண்ணு இருக்கோ? ஏண்டா.. நீ அங்க வெட்டியா வேடிக்கைப் பார்த்துண்டு தானே நின்னுண்டிருந்தே.. வண்டி நம்பரை நீ நோட் பண்ணியிருக்கலாம்லியா?

    கணேசன்: நீ இப்படி complaint கொடுக்கப் போறேன்னு எனக்கென்ன ஜோசியமாத் தெரியும்?

    லலிதா: Complaint கொடுக்கறதைப் பத்தியெல்லாம் அப்புறம் யோசிக்கலாம் மொதல்ல இந்த கண்றாவிக் கோலத்தை மாத்திண்டு வாங்கோ.. ரத்தக் கண்ணீர் எம்.ஆர்.

    Enjoying the preview?
    Page 1 of 1