Vilaketriyaval
By Ushadeepan
()
About this ebook
வெளிநாட்டு மோகம் பலருக்கும் உள்ளது. குறிப்பாகப் பெண்களுக்கு. பெற்றோர்கள் ஆசையாய், பாசமாய் வளர்த்த மகளுக்கு உள்ளூரிலேயே பொருத்தமாய் ஒரு இடம் பார்த்து, கண்முன்னேயே அவள் வாழ்வதைக் கண்ணாரக் காண வேண்டும் என்று ஆசை கொள்கிறார்கள். அது நியாயமானதும் கூட. ஆ னால் இந்த நியாயத்தை ஒரு மூன்றாமவர் சொல்லும்போதுதான் அது எடுபடுகிறது. உறவுகள் சொல்கையில் சண்டைதான் மிச்சம். இந்தக் கதையின் நாயகி அப்படித்தான் தன்னை மாற்றிக் கொள்கிறாள். அதற்கு ஒரு கண்டிஷனும் போடுகிறாள். மேலும் தன் திருமணத்தின் மூலம் பிரிந்த உறவுகளையும் சேர்த்து வைக்கிறாள். குடும்பத்தில் ஒற்றுமையை நிலைநாட்டி ஒளி விளக்கு ஏற்றிக் குதூகலிக்கிறாள்.
Read more from Ushadeepan
Unnai Karam Pidithean Rating: 0 out of 5 stars0 ratingsPongi Varum Peru Nilavu Rating: 0 out of 5 stars0 ratingsUnnidathil Ennai Koduthean Rating: 0 out of 5 stars0 ratingsKaatrukenna Veli Rating: 0 out of 5 stars0 ratingsIvalum Oru Thodarkathaithan...! Rating: 0 out of 5 stars0 ratingsSeivinai Seyapattu Vinai Rating: 0 out of 5 stars0 ratingsVadamalli Rating: 0 out of 5 stars0 ratingsVellai Nirathoru Poonai Rating: 0 out of 5 stars0 ratingsMazhithalum Neettalum...! Rating: 0 out of 5 stars0 ratingsLatchiya Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsShabash Poonkutty Rating: 0 out of 5 stars0 ratingsAmutham Viritha Valai Rating: 0 out of 5 stars0 ratingsEthirparathathu...!? Rating: 0 out of 5 stars0 ratingsThavikkum Idaiveligal Rating: 0 out of 5 stars0 ratingsKuttram Purinthavan Rating: 0 out of 5 stars0 ratingsThannai Vendravan Rating: 0 out of 5 stars0 ratingsUravu Solla Oruvan...! Rating: 0 out of 5 stars0 ratingsNaan Athuvalla Rating: 0 out of 5 stars0 ratingsThavarugal Kutrangalalla...! Rating: 0 out of 5 stars0 ratingsNindru Olirum Sudargal Rating: 0 out of 5 stars0 ratings
Related to Vilaketriyaval
Related ebooks
Thannai Vendravan Rating: 0 out of 5 stars0 ratingsVizhiye Kadhai Ezhuthu Rating: 0 out of 5 stars0 ratingsEngey En Jeevaney..? Rating: 5 out of 5 stars5/5Poothu Kottiya Paadhai Rating: 0 out of 5 stars0 ratingsNandhini En Nandhini Rating: 5 out of 5 stars5/5Un Ullam Naanariven Rating: 0 out of 5 stars0 ratingsNaalellam Pournami Rating: 0 out of 5 stars0 ratingsMangai Enthan Nenjukkul! Rating: 0 out of 5 stars0 ratingsகனாக் கண்டேன் தோழி! Rating: 0 out of 5 stars0 ratingsKaathal Oruvanai Kaipidithey Rating: 0 out of 5 stars0 ratingsPriyasagaa Rating: 5 out of 5 stars5/5Nilavum Malarum Rating: 0 out of 5 stars0 ratingsNindru Kollum Rating: 0 out of 5 stars0 ratingsThiru & Thirumadhi Rating: 4 out of 5 stars4/5Vilagava? Vilagiva..! Rating: 5 out of 5 stars5/5Kaividuveno Kanmaniye! Rating: 0 out of 5 stars0 ratingsAnbaana Anuvirkku Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalaagi Kasindhurugi Rating: 0 out of 5 stars0 ratingsAnbe Aaruyire... Rating: 0 out of 5 stars0 ratingsKiligalai Parakka Vidungal Rating: 0 out of 5 stars0 ratingsPadhma Viyugam Rating: 0 out of 5 stars0 ratingsAnjana Archana Dhayalan Rating: 5 out of 5 stars5/5Dowry Tharatha Gowri Kalyanam Rating: 0 out of 5 stars0 ratingsSorry, Konnutten! Rating: 3 out of 5 stars3/5Nesapoovin Narumanam Rating: 5 out of 5 stars5/5செவ்வரளிப்பூ... Rating: 0 out of 5 stars0 ratingsSevvaralip Poo Rating: 0 out of 5 stars0 ratingsThoorigai Erigindra Poothu…! Rating: 0 out of 5 stars0 ratingsSollathey Yarum Kettal Rating: 5 out of 5 stars5/5Sithra Salabam Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Vilaketriyaval
0 ratings0 reviews
Book preview
Vilaketriyaval - Ushadeepan
http://www.pustaka.co.in
விளக்கேற்றியவள்
Vilaketriyaval
Author:
உஷாதீபன்
Ushadeepan
For more books
http://www.pustaka.co.in/home/author/ushadeepan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
1
ஆர்த்தி...! என்ன இந்நேரத்துல...? - ஆச்சரியத்துடன் கேட்டுக் கொண்டே கதவைத் திறந்தாள் பிரேமா.
பதில் சொல்லாமல் வீட்டுக்குள் போனவளைப் பின் தொடர்ந்தாள்.
ஆபீசுக்குப் போகாமே இங்கே வந்திருக்கே...? லீவு போட்டுட்டியா? - கேள்வி மேலும் தொடர்ந்தது.
உறாலில் இருந்த காற்றாடியை உயிர் பெறச் செய்து விட்டு ஸ்ஸ்ஸ்... என்று ஆசுவாசப்பட்டவாறே அங்கிருந்த சோபாவில் சாய்ந்தாள் ஆர்த்தி.
அருகில் வந்து அமர்ந்து தலையைத் தடவிக் கொடுத்தாள் பிரேமா. எதும் பிரச்னையா? என்றாள்.
அக்கா... கொஞ்ச நேரத்துக்கு எதுவும் கேட்காதே... முடியுமானா எனக்கு ஒரு ஸ்டாராங்க் காஃபி கொடு... -கேட்டுக் கொண்டே சட்டென்று அவள் மடியில் படுத்துவிட்டாள் ஆர்த்தி. நண்பனின் மனைவி. எவ்வளவு நெருக்கம்...!
பிரேமாவின் மனம் இளகியது. ஏண்டீ இப்டீ...? சரி, படுத்திரு... எடுத்திட்டு வர்றேன்... என்றவாறே அவள் தலையைத் தூக்கி ஒரு தலையணையை அண்டக் கொடுத்து எழுந்தாள் பிரேமா.
நல்ல சூடா இருக்கணும்... இல்லன்னா வேண்டாம்...
சரீடீ... சரி... என்றவாறே உள்ளே போனாள் பிரேமா. அதற்குள் ஆர்த்தி அசந்து விட்டதுபோல் இருந்தது.
உடம்பு எதுவும் சரியில்லையோ? லீவு போட்டு, வீட்டில் ரெஸ்ட் எடுக்க வேண்டியதுதானே? அந்த மூன்று நாளின் முதல் நாளில் வயிற்று வலி, வயிற்று வலி என்று பிதற்றுவாளே? அதுவாய் இருக்குமோ?
தொலைபேசி அலறியது. யாராய் இருக்கும்? அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த பாலை சிம்மில் வைத்து விட்டு, போய் எடுத்தாள்.
பிரேமா... நான்தான்... அங்க டேபிள் டிராயர்ல என் பர்ஸ் இருக்கா பாரு...? - ரவீந்திரன் பதற்றத்தோடு கேட்டான்.
போச்சு, மறந்திட்டீங்களா? சமீபமா உங்களுக்கு இதே வேலையாப் போச்சு... எங்கிருக்கீங்க...?
பர்ஸ் இருக்கா பாருன்னா? ரோட்டுலதான் நிக்கிறேன்... திடீர்னு டிக்கெட் பாக்கெட்டைப் பார்க்கிறேன்... பர்ஸைக் காணோம்... பயந்திட்டேன்...
சரி, பதறாதீங்க... ஒரு நிமிஷம்... - போனை வைத்துவிட்டுப் போய்ப் பார்த்தாள். டேபிள் டிராயரில் காணவில்லை. பக்கத்துக் கணினி அறைக்குச் சென்றாள். அங்கே கணினிக்கும் ஸ்பீக்கருக்கும் இடையில் நிழலில் பத்திரமாக இருந்தது பர்ஸ். போகிற போக்கில் பார்த்தால் இருப்பது தெரியாதுதான். காலையில் யாருக்கோ ரயில் இ. டிக்கெட் போட்டுக் கொண்டிருந்தான். ஏ.டி.எம். டெபிட் கார்டு பர்ஸில்தான் இருக்கும். எடுத்து உபயோகித்துவிட்டு அப்படியே மறந்து வைத்து விட்டுப் போயிருக்கிறான். கொண்டு வந்து டிராயரில் வைத்தாள். கிளம்புவதற்கு முன் தேவையானவற்றை டேபிளில் கண்பார்வையில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் என்று எத்தனையோ முறை சொல்லிப் பார்த்திருக்கிறாள். அவன் செய்வதாயில்லை. இப்படித்தான் வழியில் பதறிக்கொண்டு நிற்பதா?
ஃபோனை எடுத்தாள். லைன் துண்டிக்கப்பட்டிருந்தது. அவன் செல்லுக்கு அடித்தாள். ரிங் போய்க்கொண்டேயிருந்தது. டிராபிக்கில் இருப்பான். ஆபீஸ் போய்ச் சேரட்டும், பிறகு சொல்லலாம் என்று நினைத்து வைத்தாள். அதற்குள் அவனிடமிருந்தே மீண்டும் போன்.
இருக்கு... என்றாள். கண்டேன் சீதையை என்பதுபோல் சொன்னால்தான் அவனுக்குப் பிடிக்கும். முதலில், அனுமனின் கண்டேன் என்ற வார்த்தைதானே ராமனை உயிர்ப்பித்தது. அதுபோல், உங்க டேபிள் டிராயர்ல பார்த்தேன். இல்லை. கம்ப்யூட்டர் பக்கத்துல இருந்தது. எடுத்து டிராயர்ல வச்சிட்டேன்... என்றெல்லாம் விபரமாய்ச் சொன்னால் அவனுக்குப் பிடிக்காது. எதானாலும் ஷார்ப்பா, சுருக்கமாச் சொல்லப் பழகிக்கோ... என்பான். அடுத்தவர்கள் பேச்சைத் திருத்துவதில் அப்படி ஒரு ஆர்வம். அதிலும் பெண்டாட்டியிடம் அத்தனை உரிமை. ஆனால் இம்முறை அவனே கேட்டுவிட்டான். எங்கிருந்திச்சு? இவள் சொன்னாள்.
நல்லவேளை... அதுல ரெண்டாயிரம் பணம் இருக்கும். அதை எடுத்து பீரோவுல வை. பணத்தோட டிராயர்ல வைக்காதே... பயந்தே போயிட்டேன்... -சொல்லிவிட்டு போனை கட் பண்ணிவிட்டான். ஆர்த்தி வந்திருப்பதைச் சொல்ல வாயெடுத்தாள். ஏனோ சொல்லவில்லை. ஆபீஸ் போகாம இங்கே வந்து என்ன பண்றா? அவுங்க வீட்ல சத்தம் போடப் போறாங்க... என்பான்.
யக்கா... என்னாச்சு காபி...? - கத்தினாள் ஆர்த்தி.
இதோ வந்துட்டேண்டி... - சொன்னவாறே அடுப்படியை நோக்கி ஓடினாள் பிரேமா. நல்லவேளை சிம்மில் வைத்திருந்ததால் பால் மெல்லப் பொங்கி சாவகாசமாய் மேலே வந்து கொண்டிருந்தது. அணைத்து, ஆர்த்தி கேட்டதுபோல் ஸ்டாராங்க் காபி கலந்து எடுத்து வந்தாள்.
ஆர்த்திக்குப் பிடித்தது அவள் வீட்டின் காபிதான். எப்போது வந்தாலும் முதலில் அதை நீட்டிவிட வேண்டும் அவள் முன்.
ஆனாலும் தொழில் சுத்தம்கா உங்கிட்டே... எப்டி இப்டி ஒரு காபி போடறே...? பாலுக்குச் சொட்டுத் தண்ணி கலக்க மாட்டே போலிருக்கு... கள்ளிச் சொட்டா டிகாக் ஷன் இறக்கிடுறே... அப்புறம் உன் காபியை எப்படித் தவிர்க்க முடியும்? இந்தக் காபியைக் கொடுத்தே ரவியை உங்க முந்தானைல முடிஞ்சி வச்சிருக்கீங்க...
சீ... போடி... அதெல்லாமில்லை... அவர் ஒரு சுதந்திரப் பறவை... அவரை யாரும் கட்டுப்படுத்த முடியாது...
அப்டியா? வேறே எங்கேயாச்சும் கூடு கட்டிடப் போறார்க்கா... - சொல்லி விட்டுச் சிரித்தாள் ஆர்த்தி.