Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vadamalli
Vadamalli
Vadamalli
Ebook105 pages41 minutes

Vadamalli

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நமது குடும்ப அமைப்புதான் நம்மை இன்றுவரை காப்பாற்றி வருகிறது. பிள்ளைகளின் வளர்ப்பு சரியாயும், முறையாயும் இருந்தால் அந்தக் குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். இளைய தலைமுறையினரின் முற்போக்கு சிந்தனையுடன் கூட, அவர்களின் பொறுப்பான நடவடிக்கைகளும் சேர்ந்து கொள்ளும்போது, அவர்களின் செயல்பாடுகளைப் பெற்றோர் மறுக்க முடியாத நிலை கண்டிப்பாக எழும். அப்படித்தான் இந்தக் கதையில் வரும் இரண்டு குடும்பங்களின் உறுப்பினர்களும். பிரச்னைகளை சற்று முற்போக்கு சிந்தனையோடு அணுகி, அன்பு, பாசம், ஒழுக்கம், நேயம் என்பதை முன் வைத்து அதனடிப்படையில் விஷயங்களை எதிர்நோக்கி வெற்றியடைகிறார்கள். உறவுகள் நற்குணங்களோடு அமைதல் என்பது பெரிய கொடுப்பினை. வாடா மல்லியாய் பெண்கள் குடும்பங்களில் மணம் வீசினால் என்று சந்தோஷம்தான். இதை சுவைபடமுன் வைக்கும் ஸ்வாரஸ்யமான நாவல் இது.

Languageதமிழ்
Release dateFeb 26, 2020
ISBN6580129905047
Vadamalli

Read more from Ushadeepan

Related authors

Related to Vadamalli

Related ebooks

Reviews for Vadamalli

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vadamalli - Ushadeepan

    http://www.pustaka.co.in

    வாடாமல்லி

    Vadamalli

    Author:

    உஷாதீபன்

    Ushadeepan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/ushadeepan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    1

    "என்னடா, இன்னைக்கும் ஒண்ணும் சொல்லாமப் போறே...? - ஆபீஸ் கிளம்பிக் கொண்டிருந்த சுந்தரத்தைத் தடுத்து நிறுத்தினாள் லட்சுமி. சுந்தரம் தயங்கி நின்றான். பின்புறமாக வந்து தோள்பட்டையை ஆதுரமாகத் தொட்டாள். அந்தத் தொடுதலின் ஸ்பரிசத்தில் பெருத்த தயக்கத்தை உணர்ந்தான் சுந்தரம்.

    ஏதாச்சும் ஒரு முடிவு சொல்ல வேண்டாமா அவங்களுக்கு? ரெண்டு நாள், மூணு நாள் பொறுக்கலாம்... ஒரேயடியா ஒரு வாரம் யாராவது பொறுப்பாங்களா? சொல்லுடா கண்ணா...

    எனக்கு இன்னும் யோசனையாவே இருக்கும்மா... - சுந்தரம் நிதானமாய் அம்மாவின் முகத்தைக் கண்கொண்டு பார்க்காமல் சொன்னான். இன்றும் அதே பதிலைச் சொல்லி விட்டு நழுவுகிறோமே என்றுதான் இருந்தது அவனுக்கும். அதனாலேயே அம்மாவின் முகத்தை நேரடியாய் நோக்க முடியவில்லை.

    அப்டீன்னா விட்டிடு... எதுக்கு இத்தனை பலத்த யோசனை... உன் விருப்பம்தான் முக்கியம். வாழப் போறது நீதானே...?

    அது சரிம்மா... ஆனாலும்...

    என்ன ஆனாலும்...? உன் யோசனைதான் என்னன்னு சொல்லேன்... நாங்க தெரிஞ்சிக்கக் கூடாதா? அதையும்தான் சொல்ல மாட்டேங்கிறே? மனசு விட்டுச் சொன்னாத்தானே ஆச்சு... நீ நினைக்கிறது எங்களுக்கு எப்படிப் புரியும்?

    அதை உங்ககிட்டே சொல்லாம அங்கே போய் சொல்ல முடியுமா?... உங்ககிட்டே சொல்லி, நீங்கதான் அவுங்ககிட்டே சொல்லணும்...

    அப்போ படக்குன்னு சொல்லிட வேண்டிதானே... இத்தனை நாளா? இப்பவே நாம சம்மதம் சொன்னாலும், அவுங்க வேறே எடம் பார்க்காம இருந்திருக்கணும்... அதுவே எனக்குச் சந்தேகம்தான்...

    ஏன் அப்படிச் சொல்றே?

    என்னடா இப்படிக் கேட்கிறே? ஒரு வாரம் காயப்போட்டா, அவுங்க என்னதான் செய்வாங்க? அவ்வளவுதான் போலிருக்குன்னு வேறே எடம் பார்க்க மாட்டாங்களா? பதிலே சொல்லாம இருக்கிறது அவுங்களை அலட்சியப்படுத்தறதாகாதா?

    அதெல்லாம் இல்லம்மா... அப்படி வேறே இடம் பார்த்தா பார்த்திட்டுப்போறாங்க...

    அவன் ஆபீஸ் புறப்பட்டுக்கிட்டிருக்கான்... இப்பப்போய் அவனை நெருக்கிறியே? - செய்திகளில் புதைந்திருந்த கிருஷ்ணமூர்த்தி, தலையைத் திருப்பி, லட்சுமியைப் பார்த்துச் சலித்துக் கொண்டே கூறினார்.

    நீங்க பேசாம இருங்க... உங்களுக்கென்ன வந்தது? பேப்பர் கைல கிடைச்சாப் போதும் உங்களுக்கு... நானில்ல கோயில்ல அவுங்களை எதிர்நோக்கணும்... மறைஞ்சு மறைஞ்சு வர முடியுமா?

    இன்னைக்கு ஒரு நாளைக்குக் கோயிலுக்குப் போகாதே... வீட்டுலயே கும்பிடு... போதாதா?

    உங்களுக்குப் போதும், எனக்குப் பத்தாது. அங்க போய் ரெண்டு சுத்துப் போட்டுட்டு வந்தாத்தான் மனசு ஆறும்... ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வழக்கம் இருக்குல்ல...

    எல்லா எடத்துலயும் ஒரே சாமிதானேடீ... அந்தச் சாமி படத்தைத்தான் இங்கே பூஜை அறைல வச்சிருக்கேல்ல... அப்புறம் என்ன? விக்ரகமா இருக்கிறசாமி இங்கே படத்துல இருந்திட்டே அனுக்கிரஉறம் பண்ணமாட்டாரா? சட்டத்துக்குள்ள இருக்கிறதுனால வெளியிலே வர முடியாதோ? - சொல்லிவிட்டுத் தனக்குத்தானே சிரித்துக் கொண்டார்.

    காலங்கார்த்தால உங்களோட உறண்டையிடுறதுக்கு நான் தயாரில்லே... என் பழக்கம் அப்படி... அவ்வளவுதான்... நீ சொல்லுடா கண்ணா... அவாளுக்கு என்ன சொல்லட்டும்...?

    கொஞ்சம் பொறுங்கோன்னு சொல்லும்மா... இப்போதைக்கு என் பதில் அதுதான்...

    ஏண்டா சுந்தரம் இப்படிப் படுத்தறே? ஒரு எடத்துல பொண்ணு பார்த்திட்டு வந்து இத்தனை நாளா பதில் சொல்லாம இருப்பாங்க...? நல்ல குடும்பமாத் தெரியுதுப்பா... அவளும் வேலை பார்க்கிறா... கை நிறையச் சம்பளம்... உன் சம்பளம்... அவ சம்பளம்... நல்லா தாராளமா சந்தோஷமா இருக்கலாமேடா... என்ன தயக்கம் உனக்கு...?

    அப்போ பணமிருந்தா சந்தோஷமா இருந்திடலாம்ங்கிறே...? - சுந்தரத்தின் கேள்வி கிருஷ்ணமூர்த்திக்குச் சிரிப்பை வரவழைத்தது.

    நீயும் ஆரம்பிச்சிட்டியா அப்பா மாதிரி...

    இதற்கும் அடக்க முடியாமல் சிரிப்பு வந்தது அவருக்கு.

    நீங்க பேசாம இருங்கோ... என்ன கெக்கே பிக்கே...? அவன்தான் என்னத்தையோ பேசாறான்னா... நீங்களும் பதிலுக்குச் சிரிச்சிண்டு...

    அவன் கேட்குறதுக்கு பதில் சொல்லுடி... பணம் மட்டும் சந்தோஷத்தைக் கொடுத்திடுமாங்கிறான் உன் பிள்ளை... இதுக்கு உன் பதில் என்ன?

    நாம பட்ட தரித்திரக் கஷ்டம் அவனும் படணுமான்னுட்டுச் சொன்னேன்... இது ஒரு தப்பா... பத்தாக்குறையும், கடனும் உடனும் நம்மளோட போகட்டுமேன்னுதான்... நம்ம குழந்தைகளாவது நிறைவா இருக்கட்டுமேங்கிறதுதான்...

    உன் மத்த குழந்தைகள் நிறைவா இருக்கிறதுல திருப்தி வந்ததா இல்லையா?

    அதுபோல இவனுக்கும் அமையட்டுமேன்னுதான்... அவாள்லாம் வசதி வாய்ப்பா இருக்கிறாப்போலே இவனும் இருக்கணுமேன்னுதான்...

    திரும்பவும் அங்கயே வர்ற பாரு... அப்போ பணம் இருந்தா நிறைவு வந்திடும்ங்கிறே... அதானே...?

    இப்டி அப்டித் திருப்பி வளைச்சுக் கேள்வி கேட்டால்லாம் எனக்கு பதில் சொல்லத் தெரியாது... இப்போ அதுக்கு என்ன பதில்ங்கிறதா முக்கியம்? அவன் முடிவச் சொல்லச் சொல்லுங்கோன்னா...?

    நான் சாயந்திரம் வந்து சொல்றேம்மா... போதுமா...? - பதில் கூறிவிட்டுப் படியிறங்கி விட்டான் சுந்தரம். பைக்கை ஸ்டார்ட் செய்யும் சத்தம்.

    பெருமூச்சுத்தான் வெளிப்பிட்டது லட்சுமியிடமிருந்து. ஈஸ்வரா, அவன் மனசுல என்ன இருக்குன்னு எனக்குத் தெரியலயே... பூஜை அறையை நோக்கிக் கையெடுத்து வணங்கிவிட்டு, அடுக்களையை நோக்கிப் போனாள்.

    அந்தப் பொண்ணு அவனுக்குப் பிடிக்கலையோ என்னவோ?- கிருஷ்ணமூர்த்தி ஆரம்பித்தார்.

    அப்டீன்னா அதைச் சொல்லித் தொலைக்க வேண்டிதானே? வேறே பார்த்திட்டுப் போறோம்... ஊர்ல பொண்ணுங்களா இல்லை?

    அதுலதாண்டீ அவனை நீ யோசிக்கணும்... பணம் நிம்மதியைக் கொடுக்குமான்னு

    Enjoying the preview?
    Page 1 of 1