Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaaikatha Maramum... - Sirukathai Thoguppu
Kaaikatha Maramum... - Sirukathai Thoguppu
Kaaikatha Maramum... - Sirukathai Thoguppu
Ebook82 pages33 minutes

Kaaikatha Maramum... - Sirukathai Thoguppu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

1964-இல் மதுரையில் பிறந்து வளர்ந்தவள். அவரது தந்தையார், காலம்சென்ற திரு.பேரை.சுப்ரமணியன், (South Central Railways, Secunderabad) எழுத்தாளர். 1960-இல், ஆனந்த விகடன், கல்கி, கலைமகள், குமுதம் போன்ற முன்னணி பத்திரிகைகளில் நிறைய சிறுகதைகள், எழுதிப் பல பரிசுகள் பெற்றவர். அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பாகிய பல நாடகங்களின் கதாசிரியர். அவரது தாய்.திருமதி.சரஸ்வதி சுப்ரமணியம், அவரை எழுதச் சொல்லி ஆசி வழங்கியவர்.

1988-ல் இவரது சிறுகதைகள் பெண்மணி, மங்கை, மங்கையர் மலர், போன்ற மகளிர் பத்திரிகைகளில் வெளி வந்துள்ளது.

2009 லிருந்து இணையத்தில் எழுத ஆரம்பித்து,. கட்டுரைகள், கவிதைகள், ஹைகூ கவிதைகள், சிறுகதைகள், நெடுங்கதைகள், தொடர்கதைகள் ஆகிய படைப்புகள் இணைய தளத்தின் முன்னணி வார இதழ்களான திண்ணை, வல்லமை, வெற்றிநடை, மூன்றாம்கோணம்,சிறுகதைகள்.காம் போன்ற வலை தளங்களிலும், குங்குமம் தோழி ஆகிய தமிழ் பத்திரிகைகளிலும் பிரசுரமாகி வருகிறது.

Languageதமிழ்
Release dateMay 26, 2017
ISBN6580120002298
Kaaikatha Maramum... - Sirukathai Thoguppu

Read more from Jayasree Shanker

Related to Kaaikatha Maramum... - Sirukathai Thoguppu

Related ebooks

Reviews for Kaaikatha Maramum... - Sirukathai Thoguppu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaaikatha Maramum... - Sirukathai Thoguppu - Jayasree Shanker

    http://www.pustaka.co.in

    காய்க்காத மரமும்... - சிறுகதை தொகுப்பு

    Kaaikatha Maramum… - Sirukathai Thoguppu

    Author:

    ஜெயஶ்ரீ சங்கர்

    Jayasree Shanker

    For more books

    http://www.pustaka.co.in/home/author/jayasree-shankar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    மீள் உயிர்ப்பு... !

    கூந்தல் அழகி கோகிலா..!

    காய்க்காத மரமும்....

    மீள் உயிர்ப்பு...!

    ஆறாவது ஃப்ளோரிலிருந்து கீழே இறங்க லிஃப்டு மேலே வர பட்டனை அழுத்தி விட்டுக் காத்திருந்த ஆர்த்திக்கு பொறுமை உதிர ஆரம்பித்தது. ச்சே.... இன்னும் எத்தனை நேரம் இப்படியே.. இங்கேயே நிற்பது.. பேசாமல் காலை நம்பி படியில் இறங்க ஆரம்பித்திருந்தால் இந்நேரம் மூன்று மாடிகள் இறங்கியிருக்கலாம்.. நினைத்த மாத்திரத்தில் லிஃப்ட் வந்து அவளெதிரே நின்று கதவைத் திறந்து 'சீக்கிரம் ஏறு' என்றது.. உள்ளே நுழைந்ததும் சத்தமில்லாமல் வழுக்கிக் கொண்டு . சிகப்பு நிறப் புள்ளிகள் மின்னியப்படியே அம்புக் குறியை தலை கீழாக்கி இறங்கி கொண்டிருந்தது. லிஃப்ட் எங்கும் நிற்காமல் போக வேண்டுமே என்று ஆர்த்தியின் மனசு மானசீகமாக யாரையோ வேண்டிக் கொண்டிருந்தது.

    பார்க்கிங் ஃப்ளோரில் வந்து லிஃப்ட் நின்றதும்.. குஷியோடு வெளியே வந்தவளுக்கு அப்பாடா... என்று நிம்மதியாக இருந்தது. செக்யூரிட்டி லெட்ஜரில் தன் கையெழுத்தை கிறுக்கியவள் அவளது கனத்த பால் வடியும் மனம் வீட்டில் இருக்கும் பால் வடியும் முகத்தை நினைத்துத் தவித்தது.

    அடுத்த சில நொடிகளில் பார்க்கிங் ஸ்லாட்டில் காத்திருந்த மஞ்சள் நிற 'நானோ' காரில் ஏறி ரிவர்ஸ் எடுத்து ஒரே ஸ்பீடில் மேலே ஏறி... விர்ரென்று அவளது அலுவகலத்தை விட்டு வெளியுலகத்துக்கு வந்து சிக்னலின் சிகப்பு விளக்குக்கு ப்ரேக் போட்டு.மூச்சு வாங்கினாள் .

    எஃப் எம் ரேடியோ மிர்ச்சி.... செம ஹாட் மச்சி என்று கடி ஜோக்கு சொல்லி வழிந்து கொண்டிருந்தது.ஏதேதோ வேண்டாத வசனங்கள் பேசி சிரிக்க வைக்க முயற்சி செய்து அவளிடம் தோற்றது.

    ஆர்த்தியின் கண்கள் சிவப்பு எப்போது பச்சையாக மாறும் என்று ஸ்டியரிங்கில் தாளம் போட்டுக் கொண்டு காத்திருக்க, கண்கள் .மெல்ல வானத்தைப் பார்த்து சிலிர்த்தாள். இத்தனை நேரச் செயற்கை வெளிச்சத்தை இந்த வானம் அவள் கண்ணிலிருந்து கலைத்து நான் தான் நிஜம் என்றது. ஆம்... நீ தான்.... நிஜம்... என்று மனதோடு சொல்லிக் கொண்டு பச்சை விழுந்ததும் பாயும் பந்தயக் குதிரையாகத் தாண்டிப் போனாள் ஆர்த்தி. மனசெல்லாம் ஆதி... ஆதி.... என்று அடித்துக் கொண்டே நகர்ந்தது..

    பெண்களின் மனம் என்றும் ஒரே நிலையில் இருப்பதில்லை.. கல்யாணத்திற்கு முன்பு வரை அம்மா அம்மா என்று சுற்றிக் கொண்டிருந்த அதே மனசு தான் பின் ஒரு சமயம் காதல் கணவனின் பெயரை ஜபித்துக் கொண்டே ஏங்கிக் கொண்டிருக்கும். இப்போ குடும்பம் என்றானதும் குழந்தையிடம் மனம் தாவியாச்சு. ஆர்த்திக்கு வீடு சீக்கிரம் அருகில் வராதா என்று ஏக்கமாக இருந்தது. எத்தனை சிக்னல்கள்... எத்தனை மேம்பாலங்கள் எத்தனை ஸ்பீட் பிரேக்கர்ஸ் ... எல்லாத்தையும் ஒவ்வொண்ணா கடந்து வீடு போய் சேருவதற்குள் சிறுகதைச் சிற்பி 'ஜோதிர்லதா கிரிஜா'வாக இருந்திருந்தால் அவர் கண்ட காட்சியை வைத்தே ஒரு நாளைக்கு ஒரு கதை எழுதித் தள்ளியிருப்பார்.அத்தனை விஷயங்களைக் கண்கள் பார்த்துக் கடந்தால் தான் வீடே வரும் ஆர்த்திக்கு.

    ஆர்த்தியின் மாமியாருக்கு பேரன் ஆதர்ஷ் பிறக்கும் வரையில் கதைப் புத்தகங்கள் தான் ஒரே பொழுது போக்கு. அதிலும் ஜோதிர்லதா கிரிஜாவின் கதைகள் என்றால் ஒரு தனி பிரியம். அதைப் புரிந்து கொண்டு எங்கு சென்றாலும் அவரது கதைகளைக் கேட்டு வாங்கிக் கொடுத்து மாமியார் கல்யாணியை மனம் குளிரச் செய்வதில் ஆர்த்திக்கு அலாதிப் பெருமை..

    வீட்டின் அலமாரி நிறைய அவரின் புத்தகங்கள் தான் கதை கதையாய்ப் பேசிக் கொண்டிருக்கும். அறுபது வயதான நிலையில் வாழ்க்கை ஓட்டப் பந்தயத்தில் பந்தயக் குதிரையாக ஓடி ஓடிக் களைத்து இப்போது தான் தனக்கென ஒரு நிம்மதியான வாழ்வை வாழ ஆரம்பித்திருக்கிறாள். மாமியாரின் கொடுமைகள் ஒரு பக்கமும் கணவரின் அடி ஒரு பக்கமாக உரலில் அகப்பட்ட உளுந்தைப் போல உளுத்துப் போவதற்குள் கணவனை விட்டுப் பிரிந்து தனி மரமாக நின்று வாழ்கையில் போராடி ஜெயித்தவள்.அமைதியாக வாழ முடிந்தாலும் ஏன் சிலர் வாழ்க்கையை போராட்டமாக

    Enjoying the preview?
    Page 1 of 1