Tholaithathum… kidaithathum…!
()
About this ebook
1964-இல் மதுரையில் பிறந்து வளர்ந்தவள். அவரது தந்தையார், காலம்சென்ற திரு.பேரை.சுப்ரமணியன், (South Central Railways, Secunderabad) எழுத்தாளர். 1960-இல், ஆனந்த விகடன், கல்கி, கலைமகள், குமுதம் போன்ற முன்னணி பத்திரிகைகளில் நிறைய சிறுகதைகள், எழுதிப் பல பரிசுகள் பெற்றவர். அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பாகிய பல நாடகங்களின் கதாசிரியர். அவரது தாய்.திருமதி.சரஸ்வதி சுப்ரமணியம், அவரை எழுதச் சொல்லி ஆசி வழங்கியவர்.
1988-ல் இவரது சிறுகதைகள் பெண்மணி, மங்கை, மங்கையர் மலர், போன்ற மகளிர் பத்திரிகைகளில் வெளி வந்துள்ளது.
2009 லிருந்து இணையத்தில் எழுத ஆரம்பித்து,. கட்டுரைகள், கவிதைகள், ஹைகூ கவிதைகள், சிறுகதைகள், நெடுங்கதைகள், தொடர்கதைகள் ஆகிய படைப்புகள் இணைய தளத்தின் முன்னணி வார இதழ்களான திண்ணை, வல்லமை, வெற்றிநடை, மூன்றாம்கோணம்,சிறுகதைகள்.காம் போன்ற வலை தளங்களிலும், குங்குமம் தோழி ஆகிய தமிழ் பத்திரிகைகளிலும் பிரசுரமாகி வருகிறது.
Read more from Jayasree Shanker
Aathmaavin Kolangal - Nedunkathaigal Rating: 0 out of 5 stars0 ratingsThaniyadha Thagangal Rating: 0 out of 5 stars0 ratingsDowry Tharatha Gowri Kalyanam Rating: 0 out of 5 stars0 ratingsKaaikatha Maramum... - Sirukathai Thoguppu Rating: 0 out of 5 stars0 ratingsNaaladi Gopurangal...! Rating: 0 out of 5 stars0 ratingsPaavai Vilakkin Olichitharalgal Rating: 0 out of 5 stars0 ratings
Related to Tholaithathum… kidaithathum…!
Related ebooks
Swarangal Rating: 0 out of 5 stars0 ratingsMazhai Megam Rating: 0 out of 5 stars0 ratingsKanal Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsKiligalai Parakka Vidungal Rating: 0 out of 5 stars0 ratingsPoove VenPoove Rating: 0 out of 5 stars0 ratingsIdly Athayum, Gngo Mamavum Rating: 0 out of 5 stars0 ratingsMeendum Nilavu Varum Rating: 5 out of 5 stars5/5Kaadhal Poyin Rating: 0 out of 5 stars0 ratingsUnnale... Unnale… Rating: 5 out of 5 stars5/5Ezhavathu Jenmam Rating: 4 out of 5 stars4/5Azhagooril Poothavaley Rating: 5 out of 5 stars5/5Chinna Chirusugal Rating: 0 out of 5 stars0 ratingsArugil Miga Arugil... Rating: 5 out of 5 stars5/5Pookalin Mozhi Puriyalaye? Rating: 0 out of 5 stars0 ratingsKarpura Kaatru Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalenum Theevinile… Rating: 5 out of 5 stars5/5Vanna Poochchudava Vennila Rating: 0 out of 5 stars0 ratingsNesapoovin Narumanam Rating: 5 out of 5 stars5/5புரியாத ஆனந்தம்... புதிதாக ஆனந்தம்... Rating: 0 out of 5 stars0 ratingsKaathal Thamarai Rating: 0 out of 5 stars0 ratingsNenjukulley Vai Rating: 0 out of 5 stars0 ratingsAnge Sendru Anbai Sollu Rating: 0 out of 5 stars0 ratingsKanavugal Inge Virkkapadum Rating: 0 out of 5 stars0 ratingsVeduk Veduk Vekulamba Rating: 0 out of 5 stars0 ratingsChinna Meen Periya Meen Rating: 0 out of 5 stars0 ratingsNaan Nappinnai Pesukiren Rating: 0 out of 5 stars0 ratingsஉயிரே உன்னை அழைக்கிறேன்..! Rating: 0 out of 5 stars0 ratingsKandharva Veenaigal Rating: 5 out of 5 stars5/5Mullodu Oru Roja and Oru Mutrupulli ‘kama’ vagerathu Rating: 0 out of 5 stars0 ratingsRagasiyathai Sol Kiliye..! Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Tholaithathum… kidaithathum…!
0 ratings0 reviews
Book preview
Tholaithathum… kidaithathum…! - Jayasree Shanker
http://www.pustaka.co.in
தொலைத்ததும்... கிடைத்ததும்..!
Tholaithathum… kidaithathum…!
Author:
ஜெயஸ்ரீ ஷங்கர்
Jayasree shanker
For more books
http://www.pustaka.co.in/home/author/jayasree-shanker
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
தொலைத்ததும்... கிடைத்ததும்..!
யம்மா……நான் பாசாயிட்டேன் …..நான் பி.எஸ்.ஸி பாசாயிட்டேன்…..என்று சந்தோஷமாக குதித்துக் கொண்டு வீட்டிற்குள் நுழையும் தன மகள் மலர்விழியைப் பார்த்ததும் இட்டிலிக்கு மாவு அரைத்துக் கொண்டிருந்த மங்களவல்லிக்கு, தான் என்றைக்கோ பார்த்த 16 வயதினிலே படத்தின் கதாநாயகி மயிலு தான் டக்கென்று நினைவுக்கு வந்தாள் .
அதுக்கென்ன இப்போ?
என்ற அதே குருவம்மாளின் பதில் வாய்வரை வந்தும் அடக்கிக் கொண்டு…
ம்ம்…ம்ம்…அது சரி….உள்ளார போயி உப்பு ஜாடிய எடுத்தா….
என்று இயந்திர கதியாக மாவுரலை சுற்றிக் கொண்டிருந்த அம்மாவைப் பார்த்து,
ஒனக்கு சந்தோஷப் படவே தெரியாதா?
சிடு சிடுத்து விட்டு தனது சுடிதாரின் துப்பட்டாவை ஓங்கி உதறி சரி செய்து மேலுக்குப் போர்த்திக் கொண்டபடியே அடுக்களைக்குள் நுழைகிறாள் மலர்விழி.
அவளது வனப்பில் அவளுக்கே கர்வம் உண்டு.
இறைவன் அவளது குடும்பத்தில் ஏழ்மையைக் கொடுத்த அதே அளவுக்கு அவளிடம் அழகையும் அள்ளிக் கொடுத்திருந்தான்.
எம்மாவ் …உப்பு ஜாடிய நீ எங்கிட்டு வெச்சிருக்கே…இங்கன ஒரே இருட்டாவுல்ல இருக்குது…..வெச்சவுங்களுக்குத் தானே இருக்குற எடம் தெரியும்…நீயே வந்து எடேன் ….அலிபாபா குகை மாதிரி ஒரு அடுக்களை….இதுல எதுக்குள்ளார என்ன இருக்குமுன்னு எனக்கு சோசியமாத் தெரியும்…
ரெண்டு நாளு முன்னாடி ரேசன் கடைக்கிப் போயி சீமத்தண்ணி ஊத்தறாண்டு சொல்லி அம்பது ரூவாவ புளி வெச்சிருந்த ஜாடிக்குள்ளார போட்டு வெச்சிருக்கேன் எடுடீண்டு சொன்னே….அதுக்குள்ளார கைய விட்டா…..அப்பா ஓடியாந்து எடுக்காதே…எடுக்காதேன்னு ஒடியாந்தாரு ….என்னான்னு ஒரு வார்த்தை கேட்டியா அதுக்குள்ளார அம்பது
ரூபா குவாட்டர் பாட்டிலா மாறிக் கெடந்துச்சு…..இதெல்லாம் நீ கண்டுகிடவே கண்டுகிடாத…..ஆமா…..நீயா தண்ணியடிக்கிற? என்று எடக்கு மடக்காக பதில் சொல்கிறாள் மலர்.
அடி கூறுகெட்ட சிறுக்கிடி நீ….ஒண்ணு கேட்டா ஒன்பது சொல்லுவ.. உன்கிட்ட எதுனாக் கேட்டுப்புட்டு எனக்கு உடனே கேட்டது கிடைச்சுருமா? கரண்டு இருந்தா நான் என்னாத்துக்கு இப்படி ஆட்டுக்கல்லாண்ட மல்லுக் கட்டி நிக்கப் போறேன். கிரைண்டர்ல போட்டு ஆட்டிக்கிட மாட்டேன். வந்துட்டா..குவாட்டரையும் ..இருட்டயும் பத்தி பேச…என்று எழுந்திருக்க முடியாமல் ரொம்பக் சங்கடத்தோட கையை தரையில் ஊன்றி மெல்ல எழுந்து….யம்மா… இன்னும் ரெண்டு இட்டிலி போடுன்னு கேட்டு வாங்கித் தின்னத் தெரியும்….இட்டிலிக்கி எதை எப்படி ஊறப் போடுறதுன்னு கூடத் தெரியாது..என்னிக்காச்சும் சமயக்கட்டுப் பக்கம் வந்து நின்னாத் தானே…அப்படி வீட்டுக் குள்ளார ஒரு ரூம்பு இருக்கறதயே நீ கண்டுக்கிட மாட்டே….முனகியபடியே உப்பை எடுக்க சமையல் கட்டுப்பக்கம் போனாள் மங்களவல்லி. கூலி வேலைக்கு போறவரு அலுப்பு சலுப்பு நீங்க ரூபாய எடுத்த எடத்துல வாங்கி வந்தத வெச்சிருக்கும். அவுகளுக்குத் தான் புத்தியில்ல…..கேக்குற உனக்குமா இல்ல…..பெத்தவளப் பாத்து வாய் கூசாம கேக்குறதப் பாரு. தண்ணியடிக்கிறியா…? தண்டால் எடுக்கிறியாண்டு…!
யம்மா…நான் மேல் படிக்கப் போறேன்….டீச்சர் டிரைனிங் ஒரே வருஷம் தான்….அதுக்கு நான் காலேஜுல சேரணும் …ஒரு முப்பதாயிரம் ரூபாய் வேணும் என் ஃபிரண்டு சரோஜா சேர்ந்துட்டா..சேத்தியார்தோப்புல இருக்குது காலேஜு….இங்க சீர்காழில இருந்துக்கிட்டு வயலு வரப்ப பார்த்துக்கிட்டு அதுவும் நமக்கு சொந்தமில்லாததை, யாருக்கோ கூலிக்கி மாரடிச்சுக்கிட்டு ஒரு வசதியும் இல்லாமா இருக்குறத விட ….பேசாம நாம கூட வேற எங்கியாச்சும் நல்ல டவுனு பக்கமாப் பார்த்துப் போயிறலாமா ?
நல்லாக் கேட்டியே ஒரு கேள்வி…பொறந்து, வளர்ந்து, வாக்கப்பட்டு, உழைக்கிற பூமிடி இது…இத்த உதறிப்புட்டு எங்கன எங்கள வரச் சொல்லுற ? நீ என்னமோ பெரிய தொரசாணி வீட்டம்மா கணக்கா பேசிபுட்டா ஆயிரிச்சா…..நான் அன்னிக்கி அடிச்சிகிட்டேன்…அடுத்த வூட்டுக்குப் போயி கரண்டி பிடிக்கிற கையி…இதுக்கு எதுக்கு பெரிய படிப்புன்னு….?உங்கப்பாரு கேட்கலை…நீ எங்க கேக்க வெச்சே…..காலேஜு படிப்பு படிக்கிறேன் ன்னு ஒத்தக் காலுல அடம் பிடிச்சி அறுவடைப் பணத்த அம்புட்டயும் அள்ளிக் கொண்டுட்டு போயி அந்த பாளாப் போன கடடுடத்து கிட்ட கொட்டிட்டு வந்து நின்ன..!
எம்மா…அது படிக்க பீசு ….அன்னிக்கு அம்புட்டு கொடுத்ததாலத் தான இன்னிக்கி நானு ஒரு