Uravu Solla Oruvan...!
By Ushadeepan
()
About this ebook
வாழ்க்கையில் தியாக உணர்வுகளுக்கு எல்லோருமா ஆளாகிறார்கள்? ஒரு குடும்பத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு குணமுடையவர்களாய் இருக்கிறார்கள் என்பது உண்மைதானே? சுயநலத்தோடு தக்க வயதில் திருமணம் செய்து கொண்டு தனிக் குடித்தனம் என்று கிளம்பி விட்ட இரு சகோதரர்களுக்கு மத்தியில் மூன்றாமவனான சகோதரன் தங்கையின் கல்யாணத்திற்காக முயன்று முயன்று, சகோதரிகள் மூவர் திருமணத்திற்குப் பின்பே தனது என்கிற முடிவில் மூத்தவளின் மனதறிந்து வீட்டின் முரண்பாடான எண்ணங்களையும் மீறி, முறையே சம்மதிக்க வைத்து, அவள் விரும்பியவனையே முடித்து வைத்து சந்தோஷக்கிறான். எனக்கு உறவு என்று சொல்ல அவன் ஒருவனே என்று அவள் நன்றியோடு நினைக்கையில் மீதி இருவரின் திருமண நடவடிக்கைகள் பற்றிய ஆழ்ந்த சிந்தனையைத் துவக்குகிறான் அவன்.
Read more from Ushadeepan
Pongi Varum Peru Nilavu Rating: 0 out of 5 stars0 ratingsUnnai Karam Pidithean Rating: 0 out of 5 stars0 ratingsIvalum Oru Thodarkathaithan...! Rating: 0 out of 5 stars0 ratingsKaatrukenna Veli Rating: 0 out of 5 stars0 ratingsEthirparathathu...!? Rating: 0 out of 5 stars0 ratingsUnnidathil Ennai Koduthean Rating: 0 out of 5 stars0 ratingsVellai Nirathoru Poonai Rating: 0 out of 5 stars0 ratingsThavarugal Kutrangalalla...! Rating: 0 out of 5 stars0 ratingsNindru Olirum Sudargal Rating: 0 out of 5 stars0 ratingsLatchiya Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsVilaketriyaval Rating: 0 out of 5 stars0 ratingsNaan Athuvalla Rating: 0 out of 5 stars0 ratingsVadamalli Rating: 0 out of 5 stars0 ratingsThannai Vendravan Rating: 0 out of 5 stars0 ratingsSeivinai Seyapattu Vinai Rating: 0 out of 5 stars0 ratingsAmutham Viritha Valai Rating: 0 out of 5 stars0 ratingsMazhithalum Neettalum...! Rating: 0 out of 5 stars0 ratingsThavikkum Idaiveligal Rating: 0 out of 5 stars0 ratingsKuttram Purinthavan Rating: 0 out of 5 stars0 ratingsShabash Poonkutty Rating: 0 out of 5 stars0 ratings
Related to Uravu Solla Oruvan...!
Related ebooks
Thanthu Vitten Ennai Rating: 5 out of 5 stars5/5Idhayaraagam Rating: 5 out of 5 stars5/5Vidiyalil Oru Vennila Rating: 5 out of 5 stars5/5Ennil Neeyadi!... Unnil Naanadi! Rating: 0 out of 5 stars0 ratingsOrey Murai Un Darisanam...! Rating: 3 out of 5 stars3/5Ippadiyum Ivargal Rating: 0 out of 5 stars0 ratingsUn Paarvai Oru Varam Rating: 0 out of 5 stars0 ratingsSwasamai Kalandhavale! Rating: 4 out of 5 stars4/5Manathil Pathintha Oviyam Rating: 0 out of 5 stars0 ratingsIdhayathai Thirudathe! Rating: 3 out of 5 stars3/5Unnai Saranadainthen Rating: 5 out of 5 stars5/5Mazhai Mega Mayilgal Rating: 5 out of 5 stars5/5Vaana Mazhai Nee Enakku Rating: 0 out of 5 stars0 ratingsPaattu Kalanthidavey Part 2 Rating: 5 out of 5 stars5/5Yenazhuthaai Enuyire Rating: 5 out of 5 stars5/5Nandhini Oru Nandhavanam Rating: 5 out of 5 stars5/5Nilavai Thedum Vaanam Rating: 0 out of 5 stars0 ratingsVanna Vanna Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsVanaththil Oru Thevathai Rating: 5 out of 5 stars5/5Unakkenna Venum Sollu! Rating: 0 out of 5 stars0 ratingsPoongatru Sangeetham Aanathu! Rating: 0 out of 5 stars0 ratingsUyirin Uyire Rating: 4 out of 5 stars4/5Uyiriley Ninaivugal Thalumbuthey! Rating: 4 out of 5 stars4/5Kanne Ethirkkaathe Rating: 4 out of 5 stars4/5Puthagam Moodiya Mayiliragu Rating: 0 out of 5 stars0 ratingsIru Vennila... Un Vaanila... Rating: 0 out of 5 stars0 ratingsVasantha Kaala Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsKaadhaladum Manathu Rating: 3 out of 5 stars3/5Veesum Thendraley Veesu Rating: 5 out of 5 stars5/5Nallathor Veenai Seithe...! - Part 1 Rating: 5 out of 5 stars5/5
Reviews for Uravu Solla Oruvan...!
0 ratings0 reviews
Book preview
Uravu Solla Oruvan...! - Ushadeepan
http://www.pustaka.co.in
உறவு சொல்ல ஒருவன்...!
Uravu Solla Oruvan…!
Author:
உஷாதீபன்
Ushadeepan
For more books
http://www.pustaka.co.in/home/author/ushadeepan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
1
இவளுக்கு ஒருத்தனைப் பிடிக்கிறதுங்கிறது இனிமே என்னாலாகாது...
கோபமாய்ச் சொல்லியவாறே வீட்டுக்குள் வந்தான் சந்திரன்.
அவன் நுழைவதைப் பார்த்ததுமே எதற்கு எதிர்த்தாற்போல் நின்று கொண்டு என்று அறைக்குள் புகுந்து கொண்டாள் மாதுரி.
தன்னைப் பார்த்தால் இன்னும் கோபம் அதிகமாகும். கண்டபடிக்குக் கத்த ஆரம்பிப்பான். நிறுத்தவே மாட்டான்.
அப்பாவோ, அம்மாவோ எதுவுமே சொல்ல மாட்டார்கள். அவனாகக் கத்தி ஓயட்டும் என்று இருப்பார்கள்.
இரண்டு காதுகளுக்கும் பஞ்சு வைத்து அடைத்துக் கொள்ளாத குறைதான். செவிடு போல் இருந்து விடுவார்கள். அவர்கள் கண்டு பிடித்த வழி அது.
பேசப்போனால் அடித்தாலும் போச்சு... ஒரு முறை அதுவும் நடந்து விட்டது.
நீ பேசாதே, வாயைத் திறந்தே, கழுத்தை நெறிச்சுக் கொன்னுப்புடுவேன்... என்றுவிட்டு பளாரென்று கன்னத்தில் அறைந்து விட்டான். நிலை குலைந்து போனாள் மாதுரி.
அடித்த பின்னால்தான் அவனுக்கே உறைத்தது.
சே...! தப்புப் பண்ணிட்டமே...?
பெரிய, வளர்ந்த பொண்ணைப் போய் இப்டிக் கை நீட்டி அடிக்கலாமா? தவறாச்சே... எப்டிச் செய்தேன்?
அடக் கடவுளே... என் புத்தி ஏன் இப்டிக் கோணிப் போச்சு...?
வயசுக்கு வந்த பொண்ணை இப்டிக் கை நீட்டி அடிக்கிற வேலை இனிமே வச்சிக்காதே...
-சந்திரனை அப்பா அன்று வாங்கி விட்டார் வாங்கி. அதிர்ந்து போனான் அவன்.
மன்னிச்சிக்குங்கப்பா... தெரியாமச் செய்திட்டேன்... என்றான்.
அதென்னடா தெரியாமச் செய்றது? கை ஓங்கிற போது நிறுத்திக்க முடியாதோ?
அடிக்கிற அளவுக்குக் கோபம் வர்ற போது, அதை அடக்கத் தெரியாதோ?
அந்தளவுக்கா கோபம் கண்ணை மறைக்குது? அப்டியா அறிவு கெட்டுக் போகுது? முட்டாள்...
அன்றுதான் அப்பா திட்டினார் சந்திரனை. அப்பாவுக்கும் திட்டத் தெரியும் என்று அப்பொழுதுதான் தெரிந்தது.
இன்னொரு தரம்ப்பா... இன்னொருதரம் திட்டுங்கப்பா... என்று கெஞ்சிக் கேட்டுக் கொள்ள வேண்டும்போல் இருந்தது.
அந்தக் கோபத்தை மறந்து, அவனுக்கு இப்படித் தோன்றியது. உரிமையோடு அப்பா திட்டி அன்றுதான் கேட்டான்.
வயசுக்கு வந்த பொண்ணைக் கை நீட்டி அடிக்கக் கூடாது. வயசுக்கு வந்த பையனை மட்டும் திட்டலாமா? ஒரு வயசுக்கு மேலே யாரையும் அவச் சொல் சொல்லி திட்டவோ, அடிக்கவோ செய்றது நாகரீகமான செயலா?
பரமேஸ்வரனுக்கும் உடனே தோன்றித்தான் விட்டது. அவர் தன் வாயைப் பொத்திக் கொண்டு திண்ணையை நோக்கிப் போனது உணர்த்தி விட்டது சந்திரனுக்கு.
துளியும் அவனுக்கு அவர் மேல் கோபமில்லை. மனதுக்குள் சிரித்துக் கொண்டான்.
மனிதர்கள் தங்கள் தவறுகளை உடனுக்குடன் உணரும்போதுதான் என்ன அழகாய் இருக்கிறது என்று ரசித்தான்.
தவறு செய்வது இயற்கை. தவறே செய்யாத அப்பா அந்த இயற்கைக்கு என்றும் உடன்பட்டதேயில்லை. எல்லாமே மனுஷ அறிவுக்குட்பட்டது என்று நினைப்பவர்.
தன் அறிவை எவனொருவன் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து ஆள்கிறானோ அவனால் தவறு செய்ய முடியாது.
அதைக் கண்டபடி அலைய விடுபவன்தான் மனதில் தோன்றுவதையெல்லாம் செய்து கொண்டே போகிறான்.
அதற்கு முடிவே இல்லாமல் போய் கடைசியில் அழிந்தும் மடிகிறான் என்பார்.
புத்தியைச் செப்பனிடு. அதை எப்பொழுதும் கூர்மையாய் வைத்துக் கொள். என்ற சித்தாந்தம் உடையவர் பரமேஸ்வரன்.
இது நடந்து ஏழெட்டு வருடத்திற்கு மேல் இருக்கும். அன்றிலிருந்து கை நீட்டும் பழக்கத்தை விட்டு விட்டான் சந்திரன்.
பயங்கரமாய்க் கோபம் வரும் சமயத்தில். சமயத்தில்தான். அபூர்வமாய் அன்று என்னவோ வந்து விட்டது. அது அவனுக்கே புரியவில்லை. புரியாமல் வருவதுதானே கோபம். அறிவைக் கெடுத்து முன்னிற்பதுதானே... என்று சமாதானம் செய்து கொண்டான்.
தன் படிப்புக் கெடுகிறது என்று பக்கத்து வீட்டில் சத்தம் போட்டு விளையாடிக் கொண்டிருந்த பையனைச் சொல்லிச் சொல்லிக் கேட்காமல், போய் ஒரு அறை கொடுத்தான்.
அப்பமாய் வீங்கிவிட்டது அவன் கன்னம். பழியாய்ச் சண்டைக்கு வந்து விட்டார்கள் அவர்கள் வீட்டில்.
வாசலில் அடியாட்கள் நாலு பேர் வந்து நின்று, யாருய்யா எங்க பையனை அடிச்சது, வெளியே வா... என்றார்கள்.
அம்மா பார்த்தாள். அந்தக் கூட்டத்தைச் சமாளிக்க, அவர்கள் கோபத்தை அடக்க, அதுதான் சரியான வழி... என்று ஒன்று செய்தாள்.
கையில் கம்பை எடுத்துக் கொண்டு அண்ணனை விளாறி விட்டாள். போதும் போதும் என்கிற அளவுக்கு அடித்துத் துவைத்தாள்.
உண்மையான அடிதான். செமையான அடி. அசையாமல் கல்லாய் நின்றான் சந்திரன். செய்தது தப்புதான் என்று அந்த அடி உணர்த்தியது.
இனி இந்தத் தப்பு நடக்கக்கூடாது என்று அவனே தீர்மானித்துக் கொண்டதுபோல், அத்தனை அடியையும் அமைதியாய் வாங்கிக் கொண்டான்.
அவர்களே, போதும்மா, விட்டிடுங்க... என்னவோ தெரியாமச் செய்துட்டாரு பையன்... விடுங்க... விடுங்க... இனிமே இப்டிச் செய்யாதீங்க தம்பீ... அதென்ன அடுத்த வீட்டுப் பிள்ளையக் கை நீட்டுறது?...என்று விட்டுக் கலைந்து போனார்கள்.
அந்த வேகம் இப்போது எப்படி வந்தது. அதே இடி அடி இல்லையென்றாலும், பழக்கம் இன்னும் தன்னிடமிருந்து விலகவில்லையா? அம்மா அடித்த அடிக்கு அப்புறம் என்னதான் மரியாதை?
அதென்ன பொம்பளையைக் கை நீட்டுறது? நானே என் பொண்ணை அடிச்சதில்லை... இது நாள் வரைக்கும் என் விரல்கூட அவள் மேல் பட்டதில்லை. நீ எல்லாம் எடுத்துச் செய்றேங்கிறதுக்காக இதையும் செய்வியா? - பார்வதியும் பிடித்துக் கொண்டாள் அன்று.