Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sabthapathi
Sabthapathi
Sabthapathi
Ebook84 pages32 minutes

Sabthapathi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை ‘ரன் மெஷின்’ என்றால், 83 வயதிலும் ஓயாமல் எழுதி வரும், மூத்த படைப்பாளர் மகரிஷியை, ‘எழுத்து இயந்திரம்’ என்றே சொல்லலாம். இதுவரை, 130 நாவல்கள், 5 சிறுகதை தொகுப்புகள், 60க்கும் மேற்பட்ட கட்டுரைகள் என 22 ஆயிரம் பக்கங்களுக்குமேல் எழுதிக் குவித்துள்ளார். இன்றும் அவரது பேனா மையின் ஈரம் காயவே இல்லை.

இவர் எழுதிய பல நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டு உள்ளன. ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய, ‘புவனா ஒரு கேள்விக்குறி’ (1977) படத்தின் கதை மகரிஷியுடையது.

தவிர, ‘பனிமலை’ என்ற நாவல், ‘என்னதான் முடிவு?’ (1965) படமாக ஆக்கம் பெற்றது. ‘பத்ரகாளி’ (1976), ‘சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு‘ (1977), ‘வட்டத்துக்குள் சதுரம்‘ (1978), ‘நதியை தேடிவந்த கடல்’ (1980) ஆகிய திரைப்படங்களும் மகரிஷியின் நாவல்களை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்பட்டன.

தமிழில் கல்கி, ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், சுஜாதா போன்ற நாவலாசிரியர்களின் படைப்புகளில் ஒருசில, திரைப்படமாக உருவாக்கம் பெற்றுள்ளன. எனினும், தனிப்பட்ட ஒரு எழுத்தாளரின் நாவல்கள் அதிக எண்ணிக்கையில் திரைமொழியில் சொல்லப்பட்டது என்றால் அது மகரிஷி உடையது மட்டுமே. இதை பெருமைக்குரியதாக சொல்லும் அதேநேரம், அதிகளவில் கதை திருட்டுக்கு உள்ளானதும் மகரிஷியின் படைப்புகள்தான்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580123803536
Sabthapathi

Read more from Maharishi

Related to Sabthapathi

Related ebooks

Reviews for Sabthapathi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sabthapathi - Maharishi

    http://www.pustaka.co.in

    சப்தபதி

    Sabthapathi

    Author:

    மகரிஷி

    Maharishi
    For more books

    http://www.pustaka.co.in/home/author/maharishi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    அலுவலகத்தில் தன் மேஜையைக் கடைசி நிமிஷ அவசரத்துடன் ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்த காதம்பரியின் உதட்டோரத்தில் அந்தச் சிரிப்பு மாறவேயில்லை.

    அவள் தன்னைப் பற்றி இப்படித்தான் நினைத்துக் கொண்டாள்.

    'நான் இன்று பூராவும்தான் சிரித்துக்கொண்டிருக்கிறேன்.'

    இந்தச் சிரிப்பிற்கு அர்த்தம் இருப்பதாக அவளுக்குத் தோன்றவில்லை.

    எல்லா நேரத்து மனக்கசப்புகளையும் உள்வாங்கிக் கொண்டு சிரிக்கத் தெரிந்த எத்தனையோ மத்தியதர திரிசங்குகளில் அவளும் ஒருத்தி.

    சிரிப்பைத் தவிர வேறென்ன இருக்கிறது?

    மனக்கிலேசங்கள் உண்டாகும்போது நிலைதடுமாறிக் கண்கலங்கவும், எதேனும் சில அல்ப வெற்றிகளையே மாபெரும் வெற்றியாக மனமெங்கிலும் திருப்தி அலைகளைப் படரவிட்டுக் கொண்டு சிரிக்கத் தெரிந்த மனமும் இருந்தால், அவர்களே இன்றைய வாழ்வின் மிகச் சிறந்த வேதாந்திகள்...

    காலையில் காதம்பரி அலுவலகம் புறப்படும்போது தாயார் அவள் கையில் தொடுத்த மல்லிகைச் சரத்தைக் கொடுத்துக் கொண்டே சிரித்தாள். அது கரு சந்துஷ்டியில்லாத சிரிப்பு என்று காதம்பரிக்குத் தெரியும். பிடித்தமெல்லாம் போக, மகள் மாதமானால் சொண்டு வந்து தருகிற ஒன்பது நூறும், நாற்பது பைசாவும், தாயாரைப் பல நேரங்களில் பரவசத்துடன் சிரிக்க வைத்திருக்கிறது. அதேபோன்ற சிரிப்புதான் இதுவும்... இந்தச் சிரிப்புக்குப் பின்னால் ஒரு மகிழ்ச்சிகரமான அர்த்தமிருப்பதாக காதம்பரி நினைத்தாள்.

    அவள் கையில் வாங்கிய பூவை மறுபடியும் தானே வாங்கிக் கொண்ட தாயார், அதைச் சரியாக இரண்டாக மடித்தாள். பின்கேசத்தில் ஒரு மெல்லிய குழலை விரலால் இழுத்துப் பூவை வைத்துவிட்டு,

    'அவங்க சாயந்தரம் வரதா சொல்லி அனுப்பியிருக்காங்க' என்றாள்.

    'யாரு?'

    'அதான் பாலக்கரை...'

    'ஓ.. அவர்களா...?'

    'ஆமாம்'

    'என்ன பண்ணணும்?'

    - காதம்பரியின் கேள்வியிலேயே கொஞ்சம் பலவீனப்பட்டு விட்டாள் தாயார்.

    'அம்மா, தாயே! நீ ஒண்ணும் பண்ண வேண்டாம், எல்லாம் நானே பண்ணிக்கறேன். சாயங்காலம் கொஞ்சம் நேரத்தோட வீட்டுக்கு வந்தாபோதும்! அவர்கள் ஆறு மணிக்கு மேலே வருகிறார்கள்...'

    'அவ்வளவுதானே?'

    பெண் காதம்பரியின் கையைப் பிடித்துக்கொண்டு கெஞ்சாத குறை.

    தாயார் மரகதத்தைப் பார்த்து ஒரு மாதிரியாகச் சிரித்தாள் காதம்பரி.

    'என்ன எல்லாம் அடியப்புடிடா பாரதபட்டாதானே! ஒரு கிலோ ரவை, கடலைமா, வாழைக்காய், காப்பிப் பொடி, சர்க்கரை, பால் எல்லாம் ரெடி பண்ண வேண்டியதுதானே!'

    'அம்மா அவர்கள் யாராக இருந்தாலும் சரி, மூன்றாம் மனிதர்களாக இருந்தாலும் சரி, ஒரு மனித அறிமுகத்திற்காக வரட்டும்... சந்தோஷமாக நாலுவார்த்தை பேசிச் சிரித்து விட்டு அத்தனை பேருடனும் அமர்ந்து சாப்பிட்டு விட்டுப் போகட்டும். எனக்கு ஆட்சேபணை இல்லை, ஆனால், பெண் பார்க்க வருகிறேன் என்று கூறிக் கொண்டு, இந்த ரெண்டு, மூணு மாசத்திலே இப்படி எத்தனை ஷோ நடந்திருக்கிறதென்று நீயே கணக்குப் போட்டுப் பார்!

    'அதைப் பார்த்தா ஒண்ணும் நடக்காதுடி, காதம்பரி... அதைப்பத்தியெல்லாம் பெரிசா பேசறதிலேயும் அர்த்தமில்லே. எல்லாம் ஒரு சம்பிரதாய அடிப்படையிலே...'

    காதம்பரி மீண்டும் கலகலப்பாக நகைத்தாள். 'நான் வேண்டாங்கலே, செஞ்சு போடு... ஏன்னா, நீ சம்பிரதாயத்திலே ஊறினவ, உன்னுடைய ஆசைகள் என்பதுகூட ஒரு சம்பிரதாய அடிப்படையிலே ஆழமா வேர் ஊன்றிப் போயிருக்கு. அதனால உன்னைப் பொறுத்தவரையிலே அது சரியாகவேதான் படும்... படட்டும், இப்ப என்ன, நான் சாயங்காலம் சீக்கிரமா வரணுங்கறே. ஒ...கே...ஒ...கே... வரேன்... ஆளை விடு வேற என்ன?'

    'ஒண்ணுமில்லே. கட்டிண்டு போறதை, வேற ஏதாவது பளிச்சினு கட்டிண்டு போ... உள்ளே இருக்கற பட்டுப்புடையையிலே ஒண்ணை எடுத்துக் கட்டிக்கோ! ஒருவேளை, சாயங்காலம் நீ ஆபீஸிலிருந்து உள்ளே நுழையறபோது அவர்கள் உன் வருகைக்காக உட்கார்ந்து கொண்டிருந்தாலும் இருக்கலாம்...'

    தாயாரின் ஆசையை அவள் கொடுக்கவில்லை. கட்டிக் கொண்டிருந்த ஷிபானை உள்ளே போய் நழுவவிட்டு விட்டு, புதிய பட்டுப்புடைவையொன்றைக் கட்டிக் கொண்டு விட்டாள்.

    பெண் இன்று ரொம்பவும் அடங்கிப் போயிருக்கிறாளே! சொன்னவுடனே உள்ளே போய் தன் விருப்பப்படி வேறு புடைவை கட்டிக்கொண்டு வந்ததில் தாயாருக்கு மகா சந்தோஷம்...

    இப்படிச் சின்னச்சின்ன சந்தோஷங்களிலேயே திருப்தி அடைந்து விடுகிற அம்மாவின் சுபாவம் அவளுக்குத் தெரியும்.

    'வேறென்னமா...?'

    'சாயந்திரமா உள்ளே வரும்போது, கொஞ்சம் அமைதியாக வா... நுழையறபோதே சினிமாப் பாட்டு, ஆபீஸ் கோபத்தோட எவனையாவது

    Enjoying the preview?
    Page 1 of 1