Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Spatikam
Spatikam
Spatikam
Ebook70 pages28 minutes

Spatikam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை ‘ரன் மெஷின்’ என்றால், 83 வயதிலும் ஓயாமல் எழுதி வரும், மூத்த படைப்பாளர் மகரிஷியை, ‘எழுத்து இயந்திரம்’ என்றே சொல்லலாம். இதுவரை, 130 நாவல்கள், 5 சிறுகதை தொகுப்புகள், 60க்கும் மேற்பட்ட கட்டுரைகள் என 22 ஆயிரம் பக்கங்களுக்குமேல் எழுதிக் குவித்துள்ளார். இன்றும் அவரது பேனா மையின் ஈரம் காயவே இல்லை.

இவர் எழுதிய பல நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டு உள்ளன. ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய, ‘புவனா ஒரு கேள்விக்குறி’ (1977) படத்தின் கதை மகரிஷியுடையது.

தவிர, ‘பனிமலை’ என்ற நாவல், ‘என்னதான் முடிவு?’ (1965) படமாக ஆக்கம் பெற்றது. ‘பத்ரகாளி’ (1976), ‘சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு‘ (1977), ‘வட்டத்துக்குள் சதுரம்‘ (1978), ‘நதியை தேடிவந்த கடல்’ (1980) ஆகிய திரைப்படங்களும் மகரிஷியின் நாவல்களை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்பட்டன.

தமிழில் கல்கி, ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், சுஜாதா போன்ற நாவலாசிரியர்களின் படைப்புகளில் ஒருசில, திரைப்படமாக உருவாக்கம் பெற்றுள்ளன. எனினும், தனிப்பட்ட ஒரு எழுத்தாளரின் நாவல்கள் அதிக எண்ணிக்கையில் திரைமொழியில் சொல்லப்பட்டது என்றால் அது மகரிஷி உடையது மட்டுமே. இதை பெருமைக்குரியதாக சொல்லும் அதேநேரம், அதிகளவில் கதை திருட்டுக்கு உள்ளானதும் மகரிஷியின் படைப்புகள்தான்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580123803141
Spatikam

Read more from Maharishi

Related to Spatikam

Related ebooks

Reviews for Spatikam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Spatikam - Maharishi

    http://www.pustaka.co.in

    ஸ்படிகம்

    Spatikam

    Author:

    மகரிஷி

    Maharishi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/maharishi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    சில சமயத்திலே நான் செஞ்சது தப்பா இருக்குமோன்னு வியாகூலப்படறேன். அந்த வியாகூலம் விசுவோட மூஞ்சியைப் பாக்கறச்சே ஜாஸ்தியாகிடறது.

    பெரியவா அடிக்கடி சொல்றாளே, 'பாத்திரமறிஞ்சு பிச்சை இடு'ன்னு, நான் அதை மொதல்லே கவனிக்காம விட்டுட்டேனோன்னு எனக்குள்ளே நெனச்சுப் பாத்துக்கறேன். சில சமயம் தப்பாத் தோண்ற அதே விஷயம், சில சமயம் குழப்பமா படறது. மலைப்பா வந்து ஒடம்பு அப்படியே ஜில்லிட்டுப் போயிடறது.

    என்னோட வயசுக்கு எனக்கு இந்தக் கொடுமையான தண்டனை ரொம்ப ஜாஸ்திதான்.

    அதிகம்தான்! அதிகம்தான்!

    இதைப்போய் நான் யார்கிட்டே சொல்லிக்க முடியும். யார் கேக்கத் தயாரா இருக்கா! நானே சொல்லிண்டாக்தான். இல்லேன்னா இருட்டிலே சில சமயம், கற்பக்கிர விளக்கிலே ஒளிஞ்சுண்டு கண்ணாமூச்சி காட்டற மாதிரி தானும் வெளிச்சத்துக்கு வராமே, மத்தவாளையும் வரவிடாமே காபந்து செஞ்சுண்டு நிக்கறானே ஆண்டவன், அவன்கிட்டேதான் மானசீகமா சொல்லிப் புலம்பறேன். வாயிருந்து பேசறவாளை விட, கண் இருந்து பாக்கறவாளை விட, காது இருந்து கேக்கறவாளைவிட, ஒண்ணுமே இல்லாமே, அசைவேயில்லாமே, ஏதோ ஒரு அபூத சக்தியைப் பிரபஞ்சம் பூராவிலும் புகையாட்டமா பரக்க விட்டுட்டு நிக்கறானே அவன்கிட்டே சொல்றதிலே ஒரு திருப்தி; ஒரு மன சந்துஷ்டி.

    அவன் வருவானோ!

    அவன் வருவானோன்னு யார்கிட்டேயும் போய் நான் கேட்கறதில்லே. இந்தக் கேள்வியையும் அந்த அவன் கிட்டேதான் போய்க் கேக்கறேன். மன ஆறுதலுக்காக எனக்கு நானேக்கூட, 'அவன் என்னிக்கானும் ஒருநாள் வருவா'ன்னு சொல்லிக்கக்கூட தைரியம் வரமாட்டேங்கறதே! அவன் நிச்சயமா வருவான்னு உள்ளுக்குள்ளேயே நினைக்கக்கூட திராணியில்லேயே, அது ஏன்?

    அஞ்சு வயசு விசு அதோ கண்ணை மட்டும் மூடிப் படுத்துண்டு இருக்கான். அவன் இன்னும் தூங்கலை. வெளியிலே கொட்டிண்டு இருக்கற மழையோட சத்தத்தை ரஸிச்சுண்டு இருக்கான். அவனுக்கு வாழ்க்கையோட ஏத்த இறக்கம் பத்தியோ, மனசோட தன்மை பத்தியோ ஒண்ணும் தெரியாது. நித்தியும் ராத்திரிலே தூக்கம் வரலைன்னா ஏதாவது கதையொண்ணு சொல்லு பாட்டிங்கறச்சே, நான் சொல்லுவேனே ஒரு ராஜாராணிக் கதை. அதுவேதான் வாழ்க்கைன்னு நெனச்சுண்டு பிரமிச்சுப் போற வயசு. மனசோட விகசிப்பே இல்லாத சின்ன மொட்டாட்டமா இருப்பான் அவன்.

    அம்மாப் பொண்ணை பாக்கறச்சேயெல்லாம் என்னோட அடி வயத்திலே முட்டி மோதி அடக்கமுடியாம ஒரு வேதனை கிளம்பறதே அதுகூட அவனுக்குத் தெரியாது. விசுவையும், அம்மாப் பொண்ணையும் கசிந்து மனம் பாத்து இப்படி ஒரு பந்தமில்லேயேன்னு நான் எந்த தெய்வத்துகிட்டே போயும் கையேந்தி நிக்கலையேடி பாவி. உன்னைப் பாக்காம இருக்கறச்சே உன்னைத் திட்டற இதே மனசு உன்னை நேரே பாக்கற போது அப்படியே இளகிப்போய் விடறதே! உன் மூஞ்சிலே அப்படியென்னதான் மாயம் வச்சு இருப்பே!

    அவன் வருவானோ!...

    கடவுளே, அவன் வருவானோ!

    வெளியிலே மழை நன்னா பளிச்சுனு விட்டுடுத்து. தெருவோரத்திலே அரிச்சுண்டு ஓடற மழைத் தண்ணியோட சத்தம் மட்டும் கேக்கறது. அப்பப்போ அடிக்கற காத்திலே மரம் அசஞ்சு தண்ணி உதிர்ர சத்தமும் கேக்கறது. இதைத் தவிர வேற சத்தமே இல்லே. எட்டு மணிக்கு மேலே என்னிக் காணும் அக்கிரஹாரத்திலே சத்தம் கேக்குமா!

    எதிர்த்தாத்து கோபாலாச்சாரி வெத்தலையைப் போட்டுண்டு காரிக் காரி திண்ணையோரத்திலே துப்பற சத்தமும், ரெண்டு வீடு தள்ளி இருக்கற அஜிப் பாட்டி வெத்தலையை இரும்பு உரல்லே போட்டு இடிக்கற சத்தமும், கோடியிலே இருக்கும் கக்கரை கர்ணம், வெங்கிட்டாத்து வாசல் குரட்டிலே அரிக்கன் லைட்டை வச்சுண்டு

    Enjoying the preview?
    Page 1 of 1