Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Rayilil Vantha Mayil
Rayilil Vantha Mayil
Rayilil Vantha Mayil
Ebook181 pages1 hour

Rayilil Vantha Mayil

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வாசனைப் பூவுக்கு வண்டை அழைக்கும் சக்தி உண்டு. ஒரு பெண்ணின் கண்களுக்கு எந்த முரட்டு ஆணின் மனதையும் ஈர்க்கும் சக்தி உண்டு. அதுபோல, ரயில் பயணத்தில் வீரராகவனும் உமாவும் சந்தித்துக் கொள்கின்றனர். இச்சந்திப்பால் இவர்கள் வாழ்க்கையில் நடந்தது என்ன? அடுத்தடுத்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை காண வாசிப்போம் வாருங்கள்...

Languageதமிழ்
Release dateOct 5, 2023
ISBN6580152609601
Rayilil Vantha Mayil

Read more from Rajendrakumar

Related authors

Related to Rayilil Vantha Mayil

Related ebooks

Related categories

Reviews for Rayilil Vantha Mayil

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Rayilil Vantha Mayil - Rajendrakumar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ரயிலில் வந்த மயில்

    Rayilil Vantha Mayil

    Author:

    ராஜேந்திரகுமார்

    Rajendrakumar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/rajendrakumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    1

    வாசனைப் பூவுக்கு வண்டை அழைக்கும் சக்தி உண்டு. ஒரு பெண்ணின் கண்களுக்கு எந்த முரட்டு ஆணின் மனதையும் ஈர்க்கும் சக்தி உண்டு.

    உண்மையா?

    சோதித்துப் பார்த்ததில்லை. ஆனால் சோதிக்கும் ஆர்வம் மட்டும் அவனுக்கு இருந்தது. எதற்கும் ஒரு அதிர்ஷ்டம் வர வேண்டும்.

    வரும், எனக்கும் வரும். காத்திருப்பேன். அது வரும் வரை விடாமல் காத்திருப்பேன்!

    ரெயிலின் மெலிதான ஆட்டமும் ஓட்டமும் அவனுக்கு பிடித்திருந்தன.

    ஆனால் புழுங்கியது.

    சன்னலைப் பார்த்தான். வெளியே காற்று இருந்தது. சாத்திய கண்ணாடி சன்னலுக்கு அப்பால் தொலைவில் ஆடும்.

    தகராறை விரும்பாத அந்த கண்காணிப்பாளர், அவர்களை அந்தக் கடைசியில் கதவுக்கு பக்கமாக இருந்த படுக்கைகளுக்கு மாற்றினார். அங்கே சன்னலும் இல்லை. காற்றாடியும் இல்லை.

    கிளம்பிபோகிறபோது அந்தப்பெண் ஆங்கிலத்தில் காட்டு மிராண்டி என்று திட்டினாள்.

    அவன் அலட்சியம் செய்தான்.

    இப்போது அந்த வரிசையில் அவன் மட்டுமே இருந்தான்.

    அவர்களின் ஆக்ரமிப்புக்கு அடங்கி ஒரு பகல் பூராவும் வியர்த்திருக்கிறான். உரிமைக்காக போராடிய பிறகுதான் சுதந்திர காற்றை சுவாசிக்க முடிகிறது.

    இந்த உணர்வு பதினைந்து ஆண்டுக்கு முன்பே இருந்திருந்தால்? இந்த நீண்டகால அடிமை வாழ்வு அனுபவிக்க தேவையிருந்திருக்குமா?

    சன்னலை உயர்த்தியதும்,

    குளிர குளிர காற்று சிலீரென்று முகத்தில் வீசி குளிர்வித்தது சுகமாக.

    நினைத்துக்கொண்டான்.

    இப்படி தடைகளை தள்ளித் திறக்கும் திறமை இருந்தும் ஏன் இத்தனை நாளும் தெரியாமல் போயிற்று?

    நினைவில் அவன் அப்பா வந்து நின்றார்.

    அம்மாவை அதட்டினார். நேரத்தோட மருந்து மாத்திரையை தின்னாமல் ஏண்டி வீம்பு பண்றே?

    சமையலில் ஆயிரம் குறைகள் சொன்னார். உப்பு உறைப்பு பார்த்துப் போட தெரியல்லே. உனக்கெல்லாம் எதுக்கு கல்யாணம்? கணவன்? குடும்பம்?

    சின்னப் பையனான இவனை அணைத்து அம்மா கண்ணீர்விடுவாள்.

    இரவு நேரங்களில்,

    அறைக்குள் அப்பாவின் வற்புறுத்தலும் அம்மாவின் கெஞ்சலும் மெலிதாக கேட்கும்.

    இன்னைக்கு வேண்டாங்க. என்னால முடியல்லீங்க.

    சனியன்! சரியான நோய்க்காரியை ஏமாத்தி என் தலையில கட்டிவிட்டான் உங்கப்பன்.

    சற்று நேரத்தில்,

    ஓங்கி அறையும் சத்தமும் ஓசையின்றி அழுத்தமாக அம்மா அழும் ஓசையும் வெளியே இங்கே இவன் அறை வரையில் கேட்கும். சனியன் மூதேவி.

    திட்டிக்கொண்டே வெளிவரும் என் அப்பாவின் வழுவழுப்பான சிலுக்கு ஜிப்பாவில் ஜவ்வாது வாசனையும் அவரோடு கடந்து வரும்.

    அறைக்கதவை இவன் சற்றே கீற்றாக திறந்து பார்த்துக் கொண்டேயிருக்கும் போது,

    காலில் செருப்பை மாட்டிக்கொண்டு வெளியேறிப் போவார். அவர் அறைந்து சாத்திவிட்டுப் போகும் கதவின் ஓசைக்கு,

    அம்மா எழுந்து வருவாள். கதவை சாத்தும்முன் அவர் போவதையே பார்த்துக் கொண்டு நிற்பாள். அம்மா தனது அறைக்கு வருவதை உணர்ந்ததும் ஓடிப்போய் கட்டிலில் போர்த்துக்கொண்டு படுத்துவிடுவான்.

    அறைக்குள் வந்த அம்மா இருட்டிலேயே அவனை ஆராய்வாள்.

    சிலசமயம் அவன் அறையிலேயே தரையில் முந்தானையை விரித்து படுத்துவிடுவாள்.

    பல சமயங்களில் தன் அறைக்குப்போய் நிறைய அழுவாள். இரவு பூராவும் கண்ணீர் விடுவாள்.

    அப்போதும் அப்பாவை நான் தட்டிகேட்கவில்லை. காரணம்? என் வயது!

    நீ சின்னப் பையன். உனக்கு ஒன்றும் தெரியாது. சும்மாகிட என்று தள்ளிவிடுவார் அவன் அப்பா.

    ஒரு நாள் இரவு

    அம்மாவின் அறைக்கு அவன் போனபோது அவசரமாக அழுகையை மறைத்து சிரித்தாள் அம்மா.

    வாடா என் கன்னுக்குட்டி. தனியாயிருக்க பயமா இருக்கா? அவனை உச்சிமுகர்வாள். பழகிக்க. இந்த அம்மாவுக்கு அப்புறமா யார் வருவாங்களோ. இப்படி அணைச்சி ஆறுதல் சொல்வாளோ மாட்டாளோ.

    ஒரு நாள் கேட்டேவிட்டான்.

    அம்மா உங்களுக்கு என்ன உடம்புக்கு?

    இரத்தத்திலே புற்று நோயாம். ஆயிரக்கணக்கில் செலவு செய்தால் இன்னும் ஆறு மாசம் பிழைத்திருக்கலாமாம். டாக்டர் சொன்னார்.

    பின்னே ஏம்மா இரண்டு மாசமா டாக்டர்கிட்ட போகல்லே?

    அப்பாவுக்கு எதுக்கு வெட்டிச் செலவுன்னுதான். அப்படியே ஆயிரமாயிரமா செலவு பண்ணி ஆறுமாசம் இருந்து நான் சாதிக்கப்போறதுதான் என்ன?

    வெடித்து கதறி இவனை அணைத்துக்கொண்டு அழுதாள் அம்மா.

    உன்னை நினைச்சாதாண்டா பயமாயிருக்கு.

    அம்மா...

    எனக்கு வந்த இந்த பயங்கர நோய் எந்த நிமிடமும் என் மூச்சை நிறுத்திடுமாம். எனக்கு அப்புறம் யாருடா உன்னை பார்த்துப்பாங்க? அடுத்து வர்ற புது அம்மா எப்படிப்பட்டவளாக இருப்பாளோ தெரியல்லியே! நீதான் பொறுமையா இருக்கணும் சொல்லுடா, இருக்கேன்னு சொல்லு.

    பார்த்தான்.

    நீ வளர்ந்து மரமாகி நிக்கிறவரைக்கும் இந்த வீட்டு நிழலும் உங்கப்பாவுடைய கண்காணிப்பும் உனக்கு இருக்கணும் அதுக்காக எந்தக் காரணத்தையும் வைச்சு வீட்டைவிட்டு ஓடிவிடக் கூடாது. சத்தியம் செய்துகொடு.

    அவள் நீட்டிய கைமீது கை வைத்தான்.

    சத்தியமா என் காலாலே நான் நிக்கிற வரைக்கும் இந்த வீட்டை விட்டுப் போகமாட்டேன். இது சத்தியம்.

    ***

    சொன்னதைப் போலவே அம்மா சில மாதங்களே இருந்தாள்.

    அவன் பள்ளிக்கூடத்தில் இருந்து வரும்போது சமையலறையில் கவிழ்ந்திருந்தாள்.

    அசையாமல் இவன் கூப்பிட கூப்பிட பேசாமல் இருந்தாள்.

    எரியும் அடுப்பின்மீது சட்டியில் சுண்டி காய்ந்து தீய்ந்துப் போன குழம்பு-பாதி சமையலிலேயே திடீரென்று அம்மா போய்விட்டாள் என்றது.

    நம்புவதற்கே சிரமமாக இருந்தாலும்

    அது உண்மை.

    அம்மா போய்விட்டாள்.

    ஓடினான்.

    களத்துமேட்டில் இருந்த அப்பாவுக்கு அழுதுகொண்டே சேதி சொன்ன போதுதான்.

    அவனை முதல் முதலாகப் பார்த்தாள் சித்தி!

    வேப்பமர நிழலில் போட்டிருந்த கயிற்றுக் கட்டிலில் அப்பா படுத்திருக்க அவரது கால்களை பிடித்துவிட்டுக் கொண்டிருந்தாள்.

    இவன் சொன்ன விபரத்துக்கு ஒரு வினாடி கண்கள் பளபளத்துபின் அலறினாள்.

    அக்கா யக்காவ். என்னோட ஒரு நாளுகூட வாழாம போயிட்டியே! பாவி... என் கையில் ஒரு நாள் கூட ஆக்கிப் போட அதிர்ஷ்டமில்லாமல் போச்சுதே யக்கா.

    இவனை கட்டிப்பிடித்து கதறினாள்.

    அம்மாவின் அணைப்புக்கும் இவள் அணைப்புக்கும் வித்தியாசம் இருந்தது.

    அம்மாவின் பிடிப்பில் இருக்கும் மென்மை இல்லாமல் ஒருவித மூர்க்கமிருந்தது.

    பாசம் தெரியாதது மட்டுமின்றி ஒரு தினுசான அந்நியம் தெரிந்தது. அவளுடைய இரகசிய வருடல் அந்த சூழ்நிலையிலும் அவனை அதிரவைத்தது.

    அப்போதே வாய் திறந்து அப்பாவிடம் சொல்லியிருந்தால்?

    அப்பனோட சேர்ந்து, புள்ளையுமாடி கேட்குது உனக்கு? என்று கேட்டு எட்டி உதைத்திருப்பார். உறவையும் முறித்துக் கொண்டிருப்பார்.

    பேசாமல் இருந்துவிட்டான்.

    தப்பு.

    அதுவும் அவன் செய்த தப்புகளில் ஒன்று, இன்னமும் சரியாகச் சொன்னால் அது முதல் கோணல் அதனால்தான் போலிருக்கிறது முற்றிலும் கோணலாகிவிட்டது.

    இவன் கண் விழித்து தூக்கம் கலைந்தபோது ரெயில் ஏதோ ஒரு அத்துவான காட்டு ரெயில் நிலையத்தில் நின்றிருந்தது. ஆசுவாசுப்படுத்திக் கொண்டு சிக்னலுக்கு காத்து நின்றது.

    சோம்பேறித்தனமாக ஒளி உமிழும் லாந்தர் விளக்கின் மங்கல் ஒளியில் மக்கள் பேயாய் நடந்தார்கள்.

    அந்த இரவு நேரத்திலும் உணவுக்காக நாலுகால் பாய்ச்சலில் ஓடியது ஒரு சொறி நாய்.

    தாகத்துக்காக வாங்கிய தேநீர் பச்சைத் தண்ணீராக இருக்கவே விற்பவன் எதிரேயே அதை கீழே கொட்டினாள்.

    கதவு தட்டப்படவே, எழுந்துபோய் தாளை திறந்தான். கதவை தள்ளித்திறந்து உள்ளே வந்தார் கண்காணிப்பாளர். இந்த ‘பர்த்’ துக்கு ஆள் வருகிறது என்று இவனுக்கு அறிவித்துவிட்டு ஆங்கிலத்தில் தயவுசெய்து உள்ளே வாருங்கள் என்றதும்...

    அறைக்குள்றே பின்னலாக வந்து நின்றாள் அந்தப்பெண் இவனைப் பார்த்து தயங்கினாள்.

    இவன் அமைதியாக உள்ளே வந்து படு. உன்னை கற்பழிக்கும் உத்தேசம் இல்லை என்றதும்,

    வாய்விட்டு சிரித்தாள்.

    2

    ஏன் பெயர் தமிழ்கனி. கல்லூரி மாணவி...

    அவன் முகத்தை ஆராய்ந்தாள். எந்த உணர்ச்சியும் இல்லாமல் போகவே தொடர்ந்தாள்.

    என் அப்பா எர்ணாகுளத்தில் பெரிய டாக்டர். நல்ல ராசியானவர்னு பெயர் வாங்கினதினால் எக்கச்சக்க வருமானம் என் தாத்தா டாக்டராக இருந்தப்ப உயிர் காக்கும் தொழில் என்கிறதினால் வருமானவரி கேட்காமல் இருந்தார்கள். இப்ப அப்பாவின் வருமானத்தில் பாதியை பிடுங்கிக்கிறாங்க" என்றவளின் உற்சாக பேச்சுகள்...

    அவனை பாதிக்கவே இல்லை. மவுனமாக முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

    சார் ஒண்ணு சொல்லலாமா?

    பார்த்தான்.

    "கல்லூரி மாணவி என்றதும் உற்சாகத்துக்கு மாறாத ஒரே மனிதர் நீங்கள்தான்.

    Enjoying the preview?
    Page 1 of 1