Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Iraval Vasantham
Iraval Vasantham
Iraval Vasantham
Ebook162 pages54 minutes

Iraval Vasantham

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கதையின் நாயகி லிசா ஆண்கள் வர்க்கத்தை முற்றிலும் வெறுப்பவர். காரணம் அவருடைய இரண்டு சகோதரிகளுக்கு நடந்த விபரீதம்தான். லிசாவின் நெருங்கிய தோழி மீனாட்சி. எதிர்பாராமல் மீனாட்சியின் வாழ்வில் நடக்கும் நிகழ்ச்சியால் லிசாவின் நிலை தலைகீழாக மாறிப்போகிறது. தோழி மீனாட்சியின் குழந்தையை வயிற்றில் சுமக்கும் நிலைக்கு ஆளாகிறாள். இதனால் மீனாட்சி மற்றும் லிசாவின் வாழ்க்கையில் நடக்கும் திருப்பங்களும் லிசாவின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு பெற்றோர் யார் கேள்விக்கான விடையையும் தெரிந்துக்கொள்ளவோம்...

Languageதமிழ்
Release dateMar 12, 2022
ISBN6580152608159
Iraval Vasantham

Read more from Rajendrakumar

Related to Iraval Vasantham

Related ebooks

Reviews for Iraval Vasantham

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Iraval Vasantham - Rajendrakumar

    https://www.pustaka.co.in

    இரவல் வசந்தம்

    Iraval Vasantham

    Author:

    ராஜேந்திரகுமார்

    Rajendrakumar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/rajendrakumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    லிசா

    நம்புவதற்குச் சிரமம் தரும் இருபத்தைந்து வயது. கூடவே பிறந்த சுதந்திரம். யாருக்கும் அடிமையாகாத மனம். குறிப்பாக ஆண்களிடம்.

    அவளுடைய சந்தன வழவழப்பு உடம்புக்கு, தள்ளி நின்று மூச்சுவிடும் ஆண்கள் ஏராளம்.

    நெருங்கும் தைரியம்?

    அநேகமாக யாருக்கும் வராது.

    நெருங்கிப் போய்ப் பேச ஆரம்பித்தால் நேரடியாக விஷயத்திற்கு வந்து எண்ணி இரண்டாவது நிமிடம்,

    எழுந்து கும்பிட்டு விடுவாள். வணக்கம்.

    அப்படியும் நகர மறுத்தால் அழுத்தமும் கண்டிப்புமாகச் சொல்வாள். குட் பை ஐ ஸே

    அப்புறம் நகர மறுத்தால்,

    இவளே நகர்ந்து போய் விடுவாள் முகத்திலடித்தாற் போல.

    அமெரிக்க இந்தியக் கூட்டுறவுக் கம்பெனி ஒன்றில் டெலிபோன் ஆபரேட்டர் கம் ரிசப்ஷனிஸ்ட்.

    குரலில் இனிமையைக் காட்டி, ஹலோ, பாஸ் உள்ளே பங்குதாரர்கள் சந்திப்பிலிருக்கிறார். அரைமணி நேரமாகும். உட்காருகிறீர்களா?

    போய் ஒரு சின்ன வேலை முடித்துவிட்டு வருகிறேன்.

    உங்கள் யோசனை பாராட்டுதற்குரியது. தனிமை போரடிக்கும். உங்கள் சுறுசுறுப்பை வரவேற்கிறேன் என்றால்,

    எப்படிப்பட்டவரும் 'நன்றி' சொல்லிவிட்டு ஓடிவிடுவார்.

    கான்வெண்ட்டில் படிக்கும்போதே கல்யாணத் தகுதி வந்துவிட்டது. ஆனால்,

    இருபத்தைந்து வயதாகியும் கல்யாண ஆசையை மறந்து இருக்கிறாள். காரணம்?

    அவள் அக்காக்கள் இரண்டு பேர். மூத்த அக்கா ஸூசனின் கணவன் மொடாக் குடிகாரன். தினம் வீட்டில் ரகளை. நிறையச் சம்பாதித்து நிறையக் குடித்தான். அடித்தான். முரட்டுத் தனமாகக் கையாண்டான்.

    மறுத்தால் அடிப்பதும் அறைவதுமாக இரவு நேரச் சித்திரவதை தாங்காமல் ஒரு நாள் பிறந்து வீட்டுக்கு, வந்து விட்டாள் கண்ணீருடன்.

    விவாகரத்துக் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது அவனது கௌரவத்தைத் தாக்கிவிட்டதாம். வீட்டுக்கு வந்து ரகளை செய்தான். அடித்து மிரட்டி அனுப்பினார்கள். போலீஸ் புகார் என்றதும் போய்விட்டான்.

    இரண்டு வருஷம் பிரிந்திருக்க வேண்டும் என்றது சட்டம். காத்திருந்தாள்.

    அப்பா நர்சரி ஸ்கூல் ஒன்றை அவளுக்காக வைத்துத் தந்திருந்தார். சின்னச் சின்னப் பிஞ்சு முகங்களைப் பார்த்து, நடந்த துயரங்களை மறந்திருந்த நேரம்தான் அந்தப் பயங்கரம் நிகழ்ந்தது.

    ***

    மாதா கோயில் பிரார்த்தனை முடிந்து வெளியேறிய கும்பலோடு இவளும் அக்காவுமாக வந்தார்கள்.

    நீ போய்க் கொண்டிருக்கா. நான் என் சினேகிதி. மீனாட்சியைப் பார்த்துட்டு வரேன் என்று சொல்லி இவள் பிரியும்போது,

    அவள் சாலையைக் கடக்கும்போது,

    ராட்சஸ வேகத்துடன் வந்து கொண்டிருந்தது அந்த லாரி.

    அந்த இரவும் மாலையும் சந்திக்கும் இருட்டிலும் அதன் ஓட்டுரை அடையாளம் தெரிந்த இவள், அக்கா... என்று அலறும்போது

    அவள் நின்று திரும்பும்போது தான்,

    ஆவேசமாக மோதித் தூக்கி எறிந்தது போதாதென்று வேகமாக ஓடி அவள் வயிற்றில்,

    அலறிவிட்டாள்.

    அக்காவின் ஆயுள் அங்கேயே முடிந்துவிட்டது. சதைக் கூளமாகத்தான் சவப்பெட்டியில் போட்டுப் புதைத்தார்கள்.

    ***

    இரண்டாவது அக்கா லிண்டாவின் கதை வித்தியாசமானது. ஆனாலும் அதற்கும் காரணம் கணவன்.

    பளிங்கு பொம்மை போலச் சென்ற அக்காவின் உடம்பு அவளைப் பாதிரியார் முன்னால் பிரமாணம் செய்த கணவனுக்கு மட்டும் பயன்படவில்லை.

    பணம், பணம், பணம்!

    அவன் பணத்தாசைக்கு, தேவைக்கு மனைவி என்ற பெயரில் விபசாரியானாள். துபாய் பார்ட்டிகளுக்காக நிறையப் படங்களில் கூட நடித்து அதில் ஒன்றிரண்டு காசெட்டுகள் உள்ளூரில் உலாவ, சிலர் வந்து அப்பாவிடம் முறையிட, கோபம் மிகுந்த அப்பா, போதும் நீ குடும்பம் நடத்தியது என்று திரும்ப வீட்டுக்கே அழைத்துப் போனபோது தான் விபரீதம் புரிந்தது.

    அன்று இரவு நெடுநேரம் வரை லிசாவும் அக்காவும் பேசிக் கொண்டேயிருந்தார்கள்.

    லிசா, இரண்டு பேரின் கல்யாணமும் தோல்வியில் முடிந்துவிட்டது போதும். நீயாவது தப்பிவிடு. உனக்குக் கல்யாணம் வேண்டாம், காதல் வேண்டாம். ஏன், ஆண் உறவே வேண்டாம். கன்னிமாடத்தில் சேர்ந்தாலும் சேரு, கல்யாணத்தில் மட்டும் மாட்டிக்கொள்ளாதே.

    தூக்கம் வருதுக்கா எழுந்து கொண்டாள் லிசா. குட்நைட்.

    குட்பை என்று அக்கா சொன்னதன் அர்த்தம் அப்போது அவளுக்குப் புரியவில்லை.

    மறுநாள் காலை, எட்டு மணியாகியும் அவள் எழாமல் போகவே, கதவை உடைத்துக்கொண்டு உள்ளே போய்ப் பார்த்தபோது

    தூங்கிக் கொண்டிருந்தாள் - நிரந்தரமாக.

    அவள் தின்ற தூக்க மாத்திரைகள் அவள் இதயத் துடிப்பை இரவு இரண்டு மணிக்கே நிறுத்தியிருந்தன என்றது போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்.

    இரண்டு மூத்த சகோதரிகளுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் இவளிடத்தில் வெறுப்பை வளர்த்தன.

    ஆண்கள் என்றாலே வெறுக்குமளவுக்குக் கசப்பை வளர்த்திருந்தன.

    ஆண்களைப் பொறுத்தவரையில் ஓர் எல்லைக் கோட்டைப் போட்டுக் கொண்டுவிட்டாள்.

    ஆண்களுக்கு நடுவிலேயே நின்று கையைக் காலை நீட்டி மடக்கிக் கராத்தே பழகினாள்.

    டிஸ்கோ ஆடினாள்.

    டென்னிஸ் பந்தை அடிக்க அப்பாலும் இப்பாலும் ஓடினாள். யோசித்து யோசித்துச் செஸ் காயை நகர்த்தினாள்.

    காதல் விளையாட்டைத் தவிர, மற்ற அனைத்து விளையாட்டுக்களிலும் ஆண்களுக்கு ஈடுகொடுத்தாள்.

    கட்டிலைத் தவிர அனைத்து இடங்களிலும் ஆண்களைச் சந்தித்தாள்.

    கராத்தேயில் அவள் வேகம் - அவள் திறமை புரிந்திருந்ததனால் யாருக்கும் அவளைக் கற்பழிக்கும் ஆசையோ எண்ணமோ ஏற்பட்டதே இல்லை.

    லிசா ஒரு நெருப்பு. ஆண்களைப் பொறுத்த வரையில் அவள் ஒரு புயல். பருவத்தால் செதுக்கிய அழகான புயல்

    இரண்டு பெண்களின் தோல்வியுற்ற கல்யாணத்தின் காரணமாக இவள் அப்பாவும் கல்யாண விஷயமாக அதிகம் வற்புறுத்தாமலிருந்துவிட்டார்.

    அவளாக முடிவெடுக்கட்டும் என்று விட்டுவிட்டார்.

    மீனாட்சி

    மீனாட்சி! இந்துப் பெண்ணாக இருந்தாலும் லிசாவுக்கு தோழி. பள்ளியில் தொடங்கி, கல்லூரியில் தொடர்ந்து, இப்போது ஒரே ஆபீஸில் தொடர்ச்சி விடாமலிருக்கும் நட்பு.

    இவள் அக்காக்களின் திருமணத்தின்போது சர்ச்சுக்கு வந்திருக்கிறாள். மலர்ச் செண்டு கொடுத்து வாழ்த்தியிருக்கிறாள்.

    அவர்கள் இறந்தபோது இடுகாட்டுக்கு வந்து லிசாவைக் கட்டுப்படுத்தி இருக்கிறாள். மலர் வளையம் வைத்திருக்கிறாள். அவர்களுக்காகச் சிலுவைக் குறியிட்டுக் கொண்டிருக்கிறாள். பிடி மண்ணைப் போட்டிருக்கிறாள்.

    ஆபீஸில்,

    இன்னைக்கு அவல்கேசரி கொண்டு வந்திருக்கேன் உனக்கும் சேர்த்து. நீபாட்டுக்குப் புறப்பட்டு ஓட்டலுக்குப் போயிடாதேடி என்பாள்.

    இன்னைக்கு எங்க வீட்டிலேர்ந்து தயிர்சாதம்தான் கொண்டு வந்தேன். புளிப்பு வாசனை குமட்டுது. உன் பிரட் பட்டர் ஜாமில் பங்கு கேட்கப் போகிறேன் என்பாள் உரிமையோடு.

    காஸினோவுக்கு ஈவ்னிங் ஷோ ரெண்டு டிக்கெட் வாங்கி இருக்கேன். நீயும் வருகிறாய்.

    ஸாரி லிசா. இன்னைக்கு சஷ்டி. கோயிலுக்குப் போய் முருகனையும் பிள்ளையாரையும் பார்க்கணுமாம். அம்மா ஆர்டர்.

    சரி, போகிற வழியில் நான் வெளியிலேயே நிற்கிறேன். நீ பார்த்துட்டு வந்துடு. ஆறு ஐம்பத்தைஞ்சுக்குத்தான் மெயின் பிக்சர். அதுக்குப் போனால் போதும்.

    இருவருக்குமிருக்கும் ஒரே வித்தியாசம் மீனாட்சிக்குக் கல்யாணமாகிவிட்டது.

    ***

    ஆச்சு மீத்து மியா. உம்? கையை ஆட்டி ஆட்டிப் பெரிதாகப் பேசிக் கொண்டிருந்தது அந்தக் குழந்தை ஆச்சூ மியாங்?

    கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்தான் ராகவன்.

    Enjoying the preview?
    Page 1 of 1