Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vaalgal Jakkirathai!
Vaalgal Jakkirathai!
Vaalgal Jakkirathai!
Ebook100 pages36 minutes

Vaalgal Jakkirathai!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

குழந்தைகள் என்றாலே நகைச்சுவை தன்மையுடையவர்கள்தான். அதுவும் வால் பையன்கள் என்றால் அங்கு நகைச்சுவைக்கு எல்லையில்லை. இவ்வாறாக ஹைஸ்கூல் பிஞ்சுகளை வைத்து அழகாக எழுதப்பட்டதே இக்கதை. காலம் என்னதான் மாறினாலும் குழந்தைக் காலக் குறும்புகளும், பள்ளி நாள் அனுபவங்களும் என்றும் ரசிக்கப்படும். நாமும் நம் பள்ளி பருவ காலத்தின் நகைச்சுவை குறும்புகளின் நினைவுகளுடன்...

Languageதமிழ்
Release dateMay 2, 2022
ISBN6580152608168
Vaalgal Jakkirathai!

Read more from Rajendrakumar

Related to Vaalgal Jakkirathai!

Related ebooks

Reviews for Vaalgal Jakkirathai!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vaalgal Jakkirathai! - Rajendrakumar

    https://www.pustaka.co.in

    வால்கள் ஜாக்கிரதை!

    Vaalgal Jakkirathai!

    Author:

    ராஜேந்திரகுமார்

    Rajendrakumar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/rajendrakumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    இதோ ஙே!

    முன்னுரை

    வால்கள் ஜாக்கிரதை

    வால்கள் எடுத்த போட்டோ!

    வால்கள் நடத்திய மண்டகப்படி

    வால்கள் எழுதிய பரீட்சை

    வால்கள் போன உல்லாசப் பயணம்

    வால்களுக்கு நடுவே...

    வால்கள் சினிமா பார்த்தால்...

    இதோ ஙே!

    விறுவிறுப்பு, கலகலப்பு, சிரிப்பு. எந்த வகைப் ‘பூ’வைக் கொண்டும் மணமுள்ள கதம்பம் கட்டத் தெரிந்த ஒரு சில நாவலாசிரியர்களின் பட்டியலில் ராஜேந்திரகுமாருக்கு நிச்சயம் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய இடம் உண்டு. எழுத்தையே மணந்துகொண்டு விட்டதால் திருமணம் செய்து கொள்ளாத அதிருஷ்டசாலியான பிரம்மச்சாரி.

    ‘வால்கள்’ வரிசைச் சிறுகதைகள் குமுதத்தில் வெளிவந்தபோது, ஹைஸ்கூல் உள்ளங்களை மட்டுமல்ல, கல்லூரி இதயங்களை மட்டுமல்ல, பென்ஷன் பேர்வழிகளுக்குக்கூட ‘கிக்’ கொடுத்தது. ஹைஸ்கூல் பிஞ்சுகளை வைத்து இத்தனை அழகாக நகைச்சுவைக் கதைகளை இவரை விட்டால் தமிழகத்தில் வேறு யார் எழுதியிருக்கிறார்கள்? ‘ஙே’ என்ற சிணுங்கலுடன் குறிப்பிட வேண்டிய சங்கதி: சிரிப்புக் குமாராயிருந்த ராஜேந்திரகுமார், துப்பறியும் குமாராகி நடுவே நகைச்சுவைக்கு நஷ்டம் ஏற்படுத்தியிருந்தார். இந்தத் தொகுப்பு அவரை மீண்டும் சிரிப்பு உலகத்துக்கு இழுக்கும், நாமெல்லாம் சிரித்து மகிழ மறுபடி வாய்ப்புக் கிடைக்கும்.

    முன்னுரை

    நீண்ட இருபத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்பு எழுத்தில் புதுமுக நிலையிலிருந்த என்னை ஊரறியச் செய்த, அறிமுகச் சிறுகதைகள் ‘வால்கள் ஜாக்கிரதை.’

    என் பெயரில் ‘ர்’ சொல்லி முடியும் முன்பே ‘வால்களா?’ என்று கேட்பவர்கள் இன்னமுமிருக்கிறார்கள், வியப்பதில் ஒன்றுமில்லை. காலம் என்னதான் மாறினாலும் குழந்தைக்காலக் குறும்புகளும், பள்ளி நாள் அனுபவங்களும் என்றும் ரசிக்கப்படும். அன்று வாரந்தோறும் வெளியிட்ட குமுதம் ஆசிரியருக்கு என் நன்றி. அதோ அவ்...வளவு உயரம்.

    அன்புடன்

    ராஜேந்திரகுமார்

    சென்னை - 41.

    வால்கள் ஜாக்கிரதை

    மௌனம்.

    முதல் நிமிடம் முடியும் வரை எல்லோரின் பார்வையும் வாசலிலேயே பதிந்திருந்தது.

    இரண்டாவது நிமிடம் தொடங்கியதும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.

    மூன்றாவது நிமிடம் முடியும் போது...

    சிலர் பென்சிலினால் நெற்றியைத் தட்டிக்கொள்ள...

    சிலர் பின்னந்தலையைச் சொறிய...

    இன்னும் சிலர் ‘ஆவ்’ என்று கொட்டாவி விட...

    அந்த ஒன்பதாம் வகுப்பு ‘பி’ பிரிவு கலகலப்புடன் களை கட்டத் தொடங்கியது.

    ஏண்டி இவளே! மைதிலி கேட்டாள். எங்கேடி இன்னமும் காணோம்! மணியடிச்சதுமே டானென்று மூக்கைத் தூக்கிக்கொண்டு நுழையுமே?

    அதுதானே... பாமாவும் ஆதரித்தாள். இன்னமும் காணோமே?

    நரபட்சணியை வேணுமானால் அனுப்பிப் பார்க்கலாமா? என்று பாமாவை அயர வைத்து விட்டுப் பின் அவள் விழிப்பதைக் காணச் சகியாமல், மானி ஈட்டரைச் சொன்னேண்டி. நீ விழிக்காதே... என்று தெளிய வைத்தாள் மைதிலி.

    அவள் கூறியது என் காதிலும் விழுந்து விட்டது என்பதைப் போல, கையிலிருந்த புத்தகத்தை டொம்மென்று டெஸ்க்கின் மீது தூக்கிப் போட்டுவிட்டு, மைதிலியை உறுத்துப் பார்த்தவாறு வெளியே நடந்தாள். அந்த வகுப்பு ‘மானிட்டர்’ அனிலா தாமஸ், மானுமில்லே ஈட்டருமில்லே. லீடர்னு சொல்லுங்கடி.

    ‘போனி டெய்ல்’ அணிந்த அவளது தலை மறைந்ததுமே சளசளவென்ற பேச்சொலியும், சிரிப்பொலியும் தலை தூக்கியது அங்கே.

    ***

    அக்கம் பக்கத்து ஊர்களிலேயே பிரசித்தி பெற்றது அந்த மாவடிபுரம்.

    அந்த மாவடிபுரத்திலேயே மிகப் புகழ் பெற்றது அந்த லேடி சாமுவேல் நினைவு பெண்கள் உயர்நிலைப் பள்ளிக்கூடம்.

    அந்த லே.சா.நி.பெ.உ. பள்ளிக்கூடத்திலேயே மிகவும் பிரபலமானது அந்த ஒன்பதாம் வகுப்பு ‘பி’ பிரிவு.

    அந்த ஊரிலிருந்த வால்கள் அனைத்தையும் சேர்த்து மொத்தமாக அந்த வகுப்பிலேயே போட்டிருந்தார்கள்.

    ஒவ்வொன்றும் ஒவ்வொரு யமன்.

    வேறு வகுப்பில் படிக்கும் சாதுப் பெண்கள் யாருமே அந்த வகுப்புப் பக்கமோ, வகுப்புக்குள்ளேயோ போக மாட்டார்கள்.

    தப்பித் தவறிப் போக நேர்ந்தவர்கள், வகுப்பைவிட்டு வெளியே வந்ததும் முதல் வேலையாக...

    தலையில் பூவோடு ஒட்டிக் கொண்டிருக்கும் சின்னச் சின்னக் காகித உருண்டைகளைத் தட்டி விடுவார்கள்.

    தாவணியில் மசி உதறப்பட்ட இடங்களை மறைக்கப்படாத பாடுபடுவார்கள்.

    இறுதியாக வெடுக்கென்று பிடுங்கப்பட்டதால் கன்றிப்போன முழங்கையைத் தடவிச் சரி செய்துகொண்ட பிறகுதான் மேற்கொண்டு நடப்பார்கள்.

    பள்ளி ஆசிரியைகளுக்கோ அந்த வகுப்புக்குப் போகும் ஒவ்வொரு பீரியடும் சிம்ம சொப்பனம்தான்.

    பி.ஏ., பி.டி. படித்த தங்களுக்கே புரியாத வார்த்தைகளையெல்லாம் இதுகள் எப்படிக் கற்றுக் கொண்டன என்று வியப்புறாத ஆசிரியைகளே கிடையாது.

    மற்ற வகுப்புகளில் எப்படியோ. இந்த வகுப்பில் மட்டும் உள்ளே நுழையும்போதும் சரி, நாற்காலியில் அமரும் போதும் சரி, ஒரு தரத்துக்கு நாலு தரம் நன்றாகப் பரிசோதனை செய்த பிறகுதான் செயலிலிறங்குவார்கள்

    ஏனென்றால்,

    உள்ளே புகுந்ததும் ‘பே’ என்று மேலே விழுந்து அலற வைப்பதும், பிறகு சாரி மிஸ், நான் அவள் என்று நினைத்தேன். இவள் என்று நினைத்தேன் என்று சாதிப்பவர்களும் உண்டு.

    நாற்காலியில் குண்டூசிகளைக் குத்தி

    Enjoying the preview?
    Page 1 of 1