Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Yen? Yeppadi?
Yen? Yeppadi?
Yen? Yeppadi?
Ebook87 pages31 minutes

Yen? Yeppadi?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

16 வயது கூட நிரம்பாத ஜனனிக்கு திருமண ஏற்பாடு செய்கிறார்கள் அவளது பெற்றோர்கள். வரதட்சணை அதிகம் கேட்கும் ஜெகனாதனுடன் திருமணம் நிச்சயக்கிறார்கள். திருமணம் நடந்ததா? திருமணத்திற்கு பின் ஜனனியின் நிலை என்ன? குழந்தை திருமணத்தால் ஒரு பெண்ணின் அவல நிலைப் பற்றிய கதைதான் ஏன்? எப்படி? வாசிப்போம் வாருங்கள்...

Languageதமிழ்
Release dateApr 1, 2023
ISBN6580123909376
Yen? Yeppadi?

Read more from Indhumathi

Related to Yen? Yeppadi?

Related ebooks

Reviews for Yen? Yeppadi?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Yen? Yeppadi? - Indhumathi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ஏன்? எப்படி?

    Yen? Yeppadi?

    Author:

    இந்துமதி

    Indhumathi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/indhumathi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    1

    அம்மா...!

    குளியல் அறைக் கதவை லேசாய் திறந்து தலையை மட்டும் வெளியில் நீட்டி, குழைவும் கொஞ்சலுமாகக் குரல் கொடுத்தாள் ஜனனி. பக்கத்து வீட்டு மஞ்சள் ரோஜாச் செடியின் பூ மட்டும் ஜன்னல் வழியாக எட்டிப் பார்க்கிற மாதிரி இருந்தது. முகம் நிகுநிகு வென்று மின்னிற்று. தாழம்பூ நிறத்திற்கு பார்டர் கட்டின அடர்த்தியான தலைமுடி அழகாகத் தெரிந்தது. தலையில் கொட்டின தண்ணீர் முத்து முத்தாக முகத்தில் உருண்டோடி, இன்னமும் எடுப்பாகக் காட்டிற்று.அகலமும், நீளமுமாக நல்ல கண்கள், தீர்மையான மூக்கு, சின்ன உதடுகள், குமிழிட்ட முகவாய், இன்னமும் சிறு பிள்ளைத்தனம் பாக்கி நிற்கிற பாவம். ‘இவளா, பள்ளியில் கடைசி வருஷம் படிக்கிறாள்!’ - எவரையும் ஆச்சரியமாகப்பார்க்க வைக்கிற கள்ளமற்ற குழந்தைத்தனம். ‘இவளா குழந்தை’ என்று மாற்றுக் கட்சியில்நின்று கொடி தூக்கி எதிர்க்குரல் கொடுக்கும் வாகான பதினாறு வயது உடம்பு, நல்ல உயரம், திரட்சியான சதைப் பிடிப்பு.

    இந்தத் திரட்சியும் சதைப் பிடிப்பும் இப்போது ஏற்பட்டவை. இந்த ஆறே மாதத்தில் மடமடவென்று வளர்ந்து நிற்கும் பயிரைப் போல் சட்டென்று கொடுத்த வளர்ச்சி. அதற்கு முன்பு வரை ஒட்டின மார்பில் நிற்க ஆதாரமற்று விலகி விலகிப்போகும் தாவணியுமாக மரப்பாச்சிப் பொம்மையாக நின்றிருந்தவள்தான்.

    ‘என்னடி இவ... வயசு பதினாறு முடியப் போவுது, இன்னமும் இப்படி நிக்கறா...? பொண்ணுன்னால் அதுக்கேற்ற லட்சணம் வேணாம்...? இப்படி ஒட்டி உலர்ந்த உடம்போடு இருந்தால் நாளைக்கு எவன்டி கல்யாணம் கட்டிக்குவான்...? ஏய் ராஜாம்பா... பொண்ணுக்குப் பால், தயிர் ஊற்றி ஒரு பொம்பளையாக்க வேணாம்...?’

    பாட்டி மங்கையர்க்கரசிக்குப் பேத்தி அப்படிக் குச்சு மாதிரி இருப்பதில் பெரிய அதிருப்தி. தன் மருமகள் ராஜாம்பாள்தான் பெண்ணைச் சரியாகக் கவனிக்கவில்லை என்பதுதான் குறை. பேத்தியுடன் பள்ளிக்கூடத்திலிருந்து வருகிற மற்றப் பெண்கள் எல்லாரையும் பார்க்கப் பார்க்க அவள் மருமகள் மீது காய்வாள்.

    ‘மொதல்ல பெண்ணைத் தேற்றுகிற வழியைப் பாரு...’ என்று சிடுசிடுப்பாள்.

    ‘எங்க குடும்பத்துல யாருக்கும் இந்த மாதிரி கொத்தவரங்கா வற்றலா உடம்பு கிடையாது. யாரைக்கொண்டு வந்ததோ இது?" என்று மறைமுகமாக மருமகள் ஒல்லி என்பதை இத்தனை வருடங்கள் கழித்துச் சொல்லிக் காட்டுவாள்.

    மாமியாரின் அத்தனை பேச்சுக்களையும் கேட்டுச் சில சமயங்களில், ‘கிழவிக்கு வேற வேலை இல்லே...’ என்று ஒதுக்கித் தள்ளுவாள் ராஜாம்பாள். மற்ற சந்தர்ப்பங்களில் அவளும் பதிலுக்குத் திருப்பிக் கொடுப்பாள்.

    ஆமாம்... இங்க எல்லோருக்கும் அப்படியே தளதளன்னு உடம்பு பாரு... பேசறீங்களே? உங்க கடைசி மக ரேணு மட்டும் எப்படி இருக்காம்? புடலங்கா மாதிரித்தான் இருக்கு. ஜனனியோட அப்பா கட்டு மஸ்தா இருக்காரா என்ன... எங்க குடும்பத்தைப் பிடிச்சு இழுக்கறதுக்கு...?

    சட்டென்று தழைந்து போய் விடுவாள் கிழவி. மிஞ்சினால் கெஞ்சுகிற சுபாவம்.

    அதுக்குச் சொல்லலைடி. கூட கொஞ்சம் பால், தயிர், நெய் எல்லாம் தரக்கூடாதான்னுதான் கேட்டேன்...

    அதற்கெல்லாம் ஒரு குறையும் இல்லே... நல்லா தயிரும், நெய்யுமாகத்தான் சாப்பிடறா... ஆனாலும் உடம்புல ஓட்டலேன்னால் நான் என்ன செய்யறது...?

    சாகும்வரை கிழவிக்கு அந்தக் குறை இருந்தது. பேத்தியைச் சதைப்பற்றும் பிடிப்புமாகப் பார்க்க முடியவில்லையே என்று. கிழவி கண்களை மூடின மறுமாதமே சட்டென்று ஜனனியின் உடம்பில் ஒரு மாறுதல் தெரிந்தது. மொட்டு எப்போது பூவாக மலர்ந்தது என்பது புதிராக இருக்கிற மாதிரி ஜனனியின் உடம்பிலும் எப்போது என்று சொல்ல இயலாத ஒரு திரட்சியும் அழகும் வந்து சேர்ந்து கொண்டது. அதன் பின்னரே ராஜாம்பாள் மகளுக்கு முதல் புடவை எடுத்துக் கொடுத்தாள். கட்டிக்கொண்டு வரச் செய்தாள்.

    "இதப் பாரு. இனிமேல மேல் புடவை விலகாமல் பார்த்துக்கணும். அப்படி விலகினாலும் கை உடனே

    Enjoying the preview?
    Page 1 of 1