Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Iravum Nilavum Malarattume…!
Iravum Nilavum Malarattume…!
Iravum Nilavum Malarattume…!
Ebook112 pages38 minutes

Iravum Nilavum Malarattume…!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Pattukkottai Prabakar is a prolific writer of Tamil crime and detective fiction. He has also worked as a screenwriter in the Tamil film industry, and also for Paramapadham, the first Tamil-language "mega-serial" shown on Doordarshan.
First published in the 1977 in Anandha Vikatan. He has written more than three hundreds novels, more than two hundred short stories. Lots of his novels are translated in Telugu and Kannada. He has also worked as a Dialogue writer in more than ten movies in Tamil.
Prabakar's novels most commonly feature the adventures of the detective couple Bharat and Susheela, of Moonlight Agencies, and their employees Marikkozhunthu (a.k.a. Madhavi) and Ravi. There is a running gag in the books about the slogans on Susheela's T-shirts.

Pattukkottai Prabakar frequently collaborates with the detective fiction author duo Subha; some novels have appeared featuring both Bharat and Susheela and Subha's detective couple, Narendran and Vaijayanthi.
Languageதமிழ்
Release dateMar 6, 2019
ISBN6580100903974
Iravum Nilavum Malarattume…!

Read more from Pattukottai Prabakar

Related to Iravum Nilavum Malarattume…!

Related ebooks

Reviews for Iravum Nilavum Malarattume…!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Iravum Nilavum Malarattume…! - Pattukottai Prabakar

    http://www.pustaka.co.in

    இரவும் நிலவும் மலரட்டுமே...!

    Iravum Nilavum Malarattume…!

    Author:

    லட்சுமி பிரபா

    Lakshmi Praba

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-prabha-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    1

    தோட்டத்தில் பூத்திருந்த மலர்களை பார்வையாலே வருடினான் வருணா.

    பால்கனியிலிருந்து பார்த்த போது... அதிகாலை இருளிலும்… பூக்கள் பளிச்சென்று முகம் காட்டின. முன்பக்கத்து தோட்டத்தில் ஆங்காங்கே வெண்னிற முட்டை விளக்குகள் தூண்களில் பொருத்தப்பட்டு… சதா தோட்டம் பளீரென தெரியும்படி நேர்த்தியாய் வடிவமைத்திருந்தார் அப்பா சிதம்பரம். புது பங்களாவுக்கு வந்து ஆறு மாதம் நான் இருக்கும்.

    பணத்தை வாரி இறைத்து வெகு ரசனையாய் கலை நயத்தோடு கட்டியிருந்தார்.

    வருணாவின் அலாதி ரசனைக்கு ஏற்றபடி பார்த்துப் பார்த்து செய்திருந்தார்.

    தோட்டத்தில் இவளுக்கு பிடித்த செடிகள், மரங்கள் அலங்கார ஊஞ்சல்... விஸ்தாரமானநீச்சல் குளம் பக்கவாட்டில்... பின்பக்கத்திலும் பெரிய தோட்டம் தான்...

    எட்டு கிரவுண்ட் நிலத்தை வளைத்துப் போட்டு கட்டப்பட்ட பிரமாண்டமான பங்களா...

    பங்களாவா அது? மாளிகை எனச் சொல்லாம்.

    ஒரு வருடமாய் பார்த்துப் பார்த்து கட்டி முடிக்கப்பட்டது.

    வருணாவின் பிறந்த நாளை முன்னிட்டு... இந்த பங்களாவை பரிசளிக்க விரும்பியசிதம்பரம்... மகளுக்கே தெரியாமல் சஸ்பென்பாய், இதைக் கட்டி முடித்திருந்தார்.

    மகளிடம் மூச்சு கூட விடவில்லை.

    இது காலம் வரை வருணாவிடம் அவர் எதையுமே மறைத்ததில்லை.

    குரோம்பேட்டையில் பதினைந்து, இருபது தோல் தொழிற்சாலைகளுக்கு சொந்தக்காரர் அவர்.

    லெதர் பிஸினஸ் தான் இந்தியாவிலேயே நம்பர் ஒன் பிஸினஸ் ஆயிற்றே...?

    பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டியது. ராணிப்பேட்டையிலும் இவருக்கு சொந்தமாய் தொழிற்சாலைகள் உண்டு.

    அடி மட்டத்திலிருந்து வந்தவர் தான். விடாமுயற்சி, உழைப்பு உத்வேகத்துடன் உழைத்து படிப்படியாக முன்னேறி... பெரிய நிலைமைக்கு உயர்ந்து விட்டிருந்தார்.

    பிஸினஸ் விஷயமாக... ஆபீஸில் எது நடந்தாலும் சரி...

    ஒன்று விடாமல் மகளிடம் கொட்டித்தீர்த்து விட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்.

    முன்பெல்லாம் அவர் இப்படி இருந்ததில்லை, மனைவி மீனாட்சி திடீரென மாரடைப்பில் இறந்ததும்... மனிதர் ஆடிப் போய் விட்டார்.

    அதன் பின் அவர் அடியோடு மாறித்தான் போனார்.

    வருணா தான் உலகம் என்றாகி விட்டது அவருக்கு...

    வருணா தன் அப்பாவை வெகு துல்லியமாய் புரிந்து கொண்டவள்.

    அவரும் அப்படித்தான்...

    காலேஜில் படித்த போது அங்கு நடக்கும் சம்பவங்களை… ஒன்று விடாமல் வீட்டிற்கு வந்ததும் அவரிடம் ஒப்பித்து விடுவாள்.

    வருணாவிடம் எதையுமே மறைக்காதவர் தான்... என்ன தோன்றியதோ?

    போரூரில் எட்டு கிரவுண்ட் நிலத்தில் விஸ்தாரமாய் மாளிகை கட்டி வந்ததை... மூச்சு விடவில்லை.

    தினமும் காலையில் அவர் காரில் கிளம்பும் போதெல்லாம்... பக்டரிகளை கவனிக்கத்தான் செல்கிறார் என நினைத்துக் கொண்டாள் வருணா.

    சென்ற வருடம் தான் அவள் பி.டெக், லெதர் டெக்னாலஜி படிப்பை முடித்திருந்தாள்.

    அண்ணா யுனிவர்சிட்டியில் அவள் படித்த போது... லீவு கிடைக்கும் போதெல்லாம்... சமையல்காரரை ஒதுக்கி விட்டு... அவள் நளபாகத்தில் இறங்கி விடுவாள்.

    சமையல்காரர் காசிக்கு எப்படியோ இருக்கும். "தாயீ! நீங்க என்னத்துக்கு அடுப்புக்கு வந்து வெக்கையில நின்னு கஷ்டப்படறீங்க? எஜமானுக்கு தெரிஞ்சா... என்னைத்தான் கோவிச்சுப்பாரு... நீங்க இளவரசி தாயீ...! என்னென்ன அயிட்டம் வேணும்னு உத்தரவு போடுங்க…

    மாயமா செஞ்சு அசத்திடறேன். நானும் என் பொண்சாதி கனகமும் என்னத்துக்கு இங்கன இருக்கோம்? ஏ... சொல்லு புள்ளே...!

    அதானே? நாங்க இருக்கிறப்போ... நீஎன்னத்துக்கு சிரமப்படறே...? கனம் பேசி முடிப்பதற்குள் இடைமறித்தாள்.

    ஒண்ணும் சொல்ல மாட்டாரு... பொண்ணா பிறந்துட்டு சமைக்கத் தெரியலைன்னு சொன்னா... அது கேவலம்னு நெனக்கிறவள் நான். அம்மா இருந்த வரைக்கும் என்ன நடந்துச்சு? அப்பாவுக்கு ரொம்ப இஷ்டமான அயிட்டம்ஸை... அவங்க கையாலே தானே சமைச்சாங்க?

    நீங்க. டேஸ்ட்டா சமைக்கக் கூடியவங்க... ஆனா... பாரம்பரியமான உணவுவகைகள்லே இருக்கிற பிரத்யேகருசி... அவங்க கைப்பக்குவத்துக்கு தான் வசப்படும்னு நெனச்சு அம்மா சமைச்சாங்கல்ல?

    அம்மா சமைக்கிறப்போ நான் கிட்டத்துல இருந்து கவனிச்சிருக்கேன், என்னமோ தெரியல... அப்பப்போ குறிப்பெடுத்து வச்சேன்.

    வச்சது நல்லதா போச்சு… சரி... வழி விடுங்க... இன்னிக்கு நானே சமைக்கிறேன். கிட்டத்துலே இருந்து ஹெல்ப் பண்ணுங்க... அது போதும்...!

    அம்மா தன் கையாலே சமைச்சுப் போட்டப்போ அப்பாசிலாக்சிசதை நான் பார்த்திருக்கேன்.

    பொண்ணு சமைச்சாள்னு தெரிஞ்சா... அதைவிட சிலாகிப்பாரு... மனதார அவரு பாராட்டுவாரு…

    கவலைப்படாதீங்க... உங்களை அவர் கோவிச்சுக்கவே மாட்டாரு... எனக்கு என் அப்பாவைப் பத்தி தெரியாதா? இன்னிக்கு அவர் ரசிச்சு சாப்பிடறதைப் பார்த்து என் மனசு நிறையணும்...

    வருணா சொன்னது உண்மை தான். மகள் சமைத்திருக்கிறாள் எனத் தெரிந்ததும்... சிதம்பரம் புலகாங்கிதம் அடைந்து விட்டார்.

    பருப்பு உருண்டைக்குழம்பை இவள் சாதத்தில் ஊற்றினாள். பிசைந்து ஒரு

    Enjoying the preview?
    Page 1 of 1