Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Niram Maarum Nenjam
Niram Maarum Nenjam
Niram Maarum Nenjam
Ebook83 pages1 hour

Niram Maarum Nenjam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்துமதி என்ற பெயரில் எழுதும் இவர் தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு சொந்தக்காரர். கிட்டத்தட்ட நூறு புத்தகங்கள் வெளியாகி உள்ளன.மூன்று சிறுகதைத் தொகுதிகள்.இவரது தரையில் இறங்கும் விமானங்கள்,சக்தி,நாவல்கள் சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சியிலும்,கங்கா யமுனா சரஸ்வதி சன்,ராஜ் டிவி களிலும், நீ நான் அவள் விஜய் டிவியிலும் தொடர்களாக ஒளிபரப்பப் பட்டன.இவர் திரைப்படத் துரையிலும் கால் பதித்துள்ளார்.அஸ்வினி என்ற பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்து நடத்தியுள்ளார். திரைப்படத் தணிக்கைக்குழு அங்கத்தினராகவும் இருந்துள்ளார்.தி

இவரது தரையில் இறங்கும் விமானங்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் துணைப்பாடத் திட்டமாக வைக்கப்பட்டுள்ளது. குருத்து, தண்டனை போன்ற சிறுகதைகளும் துணைப்பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டவைகளே! மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் இவரது படைப்புகள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580123903337
Niram Maarum Nenjam

Read more from Indhumathi

Related authors

Related to Niram Maarum Nenjam

Related ebooks

Reviews for Niram Maarum Nenjam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Niram Maarum Nenjam - Indhumathi

    http://www.pustaka.co.in

    நிறம் மாறும் நெஞ்சம்

    Niram Maarum Nenjam

    Author:

    இந்துமதி

    Indhumathi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/indhumathi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    1

    ஜோதி...

    .............

    ஜோ... தீ...

    .............

    ஏய் ஜோதீதீ...

    வாசல் சிமெண்ட் தரையில் நெல்லைக்கொட்டி காலால் அலாத்திக் காய வைத்துக் கொண்டிருந்த ஜோதிக்கு ராஜம்மாவின் குரல் நன்றாகக் கேட்டது. ஆனாலும் காதில் விழாத மாதிரி இருந்தாள் அவள். 'நீ பாட்டுக்குக் கூப்பிட்டுக்கிட்டே இரு. நான் பதில் குரல் கொடுக்கப் போறதில்லை...' என்கிறாற் போல் பேசாமல் இருந்தாள் அவள். காலையில் அம்மா மீது ஏற்பட்ட கோபம் இன்னமும் அடங்கவில்லை.

    ஒரு சாதாரணச் சின்ன விஷயத்தைக் கூட அம்மா மறுத்து விட்ட கோபம். பெரிதாய் எதற்கும் ஆசைப்பட்டு விட வில்லை அவள். பக்கத்துக் கிராமத்தில் புதிதாய்க் கட்டப் பட்ட சினிமாக் கொட்டகையில் 'எங்க வீட்டுப் பிள்ளை' வந்திருக்கிறதாம். இன்னமும் மூன்றே நாளுக்குத் தான் ஓடுமாம். வெள்ளிக்கிழமையானால் வேறுபடம் வருகிறதாம். அவள் சினேகிதி கஸ்தூரி எங்க வீட்டுப் பிள்ளை பார்த்து விட்டு வந்து அதையே ஒரு சினிமா மாதிரி சொன்னாள்.

    என்ன ஜோதி. நீ பார்க்கலேன்ற...? எம். ஜி. ஆரு டபுள் ஆக்டிங்கு. சும்மா சாட்டையைக் கையில் எடுத்துக்கிட்டு 'நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார்...'ன்னு பாடுவாரு பாரு...

    கஸ்தூரி அந்தப் பாடலை அப்படியே பாடிக்காட்ட இவள் தன் அழகான கண்களை ஆர்வத்தினாலும், ஆசையாலும் விரித்துக் குழந்தை மாதிரி கேட்டாள்.

    இதுலேயா அந்தப் பாட்டு... எனக்கு ரொம்பப் பிடிச்ச பாட்டுடி...

    பின்னே, வேற எதுலன்னு நினைச்சே...? என்று தொடர்ந்தாள் கஸ்தூரி.

    எம்.ஜி.ஆரு. மட்டுமில்லே.... சரோஜா தேவி கூட எத்தனை அழகாயிருக்காங்க தெரியுமா?...

    நிஜம்மாவா...?

    நிஜம்மாதான் ஜோதி... கிட்டத்தட்ட உன்னை மாதிரி... ம்ஹும்... நீ இன்னும் அழகுடி. ரொம்ப அழகு. போன மாசம் பக்கத்தூருக்கு வந்த ஸ்ரீ தேவி மாதிரியில்லே இருக்கே....

    ஸ்ரீ தேவி பக்கத்தூருக்கு வந்தாங்களா...? எப்படீ...?

    சட்டென்று சொல்லக் கூடாததைச் சொல்லி விட்ட மாதிரி கீழ் உதட்டைக் கடித்துச் சமாளிக்கப் பார்த்தாள்.

    என்னடி நீ...? தெரியாத மாதிரி கேட்கறே...? பின்னத்தூருக்கு வரலை..? வயல் வரப்பிலேயும், ஏரிக்கரைக்குள்ளேயும் சூட்டிங் எடுக்கலை...?- சாமர்த்தியமாக பதில் கேள்வி கேட்டாள் கஸ்தூரி.

    ஆனாலும் ஜோதி விடவில்லை. முகத்தைக் கோபமாக வைத்துக் கொண்டு சொன்னாள். எனக்கு எப்படி தெரியும்? சூட்டிங் பார்த்தவங்களுக்குத் தானே தெரியும்...? நம்ம ஊர் ஜனங்க முழுதும் வந்திருந்துச்சு. நான் கலா, லமா மோகனாவெல்லாம் கூட ஓடிப் போய் பார்த்தோம். நீ பார்க்காத விசயமே தெரியாதுடி. அப்போ நீ எங்கே இருந்தே...?

    ம்... எங்கே இருந்திருப்பேன்...? மணியக்காரு வூட்ல அம்மாவோட புடவைத் தலைப்பைப் பிடிச்சுக்கிட்டு இருந்திருப்பேன், அம்மா தான் ஒரு நிமிஷம் அதும் கண்ணுல படாட்டி கத்துதே... ஏண்டி நீங்கள்ளாம் போனீங்களே... நம்ம ஜோதிக்குத் தான் சினிமான்னால் ரொம்ப ஆசை யாச்சே... அவளையும் கூட்டிட்டுப் போகலாம்னு தோணிச்சா..உங்களுக்கு..? ஒரு பேச்சு சொன்னீங்களா...? நெற்கட்டு ஏற்றி தேய்ந்து பரட்டையாகக் கிடந்த தலையைச் சொறிந்து கொண்டே சொன்னாள் கஸ்தூரி.

    இல்லேடி... வந்து கூப்பிடலாம்னு தான் நினைச்சோம். ஆனால் சினிமான்ற பேச்சைக் கேட்டாலே அந்த மணியக்கார அய்யிரு, உங்கம்மா ரெண்டு பேரும் சேர்ந்து சத்தம் போடுவாங்க. 'போடி போங்க... சினிமாவுமாச்சு, சூட்டிங்கு மாச்சு. அங்க போயி ஏன் நேரத்தை வீணாக்கறீங்க? அந்த நேரத்துல அறுப்பறுத்து, கட்டு தூக்கினாலும் நாலு காசாச்சும் கிடைக்கும்'னு எங்களையும் போக விடாமல் தடுத்துடுவாங்கன்ற பயத்துனால தான் நாங்க கூப்பிடலை. இல்லாட்டி கூட்டிட்டுதான் போயிருப்போம்...

    என்னை விட்டுப் போயிட்டு வந்து இப்போ சமாதானம் சொல்லாத. ஆமா, சூட்டிங் எத்தனை நேரம் நடந்துச்சு...?

    "காலைல பத்து மணியிருக்கும் ஆரம்பிச்சு வெய்யில் தழைய முடிச்சுட்டாங்க...

    அத்தினி நேரமும் அங்கேயே இருந்தீங்க...?

    ஆமாண்டி..

    என்னடி செஞ்சீங்க...?

    "என்ன செய்வாங்க...? சும்மா வேடிக்கை

    Enjoying the preview?
    Page 1 of 1