Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thapithey Theeruven
Thapithey Theeruven
Thapithey Theeruven
Ebook105 pages32 minutes

Thapithey Theeruven

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Indra Soundar Rajan, (b. 13 November 1958) is the pen name of P. Soundar Rajan, a well-known Tamil author of short stories, novels, television serials, and screenplays. He lives in Madurai.

He is something of an expert on South Indian Hindu traditions and mythological lore. His stories typically deal with cases of supernatural occurrence, divine intervention, reincarnation, and ghosts, and are often based on or inspired by true stories reported from various locales around the state ofTamil Nadu.
Two or three of his novels are published every month in publications such as Crime Story and Today Crime News.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100703400
Thapithey Theeruven

Read more from Indira Soundarajan

Related to Thapithey Theeruven

Related ebooks

Related categories

Reviews for Thapithey Theeruven

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thapithey Theeruven - Indira Soundarajan

    http://www.pustaka.co.in

    தப்பித்தே தீருவேன்

    Thapithey Theeruven

    Author:

    இந்திரா செளந்தர்ராஜன்

    Indira Soundarajan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/indira-soundarajan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    1

    தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார் மித்ரா!

    ஐம்பது வயது தொழிலதிபர்.

    கலர் கலராய் ‘மாருதி, அம்பாஸடர், வாக்ஸ் ஹால்’ என்று ஜாதிக்கு ஒரு கார் வைத்திருந்தவர்.

    வீதிக்கு ஒரு வைப்பாட்டி இருந்ததாகவும் பேச்சு!

    நாக்கு வெளித் தொங்க, போட்டிருக்கும் கோட், சூட்டைக்கூட கழட்டியிராத அவசரத்தோடு கழுத்துக்கு அவர் சுருக்கு மாட்டிக் கொள்ள, அவரைப் பொறுத்த வரையில் நிறைய காரணங்கள் ஒரு காலத்தில் இருந்தன.

    அதாவது கோர்ட் அவரைப் பாப்பர் என்று அறிவிக்கும் முன்பு....

    மஞ்சள் கடிதத்தைக் காட்டி கடன்காரர்களை எல்லாம் ஜெயித்து கெளரவம் போய்விட்ட போதிலும் உயிருக்கு பங்கமில்லாமல் ஒரு வாடகை வீட்டில் வாழத் தொடங்கியவர் திடீரென்று எதனால் இப்படிச் செய்து கொண்டு விட்டார்?

    கால் மாட்டில் அழுது கொண்டிருக்கும் மகள் வித்யாவுக்கும் காரணம் புரியவில்லை. வாசல் படியருகே போலீஸுக்காகக் காத்திருக்கும் மகன் சம்பத்குமாருக்கும் காரணம் புரியவில்லை.

    கேவிக் கேவி அழுத்தில் கண் மூக்கு எல்லாம் வீங்கி தனக்கு இன்னும் சாவு வரவில்லையே என்று துடித்தபடி இருக்கும் மித்ராவின் மனைவி சரஸ்வதிக்கும் காரணம் புரியவில்லை.

    சுற்றிலும் சொந்த பந்தங்கள் சேர்ந்து விட்டார்கள்.

    கடனைக் கொடுத்து ஏமாந்துவிட்ட கடன்காரர்களும் சேர்ந்து விட்டார்கள்.

    அந்த வாடகை வீட்டின் பின்புறமாய் அவ்வளவாய் வளர்ந்திராத வேப்ப மரக்கிளை ஒன்றில் வீசும் காற்றில் மெலிதாக ஆடும் அவரது சடலத்தைப் பார்க்கப் பார்க்க எல்லோருக்கும் வியப்பு.

    இவர் வாழ்ந்த வாழ்க்கைக்கு இப்படி ஒரு முடிவு வந்திருக்குன்னா, அதை என்னாலே நினைச்சே பார்க்க முடியலையே...

    கைராசின்னா அப்படி ஒரு கைராசி. ஆனா, இப்படித் தூக்குல தொங்கணும்ங்கறது இவர் ராசிபோல இருக்கு...

    கூட்டத்திடம் சிலாகிப்பு.

    ஏம்ப்பா சம்பத்... என்னப்பா ஆச்சு? ஒருவர் அவர் மகனை நெருங்கிக் கேட்கிறார்.

    எனக்கு ஒண்ணுமே தெரியலை சார்.... அப்பா தூக்குல தொங்கற அளவுக்குக் கோழை கிடையாது சார்...

    அப்ப எப்படி இப்படி நடந்துச்சு?

    அதான் சொல்றேன்ல.... என்னால புரிஞ்சுக்கவே முடியலை. நேத்து கூட நல்லாதான் இருந்தார். 'எப்படியும் சம்பாதிச்சு பழைய செல்வாக்கை அடைஞ்சே தீருவேன். வாங்கின கடனை கட்டியே தீருவே’ன்னு உறுதியாகச் சொன்னார் சார்...

    எங்கிட்டகூட அப்படிச் சொன்னவர்தானே மிஸ்டர் மித்ரா.

    அட நீங்க வேற... ஒரு காசா, இரண்டு காசா...? பல லட்சத்துக்கு மஞ்சக் கடுதாசி கொடுத்தவராச்சே. மனசு வெதும்பி இந்த முடிவுக்கு வந்துருக்கலாம்.

    - எல்லோரும் ஆயாசித்துக் கொள்ளும்போது புழுதிக் கவளத்தோடும், ஆம்புலன்ஸ் ஒன்றோடும் வீட்டு முன்பு வந்து நின்றது போலீஸ் ஜீப்.

    பரிச்சயம் மிகுந்த இன்ஸ்பெக்டர் ருத்ரா கேப்பைக் கழட்டியபடி இறங்குகிறார்.

    மித்ராவுக்கு மிக நெருங்கிய நண்பர்.

    தன் மகனையே அவர் மகள் வித்யாவுக்கு தந்து சம்பந்தியாக்கிக் கொள்ளும் விருப்பத்தில் இருந்தவர்.

    இறங்கின வேகத்தில் வீட்டுப் பின்பக்கத்தை அடைந்து தொங்கும் மித்ராவைப் பார்த்து லேசாகக் கலங்கி தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டார்.

    சம்பத் நெருங்கி அவரை சமீபித்து நின்றுகொண்டான்.

    குரல் கம்ம பேசினான்.

    அப்பா இப்படிச் செய்வார்னு எதிர்பார்க்கலை அங்கிள்...

    ருத்ரா அதைக் கேட்டபடியே சுற்றிலும் நோட்டமிட்டார். மரத்தைப் பார்த்தார். சுலபமாக ஏற முடிந்த மரம். கயிறு தொங்கும் கிளை மட்டும் சற்று உயரத்தில் இருந்தது. ஏறி அதில் கயிற்றை வளைத்துக் கட்டி பின் கீழே இறங்கிவந்து ஒரு ஸ்டூலைப் போட்டு ஏறி கயிற்றில் கழுத்தை மாட்டிக் கொண்டு தொங்கிச் சாக நிறைய திட்டமிடுதலும் பொறுமையும் தேவை என்று தோன்றியது.

    ‘தற்கொலை முடிவிற்கு வந்தவர்கள் பதட்டத்திலும், வேகத்திலும்தான் இருப்பார்கள். இப்படித் திட்டமிட்டு சாக வேண்டிய பொறுமை இருக்காதே?’ போலீஸ் மூளையில் கேள்வியின் சின்ன மின்னல்.

    அதற்குத் தோதாக பக்கமாக ஒரு பாழடைந்த கிணறு, சாக நினைப்பவர்களுக்கு முதல் தரமான இடம்... போய் எட்டிப் பார்த்தார்.

    முடிந்த மட்டும் பூமியை ஆழப்படுத்தியும் நீரில்லாத கொடுமையோடு செடி கொடி முளைப்போடு ‘ஹோ' வென்று முகம் காட்டியது கிணறு.

    சாக வேண்டும் என்று மித்ரா விரும்பியிருந்தால் இந்தக் கிணற்றில் கூட குதித்திருக்கலாம். ஊகங்கள் ருத்ராவிடம் ஊர்வலம் போக ஆரம்பித்தன.

    அங்கிள்... சம்பத்தின் அழைப்பு, சம்பத்தைப் பார்க்கிறார் ருத்ரா.

    அப்பாவையும் போஸ்ட்மார்ட்டம் பண்ணணுமா? அவன் கேள்வியில் வேண்டாமே என்னும் கெஞ்சல். ருத்ராவிடம் துணிச்சல்.

    சம்பத் போஸ்ட்மார்ட்டம் பற்றி அப்புறம் சிந்திக்கலாம். இது எப்படி ஆச்சு? மித்ரா தைரியமான ஆளாச்சேப்பா...

    எல்லாரும் அதையேதான் சொல்றாங்க. ஆனா, இப்படித் தொங்கறத பார்த்துட்டுமா சொல்லணும்?

    நீ என்ன சொல்றே... இது தற்கொலைன்னா?

    யெஸ்... இது தற்கொலைதாங்கறது என் யூகம்.

    சம்பத்தின் குரல் ருத்ராவை குழப்பியது. கூடவே கொலையோ

    Enjoying the preview?
    Page 1 of 1