Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Anbudan Kaadhali
Anbudan Kaadhali
Anbudan Kaadhali
Ebook166 pages1 hour

Anbudan Kaadhali

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ரோஜா! இது பூவின் பெயர் மட்டுமல்ல! பிரபல தொழிலதிபர் ராஜரத்தினத்தின் ஒரே மகளின் பெயரும்கூட... அழகு நிறைந்த ரோஜாவை, ஏழையான பார்த்திபன் பார்த்து பார்த்து ஏங்குவான். தன் ஒருதலை காதலுக்காக பல சூழ்ச்சிகளை கடந்து வருவானா பார்த்திபன்? இந்நிலையில் திடீரென ரோஜாவின் சித்தியான ஜெயா இறந்துவிடுகிறாள். ஜெயாவின் இறப்பிற்கு காரணம் ராமகிருஷ்ணனா? ராஜரத்தினமா? மனோதத்துவ டாக்டரான ராமகிருஷ்ணன் ஒவ்வொருவரையும் ஹிப்னாடிஸம் பண்ண காரணம் என்ன? கவுதம் போன்ற உன்னதமான மனிதனால், பார்த்திபனின் அரண்மனையில் வாழும் கனவு நனவாகுமா? நாமும் சில சுவாரஸ்யங்களுடன்...

Languageதமிழ்
Release dateJan 8, 2021
ISBN6580100707791
Anbudan Kaadhali

Read more from Indira Soundarajan

Related to Anbudan Kaadhali

Related ebooks

Reviews for Anbudan Kaadhali

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Anbudan Kaadhali - Indira Soundarajan

    https://www.pustaka.co.in

    அன்புடன் காதலி

    Anbudan Kaadhali

    Author:

    இந்திரா சௌந்தர்ராஜன்

    Indira Soundarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/indira-soundarajan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    1

    ரோஜா!

    இது பூவின் பெயர் மட்டுமல்ல! பிரபல தொழிலதிபர் ராஜரத்தினத்தின் ஒரே மகளின் பெயரும்கூட... அவளுக்கு எடைக்கு எடை தங்கம் தரலாம்... அப்படி ஒரு அழகு! வழக்கமாக ஸ்டேடியத்தில் டென்னிஸ் ஆட வருவாள். புதிய சான்யோவை புழுதி பறக்க ஓட்டி வந்து நிறுத்தி இறங்கி நடந்து வருகையில் தூள் பறக்கும். ஒரு ஸ்லோமோஷன் கற்பனை செய்து பார்க்கையில் அவளின் நிழலருகே மட்டுமாவது போய்ப்போய் உதடு முத்தமிடத் துடிக்கும். அப்படி ஒரு அழகு பிம்பம்.

    ஆனால் நிழலைக் கூட தீண்ட முடியாது. அத்தனை செக்யூரிட்டி!

    பார்த்து பார்த்து ஏங்குவான் பார்த்திபன். ஸ்டேடியத்திற்கு பக்கத்தில்தான் இருக்கிறது அவன் வீடு. அப்பா பல்லவனில் கண்டக்டராக இருந்து இன்று டிக்கெட் செக்கராக உயர்ந்திருப்பவர்.

    ஸ்டேடியத்துக்கு அருகில் நெரிசலான தெருவில் ஸ்டோர் வீடு ஒன்றில் குடியிருந்தபடியே எப்படியோ பார்த்திபனை பட்டம் வரை படிக்க வைத்து விட்டார்.

    பார்த்திபனோடு கூடப் பிறந்தவர்கள் இரண்டு அக்காள்கள். அவன் அப்பா, அம்மாவும் சேர மொத்தமாக ஐந்து பேரும் அந்த வீட்டில் சேர்ந்து இருந்தால் யாராவது மூன்று பேர்தான் வீட்டுக்குள் படுத்துக்கொள்ள முடியும். இரண்டுபேர் வெளியே வராண்டாவில் போய் கட்டையைக் கிடத்தினால்தான் ஆயிற்று.

    அவ்வளவு சிறிய வீடு. ஆனால் பார்த்திபனுக்கோ அரண்மனையில் வாழ வேண்டும் என்பது கனவு! இருப்பது ஒரு ஜீன்ஸ் பேண்ட்! அதிலும் பத்து நாள் அழுக்கு வேறு இருந்தும்தான் ஒரு இளவரசன் என்பதாக மனம் முழுக்க கோடீஸ்வர நினைவு!

    இதனால் தானோ ஒரு ஏழையாக இருந்தும் தெருவில் கோலி விளையாடாமல் எப்படியோ ஒரு டென்னிஸ் பேட்டை வாங்கி கொண்டு ஸ்டேடியத்திற்கு விளையாட வருகிறான்?

    ரோஜாவோடும் விளையாட்டில் மோதிப் பார்க்கத் துடிக்கிறான். ஆனால் அதற்குகூட அவனுக்கு அதிர்ஷ்டமில்லை.

    பந்து பொறுக்கி போடத்தான் வாய்ப்பு கிடைக்கிறது.

    ரோஜா வந்தால் சதீஷ், அசோக், விக்ரம் என்று லட்சாதிபதிப் பசங்களோடுதான் விளையாடுகிறாள்.

    பார்த்திபனை நேருக்கு நேராக பார்க்கக்கூட மாட்டேன் என்கிறாள்.

    இதெல்லாம் பார்த்திபனை பெரிதும் பாதிக்கின்றன.

    ‘பெண்ணே உனது இந்த மமதைக்கு ஒரு நாள் உனக்கு பாடம் கற்பிக்காமல் விட மாட்டேன்’ என்று தனக்குத்தானே சொல்லிக் கொள்கிறான்.

    ‘ஆனாலும் இத்தனை திமிரோடு இருக்கிறாளே இவளைப் போய் எதற்கு காதலித்துக் கொண்டு...’ என்று மட்டும் நினைக்க அவனால் முடியவில்லை.

    இந்த காதல் கைகூடுமா - வாழ்க்கைக்கு பொருந்தி வருமா? என்று கேட்டுக்கொள்ளும் போதெல்லாம் ஆகாசமளவு வராது என்கிற பதில் பெரிதாக தெரியத்தான் செய்கிறது.

    இருந்தும் மனது ‘ரோஜா ரோஜா’ என்று அவளிடமே போய் நிற்கிறது.

    வெளியே யாரிடமாவது சொன்னால் சிரிப்பார்கள்.

    பைத்தியமே என்று கைதட்டுவார்கள்.

    அதிலும் ரோஜாவின் அப்பா ராஜரத்தினத்துக்கு தெரிந்தால் பார்த்திபனை உள்ளங்கையில் வைத்து ஊதி விடுவார்.

    சாதாரணமாக சினிமாவில் ஹீரோக்களுக்குதான் இப்படி ஆசை வரும். சினிமா என்பதே வாழ்க்கையில் நடக்க முடியாததை கற்பனையிலாவது நடத்திப் பார்ப்பது தானே?

    அதிலும் கூட பார்த்திபன் அளவு ஒரு ஏழை ரோஜா அளவு கோடீஸ்வரப் பெண்ணை காதலிக்கிற மாதிரி வருமா என்பது சந்தேகமே...

    ஆசைக்குத்தான் வெட்கம் மானம் எதுவும் கிடையாதே...?

    இன்றும் ரோஜா திமிராக சான்யோவில் வந்திறங்கினாள். ஒயிட் ஸ்கர்ட்டிலும், டி ஷர்ட்டிலும் பார்க்க பிரமிப்பூட்டினாள். நல்ல பணக்கார போஷிப்பில் மந்தாவை ஜெயித்த மார்பு, போனி டைல் ஹேர் ஸ்டைல்.

    ஒரு பதுமைக்கு உயிர் வந்து பந்தாட வந்து கொண்டிருக்கிறது. பார்த்திபன் இன்று அவளோடு விளையாடிப் பார்த்து விடுவது என்கிற தீவிரத்துக்குள் இருந்தான்.

    தன் காதலைச் சொல்ல இதை ஒரு ஆரம்பமாக ஆக்கி கொண்டு விட வேண்டும் என்று நினைத்தான்.

    ஹலோ ரோஜா... என்று பெயர் சொல்லி அழைத்து அவளை நிறுத்தினான். அவளும் திரும்பிப் பார்த்தாள். அதற்கே அவனுக்கு வியர்க்கிறது.

    இன்னிக்கு என் கூட ஒரு சிங்கிள்ஸ் ஆட வர்றீங்களா?

    நீ யார் மேன் என்கூட விளையாட...? திரும்பக் கேட்ட விதத்தில் அவனுக்கு வலித்தது.

    பார்த்தீங்களா நான் மரியாதையா பேசறேன். நீங்க ‘வா போ நீ’ன்னு ஏக வசவுல பேசினா எப்படி?

    நீ மட்டும் என் பேரை சொல்றே... யார் நீ அதைச் சொல் முதல்ல...

    மை நேம் இஸ் பார்த்திபன் - வழிந்தான்.

    வாட் அபவுட் யூ...

    யூமீன்... நான் என்ன பிசினஸ் பண்றேன்னு கேட்கறீங்களா? - தடுமாற்றத்துடன் திருப்பி கேட்டான்.

    அவள் பதில் சொல்லாமல் அதற்காக சிரித்தாள். இதற்குள் ஓடி வந்தான் குண்டோதரன் மாதிரி இருந்த ஒருவன்.

    மேடம் எனி ஹெல்ப்...? என்று கேட்டான்.

    நத்திங்... நீங்க போங்க... என்றவள் திரும்ப பார்த்திபனை பார்த்தாள். அவனிடம் திரும்பவும் தடுமாற்றம்.

    என்ன அன்னக்காவடியா? குத்தினாள். அவனுக்குள் வலி ஊசி ஏற்றியது.

    என்ன அப்படி கேட்டிட்டீங்க... நான் ஒரு பிசினஸ் மேன். கோ... கோல்ட் பிசினஸ்... என்ற போது அவள் புருவம் கேலியாக வளைந்தது.

    யூ மீன் ரோல்ட் கோல்ட்... என்றாள் நக்கலாக...

    திரும்பவும் பார்த்திபனுக்கு வலித்தது. கைகள் பரபரத்தன. கன்னத்தில் அறைந்து பார்க்கும் ஆசை பெருக்கெடுத்தது.

    என்ன மேன் பேச்சைக் காணோம். கோல்ட் பிசினஸ் பண்ற நபர் எதுக்கு இங்கவந்து எனக்கு பந்தெல்லாம் பொறுக்கி போட்றே... நீயார்னு நான் சொல்லவா? - ரோஜா அவனை மடக்க ஆரம்பித்தாள்.

    அவனும் திணற ஆரம்பித்தான்.

    "உன் பேர் பார்த்திபன். உன் அப்பா ஒரு செக்கிங் இன்ஸ்பெக்டர். பக்கத்துல இருக்கிற சேரில் இருக்கிற ஒரு லோ கிளாஸ் பர்சன் நீ.

    ஏழையா இருந்தாலும் பணக்கார ஆசை உனக்கு என் மேலயும் ஒரு கண்ணு. அதான் ஒரு பேட்ட தூக்கிட்டு தினமும் என்னை சைட் அடிக்க இங்க வரே. ஆம் ஐ கரெக்ட்?"

    அவள் விறுவிறுவென்று போட்ட போடில் அவனுக்கு வியர்க்க ஆரம்பித்தது.

    "என்னை அஞ்சு நிமிஷத்துக்கு மேல ஒருத்தன் பார்த்தாலே என் அப்பா அவங்க பயோடேட்டாவையே கலெக்ட் பண்ணிருவாரு... நீ அஞ்சு மாசமா ஜொள்ளு விட்றே... விட்டு வைப்பாரா?

    அவர் சொல்லித்தான் எனக்கு தெரியும். உன்னை பார்த்தா எனக்கு பரிதாபமா இருக்கு என்னை விளையாடக் கூப்பிடவே உனக்கு இவ்வளவு நாள் ஆகியிருக்கு. அவ்ளோ காம்ப்ளக்ஸ் உனக்கு... புரியுதா?

    கனவு காணாதே... போய் உருப்பட்ற வழியைப் பாரு. யு நோ ஒன் திங்... எனக்கு அடுத்த மாசம் கல்யாணம். அதுக்கு அடுத்த மாசம் நான் ஒரு அமெரிக்கவாசி. புரிஞ்சுக்கோ."

    அவள் அம்புகளாக பார்த்து செருகிவிட்டு அவனைத் தாண்டி நடந்தாள். கிரவுண்டுக்குள் இறங்கி விளையாட ஆரம்பித்தாள்.

    அவன் ஸ்தம்பித்து போயிருந்தான். நாக்கைப் பிடுங்கி கொள்ளலாம் போல தோன்றியது. தரைமட்டமாகி பொடிப்பொடியாகிவிட்ட மாதிரியெல்லாம் தோன்றியது.

    ஒரு அற்புதமான அழகு இத்தனை திமிருடன் மனங்கொத்திப் பறவையாகவா இருக்கும்...?

    அவன் கண்களில் நீர் துளிர்த்து விட்டது.

    அப்பொழுது அவன் தோளில் ஒரு கரம் விழுந்தது.

    திரும்பினால் பூனைக்கண்ணும் நரைத்த தலையுமாக வித்தியாசமான தோற்றத்தில் ஒருவன்.

    என்ன தம்பி... ரோஜா முள்ளா மாறி ரொம்ப குத்திட்டாளா? - கேட்கிறார்.

    பார்த்திபனுக்குள் ஆச்சரியப் பெருக்கம். இவருக்கு எப்படி தெரியும் என்கிற மாதிரி தடுமாற்றமும்.

    கவலைப்படாதே... அந்த முள்ளை கால்ல போட்டு தேய்க்க ஒரு வழி சொல்றேன் கேக்கறியா?

    பார்த்திபன் சற்றே ஆமோதிக்கிற மாதிரி தலையை அசைக்கவும் அந்த மனிதனிடம் ஒரு அலட்சியமான புன்னகை.

    உன்னால அது முடியும். என்னாலையும் அது முடியும். இருந்தாலும் நீ செஞ்சா நல்லா இருக்கும், அப்றமா என்னை வந்து பார். பாக்கறியா?

    அவர் கேட்ட விதத்தில் கொள்ளை கனிவு.

    எங்கே?

    அவர் உடனே ஒரு விசிட்டிங் கார்டை எடுத்து நீட்டினார். வாங்கிப் பார்த்தான்.

    டாக்டர் ராமகிருஷ்ணன்

    மெஸ்மரிச, ஹிப்னாடிச நிபுணர்,

    20, முதல் குறுக்குத் தெரு,

    நங்க நல்லூர், சென்னை - 61

    என்று இருந்தது.

    பார்த்திபன் அவரை நிமிர்ந்து

    Enjoying the preview?
    Page 1 of 1