Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Panthaya Kuthirai
Panthaya Kuthirai
Panthaya Kuthirai
Ebook115 pages39 minutes

Panthaya Kuthirai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Vimala Ramani, an exceptional Tamil novelist, written over 700 novels, 1000 short stories, More than 600 dramas have been broadcasted on Trichy and Coimbator Radio Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… she has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateJan 2, 2018
ISBN9781043466350
Panthaya Kuthirai

Read more from Vimala Ramani

Related to Panthaya Kuthirai

Related ebooks

Related categories

Reviews for Panthaya Kuthirai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Panthaya Kuthirai - Vimala Ramani

    22

    1

    "இடுப்பு வலிக்குது... எழுந்திரிங்க" என்றாள் மதுரா.

    ஐயய்யோ என்றான் கிரிதர்.

    என்ன… என்னாச்சு?

    இப்பத்தானே நாம பழக ஆரம்பிச்சிருக்கோம்... அதுக்குள்ளே எப்படி இடுப்பு வலி?

    சீ... போங்க!

    மதுரா மதுரமாய் கூவினாள்.

    என்னமோ போனாப் போகுது... மடியிலே படுத்துக்கங்கன்னு சொன்னா குறட்டை விட்டு தூங்கவே. ஆரம்பிச்சுட்டீங்களே?

    அடே! நான் குறட்டை விடறேனா? தெரியவே இல்லையே!

    நீங்க குறட்டை விடறது உங்களுக்குத் தெரியாது. மத்தவங்களுக்குத்தான் தெரியும்!

    மதுரா... எனக்கு இப்போ கவலையா இருக்கு!

    எதுக்குங்க?

    சும்மா சும்மா நினைக்காதீங்க! அது சரி, என்ன கவலை?

    நீ... நீ... எப்படி தூங்கப் போறே?

    கண்ணை மூடிட்டுத்தான்?

    பைத்தியம்! அதைச் சொல்லல்லை! நான் இப்படி குறட்டைவிட்டா நீ எப்படித் தூங்குவே?

    நீங்க குறட்டை விடறதுக்கும் நான் தூங்கறதுக்கும் என்ன சம்பந்தம்?

    இப்படி நான் ராட்ஷஸன் மாதிரி கொர் கொர்ன்னு...

    கொர் கொர் சத்தம் மட்டுமில்லை. புல்லட் கிளம்பற மாதிரி என்னவெல்லாமோ சத்தம். டுஷ், புஷ், டும்னு...

    சரி... இந்த புல்லட் சத்தத்துலே நீ எப்படி என் பக்கத்துலே படுத்துட்டு தூங்குவே?

    கிரிதர் - கேட்டவுடன் மதுரா ‘கோல்கேட்’ புன்னகை பூத்தாள்!

    அதைப் பத்தி உங்க ஒய்ப் கவலைப்படணும்! நான் ஏன் கவலைப்படணும்?

    ஐயய்யோ... அப்போ நீ என் ஒய்ப் இல்லையா?

    இப்போ இல்லை!

    இரு... இரு... உன்னை...

    மதுராவின் மூக்கைப் பிடித்து அவன் திருக, அந்த திமிறலில் மேலாடை அவிழ்ந்து, இளமை திமிற, இவன் திணற, அவள் எழுந்து ஓட... இவன் துரத்த... அதோ அவர்கள் இருவரும் அந்தச் செடி மறைவில்... புதர் மறைவில்?

    இருங்கள், ஏதோ ‘இச் இச்’ என்று சத்தம்!

    அவர்கள் முத்தமிட்டு முடிப்பதற்குள் இவர்கள் இருவரைப் பற்றியும் இலைமறைவாய், புதர் மறைவாய், காய் மறைவாய் ஓரளவு சொல்லிவிடுகிறேன்!

    கிரிதர்-நம் கதாநாயகன் - பி.காம் பட்டதாரி... மேலே படிப்பு ஓடவில்லை.

    ‘பீ காம்’ என்று அமைதியாக இருப்பவன்...

    பேங்க் வேலைகளுக்கு அப்ளைப் பண்ணிக் கொண்டு ‘இண்டர்வியூ’க்களுக்குப் போய் ஏமாந்து ஒட்டு மொத்தமாய் இந்த உலகை சபித்துக் கொண்டிருப்பவன்.

    பொழுது போகவில்லை என்று நாடகம், கதை என்று எழுதி அனுப்பி திரும்பப் பெற்றுக் கொண்டிருப்பவன்!

    அதிசயமாக கோவை வானொலி இவனை சிற்சில சமயங்களில் அங்கீகாரம் செய்யும். கால் மணி நேர நாட்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும். அப்போது ஒரு டிரான்சிஸ்டர் கூட இல்லாமல் தன் நாடகம் கேட்க ஆவலாய் பறக்கிற இவனுடைய ‘கலை உணர்வு’ இருக்கிறதே பரிதாபம்!

    மதுரா இவள் கிரிதரின் பக்கத்து வீட்டுக்காரி. ஒரு தடவை டேப் ரிகார்டரில் இவள் ஏதோ பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தாள். வாசலில் யாரோ நின்று கொண்டிருந்தார்கள்!

    யார் இவன்? ஏன் இப்படி இவள் டேப் ரிக்கார்டரையே பார்த்துக் கொண்டிருக்கிறான்?

    ஒரு வேளை திருடனோ? இப்போதுதான் புடவைத் திருடன், டேப்ரி கார்டர் திருடன், டிரான்ஸிஸ்டர் திருடன், டி. வி. திருடன் என்று திருடர்களில் நிறைய பிரிவு இருக்கிறதாமே! ஒவ்வொருவரும் ஒவ்வொன்றில் ‘ஸ்பெஷலைஸ்’ பண்ணி இருக்கிறார்களாமே!

    ஈ.என்.டி. டாக்டர்கள் மாதிரியா? சீ... சீ... தப்பு...

    டாக்டர் தொழில் நோபிள் ப்ரபஷன்! மதுரா பார்த்துக் கொண்டிருக்க... பார்த்துக் கொண்டிருக்க...

    அவன் வாசல் கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே வந்தான்.

    மதுராவிற்குப் பயமாக இருந்தது. அந்தச் சமயம் பார்த்து டேப்ரிகார்டர் பாடியது.

    "காதல் வந்திரிச்சு...

    ஆசையில் ஓடி வந்தேன்"

    இந்தப் பாட்டைக் கேட்டுவிட்டுத்தான் ஓடி வந்திருக்கிறானோ?

    ஒரு வேளை பைத்தியமோ? காதல் பைத்தியம்!

    அவன் ஏக்கத்துடன் அந்த டேப்ரிகார்டரைப் பார்ப்பது புரிந்தது...

    டூ இன் ஒண்ணா? கேட்டான்.

    ஆ... ஆமாம்,

    இதுலே கோயமுத்தூர் ஸ்டேஷன் வருமா?

    ஸ்டேஷன்? எது? ரயில் எல்லாம் வருமே... அதுவா? அது அது... இங்கே வராது. நாமதான் ஸ்டேஷனுக்குப் போகணும்.

    அவன் விரக்தியாய்ச் சிரித்தான்.

    ரயில்வே ஸ்டேஷன் இல்லை... ரேடியோ ஸ்டேஷன்! இப்போ நம்ம ஊர் கோவை வானொலியிலே என் நாடகம் ஒலி பரப்பாகுது. ப்ளீஸ்... தயவு செஞ்சு எனக்காக இந்த டேப்பை நிறுத்திட்டு கோவை வானொலி வைச்சீங்கன்னா... கோடி புண்ணியம் உங்களுக்கு... இப்பத்தான்... இப்பத்தான் என் டிராமா ப்ராட்காஸ்ட் ஆகப் போகுது!

    அடப் பாவமே! இதற்குத்தான் இப்படி ஆலாய்ப் பறந்தானா?

    இவள் அவசரமாக ‘செலக்டரை’ மாற்றி ரேடியோவில் போட்டு கோவை வானொலியைத் திருப்பினாள்.

    ‘இப்போது, முதல் சந்திப்பு’- நாடகம் கேட்கலாம்...

    எழுதியவர்-கிரிதர்! என்று அறிவிப்பு வந்தது.

    அவன் முகத்தில் ஒரு ஒளி! அப்படி பிரகாச ஒளி வட்டம்!

    இவள் மெல்ல, ‘ரிகார்ட்’ பட்டனை ‘ஆன்’ செய்து வைத்தாள்.

    நாடகத்தை இவளும் கேட்டாள். முதல் சந்திப்பில் மலர்ந்த காதல் நாடகம் இது! இதுகூட இவர்களின் முதல் சந்திப்புத்தான்!

    நாடகம் கேட்கும்போது கண்களை மூடி ரசித்தபடி கேட்டுக் கொண்டிருந்தான்.

    அவனை மதுரா நன்றாகவே பார்த்தாள்.

    ஓ! இவன் பெயர்தான் கிரிதரா! கண்களை மூடி இவன் ரசிப்பதைப் பார்த்தால் கொஞ்சம் கமலஹாசன் ஜாடை தெரிகிறது!

    சிரிக்கும் போது... தெரிகிற தெற்றுப் பல்லில் கொஞ்சம் மோகன் ஜாடை...

    கன்னத்தில் விழுகிற குழிகளில் பிரபுவின் சாயல் தெரிகிறது...

    ஆக இவன் ஒரு திரை ஓவியம்...

    நாடகம் நல்லா இருந்ததா மேடம்?

    அவன் கேட்டபோது இவள் திடுக்கிட்டு விழித்தாள்.

    இவள் நாடகத்தை எங்கே கேட்டாள்?

    இவனை அல்லவோ பார்த்துக் கொண்டிருந்தாள்!

    முதல் சந்திப்பு எப்படி மேடம்?

    பரவாயில்லை... முதல் சந்திப்பிலேயே எப்படி சொல்றது... போகப் போகத்தானே தெரியும்...

    அவன் ஒரு கணம் திகைத்து, அவள் ‘ஜோக்’ அடிப்பதாக நினைத்துச் சிரித்தபோதுதான் இவனுக்குத் தன் தப்பு

    Enjoying the preview?
    Page 1 of 1