Kanavugal Aayiram
By Maheshwaran
()
About this ebook
தமிழ்நாட்டின் முன்னனி எழுத்தார்களுல் என்னையும் ஒருவனாய் கொண்டாடும் வாசக உள்ளங்களுக்கு பனிவான வணக்கம். உங்கள் இதயத்தில் எனக்கென ஒரு இடத்தை தந்திருக்கும் அனைவரையும் வணங்கி மகிழ்கிறேன். நன்றி.
இந்த இடத்தைத்தொட நான் பட்ட சிரமங்கள் கொஞ்சமல்ல. என் பதினேழு வயதில் எழுத்து பயணம் தொடங்கியது. தற்போது 45 வயதாகிறது. இந்த இருபத்தியெட்டு வருடங்களில் 500க்கும் மேற்ப்பட்ட சிறுகதைகள் மற்றும் 400 நாவல்கள் வரை எழுதிவிட்டேன்.
குமுதம் வைரமோதிரம் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு, குமுதம் லட்ச ரூபாய் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு, தேவி வார இதழ் நாவல் போட்டியில் முதல் பரிசு, கண்மணி நாவல் போட்டியில் பரிசு, இலக்கிய சிந்தனை விருது, விகடன், கல்கி இதழ்களில் பரிசு என ஏராளமானப் பரிசுகளை வாங்கியிருக்கிறேன். அனைத்து இதழ்களிலும் எனது படைப்புகள் வெளியாகிருக்கிறது.
வாசிப்பதன் மூலம் மனம் ஒரு நிலைப்படுகிறது. வாசிக்கிறபோது தங்கள் கவலைகளை மறந்து வேறொரு உலகத்திற்க்கு செல்கிறார்கள். எனது நாவல்களை வாசிக்கிறபோது விறுவிறுப்பான திரைப்படத்தைப் பார்ப்பது போல காட்சிகள் கண்களுக்குள் விரியும். முடிக்கும் வரை கீழே வைக்க மாட்டார்கள். காதல் ஆகட்டும், குடும்பம் ஆகட்டும், அமானுஷ்யம் ஆகட்டும், வாசிக்கும் கண்களுக்கு சலிப்பு ஏற்பட்டு விடக்கூடாது. தரமான படைப்புகளை படைப்பதே எனது நோக்கம். வாழ்த்துங்கள், வளர்கிறேன்!! உங்கள் விமர்சனங்கள் என்னை மேலும் வலுவூட்டும்.
மிக்க அன்புடன்
மகேஷ்வரன்
Read more from Maheshwaran
Kuyil Thoppu Marmam Rating: 5 out of 5 stars5/5Varuvean Naan Rating: 5 out of 5 stars5/5Aayiram Kodi Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Vennila Rating: 0 out of 5 stars0 ratingsTick.. Tick.. Thik. Rating: 4 out of 5 stars4/5Marakka Mudiyavillai...! - Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsPachaikili Rating: 0 out of 5 stars0 ratingsKaruppu Kuthirai Rating: 0 out of 5 stars0 ratingsMayanginean Solla Thayanginean Rating: 0 out of 5 stars0 ratingsLinga Pura Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsRaja Nagam Rating: 0 out of 5 stars0 ratingsUn Ullam Irupathu Ennidamey! Rating: 0 out of 5 stars0 ratingsNilavukku Kobam Varum! Rating: 0 out of 5 stars0 ratingsMullil Vizhuntha Kili Rating: 0 out of 5 stars0 ratingsManal Sirpangal Rating: 0 out of 5 stars0 ratingsIravum Pagalum Un Uruvam Rating: 0 out of 5 stars0 ratingsThappithu Vidu... Kanmani! Rating: 0 out of 5 stars0 ratingsPovom Ini Kaadhal Desam Rating: 0 out of 5 stars0 ratingsMalarukku Thendral Pagaiyanal… Rating: 0 out of 5 stars0 ratingsUn Madiyil Naanuranga Rating: 0 out of 5 stars0 ratingsEn Uyirai Azhaikkirean... Rating: 0 out of 5 stars0 ratingsIdhayathil Idam Irukkiratha? Rating: 0 out of 5 stars0 ratingsEn Vasam Naanillai...! Rating: 0 out of 5 stars0 ratingsUn Manasula Naan Irukkena? Rating: 0 out of 5 stars0 ratingsIravum Nilavum Valarattumey...! Rating: 0 out of 5 stars0 ratingsKalainthu Pona Mehangal Rating: 0 out of 5 stars0 ratingsYengi Thavikkum Idhayam Saatchi! Rating: 0 out of 5 stars0 ratingsUnnodu Irukkum Ponnaana Nimidangal Rating: 0 out of 5 stars0 ratingsThanga Oviyam Rating: 0 out of 5 stars0 ratingsManasukkul Mazhai Rating: 0 out of 5 stars0 ratings
Related to Kanavugal Aayiram
Related ebooks
Mullil Vizhuntha Kili Rating: 0 out of 5 stars0 ratingsChithirame…. Senthen Mazhaiye Rating: 0 out of 5 stars0 ratingsUzhavan Magal..! Rating: 5 out of 5 stars5/5Kaana Vendum Seekiram...! Rating: 5 out of 5 stars5/5Panthaya Kuthirai Rating: 0 out of 5 stars0 ratingsMegam Thedum Vaanam Rating: 0 out of 5 stars0 ratingsThappu Thappaai Oru Thappu Rating: 4 out of 5 stars4/5Pachaikili Rating: 0 out of 5 stars0 ratingsUnnodu Naan..! Rating: 4 out of 5 stars4/5Anicha Malar...! - Part 1 Rating: 5 out of 5 stars5/5Kothikkum Panithuli..! Rating: 4 out of 5 stars4/5Rhythm Atra Swaram Rating: 3 out of 5 stars3/5Rosap Poovu Lesaai Saavu Rating: 5 out of 5 stars5/5Kaatrodu Sila Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsThedu Kidaikathu Rating: 0 out of 5 stars0 ratingsMannavan Vanthaanadi... Thozhi..! Rating: 4 out of 5 stars4/5Kuruvi Maram Rating: 0 out of 5 stars0 ratingsKannadi Vinadigal Rating: 0 out of 5 stars0 ratingsVaaimaiyidathu Rating: 5 out of 5 stars5/5Pookkalilum Theepidikkum Rating: 0 out of 5 stars0 ratingsInimai Kanavugal Thodrattume Rating: 0 out of 5 stars0 ratingsKadhalaal Valarnthen Rating: 5 out of 5 stars5/5Unnai Naan Swasikiren… Rating: 0 out of 5 stars0 ratingsMazhaikaala Malligaigal Rating: 0 out of 5 stars0 ratingsIdho... En Idhayam Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Oviyam Kaiyil Serumo! Rating: 0 out of 5 stars0 ratingsMarainthirunthu... Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalal Thudikirean...! Rating: 0 out of 5 stars0 ratingsKuyil Paattu...! Rating: 5 out of 5 stars5/5Azhagu Deivam Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Kanavugal Aayiram
0 ratings0 reviews
Book preview
Kanavugal Aayiram - Maheshwaran
http://www.pustaka.co.in
கனவுகள் ஆயிரம்
Kanavugal Aayiram
Author:
மகேஷ்வரன்
Maheshwaran
For more books
http://pustaka.co.in/home/author/maheshwaran
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
1
கடற்கரை.
மேற்குப் பக்க வானத்தில் கதிரவன் புதைந்து கொண்டிருந்தான். இருட்டிப்போகப் போவதை பொருட்படுத்தாமல்… கடற்பரப்பிற்கு மேலே.... பறவைகள் கூட்டம்.... மீன்களைக் கொத்துவதற்காக பறந்து கொண்டிருந்தன...
யாருக்கும் அடங்காமல்.... களைக்காமல்.... சலிக்காமல்.... கரையை.... முத்தமிட்டு முத்தமிட்டு.... விலகி ஓடும்.... அலைகள்...
'ஹோ' என்ற இரைச்சலோடு...... குழந்தைகள் பட்டாளம்... ராட்சத சைஸ்.... பலுான் ஒன்றை நூலில் கட்டி... ஆகாயத்தில் பறக்க விட்டுக் கொண்டிருந்தனர்...
திருட்டுத்தனமாய்க் காதலிக்க வந்தவர்கள்.... படகு மறைவில் பதுங்கியிருந்தார்கள்.... கண்டதையும் தின்று.... தொப்பை விழுந்தவர்கள்…. அதைக் குறைப்பதற்காக.... ஓடிக் கொண்டிருந்தார்கள்.
காயத்திரியும்.... சந்திரனும்.... கடற்கரை மணலில் கால்கள் புதைய புதைய.... தோள்கள் உரச உரச.... கைகளைக் கோர்த்துக் கொண்டு.... நடந்தார்கள்...
இருவரும்...
ஒதுக்குப்புறமாய்... ஒரு படகு மறைவில் உட்கார்ந்தார்கள்.
அண்ணே, சுண்டல் வேணுமாண்ணே?.... தேங்கா.... மாங்கா.... பட்டாணி சுண்டல்....
கூடையை சுமந்தபடி.... சுண்டல் விற்கிற சிறுவன்... பக்கத்தில் வந்து நின்றான்.
வேணாம்....!
சந்திரன் உதட்டைப் பிதுக்கினான்.
அக்கா.... நீங்களாச்சும்... ரெண்டு பொட்டலம்... வாங்கிக்கங்கக்கா....!
கெஞ்வதுபோல் பார்த்தான்.
காயத்திரி ஹேண்ட் பேக்கின் ஜிப்பை பிரித்தாள். கசங்கிய பத்து ரூபாய்த் தாள் ஒன்றை எடுத்து வெளியே நீட்டினாள். இரண்டு பொட்டலங்களையும் கையில் வாங்கிக் கொண்டு.... சிரித்தபடியே சொன்னாள்.
மீதிக்காசையும் நீயே வெச்சுக்க! திரும்ப வந்து... டிஸ்டர்ப் பண்ணாதே
சரிக்கா!
சுண்டல் விற்கிற சிறுவன். நகர்ந்தான். இரண்டு பொட்டலங்கள்... ஒன்றை சந்திரனிடம் தந்துவிட்டு… கையிலிருந்த பொட்டலத்தைப் பிரித்து மெதுவாய் கொரித்தபடியே சந்திரனைப் பார்த்தாள்…
சந்திரன்…
ம்…
நம்ம காதல்... ஜெயிக்குமா?
கேட்கிறபோதே கண்கள் கலங்கியது.
ஜெயிக்கணும்ங்கறதுக்காகத்தானே.... நாம… காதலிச்சிகிட்டிருக்கோம்!
பயமாயிருக்கு. சந்திரன்!
பயமா?
சந்திரன் உனக்கு கிடைக்கமாட்டார். நீ அவரை மறந்துடு.... ரெண்டுபேரும்.... பிரியப்போறீங்கன்னு.... அடிக்கடி எம்மனசுக்குள்ளே.... ஒரு குரல்… கூவிக்கிட்டே இருக்கு! சரியா… சாப்பிட முடியலை… ஒழுங்கா துங்க முடியலை....! எந்த நேரமும்… இதே நெனைப்பாவே இருக்கு! ஏண்டா.... உங்களைப் பார்த்தோம்... ஏண்டா உங்களைக் காதலிச்சோம்னு… தோணுது.... சந்திரன்!
பிசிறலான குரலில் தழுதழுத்தாள்.
மையிட்ட கண்களில் நீர்த்துளிர்த்தது.
உன்னோட பயத்தை தூக்கி... கடல்ல வீசு.... காய்த்ரி! உனக்கு நான்... எனக்கு நீ…! இதை மாத்த யாராலையும் முடியாது....
உங்க டாடியால கூடவா... முடியாது?
கவலையாய்ப் பார்த்தாள்.
எங்க டாடி என்ன கடவுளா? அவரும் உன்ன மாதிரி... என்னை மாதிரி ரத்தத்தாலயும்.... சதையாலயும்... ஆன சராசரி மனுஷன்தானே?.... என்னையும்.... என்னோட காதலையும்... புரிஞ்சுக்குவாருன்னு.... நம்பறேன்! புரிஞ்சு ஏத்துக்காட்டி... எனக்கு காயத்திரிதான் வேணும்னு.... எல்லாத்தையும் உதறி எறிஞ்சுட்டு வீட்டை விட்டு வெளியே வந்துடுவேன்....
சந்திரனின் குரலில் உறுதி தெரிந்தது.
நிஜமா?
காயத்திரியின் விழிகள் அகலமானது.
பட்டாம்பூச்சியாய் படபடத்தன.
சத்தியமா!
காயத்திரியின் தலையில் கையை வைத்து அழுத்தினான்.
வாயாலே.... பேசறதோட நிறுத்திக்காம… அதை செயல்லயும் காட்டற வழியைப் பாருங்க சந்திரன்!
காட்டத்தானே போறேன்!
தோள்களைக் குலுக்கினான்.
ஒரு பெரிய அலை வந்து... இருவரது கால்களையும் நனைத்துவிட்டு... முகத்தில்.... நீர்த்துளிகள் தெளித்துவிட்டு ஓடியது.
எப்போ?
நெக்ஸ்ட் வீக்.... என்னோட இருபத்தியெட்டாவது... பர்த்டே! அன்னைக்குத்தான்... என்னோட டாடிகிட்டே மனம் திறந்து பேசப்போறேன்....!
மைவீட்ஸன்... உனக்கு... என்ன வேணும்'னு அவர் ஆசையும்… பரிவுமா... கேக்கப்போறப் பொன்னான தருணங்களுக்காக வெயிட் பண்ணிட்டிருக்கேன்... காயத்திரி!" என்றான்.
காயத்திரி கைக்கடிகாரத்தில் மணியைப் பார்த்து விட்டு.... பதறினாள்.
சந்திரன்... மணி.... ஆறேமுக்கால் ஆயிடுச்சு! ஏழறைக்குள்ளே... நா... வீட்டுக்குப் போகலைன்னா... என்னோட அம்மாவும் தம்பியும்... நா... வேலை பார்க்கற.... ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்ஸீற்கு தேடிக்கிட்டு வந்துடுவாங்க! கிளம்பட்டுமா...
உடம்பில் ஒட்டியிருந்த மணலைத் தட்டிக்கொண்டு எழுந்தாள் காயத்திரி.
காயத்திரி ப்ளீஸ்.... இன்னும் ஒரு டென் மினிட்ஸ்.... உக்காரேன்... ஏதாவது... பேசிட்டிருக்கலாம்....!
காதலோடு.... கெஞ்சலாய் அவளது கையைப் பற்றி இழுத்தான்.
ம்ஹும்.... என்னால முடியாது! கல்யாணம் முடியட்டும், விடிய விடிய வேணாலும் பீச்சுலயே உட்காந்து பேசிட்டிருக்கலாம்! இப்ப ஆளைவிடுங்க....
சந்திரனின் கையை உதறிக்கொண்டே.... சிரித்தபடியே.... நழுவி ஓடினாள். காயத்திரி... கடல் அது பாட்டுக்கு சீறிக் கொண்டிருந்தது.
***
அரண்மனை போன்ற பங்களா அது.
முழுக்க முழுக்க சலவைக் கற்களாலேயே கட்டப்பட்டிருந்தது.
பியூட்டி பார்லரிலிருந்து வரவழைக்கப்பட்டிருந்த…. அந்த இரண்டு பெண்களும்.... நிகிலாவை.... அலங்கரித்துக் கொண்டிருந்தார்கள்.
நிகிலா...
இருபது வயது தேவதை.... ரோஜாப்பூக்களையும்.... சந்தனத்தையும்.... வெண்ணெய்யையும்.... பன்னீரில் குழைத்து பண்ணிய சிலையைப் போல.... தகதகத்தாள்.
எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும்... அழகாய்த் தெரிந்தாள்.
பிசினஸ்மேன்.... திருமூர்த்தியின் ஒரே மகள்தான் நிகிலா. திருமூர்த்தியின் கோடிக்கணக்கான சொத்துக்களுக்கும் ஒரே வாரிசு அவள் தான். நகைக் கடை, ஜவுளிக் கடை.... ஹோட்டல், ஸ்வீட்ஸ் ஸ்டால்... டிராவல்ஸ்.... கொடைக்கானலிலும்.... கோத்தகிரியிலும் எஸ்டேட்ஸ் என நிகிலாவின் பெயரில் தமிழ்நாடு முழுக்க…. சொத்துக்கள் வாங்கி குவித்து வைத்திருந்தார்.
லலிதா
என்னங்க!
எல்லாம் ரெடியாயிடுச்சா?
எல்லாம் ரெடிதான்! உங்கப் பொண்ணுதான்.... இன்னும் ரெடியாகலை....!
"பரவாயில்லை....! அவங்கள்ளாம் வர்றதுக்குள்ளே.... நிகிலா ரெடியாகலைன்னு வெய்.... இவதான் பொண்ணுன்னு.... அவங்க முன்னால... உன்னைக் கொண்டுபோய் நிறுத்திடறேன்….!
திருமூர்த்தி கண்களைச் சிமிட்டினார்.
வயது ஏற ஏற… உங்க புத்தி... கொறைஞ்சுகிட்டே போகுது!
செல்லமாய் கோபித்தாள்.
நா என்ன பண்ணட்டும்… வயது ஏறஏற.... உன்னோட அழகு கூடிக்கிட்டேல்ல. போகுது! நிகிலாவுக்கு பக்கத்துல.... நீ.... நின்னின்னா… உன்னை அவளோட அம்மான்னு.... யாரும் சொல்ல மாட்டாங்க! அக்கான்னு சொல்வாங்க…!
கிண்டலா?
உன்னை நா… கிண்டல் பண்ணாம.... வேற யாரு பண்றதாம்?
மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வரப்போற நேரத்துல… வழியாதீங்க! துண்டால மொகத்தை துடைச்சுகிட்டு.... ஆக வேண்டிய காரியத்தைப் பாருங்க!
அடுக்களைப் பக்கமாய் நகர்ந்தாள் லலிதா...
வாசலில் ஒரு கார் வந்து நின்றது. ரோஜாப்பூ செடி மாதிரி.... நிகிலாவின் தோழிகள் ஒவ்வொருத்தியாய்… இறங்கினார்கள்.
குட் மானிங் அங்கிள்…
கோரஸாய் கூவினார்கள்.
குட் மானிங்...
உடனே புறப்பட்டு வாங்கன்னு... நிகிலா காரை அனுப்பினதும்.... நாங்க பயந்தே போயிட்டோம்! ஆமா.... வீட்டுல… ஏதாவது ஃபங்ஷனா அங்கிள்?
ஆர்வமாய் கேட்டார்கள்.
ஆமா....
என்ன பங்ஷன்... அங்கிள்?
"அதை.... நிகிலா வாயாலேயே.... கேட்டுத் தெரிஞ்சுக்கங்க....!''
நிகிலா... எங்கே.... இருக்கா?
அதோ… மாடியறையில....
வளைந்து வளைந்து... ஏறிய தேக்கு மரப்படிகளில்.... மான்குட்டி கூட்டமாய்.... நிகிலாவின் தோழிகள்... ஏறி ஓடினார்கள்.
நிகி....! நாங்கள்லாம் வந்தாச்சு....!
திருவிழாத் தேராய் ஜொலித்தத.... நிகிலாவிற்கு.... பக்கத்தில் வந்து... வட்டமாய்... நின்றார்கள்.
வாங்கடி...
நிகிலா… இதழ்கள் விரிய சிரித்தாள்.
ராமர்கலரில் பட்டுச் சேலை. அதே நிற ப்ளவுஸ், தலைமுடியை புசுபுசுவென்று... தோள்களில் புரளவிட்டிருந்தாள். கூடவே மல்லிகையும்... கனகாம்பரத்தையும்... சரம்சரமாய்... குடியிருந்தாள்.
நிகி... உங்க வீட்ல... இன்னைக்கு ஏதாவது ஃபங்ஷனா?
ம்…
சொல்லுடி.... என்ன பங்ஷன்
என்னைப் பொண்ணு பார்க்க வர்றாங்கடி
அடிக்கள்ளி.... இதை இவ்ளோ... லேட்டா சொல்றியே?.... ரெண்டு நாளைக்கு முன்னாடியே சொல்லறதுக்கென்ன?.... நாங்களும், உன்னை மாதிரியே... அமர்க்களமா பட்டுச் சேலையில் வந்திருப்போம்ல?
இந்த விஷயம்... எனக்கே காலையிலதாண்டி தெரியும்?
மாப்பிள்ளை என்னடி பண்றார்?
பிசினஸ்
"ஆளு எப்படி?.... உன்னோட அழகுக்கு பொருத்தமா... கம்பீரமா.... இருப்பாரா?...
அவர் சிவப்பா... கறுப்பான்னு கூட.... எனக்குத் தெரியாது! நேர்ல வந்தபிறகுதான் பார்க்கப்போறேன்!
மாப்பிள்ளையோட பேராவது தெரியுமா?
சந்திரனாம்....!
2
சமீபத்தில் வெளியாகி.... பட்டிதொட்டியெங்கும் கலக்கிக்கொண்டிருக்கும்... ஹிட்டான.... சினிமாப் பாடல் ஒன்றை முணுமுணுத்தபடியே.... பாத்ரூமினுள்...ஷவருக்கு கீழே நின்று நனைந்து கொண்டிருந்தான் சந்திரன்.
பாத்ரூமிற்கு வெளியே நின்று… மெதுவாய் கதவைத் தட்டினாள் பாக்கியம்.
ஷவரை நிறுத்திவிட்டு...
யாரு?
என்று குரல் கொடுத்தான் சந்திரன்.
நாந்தாண்டா...
என்னம்மா வேணும்?
"எவ்ளோ நேரமாடா குளிப்பே? சந்திரன் இன்னுமா.... குளிச்சு ரெடியாகலைன்னு உன்னோட அப்பா... கூச்சல் போடறாரு! சீக்கிரமா... வெளியே வா! உங்கப்பாவுக்கு பிரஷர். ஏறிகிட்டே போகுது....
பாக்கியம் பரபரத்தாள்.
அவசர அவசரமாய்... குளித்து முடித்து… வெளியே வந்தான் சந்திரன்.
கையிலிருந்த பிசினஸ் பற்றிய ஆங்கிலப் பத்திரிகை ஒன்றை... டீபாய் மீது வீசிவிட்டு... தேவராஜன் நிமிர்ந்தார்.
கிளம்பலாமா.... சந்திரன்!
"டாடி, நாம் போகப்போறது.... உங்க பிரண்ட்டோட மணிவிழாவுக்குத்தானே? அங்க நானுமா வரணும்? எனக்கு வேறொரு புரோகிராம்.... இருக்கு? நீங்களும்.... அம்மாவும்.... போய்விட்டு வாங்களேன்....! என்னை விட்டுருங்களேன்....
எம்பிரண்டோட மணிவிழாவுக்கு... போறோம்னு... உனக்கு யாரு சொன்னா.... சந்திரன்?
டாடி....!
புரியாமல் பார்த்தான் சந்திரன்.
நாம இப்ப போகப்போறது... எம்பிரண்ட்டோட மணிவிழாவுக்கு இல்லை....!
பின்னே?...
உன்னோட நிச்சயதார்த்தத்துக்கு...
சிரித்தபடியே தேவராஜன் சொல்ல... சந்திரனின் முகம் இருண்டு போனது.
***
தையல் மிஷினில் உட்கார்ந்து தைத்துக் கொண்டிருந்தாள் மரகதம். ஜன்னல் நீட்டில்... சின்னஞ்சிறிய ரேடியோ வைக்கப்பட்டிருந்தது… தெருவில் எல்லோரது வீடுகளிலும் டி.வி. இருக்கிறது. டி.வி. இல்லாத