Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thanga Oviyam
Thanga Oviyam
Thanga Oviyam
Ebook113 pages36 minutes

Thanga Oviyam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இரண்டு காலக்கட்டங்களில் நடக்கும் கதை. கோடிக் கணக்கான மதிப்புடைய தங்கமயில் ஓவியம் பற்றிய கதை. அந்த ஓவியத்தை அடைய நினைக்கும் நபர்கள் இரண்டுக் காலக் கட்டங்களிலும் என்னவாகிறார்கள் என்பதை விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறேன். மறைத்து வைக்கப்பட்டிருக்கும் தங்க ஓவியம் கிடைத்ததா இல்லையா? வாசித்துப் பாருங்கள்.

இந்தநாவலை எத்தனைமுறை வேண்டுமானாலும் வாசிக்கலாம். அழகுமிகு அசத்தலான நடையில் எழுதிய திகட்டாத திக் திக் நாவல்...

Languageதமிழ்
Release dateAug 26, 2023
ISBN6580128310154
Thanga Oviyam

Read more from Maheshwaran

Related to Thanga Oviyam

Related ebooks

Related categories

Reviews for Thanga Oviyam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thanga Oviyam - Maheshwaran

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    தங்க ஓவியம்

    Thanga Oviyam

    Author:

    மகேஷ்வரன்

    Maheshwaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/maheshwaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. நடப்பது

    2. நடப்பது

    3. நடந்தது

    4. நடப்பது

    5. நடந்தது

    6. நடப்பது

    7. நடந்தது

    8. நடப்பது

    9. நடந்தது

    10. நடப்பது

    11. நடந்தது

    12. நடப்பது

    13. நடந்தது

    14. நடப்பது

    15. நடந்தது

    16. நடப்பது

    17. நடந்தது

    18. நடப்பது

    1. நடப்பது

    மயில் பாறை ஜமீன்.

    ஜமீன்தார் ரகுநாத பூபதி... தன்னுடைய கருகருவென்ற முரட்டு மீசையை முறுக்கியபடியே... விழிகள் விரிய புன்முறுவலோடு... கையிலிருந்த ஓவியத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

    இரண்டடி அகலமும்... நான்கடி நீளமும் உடைய தேக்குமரச்சட்ட பிரேமிற்குள்... கண்ணாடி பொருத்தப்பட்டு, மிகமிக பத்திரமாக வைக்கப்பட்டிருந்தது அந்த ஓவியம்.

    அது சாதாரண ஓவியம் இல்லை.

    முழுக்க முழுக்க தங்கம் பூசிய அபூர்வ ஓவியம். அழகிய மயில் ஒன்று தனது தோகையை விரித்தபடி ஒயிலாக நின்றிருக்க... மயிலின் கண்கள் இருக்க வேண்டிய இடத்தில் இரண்டு வைரக்கற்கள் பளீரிட்டன. மயிலின் கொண்டையின் உச்சியில் பச்சைக்கற்கள் மினுக்கின. மயிலின் தோகை முழுவதும் நவரத்தினக்கற்கள் பொருத்தப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது. மயிலின் வயிற்றுப் பகுதியை வைரக் கற்களாலேயே இழைத்திருந்தார்கள்.

    மிகமிக நுணுக்கமாகவும், கலை ரசனையோடும்... உருவாக்கப்பட்டிருந்த ஓவியத்தைப் பார்ப்பதற்கே கண்களைக் கூசியது. மயிலின் தோகைக்குப் பொருத்தமாய் மரகதமும்... நீலமும்... பதிக்கப்பட்டிருந்த விதம் பிரமிப்பைத்தூண்டியது.

    நிஜமான மயிலைவிட தத்ரூபமாய் இருந்தது அந்த ஓவிய மயில்.

    அதில் பதித்த கண்களை மீட்கவே முடியவில்லை.

    கால்களில் அணிந்திருந்த தங்கக்கொலுசுகள் சிணுங்க... மெல்ல அசைந்து அசைந்து... நடந்து வந்து... ரகுநாத பூபதியின் பக்கத்தில் நின்று... அவர் ஆர்வத்தோடும் ஆசையோடும் உற்றுப்பார்த்துக் கொண்டிருந்த... அந்த ஓவிய மயிலின் மீது... கண்களை மேயவிட்டாள் செங்கமலநாச்சியார்.

    அவள்தான் ரகுநாத பூபதியின் இல்லத்தரசி.

    அந்த மயில் பாறை ஜமீனின் ராணி.

    மகாராஜா... ஏது... இந்த ஓவியம்?

    கிளித்தோப்பு ஜமீன்தார்... கொடுத்தனுப்பியிருக்கிறார்...

    ஏனாம்...? செங்கமலநாச்சியார் புருவங்களை உயர்த்தினாள்.

    அவர்களுடைய கிளித்தோப்பு ஜமீன் முழுக்கவும் இப்போது வெள்ளையர்களின் கட்டுப்பாட்டிற்குள் போய்விட்டது! பொக்கிஷ அறைக்குள் இருந்த பொக்கிஷங்கள் முழுவதையும் ஜமீன் குடும்பத்தினர் ஆளுக்கு கொஞ்சமாய் பிரித்தெடுத்துக்கொண்டு, வயதான ஜமீன்தார் மார்த்தாண்டராஜாவை மட்டும் தனியே மாளிகையில் விட்டுவிட்டு, ஆளுக்கொரு திசையில் அவரவர் மனைவி, குழந்தைகளுடன் போய்விட்டனராம்! இப்போது மார்த்தாண்ட ராஜாவும் ஒரு சில வேலைக்காரர்களும் மட்டும்தான் மாளிகையில் இருக்கிறார்களாம்! விலை மதிப்பே இல்லாத இந்த மயில் ஓவியம்... மார்த்தாண்ட ராஜாவுக்கு... தஞ்சையை ஆண்ட சோழர்கள் பரம்பரையில் வந்த யாரோ ஒருவர் அன்பளிப்பாகக் கொடுத்ததாம். இத்தனை வருடங்களாக ரகசியமான இடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்தப் பொக்கிஷத்தை இனியும் தனது கண்காணிப்பில் வைத்திருப்பது நல்லதுஅல்ல என்று நினைத்தோ... என்னமோ... நம்பகமான நபர்மூலமாக என்னிடம் கொடுத்தனுப்பிவிட்டார்... மார்த்தாண்ட ராஜா.

    மெல்லிய நிதானமான குரலில் சொன்னார் ரகுநாத பூபதி.

    தேக்கு மரத்தால் செதுக்கப்பட்ட ஆறரையடி வாளிப்பான சிற்பத்தைபோலக் கம்பீரமாக இருந்தது அவருடைய தோற்றம். விலையுயர்ந்த பட்டாடையை உடுத்தி புலிநகம் பதித்த தங்கச்சங்கிலியை... கழுத்தில் அணிந்திருந்தார். காதுகளில் வைரக் கம்மல்கள், குட்டி விண்மீன்களாய் பிரகாசித்தன. ரோமம் படர்ந்திருந்த அகன்ற மார்பில் பன்னீரில் சந்தனத்தையும் ஜவ்வாதையும் குழைத்து அடர்த்தியாய் பூசியிருந்தார். நெற்றியில் விபூதிப்பட்டையும், மதுரை மீனாட்சியம்மன் கோவில் குங்குமப் பொட்டும், அவரை பக்திமானாகவும் காட்டியது.

    இந்த அபூர்வ ஓவியம் இனிமேல் நம்முடைய மாளிகையில் தான் இருக்கப்போகிறதா?

    ஆமாம். மார்த்தாண்ட ராஜாவுக்கு வயதாகிவிட்டது. தனிமையும் முதுமையும் அவரை வருத்திக்கொண்டிருக்கிறது. ஜமீன் மாளிகையும்... பிறசொத்துக்களும்... வெள்ளையர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்த அபூர்வ ஓவியம்... அவர்களின் கண்களில் சிக்கினால் தங்கள் நாட்டிற்கு கொண்டு போய்விடுவார்கள். இது நம் சொத்து. நம் மண்ணின் கலை ரசனையும் செல்வச்செழிப்பையும் எடுத்துரைக்கும் அபூர்வப் படைப்பு இது. அதனால் அதைப் போற்றிப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பை என் வசம் ஒப்படைத்திருக்கிறார்.

    என்றவர் ஒரு ஓலையை செங்கமலநாச்சியாரிடம் நீட்டினார்.

    இதை வாசித்துப்பார். எல்லா விபரங்களையும் இதில் தன் கைப்பட எழுதி அனுப்பியிருக்கிறார்...

    ஓலை நறுக்கை வாங்கி வாசித்துப்பார்த்தாள் செங்கமல நாச்சியார்.

    முழுக்க முழுக்க... அபூர்வமான வைரங்களையும் மரகதத்தையும்... நீலக்கற்களையும் இழைத்து உருவாக்கப்பட்ட இந்த மயில் ஓவியத்திற்கு விலையே கிடையாதாமே...?

    அவளது விழிகளில் ஆச்சர்யம் பொங்கியது.

    விலை மதிப்பே கிடையாது என்பது... இதை பார்க்கும் போதேதான் தெரிகிறதே!

    அவளிடமிருந்து ஓலை நறுக்கை திரும்ப வாங்கிக்கொண்டார்.

    நம்மை நம்பி... இந்தக் காரியத்தை ஒப்படைத்திருக்கும். மார்த்தாண்ட ராஜாவுக்கு நாம் உண்மையாக நடந்து கொள்ளவேண்டும். இதை மிகவும் பத்திரமாக வையுங்கள் மகாராஜா... என்றாள் பணிவாக.

    "எப்பவும்... இந்த ஓவியம் என்னுடைய கண்களில் படுகிற இடத்திலேயே இருக்கவேண்டும் என்பதுதான்

    Enjoying the preview?
    Page 1 of 1