Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Linga Pura Ragasiyam
Linga Pura Ragasiyam
Linga Pura Ragasiyam
Ebook101 pages36 minutes

Linga Pura Ragasiyam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மரகதலிங்கேஸ்புர ஜமீனுக்கு வேலைக்கு வரும் சுவாதி. அவளை நேரடியாகவே "இந்த வேலையில் இணைந்தால் உன் உயிருக்கு ஆபத்து" என எச்சரிக்கும் ஊர்க்காரர்கள். எதையும் பொருட்படுத்தாமல் பணிபுரியும் சுவாதிக்கு நேர இருக்கும் மர்ம சோதனைகள் என்ன? அவள் அந்த மர்மத்தை அறிந்து தன்னை காத்தாளா? அப்படி அந்த மரகதலிங்கேஸ்புரத்தில் உள்ள ரகசியத்தை என்ன என்பதை நாமும் அறிவோம் வாருங்கள்...

Languageதமிழ்
Release dateNov 27, 2021
ISBN6580128307602
Linga Pura Ragasiyam

Read more from Maheshwaran

Related to Linga Pura Ragasiyam

Related ebooks

Related categories

Reviews for Linga Pura Ragasiyam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Linga Pura Ragasiyam - Maheshwaran

    https://www.pustaka.co.in

    லிங்கபுர ரகசியம்

    Linga Pura Ragasiyam

    Author:

    மகேஷ்வரன்

    Maheshwaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/maheshwaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    1

    தள்ளாடி தள்ளாடி நடக்கும் முதியவனைப்போல, அந்த மலைப்பாதையில் பேருந்து மெதுவாய் ஊர்ந்தது. இருக்கைகள் உடைந்தும், கிழிந்தும், வர்ணம் உதிர்ந்தும்... பார்ப்பதற்கே பரிதாபமாகக் காட்சியளித்த அந்த பேருந்தினுள் சொற்பமான கூட்டமே இருந்தது.

    மரகதலிங்கேஸ்புர ஜமீன்... ஒண்ணு குடுங்க...

    டிக்கெட்டை வாங்கிப் பத்திரமாக.. கைப்பைக்குள் வைத்துக்கொண்டு ஜன்னலோரமாய் அமர்ந்திருந்தாள், சுவாதி. எளிமையான காட்டன் சேலையை உடுத்தியிருந்தாள். வறுமையானக் குடும்பத்தைச் சேர்ந்தவள் என்பதற்கு அடையாளமாக காதுகளில் பிளாஸ்ட்டிக் கம்மல்கள் அணிந்திருந்தாள். வட்டமான நிலாமுகம்... பவுடர் பூச்சு எதுவும் இல்லாமலே... பளிச்சென்று பிரகாசித்தது.

    கால்களுக்கு கீழே ஒரு சிறிய சூட்கேஸ், மடியில் ஒரு சிறிய கைப்பை வைத்திருந்தாள்.

    மலைப்பிரதேசங்களுக்கே உரிய குளுகுளுவென்ற மூலிகைக்காற்று... ஜன்னலின் வழியே.. பேருந்தினுள் புகுந்து... முடியைக்கலைத்து விளையாடியது. குளிர் அதிகமாக இருந்தது. ஊசி ஊசியாய் உடம்பைத் தைத்தது. கைப்பைக்குள் இருந்த ஸ்கார்ப்பை எடுத்து... தலையில் கட்டிக் கொண்டாள்.

    பேருந்து குலுங்கி குலுங்கி ஓடியது.

    பாதையின் இருபுறமும் அடர்ந்த மரங்கள்... பச்சை பசேலென்று காட்சியளித்தன. ஒரு பருத்த பலாமரத்தின் வேரில்... பெரிய பலாப்பழம் ஒன்று நன்றாகப் பழுத்து... வெடித்து சிதறிக்கிடந்தது. பலாச்சுளை வாசனை..

    அந்த பகுதியையே நிறைத்திருக்க... குரங்குகள் தம்தம் குட்டிகளுடன் அந்தப் பலாப்பழத்தை கொத்திக் குதறி ருசிப்பார்த்துக் கொண்டிருந்தன.

    பாட்டி... மரகதலிங்கேஸ்புர ஜமீன்... வந்ததும்... என்னை எழுப்பி விடுங்க...

    பக்கத்தில் அமர்ந்திருந்த கிழவியிடம் சொன்னாள். கிழவியின் மடியில் ஒரு கூடை. அது முழுக்க மல்கோவா மாம்பழங்கள்... மேலே வைக்கோலைத்தூவி மூடியிருந்தாள். காதுகளில் பம்படம் அணிந்து.. கூந்தலை அள்ளி முடிந்திருந்தாள். மூக்கில் நத்தை நத்தையாய் இரண்டு மூக்குத்திகள்.. பார்ப்பதற்கே வினோதமாக காட்சியளித்தாள்.

    'மரகதலிங்கேஸஸ்புர ஜமீன்' என்ற வார்த்தையைக் கேட்டதும் அவள் முகத்தில்... ஒரு மாற்றம் நிகழ்ந்தது. கண்களில் பயம் படர்ந்தது. வேற்று கிரகத்து மனுஷியைப் பார்ப்பதுபோல சுவாதியைப் பார்த்தாள்.

    சுவாதியோ... கிழவியின் முகமாற்றத்தை உணராதவளாக... கண்களை இறுக்கமாய் மூடிக்கொண்டு... இருக்கையில் நன்றாக சாய்ந்துக் கொண்டிருந்தாள்.

    பேருந்து மரகதலிங்கேஸ்புர ஜமீனை கொஞ்சம் கொஞ்சமாய் நெருங்கிக் கொண்டிருந்தது.

    ***

    இரண்டு பக்கமும் வானைமுட்டுகிற அளவுக்கு இரு மலைகள் படுத்திருக்க... நடுவில்.. பரந்து விரிந்திருந்தது மரகதலிங்கேஸ்புர ஜமீன்,

    தாயீ.. நீ கேட்ட எடம் வந்துடுச்சு...

    கிழவி தோளை சுரண்டினாள். கண்விழித்த சுவாதி பையைத் தோளில் மாட்டிக்கொண்டு, சூட்கேஸை கையிலெடுத்துக் கொண்டு கீழே இறங்கினாள். அவளைத்தவிர வேறு யாருமே அந்த நிறுத்தத்தில் இறங்காதது அவளுக்கு ஆச்சர்யத்தை தூண்டியது. செம்மண் புழுதி பறக்க நின்றிருந்த பேருந்து... அவள் இறங்கியதும்... மேலே ஏறத் தொடங்கியது.

    சுவாதி இறங்கிய இடத்தில் அமானுஷ்ய அமைதி நிலவியது, குரங்குகள் தான் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தன.

    'இது என்ன இடம்.. நான் சரியான இடத்திற்குத்தான் வந்திருக்கிறேனா?' சுவாதி சுற்றும்முற்றும் பார்த்தாள். ஆயிரத்திற்கும் மேற்பட்ட விழுதுகளுடன்... ஒரு ஆலமரம் நின்றிருந்தது. அதன் கீழே சிறு கீற்றுக் கொட்டகை.. கொட்டகையின் முன்புறம் சிறு தட்டிபந்தல்… சவுக்கு மரங்களால் தாங்கி நிறுத்தபட்டிருக்க உள்ளே எதோ புகைந்துக் கொண்டிருந்தது.

    சற்று தைரியம் வந்தவளாய்... அந்த கொட்டகையை நோக்கி நடந்தாள் சுவாதி.

    அருகில் நெருங்கியதும்தான் அது ஒரு டீக்கடை என்று புரிந்தது. கடையில் ஒரே ஒரு கிழவன் மட்டும்தான் இருந்தான். தாடியும் மீசையுமாய்... பார்ப்பதற்கு கோரமாய் தலையை கனத்த கம்பளியினால் முக்காடுப் போட்டிருந்தான். பாய்லரில் தண்ணீர் கொதித்துக் கொண்டிருக்க...

    அவனது உதடுகளுக்கிடையில்... தடிமனான சுருட்டு... வளையம் வளையமாய் புகைந்துக் கொண்டிருந்தது.

    டீக்கடையில் பண்ணும், ரஸ்க்கும், பாக்கெட்டுகளில் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தன. கிழவன்.. சுவாதியைப் பார்த்ததும் நிமிர்ந்து உட்கார்ந்தான்.

    புருவங்கள் உயர்ந்தன.. கண்கள் கூர்மையாய்.. ஆர்வமாய்.. அவளை உற்று நோக்கின.

    சுவாதி கடையை நெருங்கினாள்.

    ***

    "யா...! நா... இந்த ஊருக்குப்புதுசு. மரகதலிங்கேஸ்புர ஜமீனுக்கு எப்படி போறதுன்னு... வழி சொல்றீங்களா...?"

    என்றாள் பணிவாய்...

    டீக்கடை வாசலில் போடப்பட்டிருந்த ஒரு கால் உடைந்துப் போயிருந்த அழுக்கான... மரப்பெஞ்ச்சில்.. சட்டென்று உட்கார்ந்தாள். முக்காடை விலக்கிக் கொண்டு... உந்தி உந்தி நடந்தபடியே கிழவன்... வெளியே

    Enjoying the preview?
    Page 1 of 1