Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thappithu Vidu... Kanmani!
Thappithu Vidu... Kanmani!
Thappithu Vidu... Kanmani!
Ebook57 pages25 minutes

Thappithu Vidu... Kanmani!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நம்பிக்கை இருந்தது சூர்ய நிலாவின் காதலில். ஆனால் சுபாகரின் காதல் மட்டும் பொய்யானது ஏனோ? சுபாகரின் அன்போ மூன்று மாதங்கள் மட்டும்தான் சூர்ய நிலாவிற்கு கிடைத்தது... காதலியின் அன்பை தெரிந்து கொள்ளாதவன், அவனின் பணக்கார வாழ்க்கையை நினைத்துப் பார்த்து! தன் கர்ப்பமான மனைவியை கொள்ள முயல்கிறான். எதற்காக இவ்வாறு நடந்துக் கொள்கிறான்? வாருங்கள்! இந்த காதல் கதையைப் பார்ப்போம்...

Languageதமிழ்
Release dateSep 25, 2023
ISBN6580128310157
Thappithu Vidu... Kanmani!

Read more from Maheshwaran

Related to Thappithu Vidu... Kanmani!

Related ebooks

Reviews for Thappithu Vidu... Kanmani!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thappithu Vidu... Kanmani! - Maheshwaran

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    தப்பித்து விடு... கண்மணி!

    Thappithu Vidu... Kanmani!

    Author:

    மகேஷ்வரன்

    Maheshwaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/maheshwaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    1

    வெளிலப் போடா... நாயே...

    மார்த்தாண்டன் கோபமாய் கத்தினார். அவர் கோபத்திற்கு காரணமான... சுபாகரும்... சூர்யநிலாவும்... பெரிய சைஸ்... ரோஜாப்பூ மாலை கழுத்தில் தொங்க... கல்யாணக் கோலத்தில்... போர்டிகோ ஓரமாய் நின்றிருந்தார்கள்.

    சுபாகர்...

    பட்டுவேஷ்டி சட்டையிலும்...

    சூர்யா நிலா...

    ஆரஞ்சு நிற பட்டுச் சேலையிலும்... தெரிந்தார்கள்.

    இருவருடைய கண்களிலும், பயம் படர்ந்திருந்தது. ‘லப் - டப்’ அதிகரித்துக் கொண்டிருந்தது. ஆஜானுபாகுவாய்... பெரிய மீசை. சிவப்பேறிய கண்கள்... கழுத்தில் புலிநகச் செயின்... என மிரட்டுகிற தொனியில் இருந்த மார்த்தாண்டனை நிமிர்ந்துப் பார்க்க பயப்பட்டு, சுபாகரின் பின்னால் ஒடுங்கி நின்றாள் சூர்யநிலா.

    உடம்பு... கோழிக் குஞ்சாக நடுங்கியது.

    "படிச்சு... முடிச்சு... பட்டம் வாங்கிட்டு வருவேன்னு... கனா கண்டுகிட்டுருந்தேன்... இப்படி... என் மானம்... மரியாதை... குடும்ப கவுரவம்... எல்லாத்தையும்... காத்துல... பறக்கவிட்டுட்டு வந்து நிக்கறியே... இதுக்காகவா... உன்னை... வெளியூர்ல கொண்டுபோயி... காலேஜ்ல... சேர்த்து விட்டேன்...

    மார்த்தாண்டன் போட்ட கூச்சலில்... மாளிகை போன்ற அந்த வீட்டில்... இருந்த அத்தனை வேலைக்காரர்களும் வெளியே ஓடி வந்து விட்டார்கள்.

    அனைவரின் கண்களும் விரிந்தன.

    உள்ளறைக்குள் இருந்த ரத்தினாதேவியும்... மூச்சிரைக்க ஓடிவந்து விட்டார். மகனை மணக்கோலத்தில் பார்த்ததும் மயங்கி விழாதக் குறைதான். தலையில் மடீர் மடீரென்று அடித்துக் கொண்டு அழத் தொடங்கினாள்.

    "சுபா... ஏண்டா... இப்படி... பண்ணினே? நாங்க... ஒனக்கு... என்ன குறை வெச்சோம்? எங்க தலையில... இடியை எறக்கிட்டியேடா...

    "அம்மா... ப்ளீஸ்... நா செஞ்சது... தப்புதான்! அதுக்காக என்னை இப்படி... விரோதியை வாசல்லயே... நிக்க வெச்சு... பேசி... வெட்டறதுமாதிரி வெரட்டரது... நியாயமா? நீயாவது... என்னைப் புரிஞ்சுக்கம்மா...!

    Enjoying the preview?
    Page 1 of 1