Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Malligai Poovai Maarivida Aasai
Malligai Poovai Maarivida Aasai
Malligai Poovai Maarivida Aasai
Ebook169 pages34 minutes

Malligai Poovai Maarivida Aasai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தமிழ்நாட்டின் முன்னனி எழுத்தார்களுல் என்னையும் ஒருவனாய் கொண்டாடும் வாசக உள்ளங்களுக்கு பனிவான வணக்கம். உங்கள் இதயத்தில் எனக்கென ஒரு இடத்தை தந்திருக்கும் அனைவரையும் வணங்கி மகிழ்கிறேன். நன்றி.

இந்த இடத்தைத்தொட நான் பட்ட சிரமங்கள் கொஞ்சமல்ல. என் பதினேழு வயதில் எழுத்து பயணம் தொடங்கியது. தற்போது 45 வயதாகிறது. இந்த இருபத்தியெட்டு வருடங்களில் 500க்கும் மேற்ப்பட்ட சிறுகதைகள் மற்றும் 400 நாவல்கள் வரை எழுதிவிட்டேன்.

குமுதம் வைரமோதிரம் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு, குமுதம் லட்ச ரூபாய் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு, தேவி வார இதழ் நாவல் போட்டியில் முதல் பரிசு, கண்மணி நாவல் போட்டியில் பரிசு, இலக்கிய சிந்தனை விருது, விகடன், கல்கி இதழ்களில் பரிசு என ஏராளமானப் பரிசுகளை வாங்கியிருக்கிறேன். அனைத்து இதழ்களிலும் எனது படைப்புகள் வெளியாகிருக்கிறது.

வாசிப்பதன் மூலம் மனம் ஒரு நிலைப்படுகிறது. வாசிக்கிறபோது தங்கள் கவலைகளை மறந்து வேறொரு உலகத்திற்க்கு செல்கிறார்கள். எனது நாவல்களை வாசிக்கிறபோது விறுவிறுப்பான திரைப்படத்தைப் பார்ப்பது போல காட்சிகள் கண்களுக்குள் விரியும். முடிக்கும் வரை கீழே வைக்க மாட்டார்கள். காதல் ஆகட்டும், குடும்பம் ஆகட்டும், அமானுஷ்யம் ஆகட்டும், வாசிக்கும் கண்களுக்கு சலிப்பு ஏற்பட்டு விடக்கூடாது. தரமான படைப்புகளை படைப்பதே எனது நோக்கம். வாழ்த்துங்கள், வளர்கிறேன்!! உங்கள் விமர்சனங்கள் என்னை மேலும் வலுவூட்டும்.

மிக்க அன்புடன்
மகேஷ்வரன்

Languageதமிழ்
Release dateNov 10, 2019
ISBN6580128304676
Malligai Poovai Maarivida Aasai

Read more from Maheshwaran

Related to Malligai Poovai Maarivida Aasai

Related ebooks

Reviews for Malligai Poovai Maarivida Aasai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Malligai Poovai Maarivida Aasai - Maheshwaran

    http://www.pustaka.co.in

    மல்லிகைப் பூவாய் மாறிவிட ஆசை

    Malligai Poovai Maarivida Aasai

    Author:

    மகேஷ்வரன்

    Maheshwaran

    For more books

    http://pustaka.co.in/home/author/maheshwaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    1

    மர அலமாரியில் பதிக்கப்பட்டிருந்த ஆளுயரக் கண்ணாடியில் முகத்தைப் பார்த்து, இயற்கையாகவே வில்லாய் வளைந்திருந்த இருபுருவங்களுக்கும் மத்தியில மஞ்சள் வண்ண ஸ்டிக்கர் பொட்டை அழகாய் திருத்தமாய் ஒட்டிக்கொண்டாள் சுபிக்ஷா. உள்ளங்கையில் சந்தனப் பௌடரைக் கொஞ்சமாய் கொட்டி, பரபரவென தேய்த்து, முகத்தில் பூசிக்கொண்டு ஹாலுக்கு வந்தாள். விடியற்காலமே எழுந்து குளித்து முகம் நிறைய மஞ்சள் பூசி மங்களகரமாக காட்சியளித்த தாய் பகவதி தோட்டத்துப் பக்கமாய் இருந்த வாசலின் வழியே உள்ளே வந்தாள்.

    கையில் ஒரு ஒற்றை ரோஜா. அதுவும் சுபிக்ஷாவிற்கு பிடித்த மஞ்சள் வண்ண ரோஜா. நீளமாய் காம்புடன் கிள்ளப்பட்ட ரோஜாவைச் சுற்றி இலைகளும் துளிர்த்திருந்தது.

    சுபி... இதை உன் தலையில் வெச்சுக்க...

    கனிவாய் சுபிக்ஷாவைப் பார்த்தபடியே ரோஜாப்பூவை நீட்டினாள் பகவதி.

    தேங்க்ஸ்மா...

    மஞ்சள் ரோஜாவை வாங்கி காதோரமாய் சொருகிக் கொண்டாள் சுபிக்ஷா.

    சுபி.. இந்த மஞ்சள் ரோஸை செடியிலேர்ந்து பறிக்கறப்போ எனக்குள்ள சின்னதா ஒரு சங்கடம்டி...

    என்னம்மா...?

    தோட்டத்துல எல்லா கலருலயும் ரோஸ் பூத்துக் குலுங்குது... ஆனா நீ மஞ்சள் ரோஸைத் தவிர வேறு எந்த கலரையும் விரலால கூடத் தொடமாட்டே.. இன்னைக்கு இருந்த ஒரே ஒரு ரோஸையும் பறிச்சுட்டேன்... இனி செடியில ஒரு மொட்டுகூட இல்லை... புதுசா மொட்டுவிட்டாதான் உண்டு... நாளைக்கு உனக்கு பறிச்சுக் கொடுக்கறதுக்கு ரோஸ் இல்லாமப் போயிடுச்சேன்னு நெனைக்கறப்போ மனசுக்கு வேதனையா இருக்கு.

    பகவதியின் குரலில் கவலைப் பொங்கியது.

    'நாளைக்கு நானே இந்த வீட்ல இருக்கப் போறதில்லை. எனக்கு என்னத்துக்கும்மா ரோஸ்?'

    நாக்கு நுனி வரைக்கும் வந்துவிட்ட வார்த்தைகளை மென்று. விழுங்கியபடியே டைனிங்டேபிளில் வந்து அமர்ந்தாள்.

    இதுக்குப்போய் ஏம்மா கவலைப்படறே...? இன்னைக்கே ஆளைவிட்டு ரெண்டு மூணு மஞ்சள் ரோஸ் செடியை மொட்டோட இருக்கறாப்ல பார்த்து வாங்கியாரச் சொல்லி தோட்டத்துல நட்டு வெச்சுடு... விடியற்காலம் நீ பறிக்கறதுக்கு ஒண்ணுக்கு மூணு மஞ்சள் ரோஸ் செடியில் பூத்திருக்கும்...!

    விழிகளாலேயே புன்னகைத்தாள் சுபிக்ஷா.

    அட இப்படி ஒரு யோசனை எனக்கு தோணாமல் போயிடுச்சே...

    அதான் இப்ப சொல்லிக் கொடுத்துட்டேன்லெ...

    சூடான நெய்ப்பொங்கலும், கேரட் அல்வாவும் பண்ணியிருந்தாள் பகவதி.

    அம்மா...

    என்னடி...?

    நெய்ப்பொங்கல் வாசனை தூக்கலா தெரியுதே... இன்னைக்கு ஒரு பிடிபிடிக்கப்போறேன்...

    கூடவே உனக்கு பிடிச்ச கேரட் அல்வாவும் செய்திருக்கேன் சுபி...

    அப்ப... கொண்டாட்டம்தான்...

    பச்சைக் குழந்தையைப் போல எவர்சில்வர் பிளேட்டில் தாளம் போடத் தொடங்கினாள் சுபிக்ஷா.

    சுபி... பிளேட்டை டேபிள் மேல வெய்... பொங்கலையும் கேரட் அல்வாவையும் பரிமாறணும்...

    வேணாம்மா... எனக்கு நீ பிளேட்ல பரிமாற வேணாம்... உன் கையால நேரிடையா என் வாயிலயே ஊட்டிவிட்டுடும்மா... ப்ளீஸ்...

    பகவதியைப் பார்த்து கொஞ்சலாய் கெஞ்சினாள்.

    இதுக்கேன்டி கெஞ்சறே... சொன்னின்னா ஊட்டி விட்டுடப்போறேன்...

    மகளை வாஞ்சையோடு பார்த்தாள் பகவதி.

    'நெய்ப் பொங்கலையும் கேரட் அல்வாவையும் ஆசை ஆசையாய் ஊட்டிவிடத் தொடங்கினாள்.

    தாயின் பாசமழையில் நனைந்ததன் காரணமாக சுபிக்ஷாவின் கண்கள் கலங்கியது.

    'அம்மா... உன்னோட இந்த அன்பும் அக்கறையும் நாளையிலேர்ந்து எனக்க கெடைக்குமா...? இனி எந்த ஜென்மத்துல உன் கையால ஊட்டிவிடச் சொல்லி சாப்பிடப்போறேனோ...?'

    நினைக்கிற போதே இதயம் விம்மியது.

    வேகமாய்த் துடித்தது.

    என்னாச்சு சுபி...?

    சுபிக்ஷாவின் கண்கள் கலங்குவதை கவனித்து பரிதவித்துப் போனாள் பகவதி.

    ஒண்ணுமில்லைம்மா...

    பின்ன ஏண்டி கண்ணுரெண்டும் கலங்குது...

    இத்தனை வயசான பின்னாடியும் கூட நீ என்னை சின்னக் கொழந்தையா பாவிச்சு... சாப்பாடு ஊட்டிவிடறியே... அதை நெனைக்கறப்போ... அழுகை வந்துடுச்சும்மா...

    உனக்கு அம்பது வயசானாக்கூட நீ எனக்கு பொண்ணுதான் சுபி... அந்த வயசுல உன்னை நான் கொழந்தையாத்தான் பார்ப்பேன்... அதான் தாய்மையோட மகிமை...

    என்றபடியே இன்னும் கொஞ்சம் கேரட் அல்வாவை அள்ளி சுபிக்ஷாவின் வாயில் ஊட்டினாள் பகவதி.

    போதும்மா...

    இன்னும் ஒரே ஒரு வாய் வாங்கிக்கடி...

    அய்யோ... இதுக்குமேல சாப்பிட்டா வயிறுவலி வந்துடும்...

    சுபிக்ஷா சிரித்தபடியே டைனிங் டேபிளைவிட்டு எழுந்தாள்.

    சுபிக்ஷாவிற்கு இருபத்திரண்டு வயது ஆகிறது.

    சந்தனத்தில் கடைந்தெடுத்த சிலையைப்போல இருப்பாள்.

    கோடீஸ்வரர் சர்வேஸ்வரனின் ஒரே செல்ல மகள்.

    கோயம்புத்தூரிலேயே மிகப்பெரிய பிசினஸ்மேன் சர்வேஸ்வரன்.

    ஊட்டி, கொடைக்கானல் என எல்லா மலைவாழிடங்களிலும் சர்வேஸ்வரனுக்கு எஸ்டேட் இருக்கிறது.

    வாரத்தில் பாதி நாட்கள் பிசினஸ், பிசினஸ் என வெளியூருக்கு ஓடிவிடுவார்.

    இருக்கிற சொத்துக்களே ஏழு தலைமுறைக்கு போதும்.

    ஆனாலும் சர்வேஸ்வரனுக்கு திருப்தி கிடையாது.

    பணத்தை இன்னும் இன்னும் சேர்க்க வேண்டும்… உயிர்மூச்சு உள்ளவரை பணத்தை சம்பாதிக்க வேண்டும்... இதுதான் சர்வேஸ்வரனின் இலட்சியம்...

    அல்வாவையும் பொங்கலையும் உம்பொண்ணுக்கு மட்டும்தான் ஊட்டிவிடுவியா... எனக்குக் கிடையாதா... பகவதி...

    கேலியும் கிண்டலுமாய் மாடியறையிலிருந்து கீழே இறங்கி வந்து கொண்டிருந்தார் சர்வேஸ்வரன்.

    ஐம்பத்தி ஐந்து வயது இருக்கும்.

    நல்ல சிவப்பு.

    ஆசைக்குக்கூட ஒரு முடியில்கூட நரை விழாமல் இளமையாகவே இருந்தார். கோட் சூட் அணிந்து எங்கோ வெளியில் கிளம்புகிற பரபரப்பில் தெரிந்தார்.

    உங்க டாடிக்கு ஆசையைப் பாரேன்...

    ஐம்பதிலதான் ஆசை திரும்ப வரும்னு சொல்வாங்க பகவதி... அது உனக்கு மறந்துப்போச்சா...?

    குறும்பாய் கண்களை சிமிட்டினார் சர்வேஸ்வரன்.

    சர்வேஸ்வரன் சிலசமயம் இனிப்பு.

    சிலசமயம் கசப்பு.

    சிலசமயம் நெருப்பு.

    எப்போது எப்படி மாறுவார் என யாராலயும் கணிக்க முடியாது.

    ச்சீ... போங்க...

    பகவதி வெட்கப்பட்டாள்.

    போனவாரம் நீயும் சுபிக்ஷாவும் என்கூட ஒரு கல்யாண வீட்டுக்கு வந்திருந்தீங்க இல்லையா... அங்கே வெச்சு உங்களைப் பார்த்த என் சினேகிதன் என்ன கேட்டான் தெரியுமா...? 'சுபிக்ஷா உங்களுக்கு ஒரே பொண்ணுதானே... இல்லே சுபிக்ஷாவுக்கு சிஸ்டர் இருக்காங்களா?'ன்னு... உன்னைக்காட்டி கேட்கறான்... 'அது சுபிக்ஷாவோட சிஸ்டர் கிடையாது... என் வொய்ப்புடா'ன்னு செல்லமா அவன் தலையை தட்டறாப்ல ஆயிடுச்சு... உனக்கு வரவர வயசு கொறைஞ்சுகிட்ட போகுது பகவதி...

    அருகில் நெருங்கிவந்து பகவதியின் கன்னத்தை தட்டினார்.

    எட்டிப்போங்க... வயசுப்பொண்ணை பக்கத்துல வெச்சுகிட்டு பேசற பேச்சாங்க இதெல்லாம்...?

    பகவதி பொய்யாய் சிணுங்கினாள்.

    டாடி... நான் போர்டிகோவுக்கு போயாச்சு... நீங்க என்ன வேணாலும் பேசிக்கலாம்... பர்மிஷன் கிரேண்டேடு...

    மார்பில் புத்தகங்களை அணைத்தபடி போர்டிகோவிற்கு ஓடினாள் சுபிக்ஷா.

    தேங்க்யூடா செல்லம்...

    சுபிக்ஷாவைப் பார்த்து தோள்களை குலுக்கினார் சர்வேஸ்வரன்.

    வந்து உட்காருங்க சாப்பிடலாம்...

    ம்ஹூம்... சுபிக்ஷாவுக்கு ஊட்டிவிட்டாப்ல எனக்கும் ஊட்டிவிடேன்...

    இதானே வேணாங்கறது...

    பகவதி கோபமாய் முறைத்தாள்.

    சர்வேஸ்வரனின் கோட்-பாக்கெட்டில் இருந்த செல்போன் சிணுங்கியது. வெளியே எடுத்து பச்சைப் பொத்தானை அழுத்திக் காதில் வைத்தார்.

    சர்வேஸ்...

    சொல்லு தயாளன்...

    இப்ப எங்க இருக்கே?

    என் வீட்டு டைனிங் ஹால்ல...

    நாளைக்கு மருதமலையில் நடக்கப்போற என்னோட அறுபதுக்கு, அறுபது கல்யாணம் ஞாபகம் இருக்குதானே...?

    அதெப்படிடா மறந்து போகும்...?

    நீ பகவதி... சுபிக்ஷா மூணுபேரும் நாளைக்கு முன்கூட்டியே மருதமலைக்கு வந்துடணும்... சரியா?

    சரி...

    அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம்...

    சொல்லு...

    "சுபிக்ஷாவுக்கும் என் மகன் நிஷாத்துக்கும் கல்யாணம் நிச்சயம்

    Enjoying the preview?
    Page 1 of 1