Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Yengi Thavikkum Idhayam Saatchi!
Yengi Thavikkum Idhayam Saatchi!
Yengi Thavikkum Idhayam Saatchi!
Ebook155 pages55 minutes

Yengi Thavikkum Idhayam Saatchi!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தைரியமான கிராமத்து இளம்பெண் பூங்குருவியின்... நெகிழ்வான காதல் கதை இது. கல்லூரியில் படிக்கும் தன் காதலன் முத்துக் காளையின் உயிரைக் காப்பாற்ற... தன்னை பழிவாங்கத் துடிக்கும் சூரியபூபதிக்கு கழுத்தை நீட்டுகிறாள். சூரியபூபதி தன் நண்பர்களோடு சேர்ந்து பூங்குருவியின் வாழ்க்கையை சீரழிக்க திட்டமிடுகிறான்.

பூங்குருவி மானாய் பயந்து ஓடினாளா? பெண்புலியாக சீறினாளா...?

பூங்குருவியின் அதிரடி முடிவே இந்நாவல். காதலன் முத்துக்காளை உயிர்பிழைத்து வந்தானா? சூரியபூபதியின் சதியிலிருந்து பூங்குருவி தப்பினாளா? “ஏங்கித் தவிக்கும் இதயம் சாட்சி” நாவல் ஒரு புதுமைப் படைப்பு. இம்மண்ணிற்கு பூங்குருவி போன்ற உத்தமமான, தைரியமானப் பெண்களால் தான் பெருமை.

Languageதமிழ்
Release dateMay 24, 2020
ISBN6580128305422
Yengi Thavikkum Idhayam Saatchi!

Read more from Maheshwaran

Related to Yengi Thavikkum Idhayam Saatchi!

Related ebooks

Reviews for Yengi Thavikkum Idhayam Saatchi!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Yengi Thavikkum Idhayam Saatchi! - Maheshwaran

    http://www.pustaka.co.in

    ஏங்கி தவிக்கும் இதயம் சாட்சி!

    Yengi Thavikkum Idhayam Saatchi!

    Author:

    மகேஷ்வரன்

    Maheshwaran

    For more books

    http://www.pustaka.co.in/home/author/maheshwaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    *****

    அத்தியாயம் 1

    தூக்கணாங்குருவியாறு வளைந்தும் நெளிந்தும் சலசலவென ஓடிக் கொண்டிருந்தது. ஆற்றின் அக்கரையில் கரும்பும், வாழையும் எலுமிச்சையும் வயல்களில் செழிப்பாய், பச்சை பசேலெனக் காட்சி அளித்தன. இக்கரையில் நன்றாக உழுது கிடந்த வயல்களில் பெண்கள் சேற்றில் இறங்கி நாற்று நட்டுக் கொண்டிருந்தார்கள்.

    அந்த கிராமத்திலேயே மிகப்பெரிய செல்வந்தர் ஜம்புலிங்கம் மட்டும் தான். சுற்றுப்பட்டி பதினைந்து கிராமங்களிலும் அவர் அளவிற்கு வசதியானவர் யாருமே கிடையாது. திரும்பிய திசையெங்கும் அவருடைய வயல்கள் தான். தோப்புகள் தான்.

    ஜம்புலிங்கத்தின் வயல்களில் தான் இப்போது நாற்று நடவு நடந்து கொண்டிருந்தது. நடவு நடுகிற பெண்களை வரப்பில் நின்று வேலை வாங்கிக் கொண்டிருந்தார் ஜம்புலிங்கம் வீட்டு கணக்குப் பிள்ளை கந்தசாமி.

    குனிந்து வேலை செய்கிற பெண்களுக்கு முதுகில் லேசாய் அரித்தால் கூட, நிமிர்ந்து நின்று அதை சொறிந்துக் கொள்ள முடியாத அளவிற்கு அவர்களை விரட்டி விரட்டி வேலை வாங்கிக் கொண்டிருந்தார் கந்தசாமி.

    கால்களில் விலையுயர்ந்த செருப்பு, தும்பைபூ மாதிரி வெள்ளை வேஷ்டி சட்டை, கையில் பளபளப்பான கடிகாரம், தலையில் பாகை மாதிரி முண்டாசு, அதையும் மீறி உச்சி வெயில் தலையில் படாத அளவுக்கு கையில் அழுத்தமான துணி குடையை விரித்து பிடித்திருந்தார்.

    சூரியன், தகதகப்பாய் உச்சிக்கு வந்திருந்தான். மத்தியானம் ஒரு மணி ஆகி விட்டது.

    பசியெடுத்தாலும் பொறுத்துக் கொண்டு தான் வேலை செய்து கொண்டிருந்தார்கள். கந்தசாமி கையை அசைத்தால் தான் சாப்பிடுவதற்கு கரையேற முடியும். கழுத்தில் வலி ஏற்பட்டு யாரோ ஒரு வயதானப் பெண்மணி சற்றே நிமிர்ந்தாள்.

    ஏ... கெழவி... அங்கே என்னத்த கிராக்கு பாக்கறே? குனிஞ்சு நாத்தை நடுற வேலையைப் பாரு… அதட்டலாய் உரக்க கத்தினார்.

    நா கெழவியாம்.. இவரு மட்டும் இன்னமும் பதினெட்டு வயசு வாலிபனாக்கும் பேச்சைப் பாரேன் முணுமுணுத்தபடியே அந்தப் பெண்மணி அவசரமாய் கீழே குனிந்தாள்.

    கெழவி என்ன முணு முணுக்குது?

    அய்ய.. நா ஒண்ணும் முணுமுணுக்கலை அண்ணாத்தே?

    என்னது.. அண்ணாத்தேயா? அவ்வளவு வயசாயிடுச்சா எனக்கு? கந்தசாமி குதிக்க பூங்குருவி நிமிர்ந்தாள்.

    அங்கே வேலை செய்து கொண்டிருந்த பெண்களிலேயே சின்ன வயசு அவளுக்குத்தான். பதினெட்டு வயசு பருவச்சிட்டு. கிளிப்பச்சை தாவணி அதே வண்ண சட்டை அரக்கு சிவப்பில் பூ போட்ட சீட்டித் துணி பாவாடை கட்டியிருந்தாள்.

    இரட்டை ஜடைகளையும் இணைப்பது போல பிச்சிப்பூவை சூடியிருந்தாள். சந்தன சிலையாட்டம் தேகம். மஞ்சள் கிழங்கை அரைத்து பூசியது போல பளபளப்பான முகம். துறுதுறுவென அலைபாய்கிற கண்கள்.

    குடும்பத்தின் வறுமையை வெளியே காட்டிக் கொள்ளாமல் எப்போதும் துள்ளலும் துடிப்புமாய் இருப்பாள்.. பூங்குருவி.

    அண்ணாத்தே. உச்சி வெயில்ல, ஆத்தாவுக்கு கண்ணும் தெரியலை. வாயும் குளறுது... பசி மயக்கம் வேற. அதான் அண்ணாத்தேன்னு ஆத்தா உளறுது போலிருக்கு. பூங்குருவி கணக்குப் பிள்ளை கந்தசாமியை வேண்டுமென்றே சீண்டினாள்.

    பசி மயக்கமா இன்னும் மணி ஆகலைப் புள்ளே...

    அதெல்லாம் மணி ஆயிடுச்சு அண்ணாத்தே.. ஒங்க கைக்கடிகாரம் தான் ஒழுங்கா ஓடலைப் போலிருக்கு.. அதை கழட்டி சேத்து வயல்ல வீசியெறிஞ்சுட்டு புதுசா ஒண்ணு வாங்கி கட்டிக்கங்க அண்ணாத்தே...

    பூங்குருவி சிரித்தபடியே சொல்ல வேலை செய்கிற பெண்கள் அத்தனைப் பேரும் 'கொல்'லென சிரித்தார்கள்.

    யாரது புள்ளே... வாயடிக்கிறது? வேலப்பன் மவளா?

    நானேதான்..

    வேலப்பன் கிட்டே சொல்லி எனக்கொரு கடிகாரம் வாங்கித் தரச் சொல்லு தாராளமா கட்டிக்கிறேன்.

    வர்ற மாசி மாசம் நம்ம ஊரு கத்தாயி அம்மன் கோவில் திருவிழா வருதுல்ல.. அப்போ வளையல் கடை அக்காகிட்டே ஒண்ணுக்கு ரெண்டாவே கடிகாரம் வாங்கித் தர்றேன். போதுமா அண்ணாத்தே? கண்களை சிமிட்டி கன்னக்குழி விழ சிரித்தாள் பூங்குருவி.

    அடியேய் பூங்குருவி. அப்படியே திருவிழாக் கடையில் நம்ம அண்ணாத்தேக்கு ஒரு மூக்கு கண்ணாடியும் வாங்கிக் கொடுடி.. மாட்டிக்கிட்டு திரியட்டும் என்றாள் நாற்று நட்டுக் கொண்டிருந்த நடுத்தர வயசு பெண்ணொருத்தி, வெள்ளிக் காசுகளை அள்ளி இறைத்தது போல மறுபடியும் சிரிப்பொலி வயல் வெளியை நிறைத்தது.

    கணக்குப் பிள்ளை கந்தசாமிக்கு சுள்ளென கோபம் வந்து விட்டது. வாங்கிக்கிறவன் வக்கத்தவனா இருந்தா, கண்ணுக்கு கண்ணாடி மட்டுமா வாங்கித் தருவீயா காதுக்கு லோலாக்கும்லெ வாங்கி மாட்டி விட்டுடுவீயா? இருங்க உங்களை கூலி கொடுக்கறப்ப கவனிச்சுக்கிறேன்...

    வேஷ்டியை மடக்கி கட்டியபடி விரலை உயர்த்தி எச்சரித்தார். கோச்சுக்காதீய அண்ணாத்தே... இப்படி எல்லார் கிட்டயும் பேசிட முடியுமா? பேசினாத்தான் விட்டுடுவாகளா? ஏதோ ஒரு உரிமையில் தானே பேசறோம்... இதுக்குப் போயி குடை மொளகாயை கடிச்சாப்ல கத்தறீங்களே. பசிக்குது அண்ணாத்தே... எங்களை கரை ஏற விடுங்களேன். என்றாள் பூங்குருவி.. அவரை சமாதானப்படுத்துவது மாதிரி கெஞ்சல் பார்வை பார்த்தாள்.

    இனிமேலும் கரையேற விடாமல் வேலை வாங்கிக் கொண்டிருந்தால் தன்னை ஆள் ஆளுக்கு வாயாலேயே வறுத்தெடுத்து விடுவார்கள் என நினைத்தவராய் கந்தசாமி சற்றே இறங்கி தலையை அசைத்தார்.

    சரி சரி. எல்லாரும் கரை ஏறுங்க, சாப்பிட்டதும் கண்மாய் கரையில் படுத்து கண்ணசந்துடாம, ஒழுங்கா வயல்ல இறங்கி வேலையைப் பாருங்க.

    பூங்குருவியும் மற்ற பெண்களும் வயலை விட்டு கரையேறினார்கள். மதிய சாப்பாட்டை சாப்பிடுவதற்காக கந்தசாமியும் அங்கிருந்து தன்னுடைய வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினார்.

    பெண்கள் அனைவரும் வேலை செய்த களைப்பு தீர ஆற்றில் இறங்கி கை, கால், முகம் கழுவிய பின்பு கரையையொட்டியிருந்த மர நிழலை நோக்கி நடந்தார்கள்.

    பாசி படர்ந்து அல்லியும், தாமரையும் பூத்துக்குலுங்கிய உயரமான கரையை சுற்றிலும் ஏராளமான புன்னை மரங்கள் அடர்த்தியாய் குடை விரித்திருந்தன.

    தணிவான மரக்கிளைகளில் அலுமினிய வாளிகள் தொங்கிக் கொண்டிருந்தன. ஆள் ஆளுக்கு தனித்தனியே அலுமினிய வாளியில் சாப்பாடு கொண்டு வந்திருந்தனர்.

    மரக்கிளைகளில் கட்டித் தொங்கிய தம்தம் வாளிகளை கழற்றி மூடிகளை திறந்தார்கள்.

    பழைய சாதம், பச்சைமிளகாய், வெங்காயத் துவையல், பொரியல் என விதவிதமான சாப்பாட்டு வாசனை காற்றில் பரவியது.

    பூங்குருவி..

    மீனாட்சி அழைத்தாள்...

    நீ சாப்பாடு கொண்டு வரலியாடி..?

    இல்லக்கா...

    உதட்டை சுழித்தாள் பூங்குருவி.

    ஏண்டி கொண்டாரலை...?

    அம்மாவுக்கு ரெண்டு நாளா ஒடம்பு முடியலைக்கா.. இன்னிக்கு காலையிலயும் கஞ்சிதான்... தொட்டுக்க எலுமிச்சைக்கா ஊறுகாய் தான் சாப்பாடு. அதை என்னத்த ஊத்தி கொண்டாறதுன்னு தான் வெறுங்கையோட வந்துட்டேன்.

    பசி பொறுக்க மாட்டியே நீ. வாடி என் சாப்பாட்டுல ஒரு வாய் சாப்பிடுடி மீனாட்சி பாசமும் கனிவுமாய் தன்னுடைய சாப்பாட்டில் கொஞ்சமாய் அள்ளி தூக்குவாளியின் மூடியில் வைத்து பூங்குருவியிடம் நீட்டினாள்.

    ம்ஹும். எனக்கு பசியே இல்லை. பதினோரு மணிக்கு கணக்குப் பிள்ளை அண்ணாத்தே வாங்கித் தந்த டீயும், வடையுமே இன்னும் நெஞ்சுலயே நிக்குது. பாசத்தோடு தர்றீயளேன்னு எல்லாத்தையும் வாங்கித்தின்னா, அப்றோம் நா குண்டாயிடுவேன்.

    யாரிடமும் கையேந்தாமல் புன்னகையோடு அங்கிருந்து நகர்ந்தாள் பூங்குருவி.

    குண்டா ஆனாத்தான் என்னவாம்? ஒன்னைய முத்துக்காளை வேணாம்னா சொல்லிடப் போறான்? என்னிக்கி இருந்தாலும் முத்துக் காளையத்தான் ஒன் கழுத்துல தாலி கட்டப் போறான்?

    யாரோ ஒருத்தி

    Enjoying the preview?
    Page 1 of 1