Velvom
By GA Prabha
()
About this ebook
Read more from Ga Prabha
Uravai Naadum Paravai Rating: 0 out of 5 stars0 ratingsEn Idhayam Enbathu Neeyaga Rating: 0 out of 5 stars0 ratingsAasai Veedu Rating: 5 out of 5 stars5/5Manasukkul Pozhiyum Mazhai Rating: 4 out of 5 stars4/5En Vaanathu Vennilavu Rating: 5 out of 5 stars5/5Kandan Pugazh Padum Kandar Alangaram Rating: 0 out of 5 stars0 ratingsManathin Arathanai Rating: 5 out of 5 stars5/5Peiyena Peiyum Mazhai Rating: 0 out of 5 stars0 ratings
Related to Velvom
Related ebooks
Vedikkai Manithargal…! Rating: 5 out of 5 stars5/5Agni Siragugal Rating: 5 out of 5 stars5/5Thunbam Nergaiyil… Rating: 5 out of 5 stars5/5Uyiraith Thirudathey Rating: 0 out of 5 stars0 ratingsSevappi Rating: 0 out of 5 stars0 ratingsArunaa Nandhiniyin Short Stories Rating: 0 out of 5 stars0 ratingsEliyum Naanum Rating: 0 out of 5 stars0 ratingsNaan Naanavena? Rating: 4 out of 5 stars4/5Neer Kolangal Rating: 0 out of 5 stars0 ratingsNenjukulley Vai Rating: 0 out of 5 stars0 ratingsAayul Dhandani Rating: 5 out of 5 stars5/5Nesam Marakkavillai Nenjam! Rating: 5 out of 5 stars5/5Yandhira Jaalam Rating: 5 out of 5 stars5/5Uyire Nerungi... Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsNeruppu Nila Rating: 0 out of 5 stars0 ratingsPongi Varum Peru Nilavu Rating: 0 out of 5 stars0 ratingsVidiyalil Oru Vennila Rating: 5 out of 5 stars5/5Koottupuzhukkal Rating: 0 out of 5 stars0 ratingsNilavum Malarum Rating: 5 out of 5 stars5/5Indriravu Unnai Rating: 5 out of 5 stars5/5Kalyana Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsKuliratha Margazhi Rating: 0 out of 5 stars0 ratingsVedikkai Manithargal…! Rating: 0 out of 5 stars0 ratingsAnal Meley Panithuli Rating: 0 out of 5 stars0 ratingsOru Naal Iravu Rating: 0 out of 5 stars0 ratingsNeruppu Nila Rating: 0 out of 5 stars0 ratingsEzhavathu Jenmam Rating: 4 out of 5 stars4/5Engey En Jeevaney..? Rating: 5 out of 5 stars5/5Neruppodu Vilaiyadu! Rating: 5 out of 5 stars5/5Ullamengum Alli Thelithean Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Velvom
0 ratings0 reviews
Book preview
Velvom - GA Prabha
http://www.pustaka.co.in
வெல்வோம்
சிறுகதைகள்
Velvom
Sirukadhaigal
Author :
ஜி.ஏ.பிரபா
GA Prabha
For more books
https://www.pustaka.co.in/home/author/ga-prabha-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
1. அதையும் மீறி ஓர் உலகம்!
2. இதற்குத்தான் காதலித்தாயா, சூர்யா?
3. ஒளிச் சேர்க்கை
4. வைரவரிச் சிறுகதை
5. காதல் என்பது...
6. குரூரம்
7. தீக்குளிக்கும் நந்தவனங்கள்
8. தீச்சிறகுகள்
9. தூறல்கள்
10. பகைவீடு
11. பிழை திருத்தம்
12. புதிதாய்ப் பிறப்போம்
13. புலி வேட்டை
14. வலி
15. வெல்வோம்
1. அதையும் மீறி ஓர் உலகம்!
அறுபது வயசுக்குப் பின் எங்க அண்ணன் கல்யாணம் பண்ணிக்கொண்டு வரான். நான் போய்ப் பாட்டுப் பாடி ஆரத்தி சுற்றலாம்தான்.
ஆனாலும், விதவையான நான் போய் ஆரத்தி எடுத்துப் பாட்டுப் பாடி வரவேற்றால் நல்லாவா இருக்கும்? எங்க அண்ணனுக்கும் அது பிடிக்காது.
எனக்கு அம்பது வயசாகுது… இன்னும் அண்ணாவிடம் பயம்தான். வர்றவள் எப்படிச் சமாளிக்கப் போகிறாளோ? சின்ன வயதுப்பெண் வேறு…
ஆரத்தி எடுத்து முடிந்த பிறகு முதலில் அண்ணா உள்ளே வந்தான். அதை அடுத்து உள்ளே நுழைந்தாள் பூரணி…
கணுக்கால் வரை மஞ்சள் பூசிய பாதம் மினுமினு என்று மின்னியது. ரத்தச் சிவப்பு நிற கூறைப் புடவையைக் கட்டிக்கொண்டு சின்ன மரப்பாச்சிப் பொம்மை மாதிரி பொண்ணு. பொண்ணுன்னு சொல்றதுகூடத் தப்பு… குழந்தை! அவளது கையைப் பிடிச்சுக்கிட்டு எங்க அண்ணன் நின்றான்.
எங்க அண்ணனைப் பாத்திருக்கீங்களா? பிள்ளையார் இருப்பாரே கருகருன்னு தொந்தியும் தொப்பையுமா தும்பிக்கையைச் சுருட்டிக்கிட்டு… அவருக்குத் தும்பிக்கையை எடுத்துட்டு நிக்க வைத்தால் எப்படியிருக்கும்? அப்படித்தான் இருப்பான் எங்க அண்ணன்.
பூரணிகூட அவன் ஜோடியா நிக்கறப்போ எனக்கே வயித்தைப் பிசையற மாதிரி இருக்கே… அழகை விடுங்க… வயசு! அறுபது வயசாகுதே…
பேத்தி மாதிரி இருக்கறவளைக் கட்டிக்க எப்படி மனசு வந்தது? கட்டித் தர பெத்தவங்களுக்கு எப்படி மனசு சம்மதித்தது? என்னாலும் இதை எதிர்த்துக் கேட்க முடியலையே… கட்டினவன் போன பிறகு அண்ணன்கூடத் தங்கிக்கிட்டு ஜீவனம் நடத்தி வர்றனே… அதுக்காக வேஷம் போட வேண்டியிருக்கே… அழுகையாக வந்தது. சட்டென்று கொல்லைப்புறம் போயிட்டேன்.
கல்யாணம் நிச்சயம் ஆனப்பவே மூர்த்தி சொன்னான். ‘இது பெருந்திணைக் காதல்’னு… மூர்த்தி என் அண்ணியோட சொந்தக்காரன். இங்கே வேலை… சாப்பாட்டுக்குப் பணம் கொடுத்துட்டு மேல் மாடியில் தங்கியிருக்கிறான்.
இந்தக் கல்யாண விஷயத்தில் நான் பட்டும் படாமலும் ஒதுங்கியதில் அண்ணனுக்கு ரொம்பத் திருப்தி.
ஸ்டோர் ரூமுக்குள்ளேதான் பூரணி இருந்தாள். அரிசி மூட்டைக்குப் பக்கத்தில் முழங்காலைக் கட்டிக்கிட்டு உட்கார்ந்திருந்தாள். என்னைப் பார்த்ததும் எழுந்து நின்றாள்.
அவள் முகம் வாடி, கண்கள் சிவந்து இருந்தன. நான் மெதுவாக அவளது தோளைத் தொட்டு சாப்பிட்டியா?
என்றேன்.
உதட்டைக் கடிச்சுத் தலையைக் குனிஞ்சுக்கிட்டா… ‘குபுக்’ என்று அவளது கண்ணிலிருந்து ரெண்டு சொட்டு நீர்… என்னால் தாங்க முடியலை. வெளியே ஓடி வந்துட்டேன்.
உறவினர்கள் எல்லோரும் போய்விட்டால்கூட பூரணியோட அம்மா, அப்பா எல்லாம் இருந்தார்கள்.
பூரணியோட அப்பா பெரிய இடத்தில் பெண்ணைக் கொடுத்த பெருமையில் துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு காணாததைக் கண்டது மாதிரி அலையறார்.
அம்மா பூரணி, நீதான் இந்த வீட்டு எஜமானி… வா வெளியில்… நீ பார்த்து செய்…
இப்படிச் சொல்லிக்கொண்டே தேங்காய், அரிசி, பருப்புன்னு மூட்டை கட்ட ஆரம்பிச்சுட்டார்.
அவளது அம்மா கூடத்தில் உட்கார்ந்துக்கிட்டு நீட்டி முழக்கிப் பேசிக்கொண்டு இருக்காள். பூரணி மட்டும் இதில் ஒட்டாமல் என் பின்னாலேயே சுற்றினாள். தன் அப்பாவிடம் முகமே கொடுக்கவில்லை. அவரைப் பார்த்தாலே அவளது முகம் கடுகடுத்தது.
எனக்குப் புரிகிறது. இது கட்டாயக் கல்யாணம்! தன் வசதிக்கு, தன் சுகத்துக்குப் பெண்ணைப் பலி கொடுத்திருக்கார். அவர்மீது எனக்குப் பயங்கர எரிச்சல்!
பூரணிக்கு ராத்திரிக்காக அலங்காரம் நடந்தது. அவளிடம் கொடுத்தனுப்ப பெரியம்மா பால், பழம் எல்லாம் தயார் செய்துக்கிட்டு இருக்கிறாள். இந்தக் கூத்து எதையும் பார்க்கச் சகிக்காமல் நான் மேலே மாடிக்குப் போயிட்டேன்.
மூர்த்தி ரூமுக்குப் பக்கத்துல பாயை விரிச்சுப் போட்டுப் படுத்துக்கிட்டு அழறான். எனக்கும் அழுகையா வந்தது.
கொஞ்ச நேரத்தில் பெரியம்மா கோபமாக வந்தாள். இந்தக் கூத்தை எங்கேடீ சொல்றது?
என்ன பெரியம்மா?
பூரணிகிட்ட பால், பழம் கொடுத்து ரூமுக்குள்ள அனுப்பினேனா, கழுத்தைப் பிடிச்சுத் தள்ளிட்டாண்டீ. கத்தறான். ‘இந்த அசிங்கமெல்லாம் வெச்சுக்காதே. அறுபது வயசாகுது. இப்பத்தான் எனக்குப் பொண்ணு தேவையா? ஏதோ சமைக்க, கை கால் பிடிச்சுவிட, கூடமாட ஒத்தாசைக்கு இருக்கட்டுமேன்னு கூட்டிக்கிட்டு வந்தேன். இப்படிக் கூத்துக்கட்டி அடிக்கிறீங்களே’னு கத்தறான்.
பூரணி எங்கே?
சமையல் அறையில இருக்கா…
நான் கீழே இறங்கினேன். வெளித் திண்ணையில் கட்டிலைப் போட்டு அண்ணா படுத்திருந்தான். கூடத்தில் மூலைக்கொருவராக உருண்டு கிடக்க, பூரணி சமையல் அறையில் காய்கறிக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்தாள்.
பெரிய ஆபத்திலிருந்து தப்பிச்ச மாதிரி அவளது முகம் பூரித்துக்கிடந்தது. நான் அவளிடம் அப்போது எதுவுமே கேட்கவில்லை. படுக்க இடம் ஒழிச்சுக் கொடுத்துட்டுப் போயிட்டேன் ரெண்டு நாள் கழித்து மெதுவா கேட்டேன்.
இதுல உனக்குச் சம்மதமா?
உடனே புரிந்துகொண்டு சிரித்தாள்.
சம்மதமா… என்னை யார் கேட்டாங்க…? எங்கப்பாவுக்குப் பணம் இல்லை. இவருக்கு ஒத்தாசைக்கு ஆள் வேண்டியிருந்தது. விளைவு… இப்படி ஆகிப் போச்சு…
அப்போ இளமை, அழகு?
இளமையாவது, அழகாவது? பணமிருந்தா இளமை, அழகு எல்லாம் வந்துரும். முதல்லே நான் மாட்டேன்னுதான் அழுதேன். நீ ஏத்துக்காட்டி நாங்க எல்லாம் அரளி விதையை அரைச்சுக் குடிச்சிடுவோம்னார் அப்பா. எல்லோரும் ஏன் சாகணும்? நானே செத்துப் போறேன்னு சம்மதிச்சுட்டேன். செத்துப் போறதுன்னா உயிரை விடுறது மட்டும்தானா? இதுகூட ஒருவகை சாவுதானே…
***
பூரணி பாட்டுக்குத் தன் வேலையைச் செய்யறாள். அப்பப்போ அண்ணன் கோபத்தில் அவளை மாட்டைப் போட்டு அடிக்கற மாதிரி அடிக்கும் போது அதையும் வாங்கிக்கிறாள்.
அதென்னமோ பூரணி எது செய்தாலும் அவனுக்குக் குற்றமாவே படுது. கையாலாகாதத்தனத்தை மறைக்க அவளைப் போட்டு அடிக்கிறானோ என்றுகூடத் தோன்றுகிறது. பூரணி தன்னைவிட்டு வேறு ஒருத்தனுடன் ஓடிவிடுவாளோ என்ற இயலாமையின் வழி வந்த பயமும் எரிச்சலும், அவளைத் தன்னிடமே வைத்திருக்க வேண்டும் என்ற ஆதிக்க குணத்தாலும்தான் அவளைக் கொடுமை செய்கிறான் என்று நினைக்கிறேன்.
இப்படித்தான் அண்ணியைப் போட்டு அடிப்பான். அண்ணி அழகாய் இருப்பாள். அவள் வாசல் படியில் வந்து நின்றால்கூட, எவனைப் பார்க்கிறே…?
என்று அசிங்கமாகக் கேட்டு அடிப்பான். அண்ணாவுக்கு இப்படிப்பட்ட சந்தேகக் குணம் சின்ன வயசிலேருந்தே ஒரு மனோவியாதி மாதிரி பிடிச்சிருச்சு. ஒரு வழியாக அண்ணியும் போய்ச் சேர்ந்துட்டாள். போன நாலாம் மாசம் பூரணி! அடிச்சுக் கொல்றதுக்குன்னே ஒருத்தியைக் கட்டிக்கொண்டு வருகிறானோ?
நேற்று அப்படித்தான்… ராத்திரி வெளித் திண்ணையில கட்டிலில் படுத்திருந்த அண்ணாவுக்குக் கால் புடிச்சி விட்டுக்கிட்டு இருந்தாள் பூரணி.
மனத்தில் என்ன வேதனையோ? கண்ணீர் தளும்பி ஒரு சொட்டு அவன் காலில் விழுந்துட்டுது. அப்படியே காலால அவளது முகத்தில் எட்டி உதைச்சான் பாருங்க! அப்பா…! ஓடிப்போய் எடுத்து நிறுத்தி பூரணியை அணைச்சுக்கிட்டேன்.
அண்ணா லபோ திபோனு கத்திக்கிட்டு இருக்கான். அப்பன் வீட்ல ஒரு வாய் சோத்துக்கு நக்கிக்கிட்டு இருந்தது போக, இங்கே மூணு வேளை ஒழுங்கா திங்கறது புடிக்கலையா? திடீர்னு என்ன அழுகை…? சுரண்டித் திங்கற குடும்பம் தானே… வசதியை எப்படி ஏத்துக்கும்?
பூரணி அப்படியே அவமானத்தால் உடம்பு குறுகி நின்றாள். சோறு, வசதி