Kangal Seitha Mayam Enna
By Maheshwaran
()
About this ebook
கல்லூரி நடனம் போட்டியில் நடுவராக செல்கிறான்.
அழகுமிகு ஆராதனா என்ற மாணவிக்கு காலேஜ்குயின் கிரீடத்தை சூட்டுகிறான். ஆராதனாவிடம் மனதைப்பறிக் கொடுக்கிறான். ஆராதனாவின் புகைப்படத்தை தன் தந்தைக்கு வாட்ஸ் அப்பில் அனுப்புகிறான்.
சூரியாவின் தந்தை ஆராதனாவைப் பார்த்து அதிர்கிறார். காரணமென்ன...?
கொடைக்கானலில் வசிக்கும் சோழஸ்வரி மேகலா...
இருபது வருடங்களுக்கு முன்பு அனாதை ஆசிரமத்தில் விட்ட தன் குழந்தையைத் தேடி தஞ்சைக்கு வருகிறாள்.
மேகலாவின் மகள்தான் ஆராதனா...
சூரியாவின் அத்தை மகள்தான் ஆராதனா...
மேகலாவும் ஆராதனாவும் ஒன்று சேர்ந்தார்களா?
சூரியாவின் காதல் ஆராதனாவிற்கு புரிந்ததா...?
விடை சொல்லும் கதைதான்... இந்த நாவல்
Read more from Maheshwaran
Aayiram Kodi Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsKaruppu Kuthirai Rating: 0 out of 5 stars0 ratingsTick.. Tick.. Thik. Rating: 4 out of 5 stars4/5Kuyil Thoppu Marmam Rating: 5 out of 5 stars5/5Varuvean Naan Rating: 5 out of 5 stars5/5Linga Pura Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsPachaikili Rating: 0 out of 5 stars0 ratingsManal Sirpangal Rating: 0 out of 5 stars0 ratingsThappithu Vidu... Kanmani! Rating: 0 out of 5 stars0 ratingsNilavukku Kobam Varum! Rating: 0 out of 5 stars0 ratingsPovom Ini Kaadhal Desam Rating: 0 out of 5 stars0 ratingsMullil Vizhuntha Kili Rating: 0 out of 5 stars0 ratingsMayanginean Solla Thayanginean Rating: 0 out of 5 stars0 ratingsIravum Pagalum Un Uruvam Rating: 0 out of 5 stars0 ratingsUn Manasula Naan Irukkena? Rating: 0 out of 5 stars0 ratingsMalligai Poovai Maarivida Aasai Rating: 0 out of 5 stars0 ratingsMarakka Mudiyavillai...! - Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsThik Thik Thilothi Rating: 0 out of 5 stars0 ratingsRaja Nagam Rating: 0 out of 5 stars0 ratingsMalargal Poi Pesuma? Rating: 0 out of 5 stars0 ratingsUn Madiyil Naanuranga Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Vennila Rating: 0 out of 5 stars0 ratingsIdhayathil Vizhuntha Thirumana Maalai! Rating: 0 out of 5 stars0 ratingsNenjil Aasai Kodi Sumanthu… Rating: 0 out of 5 stars0 ratingsMullil Vizhuntha Pattampoochi Rating: 0 out of 5 stars0 ratingsMudhalai Rating: 0 out of 5 stars0 ratingsMayanguthu Nenjam Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Kiliye Kobama? Rating: 0 out of 5 stars0 ratingsElla Muthangalum Enakke! Rating: 0 out of 5 stars0 ratingsUyirai Pirikka Mudiyuma? Rating: 0 out of 5 stars0 ratings
Related to Kangal Seitha Mayam Enna
Related ebooks
Neeyedhaan En Manaivi Rating: 5 out of 5 stars5/5Kaadhal Neram Rating: 5 out of 5 stars5/5Thirumagal Thedi Vandhaal… Rating: 5 out of 5 stars5/5Mazhaikaala Malligaigal Rating: 0 out of 5 stars0 ratingsOomatham Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsAasai Nenjin Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsArathanai Rating: 0 out of 5 stars0 ratingsShabash Poonkutty Rating: 0 out of 5 stars0 ratingsNaan Nee….Aathma! Rating: 5 out of 5 stars5/5Karuppu Malligai Rating: 4 out of 5 stars4/5Sakkarai Nilave...! Rating: 4 out of 5 stars4/5Vanam Vasapadum Thooram Rating: 0 out of 5 stars0 ratingsThedu Kidaikathu Rating: 0 out of 5 stars0 ratingsIravu Sooriyan Rating: 0 out of 5 stars0 ratingsVazhndhu Kattuvom Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsThaduthal Kooda Tharuvean Rating: 5 out of 5 stars5/5Vasantha Kaalam Rating: 0 out of 5 stars0 ratingsKaruppu Udai Devathai! Rating: 5 out of 5 stars5/5Oomai Pullanguzhalgal Rating: 5 out of 5 stars5/5Koondu Kuyil Rating: 4 out of 5 stars4/5Sri Ranga Sirippoli... Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Raasi..! Rating: 0 out of 5 stars0 ratingsSollathan Ninaikkirean! Rating: 0 out of 5 stars0 ratingsEthanai Kodi Inbam Rating: 0 out of 5 stars0 ratingsThaduththaal Kooda Tharuven Rating: 0 out of 5 stars0 ratingsManasukkul Neruppu Rating: 0 out of 5 stars0 ratingsVaanavil Kutram Rating: 5 out of 5 stars5/5வானவில் குற்றம் Rating: 0 out of 5 stars0 ratingsMaayam Seithayo Mayava Rating: 0 out of 5 stars0 ratingsThendrale Ennai Thodu Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Kangal Seitha Mayam Enna
0 ratings0 reviews
Book preview
Kangal Seitha Mayam Enna - Maheshwaran
http://www.pustaka.co.in
கண்கள் செய்த மாயம் என்ன
Kangal Seitha Mayam Enna
Author:
மகேஷ்வரன்
Maheshwaran
For more books
http://pustaka.co.in/home/author/maheshwaran
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
1
கல்லூரி ஆடிட்டோரியம் நிரம்பி வழிந்தது.
எங்கும் ஒரே வெளிச்ச மழை.
கரகோஷம்.... விசில் சப்தம்....
ஆனந்த கண்ணனை அழைக்கிறேன்......
காதல் கானங்கள் நாளும் இசைக்கிறேன்.
வருவாயா கண்ணா? மனம் தருவாயா மன்னா...?
ஸ்பீக்கரில் ஒலித்த பாடலுக்கு ஏற்ப மேடையில் ஆடிக்கொண்டிருந்தாள் அபூர்வா. ஏக்கம், வெட்கம், தவிப்பு, அழுகை, கோபம், சிரிப்பு, சிணுங்கல், முறைப்பு, ஆச்சர்யம் என அத்தனை உணர்வுகளையும் முகபாவணைகளால் காட்டி...... காணும் கண்களை வியப்பில் விரிய வைத்தாள்.
யாரிவள்?
எந்த தேசத்து இளவரசி?
வானத்திலிருந்து குதித்த தேவதையோ....
வைத்த கண் வாங்காமல் அபூர்வாவையே பார்த்துக் கொண்டிருந்தான் சூர்யா. அவனையும் அறியாமல் அவளை ரசிக்க ஆரம்பித்திருந்தான். அபூர்வாவின் ஒவ்வொரு அசைவும் ரசனைக்குரியதாகத்தான் தோன்றியது.
இதற்கு முன்பு ஆடிய மூன்று மாணவிகளின் நடனமும் அவனை எள்ளளவும் கவர்ந்திழுக்கவில்லை. வேண்டா வெறுப்பாகத்தான் மேடைக்கு முன்பு தனக்கான பிரத்யேகமாகப் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்திருந்தான்.
விழா முடிவதற்குள் பாதியிலேயே எழுந்து வெளியேறி விடலாமா? என்று கூட நினைத்தான்.
அவனுடைய இருக்கைக்கு ஒரு பக்கம் கல்லூரியின் பிரின்சுபாலும் இன்னொரு பக்கம் தாளாளரும் அமர்ந்திருந்தார்கள்.
அந்தக் கல்லூரியில் எந்த விழா நடந்தாலும் சூரியாவின் தந்தை ஜெகதீசன்தான் தலைமை தாங்குவார். கல்லூரியின் தாளாளரும் ஜெகதீசனும் நெருங்கிய நண்பர்கள்.
ஜெகதீசன் வராமல் எந்த விழாவும் அங்கே நடக்காது. இதுதான் முதல் தடவை.
ஜெகதீசனுக்குப் பதில் அவருடைய அன்பு மகன் சூரியா வந்திருக்கிறான்.
டாடி.... இப்ப பிசினஸ் விஷயமா ஜெர்மனியில் இருக்கார் அங்கிள். அவரால் பங்சன்ல கலந்துக்க முடியாதே....
தன்னுடைய ஆபீஸ் அறைக்கே நேரில் வந்திருந்த கல்லூரி பிரின்ஸ்பாலிடமும் தாளாளரிடமும் விஷயத்தை தெரிவித்து உதட்டைச் சுளித்தான்.
தெரியும் சூரியா...... டாடியால வர முடியாதுன்னு தெரியும் நேத்தைக்கு கூட நான் ஜெகதீசனோடு பேசினேனே! பங்சனைப் பத்தி சொன்னேன். நான் வரலைன்னா என்ன.... அதான் சூரியா இருக்கானே! அவனைக் கூப்பிட்டுக்கங்கன்னு ஜெகதீசுதான் சொன்னான்!
புன்முறுவல் பூத்தார் தாளாளர்.
ஆமா சார்...! டாடி சார்பா நீங்கதான் பங்சனுக்கு வந்தாகணும். புரோகிராம்ல மொத்தம் நான்கு கேண்டிடேட் கலந்துக்கறாங்க. ஒரே ஒரு கேண்டிடேட்டை நீங்க செலக்ட் பண்ணனும். இந்த வருஷத்துக்கான காலேஜ் குயின் கிரீடமும் அவங்களுக்குத்தான்...!
என்றார் கல்லூரியின் பிரின்சுபால்.
நாலு பேருல ஒருத்தரை செலக்ட் பண்ற விஷயமெல்லாம் எனக்கு சரியா வராது சார். என்னை விட்ருங்களேன்....
நாசூக்காய் தவிர்க்க முயன்றான்.
முடியவில்லை.
ம்ஹூம்.... நீங்கதான் வரணும்! உங்களால் முடியும்! நீங்க வந்த பின்தான் பங்ஷனே தொடங்கும்...!
நிஜமான மலர்கள் குலுங்கிய 'பொக்கேயை சூரியாவின் கையில் திணித்து விட்டு, எழுந்து போய்விட்டார்கள். அடுத்த அரை மணி நேரத்திற்குள் ஜெர்மனியிலிருந்து ஜெகதீசனும் தொலைபேசியின் மூலம் லைனில் வந்து விட்டார்.
காலேஜ்லேர்ந்து வந்தாங்களா சூர்யா? இவ்ளோ தூரம் ரெஸ்பான்ஸ் கொடுத்து கூப்பிட்டிருக்காங்க! போகாம இருந்துடாதே...!
டாடி.... அது வந்து....
தயங்கினான்.
நீ ஒண்ணும் சொல்லவேணாம்...... சொன்னதை செய்!
சற்றே உரிமையாய் அதட்டினார்.
ஓகே.... டாடி...... நான் போறேன்....
சந்தோஷமா போகணும்....
ஓகே....
தட்ஸ் குட்....
தொடர்பைத் துண்டித்திருந்தார். கல்லூரி நிர்வாகத்திலும் அன்போடு அழைக்கிறார்கள். டாடியும் வற்புறுத்துகிறார். போகாமல் இருக்க முடியாது. வேண்டா வெறுப்பாகத்தான் வந்திருந்தான்.
இங்கே வந்த பிறகு ஆடிப் போயிருந்தான்.
அத்தனை வரவேற்பு. அவ்வளவு மரியாதை.
'எங்கள் கல்லூரியின் நடனப் போட்டிக்கு நடுவராக வருகை தருகிற இளம் தொழிலதிபர் திரு. சூர்யா அவர்களை வருக வருக என வரவேற்கிறோம்' என்ற வாசங்களோடு அவனுடைய ஆள் உயர உருவம் தாங்கிய பிளக்ஸ்கள் கல்லூரி வளாகத்தில் திரும்பிய பக்கமெல்லாம் வைக்கப்பட்டிருந்தன.
இளம் சிவப்பு வண்ண பட்டால் ஆன சால்வையைப் போர்த்தி...... சந்தன மாலை அணிவித்து வரவேற்றார்கள். ஆடிட்டோரியத்தின் மேடைக்கு எதிரே அமர வைத்தார்கள். நடனப்போட்டி தொடங்கியது. ஒன்றும் புரியாதவனாகத்தான் அமர்ந்திருந்தான். முதல் மூன்று மாணவிகளும் ஆடிய நடனம் அவனைக் கொஞ்சமும் ஈர்க்கவில்லை. கிட்டத்தட்ட மூன்று பேருமே ஒரே விதமாய்த்தான் ஆடினார்கள். அபூர்வா மேடையில் தோன்றிய பிறகுதான் நிமிர்ந்து உட்கார்ந்தான். பெண்ணை நிலவோடும், மலரோடும் எதனால் ஒப்பிடுகிறார்கள் என்பது அபூர்வாவைப் பார்த்ததும் புரிந்தது.
'இந்த விழாவை மட்டும் நான் தவிர்த்திருந்தால்.... இவ்வளவு அழகான ஒரு பெண்ணை என் வாழ்க்கையில் சந்திக்காமலேயே போயிருப்பேன்....'
'டாடிக்கு ஒரு தேங்க்ஸ்.... அவர் ஜெர்மனிக்குப் போனதற்கு ஒரு தேங்க்ஸ்...... என்னை இந்த விழாவிற்கு போக வேண்டுமென்று அன்புக் கட்டளையிட்டதற்கு ஒரு தேங்க்ஸ்....'
தன் தந்தை ஜெகதீசனுக்கு மனசுக்குள்ளேயே நன்றி சொல்லிக் கொண்டான்.
அபூர்வாவின் நடனம் இறுதிக் கட்டத்திற்கு வந்திருந்தது.
வியர்வையின் மினுமினுப்பில் முகம் இன்னும் பளபளப்பாய்த் தெரிந்தது. ஆடி முடிந்து.... புன்னகையோடு அவையோரை வணங்கி...... திரைச்சீலைக்குப் பின்னால் ஓடி மறைந்தாள் அபூர்வா.
ஒரே கரவொலி....
எதிரில் உற்சாக மழை....
ஒன்ஸ்மோர் அபூர்வா
மாணவ மாணவியர் கூச்சலிட்டனர். இன்னுமொரு தடவை வந்து ஆட மாட்டாளா? நிஜமாகவே சூர்யாவிற்கு ஏக்கமாகத்தான் இருந்தது.
சார்...... செலக்ட் பண்ணிட்டிங்களா?
சூர்யாவின் காதோரம் குனிந்து கிசுகிசுப்பாய்க் கேட்டார் பிரின்சுபால்.
இதோ.... பண்ணிட்டேன் சார்....
அவசரமாய் தலையை ஆட்டியவன்...... தனக்கென கொடுக்கப்பட்டிருந்த காகிதத்தில் அபூர்வா என்ற பெயருக்கு எதிரே பத்துக்கு பத்து என மதிப்பெண்களை வழங்கி கையெழுத்திட்டான்.
மற்ற இரு மாணவிகளுக்கும்...... ஆறு மதிப்பெண், ஏழு மதிப்பெண் என்று வழங்கியிருந்தான் அபூர்வாவிற்குத்தான் முதல் மதிப்பெண்.
போட்டி முடிவுகள் எழுதிய காகிதத்தை பிரின்சுபாலிடம் தந்தான். அந்த காகிதம் தாளாளர், கல்லூரி விரிவுரையாளர்கள் என ஒவ்வொருவர் கையாய் மாறியது. அனைவருடைய முகத்திலும் திருப்தி பரவியது. அபூர்வாவிற்குத்தான் பரிசு கிடைக்கப் போகிறது என்பது எல்லோருமே எதிர்பார்த்ததுதான்.
முடிவை அறிவிக்க பெண் விரிவுரையாளர் ஒருவர் மைக்கின் முன்னால் வந்தார்.
"நம் கல்லூரியின் அன்பான அழைப்பை ஏற்று.... இந்த நடனப் போட்டிக்கு நடுவராக வந்திருந்து சிறப்பித்த இளம் தொழிலதிபர் சூர்யா அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். மூன்று
மாணவிகளுமே சிறப்பாக ஆடினாலும், வெகு சிறப்பாக ஆடிய அபூர்வாவிற்கே முதல் பரிசு...!"
கணீர் குரலில் பேசினார். கரவொலி ஆடிட்டோரியத்தையே அதிர வைத்தது.
காலேஜ் குயின் கிரீடமும் அபூர்வாவிற்கே வழங்கப்பட்டது. பின்னணி இசைபோல கரவொலி கேட்க.... உற்சாகத் துள்ளலோடு மேடைக்கு வந்து நின்றாள் அபூர்வா.
பணிவாய் குனிந்து வணங்கினாள்.
கண்ணாடி பெட்டகத்திற்குள் இருந்த வெள்ளியால் ஆன நடராஜர் சிலையை சூர்யாதான் அவளுக்கு வழங்கினான்.
பெண் விரிவுரையாளர் காலேஜ் குயின் கிரீடத்தை அபூர்வாவிற்கு சூட்டினார்.
தேங்க் யூ சார்....
அருகில் நெருங்கி...... அவனுக்கு மட்டுமே கேட்கிற குரலில் சொல்லி.... கண்கள் கலங்க புன்முறுவல் பூத்தாள் அபூர்வா.
அந்த புன்முறுவலில் சூர்யாவின் இதயம் குட்டி முயலாய்க் குதித்தது.
2
போர்டிகோவில் காரை நிறுத்திவிட்டு, உள்ளே வந்தவன் நேராய் வாஷ்பேஷனில் போய் கைகளைக் கழுவிவிட்டு டைனிங் டேபிளில் வந்து அமர்ந்து விட்டான்.
சாப்பிட என்னம்மா இருக்கு...?
அடுக்களையைப் பார்த்து