Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aagayam Ingey Poo Megam Engey?
Aagayam Ingey Poo Megam Engey?
Aagayam Ingey Poo Megam Engey?
Ebook98 pages32 minutes

Aagayam Ingey Poo Megam Engey?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பிருத்வி மற்றும் கன்னிகா என்பவர்கள் ஒன்றாக கணினி துறையில் பணிபுரிபவர்கள். இதில் பிருத்வி கன்னிகாவை காதலிக்கின்றான். இவர்கள் இருவரும் திருமணம் என்னும் பந்தத்தில் இணைந்தார்களா? ஆகாயம் இங்கே பூமேகம் எங்கே என்பது போல் இவர்களின் வாழ்க்கை மாறியதா? இதற்கான காரணம் என்ன? வாசித்து அறிவோம் கன்னிகாவின் வாழ்க்கை பயணத்தை...

Languageதமிழ்
Release dateDec 6, 2021
ISBN6580130707608
Aagayam Ingey Poo Megam Engey?

Read more from Indira Nandhan

Related to Aagayam Ingey Poo Megam Engey?

Related ebooks

Reviews for Aagayam Ingey Poo Megam Engey?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aagayam Ingey Poo Megam Engey? - Indira Nandhan

    https://www.pustaka.co.in

    ஆகாயம் இங்கே பூமேகம் எங்கே?

    Aagayam Ingey Poo Megam Engey?

    Author:

    இந்திரா நந்தன்

    Indira Nandhan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/indira-nandhan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    1

    தேயிலைத் தோட்டங்களின் மேற்பரப்பில் அடர்த்தியான பனி, பாலாடை மாதிரி படர்ந்திருந்தது.

    கம்பளியினால் தலையைச் சுற்றி முக்காடு போட்டிருந்த பெண்கள், தங்களுடைய முதுகில் அமர்ந்திருந்த மூங்கில் கூடைகளில் தேயிலைத் துளிர்களைக் கிள்ளிச் சேகரித்துக் கொண்டிருந்தனர்.

    தைல வாசனை காற்றோடு சங்கமமாகியிருந்தது.

    குளிர் உயிர்வரை ஊடுருவியது.

    எங்கே திரும்பினாலும் புகை புகையாய்ப் பனிப் பொழிவு.

    இயற்கை இப்போதெல்லாம் கொஞ்சம் முரண்பட்டே தெரிகிறது. முன்பெல்லாம் இவ்வளவு பனிப்பொழிவு இருக்காது.

    விடிந்து வெகுநேரமாகியும் போதுமான வெளிச்சம் வரவில்லை.

    சூரியன் எங்கிருக்கிறான் எனக் கண்டுபிடிக்கவே முடியவில்லை.

    ‘இந்த ஊட்டியின் குளிருக்கு இதமாய்ப் பிருத்வி தன்னருகில் இருந்தால் எப்படி இருக்கும்?’ ஏக்கப் பெரு மூச்சுவிட்டபடியே சரிவில் நீண்டிருந்த ஒற்றையடிப் பாதையில் நடந்தாள் கன்னிகா.

    சேலைக்கு மேலே ஸ்வெட்டர் அணிந்திருந்தாள்.

    தலையைச் சுற்றி மஃப்ளர் கட்டியிருந்தாள்.

    அருகிலிருந்த பால் பூத்திலிருந்து பால் பாக்கெட் வாங்கிக் கொண்டு, தான் தங்கியிருக்கும் பங்களாவை நோக்கிப் போய்க் கொண்டிருந்தாள்.

    பாதையின் இருபுறங்களிலும் நிறைய வால்பேரிக்காய் மரங்கள் அடர்த்தியாய்ச் செழித்து வளர்ந்திருந்தன.

    உருளைக்கிழங்குத் தோட்டங்களில் தோண்டியெடுக்கப்பட்ட உருளைக்கிழங்குகள் ஆங்காங்கே மலை போல குவித்து வைக்கப்பட்டிருந்தது.

    இன்னொரு பக்கம் முட்டைக்கோஸ் மூட்டைகளையும், காலிஃப்ளவர் மூட்டைகளையும் தொழிலாளிகள் மினி லாரிகளில் ஏற்றிக் கொண்டிருந்தார்கள்.

    அழகின் பிறப்பிடம் ஊட்டி.

    உலகின் சொர்க்கம் ஊட்டி.

    அழகுக்கு அழகு, உழைப்புக்கு உழைப்பு, நிம்மதிக்கு நிம்மதி.

    ஊட்டியை நம்பி வந்துவிட்டால் நிச்சயம் பிழைத்துக் கொள்ளலாம். தேயிலைத் தோட்டங்களிலோ, பொம்மைக் கடையிலோ ஏதேனும் ஒரு வேலையை வாங்கிவிடலாம். எதுவும் கிடைக்காத பட்சத்தில் ஒரு பலூன் பாக்கெட்டை வாங்கி, ஒவ்வொரு பலூனாய் ஊதி நூலில் கட்டி எடுத்துக் கொண்டு, தாவரவியல் பூங்கா பக்கமோ, ஏரிக்கரைப் பக்கமோ சென்றால் ஒரு மணி நேரத்தில் அத்தனையும் விற்றுத் தீர்ந்து விடும்.

    தேடல் உள்ள வாழ்க்கை இனிப்பானது.

    தேடல் உள்ள வாழ்க்கை ஒளிமயமானது.

    எதையாவது தேடிக் கொண்டேயிருக்கும் போது தான் வாழ்க்கை அர்த்தமுள்ளதாகிறது.

    கன்னிகா இந்த ஊட்டிக்கு வந்து ஆறு மாதங்களாகிறது. செய்தித்தாளில் விளம்பரம் பார்த்துத்தான் ஊட்டிக்கு ஓடி வந்தாள்.

    வாழ்க்கை வெறுத்து உயிரை மாய்த்துக் கொள்ளலாம் என்ற முடிவில் இருந்த போதுதான் அந்த விளம்பரம் கண்ணில் பட்டது.

    ‘வீட்டு வேலைக்கு ஆள் தேவை.’

    வயதான பணக்காரத் தம்பதியினரையும், அவர்கள் தத்தெடுத்து வளர்க்கும். குழந்தையையும் பொறுப்பாய்க் கவனித்துக் கொள்ள, பொறுமையும், சகிப்புத்தன்மையும் கொண்ட விதவைகள், ஆதரவில்லாத இளம்பெண்கள் விண்ணப்பிக்கவும். நேரிலும் வரலாம்...’ என்ற வாசகங்களுக்குக் கீழேயே முகவரியும் இருந்தது.

    முகவரியைத் துண்டுக் காகித்தில் குறித்துக் கொண்டாள்.

    கையிலிருந்த முன்னூறு ரூபாய் பணத்தோடு பஸ் ஏறினாள்.

    ஊட்டியில் வந்து இறங்கினாள்.

    வழி நெடுகிலும், ‘இளவரசன் எஸ்டேட்’ எங்கே இருக்கிறது என விசாரித்தாள்.

    நடந்தே வந்து சேர்ந்தாள்.

    செய்தித்தாளில் வந்த விளம்பரத்தைப் பார்த்து அங்கே வேலைக்காக வந்தது கன்னிகா ஒருத்திதான்.

    கட்டிய சேலையோடு இருந்தாள்.

    மாற்றுத் துணிக்கும் வழி இல்லை.

    இந்த வேலை கிடைக்காவிட்டால் திரும்பி எங்கேயும் போக முடியாது.

    இங்கேயே ஏதேனும் ஒரு பள்ளத்தில் குதிக்க வேண்டியதுதான்.

    நல்லவேளை கன்னிகாவுக்குத் தேடி வந்த வேலை கிடைத்துவிட்டது.

    ஜானகிராமனுக்கும், சீதாலட்சுமிக்கும் கன்னிகாவைப் பார்த்ததுமே பிடித்துவிட்டது.

    அவர்களுடைய தத்துக் குழந்தை வினுவும் கன்னிகாவைப் பார்த்ததுமே ஓடி வந்து ஒட்டிக் கொண்டாள்.

    கன்னிகாவின் சேலை முந்தானையைப் பிடித்தபடி பின்னாலேயே ஓடினாள்.

    நான் யாருமில்லாத அனாதை. செய்தித்தாள்ல வந்திருந்த விளம்பரத்தைப் பார்த்துத்தான் ஊட்டிக்கு வந்திருக்கேன். இந்த வேலையை எனக்குத் தந்தீங்கன்னா கடைசிவரைக்கும் விசுவாசமா இருப்பேன்...

    ஜானகிராமனையும் சீதாலட்சுமியையும் பார்த்து கைளைக் குவித்தாள்.

    உன்னோட சொந்த ஊரு எதும்மா?

    தஞ்சாவூர்...

    படிச்சிருக்கியாம்மா...?

    "டிகிரி

    Enjoying the preview?
    Page 1 of 1