Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mele Oruthi
Mele Oruthi
Mele Oruthi
Ebook88 pages35 minutes

Mele Oruthi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

உலகில் உள்ள அனைத்து சக்திகளிலும் அன்பே ஆற்றல் படைத்தது என்றுதான் மனிதர்கள் நம்புகிறார்கள். அதிலும் பெண் அப்படித்தான் நம்புகிறாள். தன்னைப் பெற்றவர்கள் மீதும் தான் பெற்றவர்கள் மீதும் முழு அன்பை செலுத்துகிறாள். வாழ்க்கைத் துணையாக வருபவன் மீதும் பிரியத்தைக் கொட்டி ஒரு காவிய வாழ்க்கையை வாழவே அவள் விரும்புகிறாள். ஆனால் அப்படிப்பட்ட வாழ்க்கைத் துணை ஏன் எல்லாப் பெண்களுக்கும் அமைவதில்லை? காட்டில் எரிந்த நிலவாக ஏன் வீணாகிறது அவள் அன்பு? காரணம் தேடி அலைகிறாள் என் நாயகி. கண்டு பிடித்தாளா? வாசியுங்கள்.

Languageதமிழ்
Release dateApr 27, 2024
ISBN6580166811056
Mele Oruthi

Read more from V. Usha

Related to Mele Oruthi

Related ebooks

Reviews for Mele Oruthi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mele Oruthi - V. Usha

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மேலே ஒருத்தி

    (சிறுகதைகள்)

    Mele Oruthi

    (Sirukadhaigal)

    Author:

    வி. உஷா

    V. Usha

    For more books

    https://www.pustaka.co.in/home/author/v-usha

    பொருளடக்கம்

    1. மேலே ஒருத்தி

    2. அம்மாக்கள் பாலம் கட்டுகிறார்கள்

    3. அன்புக்குப் பாதை விடு

    4. ஆறோடும் மண்ணில் எங்கும்

    5. இதுதான் பாதை, இதுதான் பயணம்

    6. உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்

    7. அந்த மனமே அம்மா அம்மா

    8. அவள் என்கிற அதிசயம்

    9. கருணை இருந்தால்...

    10. கனவாயிரம் நினைவானதே

    1. மேலே ஒருத்தி

    அம்மா வீட்டில் ஒரு மணி நேரம் இருந்து விட்டுக் கிளம்பும்போது மனது சற்று பாரம் குறைந்திருந்தது.

    ஒரு அரைமணி நேரம் இரேன் மஞ்சு... அம்மிணி கொழுக்கட்டை பண்ணப் போறேன் டிபனுக்கு... நீயும் சாப்பிட்டு மாப்பிள்ளைக்கும் எடுத்துகிட்டுப் போயேன் என்று அம்மா புன்னகையுடன் சொன்னாள்.

    இல்லம்மா... கிரேவி காலையிலேயே செஞ்சு வெச்சுட்டேன்... வெறும் சப்பாத்திதான் செய்யணும்... இன்னொரு நாள் பாத்துக்கலாம்மா உன் அம்மிணி கொழுக்கட்டையை

    மஞ்சு

    சொல்லும்மா

    அம்மா அருகில் வந்தாள். மகள் முகத்தை மென்மையாக ஏறிட்டுப் பார்த்தாள்.

    என்னம்மா, சொல்லேன் எதுவானாலும் என்றவள் சிரிக்க முயன்று முடியாமல் தலையைப் பக்கவாட்டில் திருப்பிக் கொண்டாள்.

    மாப்பிள்ளைக்கும் உனக்கும் ஏதாவது மனக்கசப்பா கண்ணா?

    ம்... ஆமாம்

    உன் முகம் இப்பல்லாம் வாட்டமா இருக்குடா... ரெண்டு பேரும் சேர்ந்து வர்றதும் குறைஞ்சு போச்சு...

    ம்

    என்கிட்ட சொல்லக்கூடிய விஷயம்னா சொல்லுடாம்மா

    அப்படியே கொட்டி விட வேண்டும் போலத்தான் இருந்தது அவளுக்கு. ஆனாலும் ஏதோ ஒன்று தடுத்தது. பாவம் அம்மா, வயது முதிர்ந்தவள். இந்த வீட்டையே தன் உலகமாக்கிக் கொண்டு உழைத்துக் கொட்டிக் கொண்டிருப்பவள். இன்னும் அப்பாவின் நிழலாகவே ஓடுபவள். தன் பிரச்னைகளை வேறு அவள் முதுகில் ஏற்ற வேண்டுமா?

    சொல்லு மஞ்சு... ஈகோ பிரச்னையா? சேகர் உன்னை டாமினேட் பண்ணுகிறாரா? என்று அம்மா சடாரென ஆரம்ப நுனியைப் பிடித்து விட்டாள்.

    அவள் மனதில் கட்டியிருந்த அணை உடைந்தது.

    அம்மா... என்பதற்குள் கண்கள் பொத்துக் கொண்டன.

    கைபற்றி பேசாமல் நின்றாள் அம்மா.

    எல்லாத்துக்கும் கத்துகிறார்மா... நான் சொல்வதற்கு எதிர்க்கருத்து எல்லாவற்றிற்கும்... இட்லின்னா தோசை... சட்னின்னா சாம்பார்... அமேசான் வைத்தால் நெட்ஃப்ளிக்ஸ்... சாம்பார்னா காரக்குழம்பு... இப்படி எல்லாத்துக்கும் எதிர்க்கடை போடுகிறார்... அது மட்டும் இல்லை... குறை கண்டுபிடித்து கிண்டல் செய்வது... உடை நடைன்னு ஏதாவது ஒண்ணை மட்டம் தட்டுவது... இந்த ஒரு வருஷ கல்யாண வாழ்க்கையில் அவர் இந்த மூன்று மாதமாக சாடிஸ்ட் போல இருக்கிறார் அம்மா... சண்டை போட ஏதாவது ஒரு காரணம் தேடிக் கொண்டே இருக்கிறார்

    ‘மஞ்சும்மா"

    நானும் அவரைப் போலத்தானே அம்மா? ரெண்டு பேருமே ஐ டி ல தானே வேலை செய்கிறோம்? எவ்வளவு ஒர்க் லோடு இருக்கும், எத்தனை டென்ஷன் இருக்கும்னு தெரியாதா அவருக்கு? எல்லாத்தையும் சமாளித்துவிட்டுத்தானே வரோம்னு தெரியாதா? எப்பவும் மெயில் பாக்கணும், அழைப்புகளை எடுக்கணும், மெயில்களுக்கு பதில் அனுப்பணும், டீம் மேட்களுக்கு வேலை சொல்லித் தரணும், செய்கிற வேலையைக் கண்காணிக்கணும், டீம் லீடரா சொன்ன காலத்துக்குள்ள முடிக்கணும்... இதுக்கு நடுவில் பாஸ் கேட்கிற ஆயிரம் கேள்விக்கு பதில் சொல்லணும்... சேகரும் நானும் வேறே வேறே கம்பெனியே தவிர, பார்க்கிற வேலை ஒண்ணுதான், பதவியும் ஒண்ணுதான்... என்னவோ தான் மட்டுமே தாங்க முடியாத மூட்டையை சுமக்கிற மாதிரியும், நான் உல்லாசமா ஊஞ்சல் ஆடிட்டு வர மாதிரியும் நினைக்கிறார்மா... அதான் தாங்க முடியலே... அவர் வாயில் இருந்து வருகிற ஒவ்வொரு வார்த்தையும் விஷ அம்பா இருக்கும்மா

    அய்யோ... கண்ணா... புரியுதுடா... அப்பாகிட்ட சொல்லட்டுமா? மாப்பிள்ளைகிட்ட பேசட்டும் என்று அம்மா பதட்டப்பட்டாள்.

    சேச்சே... அவ்வளவுக்கு வேண்டாம்மா... நானே சமாளிக்கப் பார்க்கிறேன்... என்னால் முடியும்மா என்று தளர்ந்த குரலில் சொல்லிவிட்டுக் கிளம்புகிற மகளை கவலையுடன் பார்த்தாள் அம்மா.

    ***

    சேகர் வந்திருந்தான். வழக்கமாக அவன் வீடு திரும்பும் நேரம் ஒன்பதரை. இன்று எட்டு மணிக்கே வந்து விட்டான்.

    வண்டியை நிறுத்திவிட்டு அவள் உள்ளே நுழைந்தாள்.

    ஹலோ சேகர்... சீக்கிரம் வந்துட்டீங்களா? குட் குட்... இருங்க இதோ வந்துடறேன்

    என்ன... மகாராணி லேட்டு போலிருக்கு? ஆறு மணிக்கெல்லாம் பையை தூக்கிட்டு ஓடி வந்திடுவே வீட்டுக்கு

    அம்மா வீட்டுக்குப் போய்ட்டு வரேன்... இந்தாங்க சேகர் லட்டு, காராபூந்தி... அம்மா உங்களுக்காக பண்ணது என்று தட்டில் வைத்து நீட்டினாள்.

    என்ன விசேஷம்? நீ ஆபிஸ் போனியா இல்லே லீவு போட்டு அம்மா வீட்டில் இருந்தியா?

    ஒரு விசேஷமும் இல்லை சேகர்... ஏதோ ஒரு நாள் பேச்சுவாக்கில் சொன்னேன் உங்களுக்குப் பிடிக்கும்னு... அம்மா செய்தாள்... வந்து எடுத்துக் கொண்டு போன்னு சொன்னாள். இன்னிக்கு டயம் கிடைச்சது... போனேன்

    ஏன், பாஸ் லீவா?

    இல்லயே... சொல்லப் போனால் டைட் ஒர்க்தான்... ஆனா கொஞ்சம் டீப்பா வேலை பண்ணி முடிச்சுட்டோம்... தின்பண்டம் நல்லா இருக்கா?

    என்னவோ நீ பண்ண மாதிரி கேக்குற? என்றான்

    Enjoying the preview?
    Page 1 of 1