Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Velicha Poove Vaa…
Velicha Poove Vaa…
Velicha Poove Vaa…
Ebook129 pages46 minutes

Velicha Poove Vaa…

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

'சிதாரா' என்பவள் பட்டப்படிப்புடன் தையல் கலையையும் கற்றுக்கொண்டு குடும்ப வறுமையை சுமக்கிறாள். ராகினி என்ற தோழி மூலம் விஷால் என்பவனை சந்திக்கிறாள். இருவருக்கும் என்ன தொடர்பு? ஆதவன் என்ற தோழனோடு பழங்குடி இனமக்களை காக்கும் தெய்வமாக எப்படி உருவெடுக்கிறாள் என்பதை... "வெளிச்சப் பூவே வா" என்ற நாவலில் ஒருமித்த மகிழ்ச்சியோடு படிப்போம்... வாருங்கள்!!

Languageதமிழ்
Release dateAug 26, 2023
ISBN6580166809895
Velicha Poove Vaa…

Read more from V. Usha

Related to Velicha Poove Vaa…

Related ebooks

Reviews for Velicha Poove Vaa…

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Velicha Poove Vaa… - V. Usha

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    வெளிச்சப் பூவே வா...

    Velicha Poove Vaa…

    Author:

    வி. உஷா

    V. Usha

    For more books

    https://www.pustaka.co.in/home/author/v-usha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    1

    சிதாரா தோள்பட்டையை பிடித்துக்கொண்டு சற்றே சுவரில் சாய்ந்து உட்கார்ந்தாள்.

    விண்விண்னென்று சூடு போட்டதுபோல் வந்து போய்க்கொண்டிருந்த வலிக்கு இதமாக இருந்தது. கையில் இன்னும் நான்கைந்து ரவிக்கைகள் இருந்தன. இரவுக்குள் முடித்துவிட்டால் போதும். காலையில் கவுன்சிலர் வீட்டு வேலையாள் வந்து வாங்கிக்கொண்டு போய்விடுவார். ஐநூறு ரூபாய் கிடைத்துவிடும். இந்த வார அரிசி, பருப்புச் செலவுக்குச் சரியாக இருக்கும்.

    அக்கா... அம்பது ரூபா வேணும்க்கா... லேப் ஃபீஸ் என்று மகேஷ் வந்து நின்றான்.

    திக்கென்றது.

    ஐம்பது ரூபாயா?

    அப்பாவுக்கு நாராயணதைலம் வாங்குவதற்காக வைத்திருந்த ஐம்பது ரூபாயை எடுத்துக் கொடுத்துவிட்டால்? அய்யோ! தைலம் இல்லையென்றால் அப்பாவுக்குத் தூக்கம் வராதே! கால் வலி உயிர் போகுமே!

    இல்லையாக்கா? என் ஃபிரெண்ட் கோகுல்கிட்டே வாங்கிக்கட்டுமாக்கா? மகேஷ் அவசரப்பட்டான்.

    கடனா? என்ன மகேஷ் சொல்றே? எப்படி கூலா கேட்கிறே? புதுசா என்ன பழக்கம் இது?

    இன்னிக்கே கட்டியாகணும்க்கா... சயின்ஸ் காம்படீஷனுக்கு உன்னைக் கேட்டுதானே பேரே கொடுத்தேன்?

    நாளைக்குத் தரலாமே மகேஷ்... இதோ இந்த வேலை முடிஞ்சா கைல பணம் வந்துடும்பா...

    சயின்ஸ் சார் ராமானுஜம் ரொம்ப ரொம்ப ஸ்ட்ரிக்ட்க்கா...

    பாட்டி சுவரைப் பிடித்துக்கொண்டு நடந்து வந்தாள்.

    என்னடாப்பா... என்ன கேக்கறே அவகிட்டே? ரெண்டு நாளா தையல் மிஷினே கதின்னு கெடக்கா சித்தூ... இதுல என்ன வாயடிக்கிறே நீ அக்காகிட்டே?

    ஏன் பாட்டி எப்பவும் என்னையே திட்டறே? நான் ஒண்ணும் அக்காகிட்ட சண்டைக்குப் போகலே. அம்பது ரூபா வேணும் லேப் ஃபீஸ் கட்ட மகேஷ் சிணுங்கினான்.

    சரி சரி... இந்தா... என்று பாட்டி தன் புடவைத் தலைப்பில் போட்டிருந்த முடிச்சை அவிழ்த்தாள். கைகளில் நடுக்கத்துடன் மெல்லப் பிரித்து கசங்கியிருந்த ஐம்பது ரூபாய் தாளை நீட்டினாள்.

    தாங்கஸ் பாட்டி ரொம்ப தாங்க்ஸ். என்று வாங்கிக்கொண்டு அவன் பறந்தான்.

    சிதாரா கவலையுடன் பாட்டியைப் பார்த்தாள்.

    தையலை நிறுத்திவிட்டு பாட்டியை அருகில் இழுத்து அணைத்துக் கொண்டாள்.

    ஏன் பாட்டி இப்படி செய்யணும்? ஒருநாள் டயம் கேட்கலாமே அவன் ஸ்கூல்ல? உங்ககிட்ட இருக்கறதே அம்பதோ நூறோதானே. அதுவும் அரிசி அப்பளம் இட்டு இட்டு கை வலிக்க வலிக்க சம்பாதிச்சது. ஏன் பாட்டி?

    பாட்டி சிரித்தாள்.

    பொக்கை வாய் திறந்து முகம் மலர்ந்தது.

    சமயத்துக்கு உதவாத பணம் எதுக்கடி சித்தூ? பாவம் குழந்தை... இந்த ஏழ்மைலயும் அவ்வளவு சிரத்தையா படிக்கிறான். எப்பவும் கிளாஸ்ல முதல் பையனா இருக்கான். என் உழைச்ச காசு அவன் படிப்புக்கு போகிறதைவிட எனக்கு பெருமை உண்டா சொல்லு...

    இல்லே பாட்டி இது நியாயமே இல்லே. இந்த எண்பது வயசுல உங்களை வேலை வாங்கறதே அராஜகம்... இதுல உங்க பணத்தைக் கேக்கறது அயோக்கியத்தனம்... மகேஷ் இன்னும் தைரியமா, பொறுமையா இருக்கணும் பாட்டி... சார்கிட்டே டயம் கேக்கணும் அவள் உண்மையான கவலையுடன் சொன்னாள்.

    சரி சரி விடு விடு... அப்படியெல்லாம் நெனைச்சு மனசை கஷ்டப்படுத்திக்காதே. சித்து, கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோ... இப்படி முதுகு ஒடிய ஒடிய வேலை பண்ணக் கூடாது.

    இதையெல்லாம் முடிச்சா நாளைக்கு கைல அஞ்சு நூறு கெடைக்கும் பாட்டி வாரக்கடைசிக்கு அரிசி, பருப்புக்கு உபயோகமா இருக்கும். ஆனா... என்றாள். கண்கள் சோர்ந்தன.

    ஆனா என்ன, சொல்லு...

    இதுக்கப்புறம் வேலை இல்லே பாட்டி கைல.

    ம்...

    இனிமேல் யாராவது வந்து குடுத்தால்தான் உண்டு.

    கவலைப்படாதே. வரும் பார் வேலை... இப்ப குளிச்சுட்டு வா சித்தூ... சாப்பிடு...

    இல்லே பாட்டி... அப்பா என்ன பண்றார்?

    வேற என்ன பண்ணுவான்? டிவில செய்திகள் பாக்கறான் மாத்தி மாத்தி... படுக்கைதான் உலகம்னு ஆயாச்சு... யார் விட்ட சாபமோ. பாவம் அல்லாடறான் சுந்தரம்... பாட்டி கரகரத்த குரலுடன் சொல்லியபடி நகர்ந்தாள்.

    அவள் எழுந்தாள்.

    அப்பா அவளைப் பார்த்ததும் வாம்மா சிதாரா... ரெண்டு நாளா மிஷின் சத்தம் ஓயாம கேக்குதேம்மா... கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கிட்டா என்னம்மா? என்றார்.

    இந்த வேலை முடிஞ்சதும் ரெஸ்ட்தாம்பா... வேற எதுவும் கைவசம் இல்லே...

    வரும்மா... கவலைப்படாதே.

    கடைக்குப் போயிட்டு வரேம்பா.

    இப்பவா? ஏம்மா சாப்பிட்டுப் போகலாமே?

    தைலம் வாங்கறதுக்குதாம்பா. உங்களுக்கு

    சாப்பிட்டுட்டுப் போ... அவசரம் இல்லே... ஏன் சாயங்காலம்கூட வாங்கிக்கலாம்.

    ஆமாண்டி சித்தூ... சாயங்காலம் என்னை சிவன் கோவிலுக்கு கூப்பிட்டுப் போயேன்... நாளாச்சு... அப்படியே வரும்போது தைலம் வாங்கிட்டு வரலாம்...

    சரி பாட்டி. என்று உள்ளே போனாள்.

    தலைவலி தொடங்கியிருந்தது.

    இது என்ன வாழ்வு?

    இன்னும் எத்தனை காலத்திற்கு இந்த இழுபறி நிலைமை தொடரப்போகிறது? உண்மையாக நடந்து கொள்ளும் மனிதனிடம் வாழ்க்கையும் உண்மையாக நடந்து கொள்ளும் என்று சொல்கிறார்களே! அப்பா, அவள், பாட்டி, மகேஷ் எல்லோருமே உண்மையானவர்கள்தானே? ஆனால், வாழ்க்கை ஏன் குரூரமாகவே நடந்து கொள்கிறது? அடுத்தது என்ன நடக்கப் போகிறது? நிலைமை இப்படியேதான் போகுமா?

    சிதாரா தலையைப் பிடித்துக் கொண்டாள்.

    2

    கடைசி ரவிக்கை வேலை முடிந்தபொழுது செல்பேசி அழைத்தது.

    ராகினியின் அழைப்பு.

    ராகினி... எப்படி இருக்கே?. என்றாள். கல்லூரித் தோழியின் கனிவான முகமும் இதமான நட்பும் உள்ளே எழுந்தன.

    நல்லா இருக்கேன் சிதாரா... இப்பத்தான் யூரோப் டூர் முடிச்சு வந்தோம்... நீ எப்படி இருக்கே சொல்லு... என்று ராகினி மென்மையாகக் கேட்டாள்.

    ஏதோ போகிறது வாழ்க்கை ராகினி... என்ன சொல்றதுன்னு தெரியலே எனக்கு.

    "புரியுது...

    Enjoying the preview?
    Page 1 of 1