Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanavu Kaanum Vazhkkai
Kanavu Kaanum Vazhkkai
Kanavu Kaanum Vazhkkai
Ebook99 pages36 minutes

Kanavu Kaanum Vazhkkai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Parimala Rajendran, an exceptional Tamil novelist, written over 300+ novels. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… she has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2017
ISBN9781043466053
Kanavu Kaanum Vazhkkai

Read more from Parimala Rajendran

Related to Kanavu Kaanum Vazhkkai

Related ebooks

Reviews for Kanavu Kaanum Vazhkkai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanavu Kaanum Vazhkkai - Parimala Rajendran

    16

    1

    மாலை நேர சென்னை.

    சூரியன் தன் கரங்களை சுருக்கி உக்கிரத்தைக் குறைக்க, கடற்காற்று ஈரப்பதத்துடன் வீசத் தொடங்கியது.

    எங்கும் மக்கள் கூட்டம்.

    பேருந்துகள் நிரம்பி வழிந்தன.

    அன்றைய வேலைகள் முடிந்து வீடு திரும்பும் மனிதர்கள்.

    வீட்டில் காத்திருக்கும் பிரச்சினைகளின் அமைதல், ஐம்பது வயதை கடந்தவர் முகங்களில் அப்பட்டமாக தெரிந்தது.

    கல்யாண வயதில் இருக்கும் பெண்களை கரைசேர்க்க வேண்டுமே என்ற கவலையுடன் சில முகங்கள்.

    மகனின் படிப்புக்கான கடனை எங்கே வாங்குவது என்ற சிந்தனை படிந்த சில முகங்கள்.

    இன்னும் வாழ்க்கையில் என்னென்ன பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டி வருமோ என்ற பயத்துடன் சில முகங்கள்.

    நாளை என்று இருப்பதை பற்றி கவலைப்படாமல், இன்றே வாழ்ந்துவிடத் துடிக்கும் இளமை பூரிப்புடன் கண்களில் பட்டாம் பூச்சிகள் படபடக்க, சிரிப்பு கடலில் மூழ்கியபடி இளம் பெண்கள்.

    தங்கள் ஒவ்வொருவரையும் ஹீரோவாக கற்பனை செய்து சிம்மாசனத்தில் ஏற போவதாக கனவு காணும் இளைஞர்கள்.

    இவர்களுக்கிடையே தங்கள் பொறுப்புகளை உணர்ந்தவர்களாக, வாழ்வின் நிஜங்களை புரிந்து கொண்டு வாழும் இளம் பெண்கள், இளைஞர்கள்.

    அவர்களில் ஒருவராக அந்த கூட்டத்தில் நடந்தாள் யாமினி.

    இருபத்து நான்கு வயதை தொடுபவள். ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் ப்ரோக்ராமர் வேலை.

    உயர்த்தி சீவி கிரீப் செய்யப்பட்ட கூந்தல். திராட்சை கொத்து போல அங்குமிங்கும் ஆடியது. புருவ மத்தியில் சின்னதாக ஸ்டிக்கர் பொட்டு. முக அழகை கூட்டிக் காண்பித்தது.

    வெள்ளையும், சிவப்பும் கலந்த நிறத்தில் காட்டன் சேலை, அவள் உடலை தழுவியிருந்தது.

    எடுப்பான உயரம், கோதுமை நிறம். இவள் அழகி தான் என்பதை அவள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் பெருமிதத்துடன் சொல்லியது.

    தெருவில் நுழைய, வாசலில் அப்பா தெரிந்தார். இவர்தான் யாமினியின் அப்பா என்றால், யாரும் நம்ப மாட்டார்கள்.

    கருப்பு என்று சொல்ல முடியாத பழுப்பு நிறம், அம்மை தழும்புகள், மேடும் பள்ளமுமாக முகத்தை மாற்ற, இடுங்கிய கண்கள்... நெடுநெடுவென்ற உயரம்... இதுதான் சத்யன்.

    ஆனால், யாமினியை பொறுத்தவரை, அவள் அப்பா ஒரு அழகன். அழகும், வசீகரமும் அவர் அன்பில் தெரிந்தது. பாசத்தை தேக்கி வைத்திருக்கும் விழிகள். தங்களுக்காகவே வாழும் அப்பாவை... பார்க்கும்போது... அவர் முக அழகை தாண்டி மன அழகு தான் அவள் மனதில் நிறையும்.

    "என்னப்பா... நான் வரமாட்டேனா... எதுக்காக வாசலில் திரியறீங்க...?’’

    ‘‘உள்ளே மட்டும் தனியா என்ன செய்யப் போறேன். வாம்மா.’’

    அவர் அழைப்பில் அன்பு தெரிந்தது. முகம் கழுவி, நைட்டியில் வந்தாள்.

    ஆவி பறக்க, இரண்டு கப் டீயும், ஒரு ப்ளேட்டில் வெங்காய பகோடாவும் தயாராக இருந்தது.

    பகோடாவை வாயில் போட்டாள்.

    ‘‘எதுக்குப்பா... தினம் இப்படி ஒரு டிபன் செய்யணுமா... டீ மட்டும் போதாதா...?’’

    "இருக்கட்டுமா... வேலைக்கு போய்ட்டு வர பொண்ணுக்கு. பிடிச்சதா செய்து வைக்கிறதில் என்ன இருக்கு?’’

    "மதியம் ஒரு வாய் சாதம் எடுத்துட்டு போற... முகம் வாடி... வர்றே... சாப்பிடும்மா.’’

    ஒரு கப் டீயை கையில் எடுத்தார் சத்யன்.

    ‘‘ரொம்ப நல்லாயிருக்குப்பா... உங்க கை பக்குவம் யாருக்கும் வராது.’’

    இனிப்பும், காரமுமாக தொண்டையில் இறங்க அப்பாவை பார்த்து புன்னகைக்கிறாள் யாமினி.

    "ராத்திரி சப்பாத்தி, குருமா செய்யட்டுமா?’’

    "நீங்க செய்ய வேண்டாம். நான் செய்து தரேன்பா.’’

    "இல்லம்மா... என் மகளுக்கு நானே செய்து தரேன். உங்கம்மா போன பிறகு.’’

    இரண்டு வயசில் உன்னையும், நாலு வயதில் உன் அக்கா வர்ஷினியையும் கையில் பிடிச்சுக்கிட்டு, தனி ஆளாக நின்னேனே.

    உங்களுக்கு இனி அப்பா மட்டுமில்லை. அம்மாவும் நான்தான்னு உணர்ந்தேனே... அந்த நிமிஷம்... அதை இன்னும் நான் மறக்கலை யாமினி.

    "உங்க அக்காவுக்கு கல்யாணம் பண்ணி என் கடமையை முடிச்சுட்டேன். இனி உனக்கும், ஒரு வாழ்க்கையை தேடிக் கொடுத்தா என் கடமை முடிஞ்சுடும். - திருப்தியா அந்த கடவுள்கிட்டே போய் சேர்ந்துடுவேன்.’’

    "அவ்வளவு சீக்கிரம், உங்களை விடமாட்டேன்பா. இந்த யாமினி கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா வாழறதை நீங்க பார்க்க வேண்டாமா...’’

    ‘‘பேரன், பேத்தியெல்லாம் உங்க நிழலில் தான் வளரணும்பா. அப்பதான் அவங்களுக்கு பாசம்னா... என்னன்னு புரியும்.

    உங்ககிட்டே இருக்கிற நல்ல விஷயங்களையெல்லாம் என் பிள்ளைகளுக்கு நீங்க தான் சொல்லித்தரணும்.’’

    இந்த யாமினி, எப்பவுமே... இந்த அப்பாவை பிரியமாட்டாள்.

    பேசும் மகளை அன்பு ததும்ப பார்க்கிறார் சத்யன்.

    சத்யன் சொன்னது போல, யாமினிக்கு அம்மாவும் அவர்தான். இரண்டு பெண்களையும் அரவணைத்து வளர்த்தவர். அவர்களின் பசி அறிபவர். ருசி தருபவர்.

    ஆறுதல் என அன்பான வார்த்தைகள். பருவ வயது வந்து இயற்கை தந்த வலியைக் கூட, தாயின் இதமோடு, விளக்கியவர்.

    அவர் மடிதான், அவர்கள் களைப்பாறும் தொட்டில்...

    அவர் செய்யும் எந்த வேலையிலும், ஒரு நேர்த்தியும், ஒழுக்கமும் இருக்கும்.

    அவர் அலமாரியில் துணிகள் ஒழுங்காக அடுக்கப்பட்டு, அதில் ஒரு அழகு தெரியும். - சமைத்ததை ஒழுங்குபடுத்தி, பரிமாறும் விதம். ஒரு பெண்ணால் கூட இந்த அளவு பொறுமையாக, ஈடுபாட்டுடன் செய்ய முடியுமா என்பது தெரியாது.

    யாமினியை பொறுத்தவரை அப்பா, அம்மா, ரோல் மாடல், ஹீரோ அழகன்

    Enjoying the preview?
    Page 1 of 1