Kanavu Kaanum Vazhkkai
()
About this ebook
Read more from Parimala Rajendran
Mandram Vantha Thendral Rating: 4 out of 5 stars4/5Kannil Theriyum Vaanam Rating: 5 out of 5 stars5/5Engiruntho Vanthaal Rating: 5 out of 5 stars5/5Ithayam Nanaikkum Mazhai Rating: 5 out of 5 stars5/5Unnai Naanariven Rating: 5 out of 5 stars5/5Idhayaraagam Rating: 5 out of 5 stars5/5Thenralaga Nee Varuvaayaa Rating: 5 out of 5 stars5/5Magarantha Malargal Rating: 5 out of 5 stars5/5Poojaikettra Poovithu Rating: 5 out of 5 stars5/5Unnil Vaazhkiren Rating: 5 out of 5 stars5/5Osaiyindri Malarum Rating: 4 out of 5 stars4/5Ithayathil Nee Rating: 5 out of 5 stars5/5Unnai Saranadainthen Rating: 5 out of 5 stars5/5Ithu Oru Puthukavithai Rating: 5 out of 5 stars5/5Kaalangalil Aval Vasantham Rating: 4 out of 5 stars4/5Aayiram Vaasal Idhayam Rating: 4 out of 5 stars4/5Uravu Pookkal Rating: 5 out of 5 stars5/5Kaavalai Meeriya Kaatru Rating: 5 out of 5 stars5/5Uravukalaal Oru Ulagam Rating: 5 out of 5 stars5/5Uyirin Uyire Rating: 4 out of 5 stars4/5Idhayathil Oru Idam Rating: 5 out of 5 stars5/5Perazhagithaan Nee Rating: 5 out of 5 stars5/5Nenjamellam Neeye Rating: 5 out of 5 stars5/5Uravugal Thodarkathai Rating: 5 out of 5 stars5/5Anbil Vilaintha Paasamalare Rating: 5 out of 5 stars5/5Irukodiyil Oru Malar Rating: 5 out of 5 stars5/5Malarntha Vizhigal Rating: 5 out of 5 stars5/5Vaazhkkai Azhaganathu Rating: 0 out of 5 stars0 ratingsManasellaam NIrainjavane Rating: 4 out of 5 stars4/5Ithayam Oru Kovil Rating: 4 out of 5 stars4/5
Related to Kanavu Kaanum Vazhkkai
Related ebooks
கனவு காணும் வாழ்க்கை Rating: 0 out of 5 stars0 ratingsபாச மலர்கள் Rating: 0 out of 5 stars0 ratingsPaasa Malargal Rating: 0 out of 5 stars0 ratingsSinthanaiye... En Siththame! Rating: 0 out of 5 stars0 ratingsசிந்தனையே என் சித்தமே! Rating: 0 out of 5 stars0 ratingsPirai Thedum Iravu Rating: 5 out of 5 stars5/5Unnil Vaazhkiren Rating: 5 out of 5 stars5/5Vaanam Thedum Paravaikal Rating: 5 out of 5 stars5/5ஒளி தரும் உதயம்... Rating: 0 out of 5 stars0 ratingsOli Tharum Udhayam Rating: 0 out of 5 stars0 ratingsAayiram Vaasal Idhayam Rating: 4 out of 5 stars4/5Mele Oruthi Rating: 0 out of 5 stars0 ratingsPoo Viluntha Saththam Rating: 4 out of 5 stars4/5Pookkal Thinamum Malaginrana Rating: 0 out of 5 stars0 ratingsOctober Pouranami Rating: 5 out of 5 stars5/5Maayaman Rating: 0 out of 5 stars0 ratingsUnakkaakave Rating: 0 out of 5 stars0 ratingsRathidevi Vanthaal Rating: 0 out of 5 stars0 ratingsகல்யாணமாலை Rating: 0 out of 5 stars0 ratingsKalyaanamaalai Rating: 0 out of 5 stars0 ratingsUrangaatha Pookkal Rating: 5 out of 5 stars5/5காதல் தென்றல் வீசுமா? Rating: 0 out of 5 stars0 ratingsKaathal Thendral Veesumaa Rating: 0 out of 5 stars0 ratingsPoojaikettra Poovithu Rating: 5 out of 5 stars5/5நிலவும் நீலமலர்களும்... Rating: 0 out of 5 stars0 ratingsPerazhagithaan Nee Rating: 5 out of 5 stars5/5Iru Kodugal Rating: 0 out of 5 stars0 ratingsAnbe Aaruyire Rating: 0 out of 5 stars0 ratingsஅன்பே... ஆருயிரே..! Rating: 0 out of 5 stars0 ratingsMarakka Muyandrean... Mudiyavillai! Rating: 5 out of 5 stars5/5
Reviews for Kanavu Kaanum Vazhkkai
0 ratings0 reviews
Book preview
Kanavu Kaanum Vazhkkai - Parimala Rajendran
16
1
மாலை நேர சென்னை.
சூரியன் தன் கரங்களை சுருக்கி உக்கிரத்தைக் குறைக்க, கடற்காற்று ஈரப்பதத்துடன் வீசத் தொடங்கியது.
எங்கும் மக்கள் கூட்டம்.
பேருந்துகள் நிரம்பி வழிந்தன.
அன்றைய வேலைகள் முடிந்து வீடு திரும்பும் மனிதர்கள்.
வீட்டில் காத்திருக்கும் பிரச்சினைகளின் அமைதல், ஐம்பது வயதை கடந்தவர் முகங்களில் அப்பட்டமாக தெரிந்தது.
கல்யாண வயதில் இருக்கும் பெண்களை கரைசேர்க்க வேண்டுமே என்ற கவலையுடன் சில முகங்கள்.
மகனின் படிப்புக்கான கடனை எங்கே வாங்குவது என்ற சிந்தனை படிந்த சில முகங்கள்.
இன்னும் வாழ்க்கையில் என்னென்ன பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டி வருமோ என்ற பயத்துடன் சில முகங்கள்.
நாளை என்று இருப்பதை பற்றி கவலைப்படாமல், இன்றே வாழ்ந்துவிடத் துடிக்கும் இளமை பூரிப்புடன் கண்களில் பட்டாம் பூச்சிகள் படபடக்க, சிரிப்பு கடலில் மூழ்கியபடி இளம் பெண்கள்.
தங்கள் ஒவ்வொருவரையும் ஹீரோவாக கற்பனை செய்து சிம்மாசனத்தில் ஏற போவதாக கனவு காணும் இளைஞர்கள்.
இவர்களுக்கிடையே தங்கள் பொறுப்புகளை உணர்ந்தவர்களாக, வாழ்வின் நிஜங்களை புரிந்து கொண்டு வாழும் இளம் பெண்கள், இளைஞர்கள்.
அவர்களில் ஒருவராக அந்த கூட்டத்தில் நடந்தாள் யாமினி.
இருபத்து நான்கு வயதை தொடுபவள். ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் ப்ரோக்ராமர் வேலை.
உயர்த்தி சீவி கிரீப் செய்யப்பட்ட கூந்தல். திராட்சை கொத்து போல அங்குமிங்கும் ஆடியது. புருவ மத்தியில் சின்னதாக ஸ்டிக்கர் பொட்டு. முக அழகை கூட்டிக் காண்பித்தது.
வெள்ளையும், சிவப்பும் கலந்த நிறத்தில் காட்டன் சேலை, அவள் உடலை தழுவியிருந்தது.
எடுப்பான உயரம், கோதுமை நிறம். இவள் அழகி தான் என்பதை அவள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் பெருமிதத்துடன் சொல்லியது.
தெருவில் நுழைய, வாசலில் அப்பா தெரிந்தார். இவர்தான் யாமினியின் அப்பா என்றால், யாரும் நம்ப மாட்டார்கள்.
கருப்பு என்று சொல்ல முடியாத பழுப்பு நிறம், அம்மை தழும்புகள், மேடும் பள்ளமுமாக முகத்தை மாற்ற, இடுங்கிய கண்கள்... நெடுநெடுவென்ற உயரம்... இதுதான் சத்யன்.
ஆனால், யாமினியை பொறுத்தவரை, அவள் அப்பா ஒரு அழகன். அழகும், வசீகரமும் அவர் அன்பில் தெரிந்தது. பாசத்தை தேக்கி வைத்திருக்கும் விழிகள். தங்களுக்காகவே வாழும் அப்பாவை... பார்க்கும்போது... அவர் முக அழகை தாண்டி மன அழகு தான் அவள் மனதில் நிறையும்.
"என்னப்பா... நான் வரமாட்டேனா... எதுக்காக வாசலில் திரியறீங்க...?’’
‘‘உள்ளே மட்டும் தனியா என்ன செய்யப் போறேன். வாம்மா.’’
அவர் அழைப்பில் அன்பு தெரிந்தது. முகம் கழுவி, நைட்டியில் வந்தாள்.
ஆவி பறக்க, இரண்டு கப் டீயும், ஒரு ப்ளேட்டில் வெங்காய பகோடாவும் தயாராக இருந்தது.
பகோடாவை வாயில் போட்டாள்.
‘‘எதுக்குப்பா... தினம் இப்படி ஒரு டிபன் செய்யணுமா... டீ மட்டும் போதாதா...?’’
"இருக்கட்டுமா... வேலைக்கு போய்ட்டு வர பொண்ணுக்கு. பிடிச்சதா செய்து வைக்கிறதில் என்ன இருக்கு?’’
"மதியம் ஒரு வாய் சாதம் எடுத்துட்டு போற... முகம் வாடி... வர்றே... சாப்பிடும்மா.’’
ஒரு கப் டீயை கையில் எடுத்தார் சத்யன்.
‘‘ரொம்ப நல்லாயிருக்குப்பா... உங்க கை பக்குவம் யாருக்கும் வராது.’’
இனிப்பும், காரமுமாக தொண்டையில் இறங்க அப்பாவை பார்த்து புன்னகைக்கிறாள் யாமினி.
"ராத்திரி சப்பாத்தி, குருமா செய்யட்டுமா?’’
"நீங்க செய்ய வேண்டாம். நான் செய்து தரேன்பா.’’
"இல்லம்மா... என் மகளுக்கு நானே செய்து தரேன். உங்கம்மா போன பிறகு.’’
இரண்டு வயசில் உன்னையும், நாலு வயதில் உன் அக்கா வர்ஷினியையும் கையில் பிடிச்சுக்கிட்டு, தனி ஆளாக நின்னேனே.
உங்களுக்கு இனி அப்பா மட்டுமில்லை. அம்மாவும் நான்தான்னு உணர்ந்தேனே... அந்த நிமிஷம்... அதை இன்னும் நான் மறக்கலை யாமினி.
"உங்க அக்காவுக்கு கல்யாணம் பண்ணி என் கடமையை முடிச்சுட்டேன். இனி உனக்கும், ஒரு வாழ்க்கையை தேடிக் கொடுத்தா என் கடமை முடிஞ்சுடும். - திருப்தியா அந்த கடவுள்கிட்டே போய் சேர்ந்துடுவேன்.’’
"அவ்வளவு சீக்கிரம், உங்களை விடமாட்டேன்பா. இந்த யாமினி கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா வாழறதை நீங்க பார்க்க வேண்டாமா...’’
‘‘பேரன், பேத்தியெல்லாம் உங்க நிழலில் தான் வளரணும்பா. அப்பதான் அவங்களுக்கு பாசம்னா... என்னன்னு புரியும்.
உங்ககிட்டே இருக்கிற நல்ல விஷயங்களையெல்லாம் என் பிள்ளைகளுக்கு நீங்க தான் சொல்லித்தரணும்.’’
இந்த யாமினி, எப்பவுமே... இந்த அப்பாவை பிரியமாட்டாள்.
பேசும் மகளை அன்பு ததும்ப பார்க்கிறார் சத்யன்.
சத்யன் சொன்னது போல, யாமினிக்கு அம்மாவும் அவர்தான். இரண்டு பெண்களையும் அரவணைத்து வளர்த்தவர். அவர்களின் பசி அறிபவர். ருசி தருபவர்.
ஆறுதல் என அன்பான வார்த்தைகள். பருவ வயது வந்து இயற்கை தந்த வலியைக் கூட, தாயின் இதமோடு, விளக்கியவர்.
அவர் மடிதான், அவர்கள் களைப்பாறும் தொட்டில்...
அவர் செய்யும் எந்த வேலையிலும், ஒரு நேர்த்தியும், ஒழுக்கமும் இருக்கும்.
அவர் அலமாரியில் துணிகள் ஒழுங்காக அடுக்கப்பட்டு, அதில் ஒரு அழகு தெரியும். - சமைத்ததை ஒழுங்குபடுத்தி, பரிமாறும் விதம். ஒரு பெண்ணால் கூட இந்த அளவு பொறுமையாக, ஈடுபாட்டுடன் செய்ய முடியுமா என்பது தெரியாது.
யாமினியை பொறுத்தவரை அப்பா, அம்மா, ரோல் மாடல், ஹீரோ அழகன்