Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nee Indri Vazhvena?
Nee Indri Vazhvena?
Nee Indri Vazhvena?
Ebook164 pages53 minutes

Nee Indri Vazhvena?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தமிழ்நாட்டின் முன்னனி எழுத்தார்களுல் என்னையும் ஒருவனாய் கொண்டாடும் வாசக உள்ளங்களுக்கு பனிவான வணக்கம். உங்கள் இதயத்தில் எனக்கென ஒரு இடத்தை தந்திருக்கும் அனைவரையும் வணங்கி மகிழ்கிறேன். நன்றி.

இந்த இடத்தைத்தொட நான் பட்ட சிரமங்கள் கொஞ்சமல்ல. என் பதினேழு வயதில் எழுத்து பயணம் தொடங்கியது. தற்போது 45 வயதாகிறது. இந்த இருபத்தியெட்டு வருடங்களில் 500க்கும் மேற்ப்பட்ட சிறுகதைகள் மற்றும் 400 நாவல்கள் வரை எழுதிவிட்டேன்.

குமுதம் வைரமோதிரம் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு, குமுதம் லட்ச ரூபாய் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு, தேவி வார இதழ் நாவல் போட்டியில் முதல் பரிசு, கண்மணி நாவல் போட்டியில் பரிசு, இலக்கிய சிந்தனை விருது, விகடன், கல்கி இதழ்களில் பரிசு என ஏராளமானப் பரிசுகளை வாங்கியிருக்கிறேன். அனைத்து இதழ்களிலும் எனது படைப்புகள் வெளியாகிருக்கிறது.

வாசிப்பதன் மூலம் மனம் ஒரு நிலைப்படுகிறது. வாசிக்கிறபோது தங்கள் கவலைகளை மறந்து வேறொரு உலகத்திற்க்கு செல்கிறார்கள். எனது நாவல்களை வாசிக்கிறபோது விறுவிறுப்பான திரைப்படத்தைப் பார்ப்பது போல காட்சிகள் கண்களுக்குள் விரியும். முடிக்கும் வரை கீழே வைக்க மாட்டார்கள். காதல் ஆகட்டும், குடும்பம் ஆகட்டும், அமானுஷ்யம் ஆகட்டும், வாசிக்கும் கண்களுக்கு சலிப்பு ஏற்பட்டு விடக்கூடாது. தரமான படைப்புகளை படைப்பதே எனது நோக்கம். வாழ்த்துங்கள், வளர்கிறேன்!! உங்கள் விமர்சனங்கள் என்னை மேலும் வலுவூட்டும்.

மிக்க அன்புடன்
மகேஷ்வரன்

Languageதமிழ்
Release dateDec 11, 2019
ISBN6580128304829
Nee Indri Vazhvena?

Read more from Maheshwaran

Related to Nee Indri Vazhvena?

Related ebooks

Reviews for Nee Indri Vazhvena?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nee Indri Vazhvena? - Maheshwaran

    http://www.pustaka.co.in

    நீ இன்றி வாழ்வேனா?

    Nee Indri Vazhvena?

    Author:

    மகேஷ்வரன்

    Maheshwaran

    For more books

    http://pustaka.co.in/home/author/maheshwaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    1

    என் கண்களுக்குள்

    மணியாக இருப்பதும் நீதான்

    கண்மணியாக

    இருந்து கொண்டு

    இமைகளிரண்டையும்

    மூடச்சொன்னால்

    மூடுவதும் சரியா?

    என் இதயத்தின் துடிப்பாக

    இருப்பதுவும் நீதான்

    துடிப்பாக இருந்துகொண்டு

    துடிக்காதே என்று சொன்னால்

    துடிக்காமல் இருப்பதும் சரியா?

    ஜன்னலையொட்டி அடர்த்தியாய் தணிந்து படர்ந்திருந்த மாமரக்கிளையில் அணில்கள் குதித்து கும்மாளமிட்டுக் கொண்டிருந்தன. சிறகுகளைப் படபடவென்று அடித்தபடி எங்கிருந்தோ பறந்து வந்த காதல் கிளிகள் இரண்டு ஒன்றையொன்று கீ... கீ... எனக் கத்தியபடியே கொஞ்சி குவாவியக் காட்சி பார்ப்பதற்கு ரம்யமாய் இருந்தது. வீட்டைச் சுற்றிலும் செழுமையான மரங்கள் இருந்ததன் காரணமாக தூய்மையும் குளுமையும் நிறைந்த தென்றல் உள்ளறைக்குள் ஊடுருவியது.

    சுவர்க்கடிகாரம் ஏழுதடவை அடித்து ஓய்ந்தது.

    கழுத்துவரை போர்வையை இழுத்து விட்டுப் போர்த்திக் கொண்டு படுத்திருந்த அரவிந்தன் வாரி சுருட்டிக் கொண்டு எழுந்தான்.

    உடம்பு அசதியாகவும், களைப்பாகவும் இருந்தது.

    இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாம் போல தோன்றியது.

    தூங்கலாம்...

    இன்று ஞாயிற்றுக்கிழமைதான். எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் தூங்கலாம்தாள். ஆனால், இதே நினைப்பு நாளைக்கும் வந்துவிட்டால்? இதே ஏக்கம் நாளைக்கும் வந்து விட்டால்? தினமும் இதே மாதிரி தூங்கினால் பிழைப்பு என்னாவது?

    'இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாம்' என்ற நினைப்பிற்கு முற்றுபுள்ளி வைத்துவிட்டு அறையை விட்டு வெளியே வந்தான்.

    இரு கைகளையும் தலைக்கு மேலே உயர்த்தி சோம்பல் முறித்தான்.

    தூபக்காலை கையில் பிடித்தபடி பூஜையறையைவிட்டு வெளியே வந்தாள் திலகம். தூபக்காலின் நெருப்பில் கொட்டப்பட்ட சாம்பிராணித்தூள் புகைந்து வளையம் வளையமாய் மிதந்து கொண்டிருந்தது. வெள்ளைநிறப் புகை கூடத்தையே நிறைத்தது.

    பல் தேய்ச்சு முகம் கழுவிட்டு வா அரவிந்த்...! காபி தர்றேன்.

    மகனிடம் கனிவாய் சொன்னார் திலகம்.

    ஈரக்கூந்தலில் துண்டை சுற்றியிருந்தாள். மஞ்சள் பூசிய முகம் நிலவாய் பிரகாசித்தது. சாந்தமான முகத்தில் குங்குமப் பொட்டு வைத்து மங்களகரமாய் காட்சியளித்தாள். கண்களில் கருணைப் பொங்கியது.

    ஏனோ தெரியவில்லை, மற்ற பிள்ளைகளைவிட அரவிந்தன் மீதுதான் திலகத்திற்கு பாசம் அதிகம்.

    அரவிந்தனைத்தான் அவளுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.

    இதோ வந்துட்டேன்மா.

    அரவிந்தன் கொல்லைப்புறம் நடந்தான்.

    கூடத்தில் மாட்டப்பட்டிருந்த சாமி படங்களுக்கும், தங்கள் முன்னோர் படங்களுக்கும் சாம்பிராணி புகையைக் காட்ட ஆரம்பித்தாள் திலகம்.

    தோட்டத்தில் மணத்தக்காளி கீரை செடிப்பாத்திகளுக்கும், பொன்னாங்கண்ணி கீரைப் பாத்திகளுக்கும் குறிஞ்சியும், முல்லையும் கிணற்று நீரை வாளியினால் இழுத்து கொட்டிக் கொண்டிருந்தார்கள்.

    குறிஞ்சி பன்னிரண்டாவது படிக்கிறாள்.

    முல்லை பத்தாவது படிக்கிறாள்.

    இருவரும் அரவிந்தனின் உடன்பிறந்த தங்கைகள்.

    வாளியை இப்படிக் கொடு.

    முல்லையின் கையிலிருந்த வாளியையும், கயிற்றையும் கையில் வாங்கி கிணற்றில் விட்டு சரசரவென்று தண்ணீரை மேலே இழுத்தான் அரவிந்தன்,

    பல் தேய்த்து முகம் கழுவினான்.

    அண்ணே...

    கிசுகிசுப்பாய் அழைத்தாள் குறிஞ்சி.

    முகத்தில் ஈரம் சொட்ட நிமிர்ந்தான் அரவிந்தன்.

    என்ன?

    நேத்து சாயங்காலம் யாரோ ஒரு பொண்ணு நம்ம வீட்டுக்கு போன் பண்ணுனிச்சு. 'அரவிந்தன் இருக்காரா, அரவிந்தன் இருக்காரா'ன்னு... ஒரே தொல்லை... 'அண்ணன் வேலை முடிஞ்சு இன்னும் வீட்டுக்கு வரலை’ன்னு சொல்லி போனை 'கட்' பண்ணிட்டோம்...! ஆமா, யாரு அந்தப் பொண்ணு?

    கண்கள் மினுக்க கேட்டாள் குறிஞ்சி.

    தெரியலையே...

    அப்பாவியாய்உதட்டைச் சுழித்தான் அரவிந்தன்.

    பொய் சொல்லாதேண்ணே! அந்தப் பொண்ணோட குரல் கேட்கறதுக்கு இனிமையா இருந்துச்சு. குரலைப் போலவே ஆளும் இனிமையா அழகா இருப்பாங்களாண்ணே?

    அரவிந்தனை ஆர்வமாய் பார்த்தாள் முல்லை.

    என்னைக் கேட்டா எனக்கு என்ன தெரியும்?

    அரவிந்தன் தோள்களைக் குலுக்கினான்.

    எங்களை வேணா ஏமாத்தலாம். ஆனா, அப்பாவை ஏமாத்தவே முடியாது. அப்பாவுக்கு மட்டும் இந்த விஷயம் தெரிஞ்சது... அவ்வளவுதான்...

    சிரித்தபடியே பெருமூச்சுவிட்டாள் குறிஞ்சி.

    'அப்பா' என்று நினைத்ததுமே அரவிந்தனுக்கு வியர்த்தது. இதயம் படபடவென்று துடித்தது.

    இரு கைகளாலும் தண்ணீரை அள்ளி இன்னொரு முறை முகத்தைக் கழுவினான்.

    நீ ஒண்ணும் பயப்படாதேண்ணே. நா அப்பாவுக்கு இந்த விஷயம் தெரியாம பார்த்துக்கறேன்... என்றாள் முல்லை.

    ரெண்டு பேருக்கும் வேற வேலையே இல்லையா? ஒழுங்கா கீரைப் பாத்திக்கு தண்ணீரை ஊத்துங்க...

    இருவரையும் செல்லமாய் அதட்டினான்.

    கத்தரிக்காய் முத்தினா கடைக்கு வந்துதான் ஆகணும்... இல்லேடி... முல்லையை கேலியாய்ப் பார்த்தாள் குறிஞ்சி.

    நீ உதை வாங்கப் போறே?

    போலியான கோபத்தோடு முறைத்தான் அரவிந்தன்.

    ப்ளீஸ்ணே... எனக்கு தலையே வெடிச்சிடும் போல இருக்கு...! அந்தப் பெண்ணோட பேரை மட்டுமாச்சும் சொல்லு...

    கெஞ்சினாள் குறிஞ்சி.

    நம்ம அப்பாவைப் பத்தி தெரிஞ்சிருந்தும் நீ காதல்ல விழுந்துருக்கியே... உன்னோட தைரியத்தை நா மனதாரப் பாராட்டறேண்ணே... சிரித்தபடியே, சல்யூட் வைத்தாள் முவ்லை.

    நீங்களாவே எதையாவது கற்பனை பண்ணிக்காதிங்க. கவனத்தை படிப்புல செலுத்துங்க...

    கற்பனை இல்லை நிஜம்.

    எது...?

    நீ காதலிக்கறது...

    நான் யாரையும் காதலிக்கலை.

    எங்கே எங்க கண்ணைப் பார்த்து சொல்லு பார்க்கலாம்...

    குறிஞ்சியும், முல்லையும் மாறி மாறி வறுத்தெடுக்க, அதற்குள் காபி குவளையோடு திலகமே அங்கே வந்து விட்டாள்.

    திலகத்தைப் பார்த்ததும் இருவரும் வாயை மூடிக் கொண்டார்கள். கீரைப் பாத்திகளுக்கு தண்ணீர் ஊற்றத் தொடங்கினார்கள்.

    அக்காவும் தங்கச்சியும் யார்கிட்டே சத்தமா பேசிக்கிட்டு இருந்தீங்க? என்றாள் திலகம்.

    அவர்கள் இருவரும் எதையாவது உளறி விடுவார்களோ என்று பயந்தவனாய் அரவிந்தன் முந்திக் கொண்டான்.

    அதெல்லாம் ஒண்ணுமில்லைம்மா. எங்கிட்டேதான் பேசிக்கிட்டு இருந்தாங்க.... காபி குவளையை வாங்கி உறிஞ்சத் தொடங்கினான்.

    குறிஞ்சியும், முல்லையும் அவனை அடிக் கண்ணால் பார்த்துப் புன்னகைத்தார்கள்.

    ***

    தியாகசுந்தரம் - திலகம் தம்பதியரின் இரண்டாவது மகன்தான் அரவிந்தன். மூத்தவன் வைரவன் வங்கியில் பணிபுரிகிறான்.

    கல்யாணமான மூன்றே மாதங்களில் மனைவியைக் கூட்டிக் கொண்டு தனிக்குடித்தனம் போய்விட்டான்.

    தியாகசுந்தரம் அரசாங்க நடுநிலைப் பள்ளிக்கூடம் ஒன்றில் தலைமையாசிரியாகப் பணியாற்றுகிறார்.

    கண்டிப்பானவர்.

    பள்ளியில் தன் கீழே வேலை பார்க்கும் உதவியாசிரியர்களும், மாணவர்களும் அடங்கி, பணிந்து நடப்பதைப் போலவே வீட்டில் இருப்பவர்களும் நடக்க வேண்டும் என நினைப்பவர்.

    மனைவியாக இருந்தாலும் சரி, பிள்ளைகளாக இருந்தாலும் சரி, அவருடைய பேச்சை மீறக்கூடாது. எந்த விஷயத்திலும் எதிர்த்துப் பேசக்கூடாது.

    மீறினால் கண்களாலேயே எரித்து விடுவார். வார்த்தைகளாலேயே பிரம்படி கொடுத்து விடுவார்.

    தன் இரு மகன்களில் ஒருவனையாவது தன்னைப் போல ஆசிரியராக்கி பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். வைரவன் போட்டித் தேர்வில் வெற்றி பெற்று வங்கிப் பணியில் சேர்ந்து விட்டான். அரவிந்தன் பத்தாவது முடித்ததுமே தொழில்கல்வியில் சேர்ந்து விட்டான்.

    தொழில் கல்வியை மூன்று வருடங்கள் படித்து 'டிப்ளமோ’ பட்டம் பெற்ற கையோடு திருச்சியிலிருக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்துவிட்டது.

    காலையில் ஏழு மணிக்கெல்லாம் வீட்டை விட்டுக் கிளம்பிவிடுவான்.

    இரவு ஒன்பது மணிக்குதான் திரும்புவான், மாதம் பத்தாயிரத்து சொச்சம் சம்பளம் வாங்குகிறான்.

    கடந்த ஏழு வருடங்களாக எந்தக் கெட்ட பெயரும் இல்லாமல் ஒரே நிறுவனத்தில் வேலை

    Enjoying the preview?
    Page 1 of 1