Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kangal Irandum Unnai Kaanumo?
Kangal Irandum Unnai Kaanumo?
Kangal Irandum Unnai Kaanumo?
Ebook80 pages25 minutes

Kangal Irandum Unnai Kaanumo?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வைகறையின் அத்தைமகன். ஆசைக்காதலன் பிருத்வி இருவரும் சின்ன வயசிலிருந்தே… ஒருவரை ஒருவர் உயிருக்குயிராய் விரும்புகிறார்கள்..

வெளிநாட்டு வேலைக்குப் போகும் பிருத்வி கல்யாணத்திற்காக திரும்பி வருகிறான், ஆனால் வீட்டிற்கு வந்து சேரவில்லை என்ன ஆனான் என்றும் தெரியவில்லை.

எவ்வளவு நாள் காத்திருக்க முடியும்?

வைகறையைக் கட்டாயப்படுத்தி இன்னொருவனுக்கு நிச்சயம் செய்கிறார்கள். விடிந்தால் கல்யாணம்.

மண்யத்தை விட்டு வெளியேறிய வைகறை ரயில் தண்டவாளத்தில் விழுந்து உயிரை மாய்த்துக் கொள்ள துணிகிறாள்.

எதிர்பாராத முடிவு…

வைகறை என்ன ஆனான்?

பிருத்தி திரும்ப வந்தானா?

வாசியுங்கள்

Languageதமிழ்
Release dateMay 24, 2020
ISBN6580128305421
Kangal Irandum Unnai Kaanumo?

Read more from Maheshwaran

Related to Kangal Irandum Unnai Kaanumo?

Related ebooks

Reviews for Kangal Irandum Unnai Kaanumo?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kangal Irandum Unnai Kaanumo? - Maheshwaran

    http://www.pustaka.co.in

    கண்களிரண்டும் உன்னைக் காணுமோ?

    Kangal Irandum Unnai Kaanumo?

    Author:

    மகேஷ்வரன்

    Maheshwaran

    For more books

    http://www.pustaka.co.in/home/author/maheshwaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 1

    வாசலில் போட்டுக் கொண்டிருந்த மாவுக் கோலத்தை அப்படியே நிறுத்திவிட்டு வானத்தை அண்ணாந்துப் பார்த்தாள் வைகறை.

    வெண்பஞ்சு மேகங்கள் திட்டுத்திட்டாய்.. மிதந்து கொண்டிருக்க... இடையில் சின்ன இரைச்சலோடு... ஒரு சிறிய பறவையைப் போல... பறந்து கொண்டிருந்தது அந்த விமானம்.

    தன் அழகிய கரிய பெரிய விழிகளை அகலமாக்கி... உற்றுப் பார்த்தாள். இரைச்சல் வரவர அதிகமானது... விமானத்தின் உருவமும்.. வரவர பெரிதாய் தெரிந்தது... அக்கம்பக்கத்து வீட்டு சிறுவர், சிறுமியர்கள் வெளியே ஓடி வந்தார்கள். அது சின்னஞ்சிறிய கிராமம்... அங்கே.. விமானத்தைப் பார்ப்பதெல்லாம்.... தலைக்கு மேலே... பறந்து போவதைப் பார்த்து ரசிப்பது என்பது.. ரொம்ப அபூர்வமான விஷயம்....

    விமானத்தைப் பார்த்த சிறுவர், சிறுமியர்கள். உற்சாகத்தோடு கூச்சலிட்டார்கள். வைகறையின் மனமும்.. உற்சாகக் கூச்சலிட்டது... குட்டி முயலாய் குதியாட்டம் போட்டது.

    பிருத்வி அத்தான்...

    அவளுடைய உதடுகள் முணுமுணுத்தது. பிருத்வி என்ற பெயரை உச்சரித்ததுமே மனசுக்குள் காதல் பூக்கும் விழிகளில் ஏக்கம்.. படரும்...

    'பிருத்வி அத்தான்... நீங்கள் எப்போது வரப் போகிறீர்கள்? கடல் கடந்து சென்று வெளிநாட்டில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் நீங்களும்... ஒரு நாள் இதே மாதிரிதானே ஏரோப்ளேனில் பறந்து வரப்போகிறீர்கள்?’

    வைகறை ஆசை ஆசையாய் வானத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

    வைகறை...

    பின்னால் வந்து நின்று தோள் மீது கையை வைத்தாள் இந்திராணி.

    வாசலுக்குத் தண்ணீர் தெளிச்சோமா..... துடைப்பத்தால்... கூட்டிப் பெருக்கினோமா.... கோலத்தைப் போட்டோமா... வீட்டுக்குள்ளே வந்தோமான்னு இல்லாம... சின்னப் பிள்ளையாட்டம் அங்கே என்னடி வேடிக்கை?

    அது வந்தும்மா....

    நீ ஒண்ணும் சொல்ல வேணாம்... மொதல்ல கோலத்தைப் போட்டுட்டு உள்ளே வா இந்திராணி உள்ளே போய்விட்டாள்.

    வைகறை கோலமாவு இருந்த டப்பாவை கையிலெடுத்தாள்... பாதியிலேயே நிறுத்தியிருந்த கோலத்தை அவசர அவசரமாய் போட்டு முடித்தாள்....

    இப்போது வானத்தில் இரைச்சலும் இல்லை.... விமானமும் இல்லை... சின்னப் புள்ளியாய்.. வெகு தூரம் பறந்து போய்.... மறைந்திருந்தது... பிருத்வி அத்தான்... நான் ஒவ்வொரு நாளும்.. ஒவ்வொரு நிமிடமும்.. ஒவ்வொரு வினாடியும்... உங்களைத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.... நினைத்து நினைத்து... உருகிக் கொண்டிருக்கிறேன்.... உறங்காமல் தவித்துக் கொண்டிருக்கிறேன்.... கண்ணீரோடு காத்திருக்கிறேன்......

    ‘என்னுடைய தவிப்பும், துடிப்பும், ஏக்கமும், அழுகையும், கண்ணீரும்.. உங்களுக்கு... தெரியாதா? புரியாதா? ஏன் வராமல் இருக்கிறீர்கள்? அப்பாவுக்கும், அம்மாவுக்கும், அத்தைக்கும்... நீங்கள் திரும்பி வருவீர்கள் என்ற நம்பிக்கையே இல்லை... ஆனால் எனக்கு நம்பிக்கையிருக்கிறது... என்னை ஏமாற்றமாட்டீர்கள்தானே?' வைகறையின் கண்கள் கலங்கின.

    'எனக்கு மட்டும்... இருள் கரையாதா?

    Enjoying the preview?
    Page 1 of 1