Thanga Kappal
By Maheshwaran
()
About this ebook
தமிழ்நாட்டின் முன்னனி எழுத்தார்களுல் என்னையும் ஒருவனாய் கொண்டாடும் வாசக உள்ளங்களுக்கு பனிவான வணக்கம். உங்கள் இதயத்தில் எனக்கென ஒரு இடத்தை தந்திருக்கும் அனைவரையும் வணங்கி மகிழ்கிறேன். நன்றி.
இந்த இடத்தைத்தொட நான் பட்ட சிரமங்கள் கொஞ்சமல்ல. என் பதினேழு வயதில் எழுத்து பயணம் தொடங்கியது. தற்போது 45 வயதாகிறது. இந்த இருபத்தியெட்டு வருடங்களில் 500க்கும் மேற்ப்பட்ட சிறுகதைகள் மற்றும் 400 நாவல்கள் வரை எழுதிவிட்டேன்.
குமுதம் வைரமோதிரம் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு, குமுதம் லட்ச ரூபாய் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு, தேவி வார இதழ் நாவல் போட்டியில் முதல் பரிசு, கண்மணி நாவல் போட்டியில் பரிசு, இலக்கிய சிந்தனை விருது, விகடன், கல்கி இதழ்களில் பரிசு என ஏராளமானப் பரிசுகளை வாங்கியிருக்கிறேன். அனைத்து இதழ்களிலும் எனது படைப்புகள் வெளியாகிருக்கிறது.
வாசிப்பதன் மூலம் மனம் ஒரு நிலைப்படுகிறது. வாசிக்கிறபோது தங்கள் கவலைகளை மறந்து வேறொரு உலகத்திற்க்கு செல்கிறார்கள். எனது நாவல்களை வாசிக்கிறபோது விறுவிறுப்பான திரைப்படத்தைப் பார்ப்பது போல காட்சிகள் கண்களுக்குள் விரியும். முடிக்கும் வரை கீழே வைக்க மாட்டார்கள். காதல் ஆகட்டும், குடும்பம் ஆகட்டும், அமானுஷ்யம் ஆகட்டும், வாசிக்கும் கண்களுக்கு சலிப்பு ஏற்பட்டு விடக்கூடாது. தரமான படைப்புகளை படைப்பதே எனது நோக்கம். வாழ்த்துங்கள், வளர்கிறேன்!! உங்கள் விமர்சனங்கள் என்னை மேலும் வலுவூட்டும்.
மிக்க அன்புடன்
மகேஷ்வரன்
Read more from Maheshwaran
Kuyil Thoppu Marmam Rating: 5 out of 5 stars5/5Linga Pura Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsAayiram Kodi Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsVaruvean Naan Rating: 5 out of 5 stars5/5Karuppu Kuthirai Rating: 0 out of 5 stars0 ratingsPachaikili Rating: 0 out of 5 stars0 ratingsMullil Vizhuntha Kili Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Vennila Rating: 0 out of 5 stars0 ratingsTick.. Tick.. Thik. Rating: 4 out of 5 stars4/5Mayanginean Solla Thayanginean Rating: 0 out of 5 stars0 ratingsNilavukku Kobam Varum! Rating: 0 out of 5 stars0 ratingsThappithu Vidu... Kanmani! Rating: 0 out of 5 stars0 ratingsUn Manasula Naan Irukkena? Rating: 0 out of 5 stars0 ratingsThik Thik Thilothi Rating: 0 out of 5 stars0 ratingsManal Sirpangal Rating: 0 out of 5 stars0 ratingsRaja Nagam Rating: 0 out of 5 stars0 ratingsIravum Pagalum Un Uruvam Rating: 0 out of 5 stars0 ratingsUn Madiyil Naanuranga Rating: 0 out of 5 stars0 ratingsMullil Vizhuntha Pattampoochi Rating: 0 out of 5 stars0 ratingsMarakka Mudiyavillai...! - Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsElla Muthangalum Enakke! Rating: 0 out of 5 stars0 ratingsMayanguthu Nenjam Rating: 0 out of 5 stars0 ratingsPovom Ini Kaadhal Desam Rating: 0 out of 5 stars0 ratingsMalligai Poovai Maarivida Aasai Rating: 0 out of 5 stars0 ratingsMalargal Poi Pesuma? Rating: 0 out of 5 stars0 ratingsIdhayathil Vizhuntha Thirumana Maalai! Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Kiliye Kobama? Rating: 0 out of 5 stars0 ratingsMudhalai Rating: 0 out of 5 stars0 ratingsNenjil Aasai Kodi Sumanthu… Rating: 0 out of 5 stars0 ratingsUyirai Pirikka Mudiyuma? Rating: 0 out of 5 stars0 ratings
Related to Thanga Kappal
Related ebooks
Kanchi Sundari Rating: 5 out of 5 stars5/5Sethunattu Vengai Rating: 0 out of 5 stars0 ratingsPattini Thadagathu Pasamalargal Rating: 0 out of 5 stars0 ratingsPaandimaadevi - Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Yutham Rating: 0 out of 5 stars0 ratingsRatha Samuthiram Rating: 0 out of 5 stars0 ratingsThanga Oviyam Rating: 0 out of 5 stars0 ratingsPoonkaatru Rating: 0 out of 5 stars0 ratingsVallathu Ilavarasi Rating: 0 out of 5 stars0 ratingsUdaintha Nilakkal Part 2 Rating: 5 out of 5 stars5/5Vithin Kanakkal Rating: 0 out of 5 stars0 ratingsTheera... Nilatheera...! Rating: 0 out of 5 stars0 ratingsAthikalai Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsTher Yeri Vandha Nila Rating: 2 out of 5 stars2/5Sirupanatrupadai Rating: 0 out of 5 stars0 ratingsKulothungan Sabatham Rating: 4 out of 5 stars4/5Vadakke Oru Pudhayal! Rating: 0 out of 5 stars0 ratingsAndhi Varum Neram Rating: 5 out of 5 stars5/5Pattinapaalai Rating: 0 out of 5 stars0 ratingsKadal Kadantha Vanigam Rating: 4 out of 5 stars4/5Therodum Veethiyiley Rating: 0 out of 5 stars0 ratingsKanavu Kandean Drohi Rating: 0 out of 5 stars0 ratingsMamisap Padaippu Rating: 0 out of 5 stars0 ratingsSindhu Ratham Sindhu Rating: 4 out of 5 stars4/5Thullal Rating: 0 out of 5 stars0 ratingsமதியின் மாதவன்!: இரு தேசத்தின் நாடி! Rating: 0 out of 5 stars0 ratingsSivakamiyin Sabatham Anaithu Pagangal Rating: 5 out of 5 stars5/5Vennilave… Vennilave! Rating: 0 out of 5 stars0 ratingsBharath, Oru Panthayam Rating: 0 out of 5 stars0 ratingsMaayak Kottai Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Thanga Kappal
0 ratings0 reviews
Book preview
Thanga Kappal - Maheshwaran
http://www.pustaka.co.in
தங்க கப்பல்
Thanga Kappal
Author:
மகேஷ்வரன்
Maheshwaran
For more books
http://pustaka.co.in/home/author/maheshwaran
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
1
ராட்சச சைஸ் நீலச்சேலையைத் துவைத்து ஈரம் சொட்டச் சொட்ட பூமி பரப்பில் காயப்போட்டது மாதிரி காட்சியளித்தது வங்காளவிரிகுடா கடல்.
கீழ் திசையிலிருந்து கதிரவன் தகதகவென மேலெழும்பிக் கொண்டிருந்தான். கதிரவனின் வெளிச்சக்கதிர்கள் கடல் அலைகளின் மீது பாய்ந்து வெள்ளி ஜரிகைகளாய் தகதகத்தது.
பெரிய அலைகளும் சின்னச்சின்ன அலைகளும் சீறியபடியே ஒன்றன்பின் ஒன்றாய் கரையை நோக்கி ஓடிவந்துக் கொண்டிருந்தன.
'நான் யாருக்கும் கட்டுப்பட மாட்டேன்..
என்னை யாராலும் அடக்க முடியாது....
என்னுடைய பிறவி குணமே இதுதான்....
இதை மாற்றுகிற சக்தி யாருக்கும் கிடையாது...' என்பதைப் போல திமிராய், கர்வமாய், பெருமிதமாய் இரைந்துக் கொண்டிருந்தது கடல்.
உலகின் முதல் அதிசயம் கடல்....
யாராலும் கட்டிப்போட முடியாத அதிசயம் கடல்...
எத்தனை கொடிய வறட்சிக் காலத்திலும் வற்றாத அதிசயம் கடல்.....
கடல் நம்மை வாழவும் வைக்கும்..
நம் வாழ்க்கையையும் அழிக்கும்.....
கடல் கோபம் கொண்டு பொங்கினால் நம்மால் தாங்க முடியாது.
கடற்கரை மணலில் கால்கள் புதைய புதைய நடந்துக் கொண்டிருந்தாள் செங்கொடி.
எளிமையான சீட்டித்துணி பாவாடை தாவணி அணிந்திருந்தாள். இரட்டை ஜடைப்பின்னி மணி குஞ்சம் வைத்து கட்டி முன்பக்கமாய்த் தூக்கிப் போட்டிருந்தாள். கழுத்தில் பாசிமணி தொங்கியது. காதுகளில் பிளாஸ்டிக் கம்மல்கள். கூரான நாசியில் மூக்குத்தி இல்லாமலே வசீகரமாக இருந்தது. சின்ன உதடுகள். வரிசைப்பிறளாத பல் வரிசை...
கறுப்பும் இல்லை
சிவப்பும் இல்லை
மாநிற தேகம்
துறுதுறுப்பான முகம்.
அந்த கடற்கரை கிராமத்தின் இளசுகளை பெருமூச்சுவிட வைக்கிற அழகி செங்கொடி ஒருத்திதான்.
செங்கொடி உதட்டைச் சுழித்து கன்னக்குழி விழ சிரிக்கிறபோது தடுமாறாத கண்களே இருக்க முடியாது.
செங்கொடிக்கு வயது பத்தொன்பது.
பிரம்மன் ரசித்துரசித்து படைத்த பருவச்சிலை.....
செங்கொடி தன் தாய் தந்தையை சின்ன குழந்தையாக இருக்கும்போதே கடலின் சீற்றத்துக்கு பறி கொடுத்துவிட்டாள்.
உறவுக்கார கிழவி ஒருத்திதான் செங்கொடியை வளர்த்து ஆளாக்கினாள். அவளும் கொஞ்ச நாட்களுக்கு முன்பு நிரந்தரமாய் கண்களை மூடிவிட்டாள்.
இப்போது செங்கொடி ஒரு அனாதை.
கடற்கரையை ஒட்டியிருக்கும் சின்ன குடிசையில் தனியே வசிக்கிறாள்.
கடற்கரையோர ஈரமணலில் சிப்பிகளையும் சிறுசிறு சங்குகளையும் பொறுக்கி சேகரித்து கைவினைப்பொருட்கள் செய்து அங்கிருக்கும் கோட்டையைச் சுற்றிப் பார்க்க வரும் சுற்றுலா பயணிகளிடம் விற்றுதான் செங்கொடியின் வயிறு நனைந்துக் கொண்டிருக்கிறது.
சிப்பிகளால் அலங்கரிக்கப்பட்ட கண்ணாடி...
சிப்பிகளால் அலங்கரிக்கப்பட்ட சோப்பு பெட்டி..
குங்குமச்சிமிழ்..
சிப்பிகளால் பண்ணிய விநாயகர் சிலை... சிப்பிகளால் பண்ணிய ஜோடி குருவிகள்.
சங்கில் உருவாக்கப்பட்ட விளக்கு.... போன்றவைகளை நுணுக்கமான கலைரசனையோடு செய்து வண்ணம் தீட்டி.... சிறு மூங்கில் தட்டியில் அடுக்கி வைத்து சுற்றுலா பயணிகளுக்கு மத்தியில் கூவிகூவி விற்பாள்.
பெரும்பாலும் பள்ளிக்குழந்தைகள்தான் அவள் விற்கிற கலைப்பொருட்களை வாங்கிச் செல்வார்கள். வெளிநாட்டு பயணிகளும் பேரம்பேசாமல் சொன்ன விலையைக்கொடுத்து வாங்கி விடுவார்கள்.
செங்கொடி பேராசைக்காரி கிடையாது.
நியாயமான விலைக்குதான் விற்பாள்.
அதனாலேயே பெரிதாய் லாபம் கிடைக்காது. கிடைக்கிற வருமானம் அவளுடைய சாப்பாட்டிற்கும், கைவினைப்பொருட்கள் தயாரிப்பதற்குரிய மூலப்பொருட்கள் வாங்கவும்தான் சரியாக இருக்கும்.
தினமும் அதிகாலையிலேயே கடற்கரைக்கு வந்துவிடுவாள் செங்கொடி. கதிரவன் கொஞ்சம் கொஞ்சமாய் உச்சிக்கு ஏறுகிற வரை ஈரமணலில் ஒதுங்கி கிடக்கும் சிப்பிகளையும் சங்குகளையும் சேகரிப்பதுதான் செங்கொடியின் தினசரி வேலை.
அன்றும் அப்படித்தான்... ஈரமணலில் குனிந்து குனிந்து சிப்பிகளைப் பொறுக்கி கொண்டிருந்தாள்.
ஆங்காங்கே படகுகள் நிறுத்தப்பட்டிருந்தன.
செத்துப்போன மீன்களும் கரையோரமாய் ஒதுங்கி கிடந்தன.
அந்த கடற்கரை கிராமத்திற்கே அழகு வெள்ளையன் கோட்டைதான்.
ஒரு காலத்தில் வெள்ளையர்களின் வியாபாரத்தலமாக இருந்த கோட்டை.
கோட்டையின் சிற்சில பகுதிகள் சிதிலமடைந்துப் போயிருந்தாலும் இன்றைக்கும் கம்பீரம் குலையாமல் நின்றிருந்தது.
கோட்டைக்குள் இருக்கும் தேவாலயத்தில் மணியடிக்கிற ஓசை கணீரென கேட்டது.
மணி ஓசை கேட்டதும் கோட்டையின் உயரமான மேல்தளத்தில் பதுங்கியிருந்த புறாக்கள் குபீரென பறக்கத் தொடங்கின...
வெள்ளையன் கோட்டையை நம்பியும் அங்கே வருகிற சுற்றுலாப் பயணிகளை எதிர்பார்த்தும்தான் செங்கொடியும் அவளைப்போன்ற பிற கலைப்பொருட்களை வியாபாரம் செய்கிற பெண்களும் வசித்தார்கள்.
சுற்றுலாப் பயணிகளின் பேருந்துகளை கண்டால்தான் செங்கொடியின் முகத்தில் மலர்ச்சிப் பரவும்.
அதிகாலையில் சுற்றுலாப் பயணிகள் வரமாட்டார்கள். மாலை நேரத்தில் கூட்டம் கூட்டமாய் வருவார்கள். அதுவும் பௌர்ணமி அன்று இரவில்... கோட்டை ஓரமாக நின்று கடலை ரசிப்பது பேரானந்தமாய் இருக்கும்.
கடற்கரையே கலகலப்பாக மாறிவிடும்.
இரவில் கோட்டைக்குள் செல்ல அனுமதி கிடையாது. என்றாலும் கோட்டைக்கு வெளியே கடற்கரை மணலில் சுற்றுலாப் பயணிகள் கும்பல் கும்பலாய் அமர்ந்து கடலை ரசிப்பார்கள்.
நேற்றைக்கு பௌர்ணமி என்பதால் சுற்றுலா பயணிகள் வீசிவிட்டுப்போன காலியான குளிர்பான பாட்டில்களும் மது பாட்டில்களும் சிகரெட் பாக்கெட்களும் கடற்கரை மணலில்