Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ratha Samuthiram
Ratha Samuthiram
Ratha Samuthiram
Ebook70 pages44 minutes

Ratha Samuthiram

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மகரந்த செல்வனும், பொன்மணியும் தொல்பொருள் ஆராய்ச்சியில் ஈடுபடும் நவீன காதலர்கள். சித்ரா பௌர்ணமியன்று கடலிலிருந்து தோன்றிய ஒரு அதிசய மனிதரிடமிருந்து ஒரு அரிச்சுவடியைப் பெறுகின்றனர். அந்த அரிச்சுவடியிலிருந்து, பண்டைய காலத்தில் மன்னரின் அனுமதியோடு மணிமாறன் என்ற வைத்தியன் கடல் நீரிலிருந்து தங்கத்தை பிரித்து கொண்டுவர குலோத்துங்கன், சிவசேகரம் ஆகியோருடன் கடற்பயணம் மேற்கொண்டு தங்கத்தை கண்டறிந்தான். ஆனால் எதிர்பாராதவிதமாக அவர்கள் யாரும் மீண்டும் கரை சேரவில்லை, கப்பலும் கடலில் மூழ்கியது என்பதை அறிகின்றனர். எனவே அந்த கப்பலையும், தங்கத்தையும் தேடி செல்வனும், பொன்மணியும் தனது பணியாட்கள் மற்றும் நண்பர்களுடன் செல்கின்றனர். கப்பலை கண்டார்களா? அதற்கிடையில் நடந்த மர்மமான நிகழ்வுகள் என்ன? முந்தைய கப்பலின் நிலைக்கான காரணம் என்ன? தங்கத்தை எடுக்க சமுத்திரம் சென்றவர்களின் வாழ்க்கைக் கதையை வாசித்து அறியலாம்...

Languageதமிழ்
Release dateMar 7, 2022
ISBN6580111007782
Ratha Samuthiram

Read more from Arnika Nasser

Related to Ratha Samuthiram

Related ebooks

Related categories

Reviews for Ratha Samuthiram

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ratha Samuthiram - Arnika Nasser

    https://www.pustaka.co.in

    இரத்தச் சமுத்திரம்

    Ratha Samuthiram

    Author:

    ஆர்னிகா நாசர்

    Arnika Nasser

    For more books

    https://www.pustaka.co.in/home/author/arnika-nasser-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    1

    25-4-1994 திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணி.

    பூம்புகார் கடற்கரை. சித்ரா பௌர்ணமி நாளாதலால் நிலா கூடுதல் மஞ்சள் நிற பளபளப்புடன் மிகப்பெரிய வட்டமாய் வானில் மிளிர்ந்தது. பௌர்ணமி வெளிச்சத்தில் கருநீல நிற வானம் நீள்வட்ட ஒளி ஆரம் பெற்றிருந்தது. நிலவொளி கடலலைகளில் தங்கம் பூசியிருந்தது. கடலலைகள் பிரம்மாண்டமாய் கரைக்கு படையெடுத்து வருவதும் வந்ததும் நீர்த்து நுரை பொங்கி அடங்குவதுமாய் இருந்தன.

    சித்ரா பௌர்ணமியைக் கொண்டாட ஜனத்திரள் கடற்கரையில் குழுமியிருந்தது. விடலை ஆண்கள், பருவப் பெண்கள், சிறுவர்கள் என்று கதம்பமாய் இருந்தனர். பெரும்பாலோர் கடலாடிக்கொண்டிருந்தனர். பருவப் பெண்கள் தத்தம் புடவைகளை முழங்கால்வரைத் தூக்கிக் கொண்டு கடலலைகளுடன் சடுகுடு ஆடிக்கொண்டிருந்தனர். வெளிர் சந்தனக் கால்கள் நிலா வெளிச்சத்தில் காமன் முகவரி காட்டின. அலைகளின் இரைச்சலை மீறி உற்சாகமாக கும்மாளித்துக் கொண்டிருந்தனர்.

    கடற்கரைக்குச் செல்லும் சாலையின் வலப்பக்கம் சிலப்பதிகாரக் கலைக்கூடம் அமைந்திருந்தது. அதனுள்ளே நெடுங்கல் மன்றம், இலஞ்சி மன்றம், பாவை மன்றம், கொற்றப் பந்தலெனும் மண்டபங்கள் கட்டப்பட்டிருந்தன.

    கடற்கரையின் எதிரே சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக சுற்றுலாத்துறை, பயணிகள் தங்கும் விடுதி மற்றும் சங்கு சிப்பி வடிவு குடில்களை கட்டியுள்ளது.

    கடற்கரை சாலையை ஒட்டி தனது பச்சை நிற மாருதி ஜிப்ஸியை நிறுத்தினான் மகரந்தச் செல்வன். வாயில் சிகரெட் புகைந்து கொண்டிருந்தது. ஆறடி இரண்டங்குல உயர மகரந்தச் செல்வன் சங்கரா டி சர்ட்டும் பப்பலோ ஜீன்ஸும் உடுத்தியிருந்தான். கால்களில் லிபர்ட்டி ஷூ. மகரந்த செல்வன் எம்.ஏ. சரித்திரம் படித்தவன்.

    காரிலிருந்து மகரந்தச் செல்வன் இறங்க அவனைத் தொடர்ந்தாள் பொன்மணி. பொன்மணி மகரந்தச் செல்வனின் காதலி. ஆர்க்கியாலஜி படித்தவள். பழங்கால ஓலைச்சுவடி எழுத்துக்களான கண்ணெழுத்து, வட்டெழுத்து, கோர எழுத்து வாசிக்கத் தெரிந்தவள். கிரானைட் பூக்களால் இரு மார்புகள் கொண்டவள். பால் உறிஞ்சும் பிறந்த குழந்தையின் குவிந்த உதடுகள் போல தொப்புள். கனத்து நீண்ட தொடைப்பகுதி. வாழைப்பூக்களைக் கீறி வைத்தாற்போல கால் விரல்கள்.

    இருவரும் பூம்புகாருக்கு சோழர்கால நாணயங்கள் சேகரிக்க வந்திருந்தனர். மகரந்தச் செல்வன் ஒரு பீர் பாட்டிலைத் திறந்து வாய்க்குள் கவிழ்த்தான். தொண்டைக்குள் பானம் கசந்து, இறங்கியது. கடற்கரையில் மக்கள் செய்யும் உல்லாசத்தை ரசித்தான்.

    பொன்மணி?

    என்ன செல்வா?

    எனக்கொரு ஆசை... சொன்னால் கோபிக்க மாட்டியே?

    சொல்லு பாப்பம்...

    "திடீரென்று கடற்கரை உல்லாசிகள் அனைவரும் மறைந்துவிட வேண்டும். நாம் மட்டும் கடற்கரையில். நீயும் நானும் பிறந்த நாள் உடையில் கடலில் குளித்து கும்மாளிக்க வேண்டும். நிலவொளியில் உன் மார்பகங்கள் தங்க நிறத்தில் அதிரும். கடற்கரை மண் உன் புட்டத்தில் ஒட்டியிருக்கும். உன் உடல் முழுவதும்

    Enjoying the preview?
    Page 1 of 1