இரும்பு கனவுகள்
By ராஜேஷ்குமார்
()
About this ebook
நான் வாசலை விட்டு இறங்கும் போதே -பூக்காரி எதிர்ப்பட்டாள். இடுப்பில் இருத்திக்கொண்ட கூடையில் - சம்பங்கியும் ரோஜாவும் மலர்ந்தது. பழக்க தோஷத்தால் என்னைப் பார்த்து சிரித்தாள். வெற்றிலைக்காவி பற்களைக் காட்டி கேட்டாள்.
“என்னம்மா வேலைக்கு கிளம்பிட்டீங்களா?”
“ம்...”
“பூ... வேணுமா தாயீ...?”
“வேண்டாம்...தலையில இருக்கே...?”
“அது மல்லி தானே... ரெண்டு சம்பங்கியையும் சொருகு...”
“நீ விடமாட்டியே...?”
மணக்கிற சம்பங்கியும், ரோஜாவும்…. என் தலையில் ஏறிக் கொண்டது. ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தை டம்பப் பையிலிருந்து எடுத்து அவளுடையகையில் திணித்துவிட்டு பஸ் ஸ்டாப்பை நோக்கி போனேன். இந்தப் பூக்காரி எனக்கு இரண்டு வருஷமாய் பழக்கம். வாரத்தில் மூன்று நாளாவது நான் வேலைக்கு கிளம்பி வெளியே வரும் போது எதிர்ப்பட்டு விடுவாள். என் தலையில் பூ இருந்தாலும் என்னிடம் போணி பண்ணாமல் நகர மாட்டாள்.
இரண்டு நிமிஷ நடையில் பஸ் ஸ்டாப் வந்தது. கூட்டம் அதிகம் இல்லை. ஹிண்டு பேப்பரோடு ஒரு பெரியவர். காய்கறிகூடையோடு ஒரு கிழவி. கல்லூரி மாணவர்கள் போல தோற்றம் காட்டிய இரண்டு இளைஞர்கள். பஸ் ஷெல்டரின் பக்கவாட்டில் ஆபரேஷன் இல்லாமலேயே மூல நோயை குணப்படுத்த போவதாக புதிதாக ஒட்டப்பட்டிருந்த ஒரு போஸ்டர் சொல்லியது. போஸ்டரில் தேவையே இல்லாமல் ஒரு நடிகையின் படம்.
நான் போய் ஷெல்டர்க்கு கீழேநின்றேன். மணிக்கட்டில் நேரம் பார்க்க 9.20. பஸ் வர இன்னும் பத்து நிமிஷம் இருக்கிறது. டிபன் ஃபாக்ஸ் இருந்த பைக்குள் ‘மனோசக்தி’ இதழ் இருப்பது ஞாபகத்துக்கு வரவே -, அதை எடுத்துக் கொண்டு பக்கங்களை புரட்டினேன்.
ஒரு நிமிணம் கரைந்திருந்த போது - எனக்கு முன்பாய் ஏதோ வாகனம் ஒன்று வந்து நிற்க கலைந்தேன். நிமிர்ந்தேன்.
‘சென்னை தூர்தர்ஷன்’ என்று ஆங்கிலத்திலும் இந்திலும் எழுதப்பட்ட வாசகங்களோடு ஒரு வேன்.
நான்கைந்து பேர் இறங்கினார்கள். இரண்டு பேர்களின் கைகளில் காமிரா. ஒருவர் உருண்டை மைக்கோடு என்னை நெருங்கினார். ,
“எக்ஸ்க்யூஸ் மீ...! நீ ங்க காலேஜ் ஸ்டூடண்டா...? இல்லை வேலைக்கு போகிற பெண்ணா...?”
“வேலைக்கு போயிட்டிருக்கேன்.”
“எங்கே...?”
“தமிழ்நாடு டூரிஸம் அண்ட் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷனில்...”
“என்ன வேலை...”
“டெஸிக்னேஷன் கைடு...”
“நீங்க மிஸ்ஸா... மிஸஸா...?”
“மிஸ்… “நாங்க சென்னை தூர்தர்ஷன்... நேத்து வெளியான பட்ஜெட்டைப் பத்தி பொது மக்களோடகருத்தை திரட்டிட்டி வர்றோம்... நீங்களும் பட்ஜெட்டை பத்தி கமெண்ட் பண்ணனும்... இந்த பட்ஜெட்டைப் பத்தி என்ன நினைக்கறீங்க...?”
நான் புன்னகைத்தேன்.
‘‘என்னோட கமெண்ட் எப்படி இருந்தாலும் அதை அப்படியே டி.வி.யில் டெலிகாஸ்ட் பண்ணுவீங்களா...?’’
“பண்ணுவோம்...’’
“இந்த இந்திய ஜனநாயகத்தில் மக்களுக்கு எப்படி நம்பிக்கையில்லையோ... அதேமாதிரி பட்ஜெட்டில் சொல்லப்படுகிற திட்டங்களிலும் அவங்களுக்கு நம்பிக்கையில்லை. – போடுகிற
வரிகளையெல்லாம் முன்னாலேயே போட்டுவிட்டு அப்புறமும் எதுக்காக தனியா பட்ஜெட்…”
“அப்படீன்னா… வரியே விதிக்கக் கூடாதுன்னு சொல்றீங்களா?’’
“வரி விதிக்கலாம்... ஆனா... அந்த வரி விதிப்பு மக்களை இம்சைப்படுத்தாமே இருக்கணும்... பூவுக்கு வலிக்காமல் பூவை சேதப்படுத்தாமல் வண்டுதேன் எடுக்குமே... அந்த மாதிரி இருக்க வேண்டும்... ஆனா இப்போது போடப்படுகிற பட்ஜெட்டுக்கள் செடிகளின் ஆணி வேரையே ஹதம் பண்ணுகின்றன...”
“இப்போது இருக்கிற நிதி அமைச்சரைப் பத்தி என்ன நினைக்கிறீர்கள்...?”
“அவர் தன்னை கெட்டிக்காரர் மாதிரி காட்டிக்கொள்கிறார். அவ்வளவுதான்...”
“முடிவாக பட்ஜெட்டைப் பத்தி...?”
“ஏழைகளும், நடுத்தர வர்க்கத்தினரும் சந்தோஷப்படுகிற மாதிரி என்றைக்கு ஒரு பட்ஜெட் வருகிறதோ... அன்னைக்குத்தான் உண்மையான பட்ஜெட்...”
நான் சொல்லிக் கொண்டிருக்கும்போதே - தூரத்தில் பஸ்ஸின் முகம் தெரிந்தது. நான் போக வேண்டிய பஸ்
Read more from ராஜேஷ்குமார்
சிவப்பு வானம்!: (Sivappu Vaanam!) Rating: 5 out of 5 stars5/5முள் கிரீடம்! and ஓடும் வரை ஓடு! Rating: 0 out of 5 stars0 ratingsமரணத்திற்கு ஒரு மனு Rating: 5 out of 5 stars5/5சொர்க்க வாசல்..! Rating: 0 out of 5 stars0 ratingsசின்னஞ் சிறு கிலியே! Rating: 5 out of 5 stars5/5அந்த சந்திரனே சாட்சி..! Rating: 0 out of 5 stars0 ratingsமுள் முனையில் முகிலா Rating: 0 out of 5 stars0 ratingsதப்பு + தப்பு = சரி Rating: 0 out of 5 stars0 ratingsகொல்ல கொல்ல இனிக்குதடா..! Rating: 0 out of 5 stars0 ratingsஅக்மார்க் மர்டர் Rating: 0 out of 5 stars0 ratingsஆச்சர்யம்! ஆனால்... உண்மை! Rating: 0 out of 5 stars0 ratingsமன்னிக்கப்பட்ட மரணம் Rating: 0 out of 5 stars0 ratingsஓடாதே! ஒளியாதே! Rating: 0 out of 5 stars0 ratingsஒரு சின்ன மிஸ்டெத் Rating: 0 out of 5 stars0 ratingsசிறகடிக்க ஆசை! Rating: 0 out of 5 stars0 ratingsவிவேக்கின் 1000 நிமிஷங்கள் Rating: 5 out of 5 stars5/5புதிய பாடல் பாடு Rating: 0 out of 5 stars0 ratingsஒரு நாள் ராஜாக்கள் Rating: 0 out of 5 stars0 ratingsபகல் நேர மின்னல் Rating: 0 out of 5 stars0 ratingsதூரத்துப் பொன்மான் Rating: 0 out of 5 stars0 ratingsஅந்த ரத்த நாட்கள் Rating: 0 out of 5 stars0 ratingsலேகா என் லேகா Rating: 0 out of 5 stars0 ratingsகொலைவிழும் மலர்வனம் Rating: 0 out of 5 stars0 ratingsகோவையில் ஒரு குற்றம் Rating: 0 out of 5 stars0 ratingsவிவேக் விஷ்ணு வெற்றி Rating: 0 out of 5 stars0 ratingsஒன்று இரண்டு இறந்து விடு Rating: 0 out of 5 stars0 ratingsவானவில் குற்றம் Rating: 0 out of 5 stars0 ratingsஒற்றை மேகம் Rating: 0 out of 5 stars0 ratingsகண்ணை நம்பாதே Rating: 0 out of 5 stars0 ratings
Related to இரும்பு கனவுகள்
Related ebooks
Irumbu Kanavugal Rating: 5 out of 5 stars5/5Snehavin Sinegithan Rating: 4 out of 5 stars4/5ஒரு தப்புத் தாளம் ஒரு சரியான ராகம் Rating: 0 out of 5 stars0 ratingsOru Thappu Thaalam Oru Sariyaana Raagam Rating: 5 out of 5 stars5/5ஒரு முக்கிய அறிவிப்பு Rating: 0 out of 5 stars0 ratingsOru Mukkiya Arivippu Rating: 5 out of 5 stars5/5Pon Vaanam Panneer Thuvuthu Rating: 0 out of 5 stars0 ratingsபொன் வானம் பன்னீர் தூவுது... Rating: 0 out of 5 stars0 ratingsEnna Satham Indha Neram? Rating: 4 out of 5 stars4/5Jannal Seethaikal Rating: 0 out of 5 stars0 ratingsNylon Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsPagal Nera Alligal Rating: 0 out of 5 stars0 ratingsKozhaigal Rating: 0 out of 5 stars0 ratingsPodhu Nalam Ponnusamy Rating: 0 out of 5 stars0 ratingsParappatharku Oru Vanam Vendum Rating: 4 out of 5 stars4/5Panchavarna Kili Rating: 0 out of 5 stars0 ratingsபஞ்சவர்ணக் கி(ளி)லி Rating: 0 out of 5 stars0 ratingsPuthithaga Oru Bhoopalam Rating: 4 out of 5 stars4/5Unnai Naan Swasikiren… Rating: 0 out of 5 stars0 ratingsDinamite - 98 Rating: 0 out of 5 stars0 ratingsAadatha Oonjajkal Rating: 4 out of 5 stars4/5Ottraiyadi.. Paathaiyiley... Rating: 0 out of 5 stars0 ratingsமாறியது நெஞ்சம்! Rating: 0 out of 5 stars0 ratingsNewyork Nila Rating: 0 out of 5 stars0 ratingsEthirukal Thevai Rating: 5 out of 5 stars5/5எதிரிகள் தேவை Rating: 0 out of 5 stars0 ratingsNanthini Nalai Irakkiral! Rating: 3 out of 5 stars3/5Ootha Nila Rating: 0 out of 5 stars0 ratingsNinaikka Therindha Manamey! Rating: 0 out of 5 stars0 ratingsNettruvarai Nee Yaaro mm Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for இரும்பு கனவுகள்
0 ratings0 reviews
Book preview
இரும்பு கனவுகள் - ராஜேஷ்குமார்
1
ஒரு நிமிஷ கோபத்திலிருந்து நீங்கள் தப்பி விட்டீர்கள் என்றால் துக்கமான நாலு நாட்களிலிருந்து நீங்கள் தப்பி விட்டீர்கள் என்று அர்த்தம்.
"அம்மா... சரளா...!"
பூஜையறையிலிருந்து குரல் கொடுத்தார் சம்பத்ராஜ். மேஜையடியில் உட்கார்ந்து கல்லூரி பாட புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்த சரளா கலைந்தாள். இருபத்தியோர் வயது. சந்தன நிறம். பி.எஸ்.ஸி. மாத்ஸ் மூன்றாவது வருஷம். கமலுக்கும் கபிலுக்கும் ரசிகை. பாரதி பாட்டு அத்தனையும் மூளைக்குள். கைனடிக் ஹோண்டா ஸ்கூட்டரை வேகமாய் ஓட்டப் பிடிக்கும். கடி ஜோக்குகள் கைவசம் ஏராளம்.
என்னப்பா...?
ப்ரிஜ்ல சாமிக்கு போடற புஷ்பம் இருக்கு... பாலிதீன் கவர்ல போட்டு கட்டி வெச்சிருக்கேன்... கொண்டு வந்து தர்றியா...?
இதோ...
எழ முயன்றவளை சமையலறையிலிருந்து வெளிப்பட்ட அம்மா ஜெயாவின் நீ படிடி
என்ற குரல் அவளை மறுபடியும் உட்கார வைத்தது.
பூஜை பண்ணப்போறவர்... புஷ்பத்தை எடுத்துட்டு போகக் கூடாதோ...? படிக்கிற பொண்ணுக்கு ‘நம நம’ன்னு வேலையை சொல்லிகிட்டு...
ஜெயா ப்ரிஜைத் திறந்து - புஷ்பம் இருந்த பாலிதீன் கவரை எடுத்துக் கொண்டு - பூஜையறையை நோக்கிப் போனாள். சம்பத்ராஜ் ஈர வேட்டியோடு சம்மணம் போட்டு உட்கார்ந்திருந்தார். ஐம்பது வயது உடம்பு.
எதிரில் பிள்ளையார்பட்டி விநாயகர்.
சம்பத்ராஜ் மனைவியைப் பார்த்து புன்னகைத்தார்,
குளிச்சிட்டியா... ஜெயா...
பார்த்தா தெரியலையாக்கும்...?
சரி உட்கார்...
எதுக்கு...?
இன்னிக்கு சங்கடஹரசதுர்த்தி, தம்பதி சமேதரா உட்கார்ந்து விநாயகர் அகவல் பாடினா ரொம்பவும் நல்லது...
சரியா... போச்சு... உங்க கூட பூஜை ரூம்ல நானும் உட்கார்ந்துட்டா... அடுப்படி வேலையை கவனிக்கிறது யாரு... சரளா காலேஜ் போக ரெடியாயிட்டா... சப்பாத்திக்கு மாவு பிசைஞ்சு வெச்சிருக்கேன்... குக்கர்ல உருளைக் கிழங்கு வெந்துட்டிருக்கு... எனக்கும் சேர்த்து பூஜை பண்ணுங்க...
ஜெயா சமையலறை கவலையோடு - வெளியே வந்தபோது முன்ஹாலில் டெலிபோன் கத்திக் கொண்டிருந்தது.
சரளா! போன்ல யார்ன்னு பாரு...! அப்பாவை யாராவது கேட்டா... பூஜை ரூம்ல இருக்கிறதாய் சொல்லு... ஏதாவது முக்கியமான விஷயமா இருந்தா... விவரம் கேட்டு வச்சுக்க...
சரளா புத்தகமும் கையுமாய் போய் ரிஸீவரை எடுத்தாள்.
"ஹலோ...’’
ஒரு ஆண் குரல் கேட்டது.
231157...?
ஆமா...
சம்பத்ராஜ் வீடுதானே...?
ஆமா...
அவருக்கு ஒரே ஒரு பொண்ணு பேரு சரளாதானே?
ஆமா...! நீங்க...?
சொல்றேன்... சொல்றேன்... அந்த சரளா கூட நான் பேசணும்...
நான் சரளாதான் பேசறேன்...
நிஜமா... சரளாவா பேசறது...?
தேங்க் காட்...!
என்ன விஷயம்...?
உன்னை காலேஜுக்கு போகும் போது ரொம்ப நாள் பார்த்துட்டிருக்கேன்... உன் கிட்ட ஒரு விஷயம் கேக்கணும்...
யா... யார் நீங்க...?
"சொல்றேன்... என்னை மொதல்ல கேள்வி கேட்க விடுங்க.’’
என்ன கேள்வி...
உன்னோட...ப்ரா சைஸ் எவ்வளவு...?
யூ...யூ... ராஸ்கல்...!
சரளா கோப ரத்தம் பாய்ந்த முகத்தோடு கத்திக் கொண்டிருக்க –
மறுமுனையில் ரிஸீவர் வைக்கப்பட்டு விட்டது.
ஜெயா சமையலறையிலிருந்து எட்டிப் பார்த்தாள்.
"போன்ல யார்டி...?
"தெரியலை... எவனோ பொறுக்கி நாயி...’’
"அசிங்கமா பேசினானா...?
ஆமா...
"ராஸ்கல்...! இனிமே போன் அடிச்சா நீ அட்டெண்ட் பண்ணாதே...’’
"சே... படிக்கிற மூடே போச்சு...! இப்படி போன்ல அசிங்கமா பேசறவனையெல்லாம்... முச்சந்தியிலே நிக்க வெச்சு... போன் பண்ணின கையையும்... பேசின வாயையும் துண்டிச்சு...
‘கிணிங்...’
வாசலில் காலிங் பெல் கூப்பிட்டது.
சரளா முன்பக்க வாசலை எட்டிப் பார்த்தாள். வீட்டு புரோக்கர் இளிப்போடு தெரிந்தார்.
கும்பிட்டார்.
என்னம்மா... அய்யா இருக்காரா...
பூஜை ரூம்ல இருக்கார்... பத்து நிமிஷமாகும். உட்காருங்க...
மாடி போர்ஷனுக்கு ஆள் வந்திருக்கு...
ஜெயா மலர்ந்தாள்.
சரளா...! நீ அடுப்படி வேலையைக் கொஞ்சம் கவனி. நான் பேசிட்டு வர்றேன்...
போனாள்.
புரோக்கருக்கு பக்கத்திலேயே அந்த பெண் தெரிந்தாள். வயது முப்பத்தைந்துக்குள் இருக்கலாம். மாநிறமாய் இருந்தாலும் பூசிக் குளித்த மஞ்சளில் உடம்பு புது நிறமாய்