ஒரு சின்ன மிஸ்டெத்
By ராஜேஷ்குமார்
()
About this ebook
ஸ்ரீபதி ட்ரேடர்ஸ்.
எட்டுக்குடிக்கு ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருந்த அந்த டவுனின் மையப் பகுதியல் அமைந்திருந்தது அந்த பம்ப்செட் ஸ்பேர் பார்ட்ஸ் கடை. சதுரம் சதுரமான ஷெல்ஃபுகளில் பம்ப்செட் ஸ்பேர்கள் இனம் பிரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தன.
மேஜையோரம் நின்றிருந்த அந்த காக்கிப் பேன்ட்-பதினாறு வயசுப் பையன் கஸ்டமர் யாருடனோ பேசிக்கொண்டிருந்தான்.
“யார் ஸார் வேலும்?”
“எங்கேடா உன் முதலாளி?”
“இப்ப வந்துடுவார் ஸார்...”
“இப்பன்னா எப்போ?”
“எட்டரை மணிக்கு...”
தன் வாட்சில் பார்வையைப் போட்டார்.
8.25
“எட்டரைன்னா ஒரு எட்டே முக்கால் ஆகுமா...?”
“அதெப்படிங்க...? எட்டரைன்னா எட்டரைக்குத்தான் வருவார்...”
ஒரு ஃபோல்டிங் சேரை எடுத்து விரித்துப் போட்டான்.இப்படி உக்காருங்க ஸார்... அஞ்சு நிமிஷத்தில் வந்துடுவார். முதலாளி கொஞ்சம் ஆசாரமானவர். வீட்ல பூஜை... அது... இதையெல்லாம் முடிச்சுட்டு - கோயிலுக்கு போய்ட்டு அப்புறமாத்தான் இங்கே வருவார்...”
அவன் சொல்லி முடித்த விநாடி வாசலில் மொபெட் சத்தம். கிருஷ்ணமூர்த்தி வந்து சேர்ந்திருந்தான். நீலநிறப் பூக்கள் தெறித்த டி.ஸி. சர்ட்டை உடம்புக்குக் கொடுத்து, வேஷ்டி கட்டியிருந்தான். நெற்றி நிறைய திருநீற்றுப்பட்டை, நடுவில் ஒரு குங்குமக் கீற்று. அசப்பில் கொஞ்சம் ‘முந்தானை முடிச்சு’ பாக்யராஜ் மாதிரி பார்வையை வருடினான்.
“குட்மார்னிங் ஸார்...”
“குட்மார்னிங்!”
கிருஷ்ணமூர்த்தி மொபெட்டை ஸ்டாண்ட் இட்டுவிட்டு கடைப்படிகளில் ஏறினான். உட்கார்ந்திருந்த அந்த கஸ்டமர் எழுந்தார்.
“வந்து ரொம்ப நேரமாச்சுங்களா?”
“இல்லே... இப்பத்தான் வந்தேன்.”
“மன்னிக்கணும்... கோயில்ல பூஜை முடிய லேட் ஆயிடுச்சு...”
“இருக்கட்டுங்க... இதுக்கு எதுக்கு மன்னிப்பு கின்னிப்பு எல்லாம்?”
கிருஷ்ணமூர்த்தி புன்னகைத்தபடியே நாற்காலிக்கு உடம்பைக் கொடுத்தான். எட்டுக்குடியின் பரம்பரைப் பாரம்பரியமுள்ள அந்த கோவிந்தராஜ் குடும்பத்தில் மூன்றாவது சகோதரன் இந்த கிருஷ்ணமூர்த்தி. இந்த முப்பத்தைந்தாவது வயதில் கையிலுள்ள ஆறுவயசுப் பையனைப் டவுன் எல்கேஜில் சேர்த்திடலாமா அல்லது கிராமத்து எலிமெண்ட்ரி பள்ளியிலேயே தவழவிடலாமா? என்று பெரிதாய் யோசனை பண்ணிக் கொண்டிருக்கிறான்.
கஸ்டமர்களிடம் இவன் பேசினால் அதில் ஒரு நயம் இருக்கும்... அந்த நயத்துக்காகவே இவன் வியாபாரம் நிமிர்வோடே இருக்கிறது
Read more from ராஜேஷ்குமார்
மரணத்திற்கு ஒரு மனு Rating: 5 out of 5 stars5/5சொர்க்க வாசல்..! Rating: 0 out of 5 stars0 ratingsசின்னஞ் சிறு கிலியே! Rating: 5 out of 5 stars5/5சிவப்பு வானம்!: (Sivappu Vaanam!) Rating: 5 out of 5 stars5/5முள் முனையில் முகிலா Rating: 0 out of 5 stars0 ratingsவிவேக்கின் 1000 நிமிஷங்கள் Rating: 5 out of 5 stars5/5அக்மார்க் மர்டர் Rating: 0 out of 5 stars0 ratingsஇரும்பு கனவுகள் Rating: 0 out of 5 stars0 ratingsமுள் கிரீடம்! and ஓடும் வரை ஓடு! Rating: 0 out of 5 stars0 ratingsஆச்சர்யம்! ஆனால்... உண்மை! Rating: 0 out of 5 stars0 ratingsஅந்த சந்திரனே சாட்சி..! Rating: 0 out of 5 stars0 ratingsகண்ணை நம்பாதே Rating: 0 out of 5 stars0 ratingsதப்பு + தப்பு = சரி Rating: 0 out of 5 stars0 ratingsஓடாதே! ஒளியாதே! Rating: 0 out of 5 stars0 ratingsசிறகடிக்க ஆசை! Rating: 0 out of 5 stars0 ratingsமிஸ். பாரதமாதா Rating: 0 out of 5 stars0 ratingsஒற்றை மேகம் Rating: 0 out of 5 stars0 ratingsஅந்த ரத்த நாட்கள் Rating: 0 out of 5 stars0 ratingsகாகித ஆயுதங்கள் and வா அருகில் வா Rating: 0 out of 5 stars0 ratingsபகல் நேர மின்னல் Rating: 0 out of 5 stars0 ratingsமன்னிக்கப்பட்ட மரணம் Rating: 0 out of 5 stars0 ratingsகொலைவிழும் மலர்வனம் Rating: 0 out of 5 stars0 ratingsசிந்திய ரத்தம் இந்திய ரத்தம் Rating: 0 out of 5 stars0 ratingsஜனவரி மரணங்கள் Rating: 0 out of 5 stars0 ratingsபுதிய பாடல் பாடு Rating: 0 out of 5 stars0 ratingsதூரத்துப் பொன்மான் Rating: 0 out of 5 stars0 ratingsலேகா என் லேகா Rating: 0 out of 5 stars0 ratingsகொல்ல கொல்ல இனிக்குதடா..! Rating: 0 out of 5 stars0 ratingsவானவில் குற்றம் Rating: 0 out of 5 stars0 ratings
Related to ஒரு சின்ன மிஸ்டெத்
Related ebooks
Oru Chinna Missdeath Rating: 5 out of 5 stars5/5Irandil Ondru Rating: 0 out of 5 stars0 ratingsHongkong Vizhigal Rating: 0 out of 5 stars0 ratingsOru Nalliravin Marupakkam Rating: 0 out of 5 stars0 ratingsThee Kozhunthil Pani Thuliyai..!!! Rating: 0 out of 5 stars0 ratingsAgmark Thorogam Rating: 0 out of 5 stars0 ratingsEn Nizhalukkum Urakkamillai Rating: 0 out of 5 stars0 ratingsIdhayathil Vizhuntha Thirumana Maalai! Rating: 0 out of 5 stars0 ratingsAntha Sandhirane Saatchi Rating: 4 out of 5 stars4/5அந்த சந்திரனே சாட்சி..! Rating: 0 out of 5 stars0 ratingsHongkong Vizhigal and Vidinthal Iravu Rating: 0 out of 5 stars0 ratingsAntha Chinna Pennin Snegam Rating: 1 out of 5 stars1/5Thisai Maarum Alaigal Rating: 0 out of 5 stars0 ratingsNadunishi Thendral Rating: 5 out of 5 stars5/5Saatharana Manidhan Rating: 0 out of 5 stars0 ratingsAgmark Drogam Rating: 4 out of 5 stars4/5Tamil Selvi Rating: 0 out of 5 stars0 ratingsIdhaya Regai Rating: 5 out of 5 stars5/5Kaalam Kadantha Uravugal Rating: 0 out of 5 stars0 ratingsMaandavan Kattalai Rating: 0 out of 5 stars0 ratingsUyirth Thirudargal Rating: 0 out of 5 stars0 ratingsKurinji Pookkal Engum Pookkum Rating: 0 out of 5 stars0 ratingsPookkalilum Theepidikkum Rating: 0 out of 5 stars0 ratingsUllam Kavarven Rating: 5 out of 5 stars5/5காகித ஆயுதங்கள் and வா அருகில் வா Rating: 0 out of 5 stars0 ratingsVaa Arugil Vaa and Kagitha Ayuthangal Rating: 0 out of 5 stars0 ratingsKilakku Sivakkaiyile Rating: 0 out of 5 stars0 ratingsஎடு ஆயுதம்! Rating: 0 out of 5 stars0 ratingsEdu Aayutham Rating: 5 out of 5 stars5/5Raavana Raajyam Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for ஒரு சின்ன மிஸ்டெத்
0 ratings0 reviews
Book preview
ஒரு சின்ன மிஸ்டெத் - ராஜேஷ்குமார்
1
காப்பி கேட்டு நேரம் எத்தனை ஆகுது...?
வீட்டுக்குள் பார்த்துக் கத்தினார் கோவிந்தராஜ். இன்னும் இரண்டே வருஷங்களில் வயதில் அரை செஞ்சுரியை அடிக்கப் போகிறவர். தலைப் பிரதேசத்தில் சொற்பமாய் வழுக்கை. சிலம்புச் செல்வரின், மீசை, பாரம்பரியம் உள்ள ஒரு குடும்பத்தின் உத்திரத் தூண்.
சும்மா கத்தினா ஆச்சா...? பால் வந்துதானே வைக்க முடியும்...!
சமையலறையிலிருந்து பாக்யலட்சுமி பதிலுக்கு சத்தம் போட்டாள். துண்டை உதறினார் கோவிந்தராஜ். நாற்காலியை சப்தித்து எழுந்தார்.
நீயே போட்டு நீயே குடிச்சுக்...
அவசரமாய் சமையலறைக்குள்ளிருந்து ஓடிவந்தாள் பாக்யலட்சுமி. ஐந்து வருஷங்களுக்கு முன்னால்வரை அழகாய் இருந்திருந்திப்பாள் போல் தெரிந்தது. நூல் புடைவைக்குள் நுழைந்திருந்தாள். கழுத்தில் கனமான தங்க சமாச்சாரம் மினுக்கடித்தது. காதில் கட்டி கட்டியாய் தொங்கட்டான்கள்.
காலங்கார்த்தால என்ன அவசரம் உங்களுக்கு...?
வெளியே போகணும்...
பால் வந்ததும் காப்பியை குடிச்சிட்டு... அப்புறம் நிதானமா போறது...?
நிதானமா போக முடியாது...
அப்படியென்ன தலைபோகிற காரியம்... காப்பியைக் குடிச்சிட்டுப் போங்க...
ஆம்பிளைக்கு ஆயிரம் வேலை இருக்கும். சும்மா தொண தொணன்னு கத்தாதே!
இரைந்தபடியே வெளியேறினார்.
காலை ஏழு மணி வெளிச்சம் பளீரென்று சுற்றுப்புறத்தில் பரவியிருந்தது. கப்பி ரோட்டில் வேஷ்டியை மடித்துக் கட்டிக்கொண்டே நடந்தார் கோவிந்தராஜ். தட்டுப்படுகிறவர்களின் அண்ணே... வணக்கண்ணே
க்குப் பதிலாகக் கையசைத்துக்கொண்டே போனார்.
அரை கிலோமீட்டர் தூரம் நடந்ததும் –
சட்டென புருவத்தைச் சுருக்கி நின்றார்.
சாராயக்கடை!
போர்டில்லாமல் - சத்தமில்லாமல் இயங்கிக் கொண்டிருந்தது. போன மாதத்தின் ஒருநாள் வந்து ஆர்ப்பாட்டமாய்க் குதித்த அரசு ஆய்வாளரின் கையில் கடைக்காரர் எதையோ பலமாய் அழுத்தியிருக்க-அந்த நன்றி விசுவாசத்தில் இன்னும் கடை ஓடிக்கொண்டிருக்கிறது.
கோவிந்தராஜின் புருவச்சுருக்கத்துக்கான காரணகர்த்தா - சாராயக் கடையின் உட்பக்கம் தரையில் மடங்கி விழுந்து கிடந்தார்.
அவசர அவசரமான நடையில் கோவிந்தராஜ் சாராயக்கடைக்குள் நுழைந்தார். கீழே விழுந்து கிடந்த ஆசாமியை நெருங்கினார்.
வெங்கடேசன்!
அவருடைய தம்பி. உடுத்தியிருந்த கதர் சர்ட்டும்- வேஷ்டியும் சாராய ஈரத்தில் நனைந்திருக்க-மல்லாந்த நிலையில் கிடந்தார். பிரிந்திருந்த வலது கையினின்றும் உருண்ட பாட்டில் ஒரு அடி தள்ளி விழுந்திருந்தது.
எழுந்து திரும்பினவரின் பார்வையில் - சாராயக்கடை முனியப்பன் தெரிந்தான்.
டேய் முனியப்பா...
அவன் திரும்பினான்.
சாராயக் கடைக்குள் கோவிந்தராஜின் பிரவேசத்தைப் பார்த்து அதிசயத்தில் ஒரு நிமிஷம் நீந்தியவன்- கீழே கிடக்கிற வெங்கடேசனையும்
குடும்ப மானத்தையே கெடுக்கிறான்...
- என்கிற கோவிந்தராஜின் முணுமுணுப்பையும் கிரகித்து - முன்னால் ஓடி வந்தான்
அண்ணே, என்ன கேட்டீங்க?
கொஞ்சம் தண்ணி குடுடா...
.
முனியப்பன் சட்டென்று மேஜைக்குக் கீழே இருந்த மண் கூஜாவிலிருந்து ஒரு தம்ளர் நீரை எடுத்துத் தந்தான். கோவிந்தராஜ் தம்ளரை வாங்கிக்கொண்டு வெங்கடேசனிடம் குனிந்தார்.
"சலீர்... சலீர்...’’ நீரை ஷவர் மாதிரி அவர் முகத்தில் தெளித்தார்.
புருவத்தைச்சுருக்கி - முகத்தைச் சுளித்தார் வெங்கடேசன். கொஞ்சமாய் தரையில் புரண்டு - ‘ழாழா...’ என்று எதையோ குழறினார்.
டேய்... வெங்கடேசா...!
கண்ணை இடுக்கினார் வெங்கடேசன்.
யார்ரா... எம் பேரைச் சொல்றவன்...?
கோவிந்தராஜ் மறுபடியும் ஒரு கொத்து தண்ணீரை வெங்டேசனின் முகத்தை நோக்கி அடிக்க -
வெங்டேசன் வந்திருக்கிற அண்ணனை உணர்ந்தார்.
சட்டென எழ முயன்றார்.
பாதி எழுந்து ‘பொத்’ தெனத் தரையில் சரிந்தார்.
எந்திர்ரா. மேல... குடிச்சு குடுச்சு குடும்ப மானத்தை வாங்கவா பொறந்தே?
கையைப் பிடித்து வெங்கடேசனை எழுப்பி நிறுத்தினார். சடலம் மாதிரி நிற்க முடியாமல் அவர் மேலேயே சரிந்தார் வெங்கடேசன். சிரம மூச்சுக்களோடு அவரைத் தாங்கி நிறுத்தி - தோளில் கையைத் தாங்கலாய்ப் போட்டுக்கொண்டு கடையினின்றும் வெளியே நகர்த்திப் போனார்.
சாலைக்கு வந்ததும் –
இரண்டு பக்கமும் பார்வையை விரட்டினார். அந்த வில் வண்டி