கொல்ல கொல்ல இனிக்குதடா..!
By ராஜேஷ்குமார்
()
About this ebook
செத்துப் போனாள் திலகா.
சரியாய் முப்பது மணி நேரம். ஒரு பகல், ஒரு ராத்திரி... மறுநாள் பகல் பனிரெண்டு மணிக்கு நினைவு வராமல் மூச்சுவிடுவதை நிறுத்திக் கொண்டாள்.
ஜெயகர் அழுது அழுது முகம் வற்றிப்போய் பிரமை பிடித்திருந்தான்.
சம்பூர்ணம் இரண்டொரு தடவை மயக்க நிலைக்கு போய் விட்டு திரும்பியிருந்தாள். சம்பூர்ணத்தின் கணவர் மகாதேவன் துண்டை வாயில் பொத்தி குமுறித் தீர்த்தார்.
திலகா போஸ்ட் மார்ட்டம் போய் ஆஸ்பத்திரியின் சம்பிரதாயங்களை முடித்து காடாத்துணியில் சுற்றப்பட்டு வீடு திரும்பி தெரு ஜனங்கள், ஜெயகரின் ஆபீஸ் கும்பல் கொண்டு வந்து சாத்திய மாலைகளில் புதைந்து - இருட்டுகிற வேளையில் நொய்யல் ஆற்று மயானத்திற்கு போய் மறுபடியும் ஒரு தடவை நெருப்பில் குளித்து சாம்பலாகி உதிர்ந்துபோன ரெண்டாம் நாள்.
மோவாயில் நான்கு நாள் தாடியோடு அறைக்குள் உட்கார்ந்து சுவரையே பார்த்துக்கொண்டிருந்த ஜெயகரை சம்பூர்ணத்தின் குரல் கலைத்தது. கம்மிப் போன குரல்.
“ஜெயகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வந்திருக்கார். ஏதோ கேக்கணுமாம்.”
“என்ன விஷயமாம்?” ஆச்சர்யமாய் தலையை உயர்த்தினான்.
“தெரியலை.”
ஜெயகர் தொய்வாய் எழுந்து வந்தான். ஹால் சோபாவில் இன்ஸ்பெக்டர் கோகுல்நாத் சாய்ந்திருந்தார்.
“சிரமம் தர்றதுக்காக மன்னிக்கணும் மிஸ்டர் ஜெயகர்.”
“ஸோ வாட்? நீங்க உங்க டூட்டியைச் செய்யறீங்க. என்ன கேக்கணுமோ கேளுங்க இன்ஸ்பெக்டர்.
Read more from ராஜேஷ்குமார்
சொர்க்க வாசல்..! Rating: 0 out of 5 stars0 ratingsசின்னஞ் சிறு கிலியே! Rating: 5 out of 5 stars5/5முள் முனையில் முகிலா Rating: 0 out of 5 stars0 ratingsமுள் கிரீடம்! and ஓடும் வரை ஓடு! Rating: 0 out of 5 stars0 ratingsஒரு சின்ன மிஸ்டெத் Rating: 0 out of 5 stars0 ratingsசிவப்பு வானம்!: (Sivappu Vaanam!) Rating: 5 out of 5 stars5/5மரணத்திற்கு ஒரு மனு Rating: 5 out of 5 stars5/5உலராத ரத்தம் Rating: 0 out of 5 stars0 ratingsஅக்மார்க் மர்டர் Rating: 0 out of 5 stars0 ratingsதப்பு + தப்பு = சரி Rating: 0 out of 5 stars0 ratingsஇரும்பு கனவுகள் Rating: 0 out of 5 stars0 ratingsஓடாதே! ஒளியாதே! Rating: 0 out of 5 stars0 ratingsஅந்த சந்திரனே சாட்சி..! Rating: 0 out of 5 stars0 ratingsகண்ணை நம்பாதே Rating: 0 out of 5 stars0 ratingsரத்தம் சிந்தும் ரோஜாக்கள் Rating: 0 out of 5 stars0 ratingsவிவேக்கின் 1000 நிமிஷங்கள் Rating: 5 out of 5 stars5/5கருநாகபுர கிராமம் Rating: 0 out of 5 stars0 ratingsஒன்று இரண்டு இறந்து விடு Rating: 0 out of 5 stars0 ratingsஉன்னைக் கொன்ற நாள் முதலாய்... Rating: 0 out of 5 stars0 ratingsஆச்சர்யம்! ஆனால்... உண்மை! Rating: 0 out of 5 stars0 ratingsகொலைவிழும் மலர்வனம் Rating: 0 out of 5 stars0 ratingsவெல்கம் டூ மார்ச்சுவரி Rating: 0 out of 5 stars0 ratingsமிஸ். பாரதமாதா Rating: 0 out of 5 stars0 ratingsஒற்றை மேகம் Rating: 0 out of 5 stars0 ratingsதிக் திக் டிசம்பர் Rating: 0 out of 5 stars0 ratingsதூரத்துப் பொன்மான் Rating: 0 out of 5 stars0 ratingsபகல் நேர மின்னல் Rating: 0 out of 5 stars0 ratingsமுடிந்தால் உயிரோடு Rating: 0 out of 5 stars0 ratingsசிறகடிக்க ஆசை! Rating: 0 out of 5 stars0 ratings
Related to கொல்ல கொல்ல இனிக்குதடா..!
Related ebooks
Kolla Kolla Inikkuthada Rating: 0 out of 5 stars0 ratingsKolaivizhum Malarvanam Rating: 0 out of 5 stars0 ratingsகொலைவிழும் மலர்வனம் Rating: 0 out of 5 stars0 ratingsNenjukku Nee Azhzgu Rating: 0 out of 5 stars0 ratingsநெஞ்சுக்கு நீ அழகு..! Rating: 0 out of 5 stars0 ratingsOru Nalliravin Marupakkam Rating: 0 out of 5 stars0 ratingsEnbilathanai Veyil Kayum Rating: 0 out of 5 stars0 ratingsசிறுகதைகள் II Rating: 0 out of 5 stars0 ratingsSirukathaigal-II Rating: 0 out of 5 stars0 ratingsVidiyaatha Iravondru Vendum Rating: 0 out of 5 stars0 ratingsPoovum Puyalum Rating: 0 out of 5 stars0 ratingsOlivillai Maraivillai Rating: 0 out of 5 stars0 ratingsOonjal Rating: 0 out of 5 stars0 ratingsUrugi Odum Mezhugugal Rating: 5 out of 5 stars5/5Anthimazhai Pozhigirathu Rating: 0 out of 5 stars0 ratingsThattungal Irakkapadum Rating: 0 out of 5 stars0 ratingsதட்டுங்கள் இறக்கபடும்...! Rating: 0 out of 5 stars0 ratingsOlivillai Maraivillai Rating: 4 out of 5 stars4/5Idhayam Ezhuthiya Kavithai... Rating: 0 out of 5 stars0 ratingsAabathe, Arugil Vaa Rating: 4 out of 5 stars4/5Kannaley Kollathey...! Rating: 0 out of 5 stars0 ratingsகலங்காதே கண்மணியே! Rating: 0 out of 5 stars0 ratingsAppa Kuruvigal Rating: 0 out of 5 stars0 ratingsAnbil Vantha Raagame Rating: 5 out of 5 stars5/5Thaalam Thappiya Paadal Rating: 0 out of 5 stars0 ratingsMaalayil Pookkum Malargal Rating: 0 out of 5 stars0 ratingsOctober Pouranami Rating: 5 out of 5 stars5/5Karuda Karuda Rating: 0 out of 5 stars0 ratingsKanavugal Inge Virkkapadum Rating: 0 out of 5 stars0 ratingsIni Varum Nimishangal Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for கொல்ல கொல்ல இனிக்குதடா..!
0 ratings0 reviews
Book preview
கொல்ல கொல்ல இனிக்குதடா..! - ராஜேஷ்குமார்
1
திலகம் கண் விழித்தபோது சூரியன் கிழக்குத் திசையில் விடியற்கால இருட்டை ஒட்டடை அடித்துக் கொண்டிருந்தான். பக்கத்து பங்களா பவழ மரத்தில் ஏகப்பட்ட குருவிகள் குடும்பம் குடும்பமாய் கீச்சிட்டன. கோட்டைமேடு மத்தியில் கட்டப்பட்டிருந்த ஒலிபெருக்கி அல்லா ஹ... ஹூ... அக்பர் என்றது. தெருமுனையில் இருந்த டீக்கடையில் ரேடியோ பெட்டி சிலோன் ஸ்டேஷனுக்காக சுருதி கூட்டிக் கொண்டிருந்தது.
திலகா எழுந்தாள். ராத்திரி அவிழ்ந்துபோன பிரா கொக்கியை மாட்டிக்கொண்டாள். ஜாக்கெட் பட்டன்களை பொருத்திக்கொண்டு, சேலையை ஒழுங்காய் சுற்றிக்கொண்டு - அருகே படுத்திருக்கும் தன் கணவன் ஜெயகரைப் பார்த்தாள். இடுப்பில் கட்டியிருந்த லுங்கி நெகிழ்ந்து போயிருக்க - திலகா வெட்கம் கலந்த புன்னகையோடு போர்வையை எடுத்து அவன் மேல் போர்த்திவிட்டாள்.
கட்டிலைவிட்டு கீழே இறங்க முற்பட்டாள்.
அடுத்த விநாடி –
ஜெயகரின் வலது கை ஆக்டோபஸ் டென்ட்ரிக் கிளாப் வளைந்து திலகாவின் இடுப்பை வளைத்து இழுத்தது. அவன் மேல் அப்படியே சரிந்தாள். அம்... மா!
முழிச்சுட்டுதான் இருக்கீங்களா?
உம்
என்ன உம்? விடுங்க. நான் போகணும், விடிஞ்சுட்டு வருது. உங்கப்பாவும் உங்கம்மாவும் இந்நேரம் எழுந்திரிச்சிருப்பாங்க.
மணி அஞ்சரைதானே ஆச்சு. கொஞ்ச நேரம் படுத்திட்டு போயேன், லேட்டா எழுந்திரிச்சு போற மருமகளை - இந்த மாமியார் திட்டமாட்டா.
எனக்குத் தெரியாதா! நமக்கு கல்யாணம் முடிஞ்சு ஆறு மாசம் முடியப் போகுது. இந்த நூத்தி எண்பது நாள்ல ஒரு நாலாவது உங்கம்மா என்னை ஒரு கோபப் பார்வைகூட பார்த்ததில்லீங்க. இந்த காலத்துல ஒரு பொண்ணுக்கு நல்ல புருஷனைக் காட்டிலும் நல்ல மாமியார் தான் கிடைக்கணும். எனக்கு ரெண்டுமே நல்லபடியா அமைஞ்சிருச்சி.
அப்போ எங்கப்பா?
அவரை நான் மாமனாராவே நினைச்சி பார்க்கிறதில்லையே எங்கப்பா மாதிரிதானே நினைச்சிருக்கேன். எனக்கு அப்பா இல்லாத குறையை அவர் மூலமாத்தான் தீர்த்துக்கிறேன்.
ஜெயகர் அவளை இழுத்து மேலே போட்டுக் கொண்டான். இதமான கனத்தோடு ஒரு போம் மெத்தையின் மென்மையோடு அவன் மேல் புரண்டாள். ஜெயகர் அவள் கழுத்தோரம் முகம் புதைத்தான், சொன்னான்.
எங்க எல்லார்க்கும் ஐஸ் வெச்சு எப்படியோ கைக்குள்ளே போட்டுக்கிட்டே!
ஐஸ் இல்லீங்க. அன்பு வெச்சேன். சரி, விடுங்க. நான் போகணும் பாத்ரூம்ல ஷவர் சத்தம் கேட்குது. அத்தை குளிச்சிட்டிருக்காங்கன்னு நினைக்கிறேன். அவங்க குளிச்சிட்டு வர்றதுக்குள்ளே காபி கலந்து வெக்கணும். ம்... விடுங்க...
விட்டான் ஜெயகர்.
எனக்கும் காப்பி.
பல்லைத் தேய்ச்சிட்டு சமையல்கட்டு வாங்க. காப்பி டபராவிலே காத்திட்டிருக்கும்.
ஏய் திலகா, இன்னிக்கு ஒரு நாள் பல்லைத் தேய்க்காமே காபி குடிக்கிறேனே ப்ளீஸ்... பல்லைத் தேய்க்காமே காபி குடிச்சாத்தான் ஒரு கிக்கே வருது.
மூச்! எழுந்திரிக்கிறீங்க. பேஸ்ட்டையும், பிரிஷ்ஷையும் எடுக்கறீங்க சுத்தமா பல்லைத் தேய்க்கறீங்க. நல்ல பிள்ளையா சமையல்கட்டுக்கு வர்றீங்க. நான் தர்ற காபியை குடிக்கறீங்க... ஓ.கே?
திலகா அறையை விட்டு வெளியே வந்தாள்.
அதே விநாடி –
அத்தை சம்பூர்ணம் தலைக்கு குளித்து ஈரத் தலையில் சுற்றிய டவலோடும், தாறுமாறாய் உடம்பைச் சுற்றிக்கொண்ட புடவையோடும் பாத்ரூமினின்றும் வெளிப்பட்டாள். மஞ்சள் பூசிய முகம் புன்னகையில் விரிந்தது.
என்னம்மா திலகா, இப்பத்தான் எழுந்திரிச்சியா?
ஆமா அத்தை.
பால் வாங்கி வெச்சிருக்கேன். எல்லார்க்குமா காபி போட்டுடம்மா?
இதோ, நிமிஷத்துல போட்டுடறேன் அத்தை.
ஜெயகர் எழுந்திரிச்சிட்டானா?
ம். காப்பிக்காக காத்திட்டிருக்கார் அத்தை.
பல்லை விளக்காம அவனுக்கு காபி தந்துடாதே.
தரமாட்டேன்... மாமா மாடியில இருக்காரா? வாக்கிங் போயிட்டாரா அத்தை?
அஞ்சு மணிக்கே எழுந்திரிச்சு போயிட்டாரம்மா. வாக்கிங் முடிச்சுட்டு வர்ற நேரம்தான். அவருக்கும் சேர்த்தே காபியை கலந்துடு திலகா.
சரி அத்தை...
சம்பூர்ணம் பூஜை அறைக்குள் நுழைந்து கொள்ள திலகா சேலையை லேசாய் உயர்த்தி இடுப்பில் செருகிக்கொண்டு சமையலறையின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே போனாள்.
சட்டென்று அந்த வாசம் அவள் நாசியை நெருடியது.
மூக்கைச் சுளித்தாள். அதென்ன வாசம்? வாசத்தின் இனம் புரியாமல் சில விநாடிகள் சமையலறையைச் சுற்றிப் பார்த்தாள்.
பிடிபடவில்லை. அடுப்பின் மேடைமேல் பாத்திரத்தில் நுரைப்பால் ததும்பியது. பில்டரில் டிகாஷன் காத்திருந்தது.
இந்த வாசனையை கண்டுபிடிக்க இது நேரமில்லை.
முதலில் காப்பியை கலந்தாக வேண்டும். அலமாரி மேல் இருந்த தீப்பெட்டியை எடுத்துக்கொண்டு காஸ் சிலிண்டரை நெருங்கி அதன் குமிழை உயர்த்திவிட்டு அடுப்பருகே குனிந்து தீக்குச்சியை ‘சரக் என்றாள்.
கண்ணைச் சிமிட்டுகிற நேரம்தான். ஆள் உயரத்திற்கு தீ ஜ்வாலைகள் குபீரென்று எழுந்து அவளைச் சூழ்ந்துகொள்ள திலகா அதிர்ந்தாள். அந்த அதிர்ச்சியின் நொடிகளிலேயே -
வாசத்திற்கு காரணம் மூளைக்கு சட்டென்று உறைத்தது.
காஸ் சிலிண்டர் ராத்திரி பூராவும் கசிந்து சமையலறையை நிரப்பியிருக்கிறது. ஜன்னல் இல்லாத - சாத்தியிருந்த சமைலறை அந்த கேஸ் போன நிமிஷம் வரை அடைகாத்திருக்கிறது தீக்குச்சி உமிழ்ந்த சின்னத் தீயை காத்திருந்த கேஸ் உறிஞ்சி தீ ஜ்வாலைகளை பிரசவித்திருக்கிறது.
திலகா விலகுவதற்குள் –
தீ அவளை மொய்த்துக் கொண்டது.
முதுகுச் சதையை கப்பென்று பற்றிக்கொண்டு புகைய ஆரம்பித்தது.
"அம்… மா... ஆ...