அந்த ரத்த நாட்கள்
By ராஜேஷ்குமார்
()
About this ebook
‘ரூபலா...”
‘பாரத்’தை தூங்கப் பண்ணிக்கொண்டிருந்த ரூபலா திரும்பினாள். விவேக் ஒரு ஆங்கில வார இதழை கையில் வைத்துக் கொண்டு சிரித்தபடி தெரிந்தான். இரவு பத்துமணி இடம் சென்னை.
“என்னவாம்...?’’
“ஒரு சர்தார்ஜி ஜோக் சொல்லட்டுமா...?’’
“ச்சே...! அந்த மாதிரியான ஜோக்கெல்லாம் என்கிட்டே வேண்டாம்...”
விவேக் அவளுக்குப் பக்கத்தில் வந்து உட்கார்ந்தான்.
“அய்யய்யே...! நீ நினைக்கிற மாதிரி அது செக்ஸ் ஜோக் கிடையாது.’’
“பின்னே...?”
“சொல்றேன் கேட்டுப்பாரு...’’
“சரி சொல்லுங்க...”
“ஒரு சர்தார்ஜி தவளைகளைப் பத்தி ஆராய்ச்சி பண்றதுல ஒரு பெரிய விஞ்ஞானி. அவரோட ஆராய்ச்சி திறமைக்கு சாம்பிளா ஒரு எக்ஸ்பரிமெண்ட். ஒரு தவளையை பிடிச்சு மேஜைமேல விட்டு ‘ஜம்ப்’ன்னு சொன்னாராம். உடனே அது தாவி குதிச்சது. உடனே சர்தார்ஜி அந்த தவளையை பிடிச்சு அதனோட நாலு கால்ல ஒரு காலை வெட்டிட்டு மேஜைமேல விட்டு ‘ஜம்ப்’ன்னு சொன்னாராம். தவளை தன்னோட மூணு காலையும் உபயோகிச்சு குதிச்சதாம். சர்தார்ஜி அந்த தவளையை மறுபடியும் மூணுகால்ல ஒரு காலை வெட்டிட்டு ‘ஜம்ப்’ன்னு சொன்னாராம். தவளை ரெண்டு காலை உபயோகிச்சு குதிச்சது. சர்தார்ஜி விடலை. தவளையை பிடிச்சு ரெண்டு கால்ல ஒண்ணை வெட்டிட்டு ‘ஜம்ப்’ன்னு சொன்னார். தவளை கஷ்டப்பட்டு முயற்சி பண்ணி ஒரு காலை உபயோகிச்சு ‘ஜம்ப்’ பண்ணியதாம். சர்தார்ஜி மறுபடியும் தவளையைப் பிடிச்சார். இருந்த ஒரு காலையும் வெட்டிட்டு ‘ஜம்ப்’ன்னு சொன்னார். அது குதிக்காமே அப்படியே படுத்திட்டிருந்தது. உடனே சர்தார்ஜி தன்னோட ஆராய்ச்சிக் குறிப்பில் இப்படி எழுதினாராம். தவளைக்கு அதன் நான்கு கால்களையும் வெட்டி விட்டால் காது கேட்காது...”
ரூபலா வாய்விட்டு சிரித்துக் கொண்டிருக்கும் போதே - வாசலில் காலிங்பெல் கேட்டது.
“டி... டிங்...’’
விவேக் கையிலிருந்த பத்திரிகையை மேஜை மேல் வீசிவிட்டு எழுந்தான்.
‘‘இந்நேரத்துக்கு யார்ன்னு தெரியலை...?”
வாசல்பக்கம் போன விவேக் - போலீஸ் துறைக்கு உரிய முன் யோசனையோடு பக்கவாட்டு ஜன்னலைத் திறந்து வாசலைப் பார்த்தான்.
ஒரு இளைஞன் நின்றிருந்தான். முப்பது வயது இருக்கலாம். தெரு விளக்கின் வெளிச்சம் மேலே விழுந்ததில் அவனுடைய நிறம் தெரிந்தது. தாடி வளர்க்க ஆரம்பித்திருந்தான். கண்களுக்கு கீழே மெலிதாய் கருவளையங்கள். தோளில் ஒரு ஜோல்னா பை.
“யாரு...?”
விவேக் கேட்க -
அவன் சட்டென்று குரல் வந்த பக்கமாய் திரும்பி - க்ரில் ஜன்னலில் தெரிந்த விவேக்கைப் பார்த்துகும் பிட்டான்.
“வணக்கம் ஸார்... என் பேர் சங்கரநாராயணன். உங்களைப் பார்த்து பேசறதுக்காகத்தான் வந்தேன்...’’
அவனுடைய குரலும் முகபாவமும் இவன் ஆபத்தானவன் இல்லை என்பதை விவேக்கிற்கு உணர்த்த - கதவுக்கு போய் தாழ்ப்பாளை விலக்கினான்.
அந்த சங்கரநாராயணன் உள்ளே வந்தான். மறுபடியும் வணக்கம் சொன்னான்ஸார்! ஒரு முக்கியமான விஷயத்தைப் பத்தி உங்கக்கிட்டே பேசணும். நீங்க வீட்ல இருப்பீங்களோ... இல்லை... வெளிநாடு ஏதாவது போயிருப்பீங்களோன்னு பயந்துட்டே வந்தேன்.”
‘‘என்ன விஷயம்...?’’
‘‘உட்கார்ந்து பேசணும் ஸார்... எனக்காக ஒரு அஞ்சு நிமிஷம்...’’
விவேக் வரவேற்பறையிலிருந்த நாற்காலியைக் காட்டிவிட்டு தானும் உட்கார்ந்தான்.
“ம்... சொல்லு...’’ அவன் மெல்லிய குரலில் பேச்சை ஆரம்பித்தான்.
‘‘எனக்கு சொந்த ஊர் காங்கயம் ஸார். என்ஜினீயரிங் படிச்சு முடிச்சுட்டு வேலைக்காக ட்ரை பண்ணிட்டிருக்கேன்...
‘‘சரி...’’
‘‘ஸ... ஸார்... நான் இப்போ உங்ககிட்டே சொல்லப் போற விஷயம் என்னோட எதிர்காலத்தைப் பாதிக்கக் கூடியதுதான், இருந்தாலும்... அதைப் பத்தி கவலைப்படாமே உங்ககிட்டே வந்திருக்கேன்...’’
‘‘நீ இன்னும் விஷயத்துக்கே வரலை...’’
“வந்துட்டேன் ஸார்...” சொன்னவன் தன்னுடைய ஜோல்னாப்பைக்குள் கையை நுழைத்து ஆடியோ காஸெட் ஒன்றை எடுத்தான்.
“இதை டேப் ரிக்கார்டரில் போட்டுப் பாருங்க... ஸார்...
விவேக் அந்த கேஸட்டை வாங்கி - திருப்பிப் பார்த்து - அது ஒரு சாதாரண கேஸட்தான் என்று ஊர்ஜிதமானதும் - உள்ளே போய் ரிக்கார்ட் பிளேயரைக் கொண்டு வந்து - கேஸட்டை அதன் வாய்க்குள் திணித்து - ப்ளே பட்டனைத் தட்டினான்.
டேப் சுழன்றது.
காஸட்டினின்றும் வெளிப்பட்ட வார்த்தைகள் -விவேக்கை அதிர்ச்சியில் வீழ்த்தியது. இருதயத்துக்குள் ஒரு பூகம்பம் பதிவாயிற்று
Read more from ராஜேஷ்குமார்
சொர்க்க வாசல்..! Rating: 0 out of 5 stars0 ratingsசின்னஞ் சிறு கிலியே! Rating: 5 out of 5 stars5/5முள் முனையில் முகிலா Rating: 0 out of 5 stars0 ratingsமுள் கிரீடம்! and ஓடும் வரை ஓடு! Rating: 0 out of 5 stars0 ratingsமரணத்திற்கு ஒரு மனு Rating: 5 out of 5 stars5/5ஒரு சின்ன மிஸ்டெத் Rating: 0 out of 5 stars0 ratingsசிவப்பு வானம்!: (Sivappu Vaanam!) Rating: 5 out of 5 stars5/5உலராத ரத்தம் Rating: 0 out of 5 stars0 ratingsஅக்மார்க் மர்டர் Rating: 0 out of 5 stars0 ratingsதப்பு + தப்பு = சரி Rating: 0 out of 5 stars0 ratingsஇரும்பு கனவுகள் Rating: 0 out of 5 stars0 ratingsஓடாதே! ஒளியாதே! Rating: 0 out of 5 stars0 ratingsஅந்த சந்திரனே சாட்சி..! Rating: 0 out of 5 stars0 ratingsகண்ணை நம்பாதே Rating: 0 out of 5 stars0 ratingsகொல்ல கொல்ல இனிக்குதடா..! Rating: 0 out of 5 stars0 ratingsவிவேக்கின் 1000 நிமிஷங்கள் Rating: 5 out of 5 stars5/5கருநாகபுர கிராமம் Rating: 0 out of 5 stars0 ratingsஒன்று இரண்டு இறந்து விடு Rating: 0 out of 5 stars0 ratingsஒற்றை மேகம் Rating: 0 out of 5 stars0 ratingsஆச்சர்யம்! ஆனால்... உண்மை! Rating: 0 out of 5 stars0 ratingsகொலைவிழும் மலர்வனம் Rating: 0 out of 5 stars0 ratingsரத்தம் சிந்தும் ரோஜாக்கள் Rating: 0 out of 5 stars0 ratingsமிஸ். பாரதமாதா Rating: 0 out of 5 stars0 ratingsவெல்கம் டூ மார்ச்சுவரி Rating: 0 out of 5 stars0 ratingsபகல் நேர மின்னல் Rating: 0 out of 5 stars0 ratingsதூரத்துப் பொன்மான் Rating: 0 out of 5 stars0 ratingsமுடிந்தால் உயிரோடு Rating: 0 out of 5 stars0 ratingsஉன்னைக் கொன்ற நாள் முதலாய்... Rating: 0 out of 5 stars0 ratingsதிக் திக் டிசம்பர் Rating: 0 out of 5 stars0 ratingsசிறகடிக்க ஆசை! Rating: 0 out of 5 stars0 ratings
Related to அந்த ரத்த நாட்கள்
Related ebooks
Antha Ratha Naatkal Rating: 5 out of 5 stars5/5Mazhai.. Maranam.. Marmam.. Rating: 0 out of 5 stars0 ratingsMandhira Valai Rating: 5 out of 5 stars5/5Naan Nizhal Illadhavan Rating: 0 out of 5 stars0 ratingsOru Maranathin Maranam Rating: 5 out of 5 stars5/5Ini Poruppathillai Rating: 0 out of 5 stars0 ratingsSathyavin Sapatham! Rating: 0 out of 5 stars0 ratingsIraval Sorgam Rating: 0 out of 5 stars0 ratingsAgmark Murder Rating: 0 out of 5 stars0 ratingsஅக்மார்க் மர்டர் Rating: 0 out of 5 stars0 ratingsSiraiyil Oru Paravai Rating: 0 out of 5 stars0 ratingsபணம், பதவி, பலி! & இருட்டில் வைத்த குறி Rating: 0 out of 5 stars0 ratingsPanam, Pathavi Pali! and Iruttil vaitha Kuri Rating: 0 out of 5 stars0 ratingsKanmani Nillu Kaaranam Sollu Rating: 0 out of 5 stars0 ratingsPuthu Ethiri Rating: 0 out of 5 stars0 ratingsThavarukkum Thavaraana Thavaru Rating: 0 out of 5 stars0 ratingsNeela Nila Rating: 5 out of 5 stars5/5பகல் நேர பாரிஜாதங்கள்! Rating: 0 out of 5 stars0 ratingsPagal Nera Paarijathangal Rating: 0 out of 5 stars0 ratingsஉயிர் ஊஞ்சலாடுகிறது..! Rating: 0 out of 5 stars0 ratingsUyir Oonjalaadugirathu Rating: 0 out of 5 stars0 ratingsஏழாவது டெஸ்ட் டியூப் Rating: 0 out of 5 stars0 ratingsYezhavathu Test Tube Rating: 0 out of 5 stars0 ratingsKanmani Nillu! Kaaranam Sollu! Rating: 5 out of 5 stars5/5Glucose Nathigal... Rating: 0 out of 5 stars0 ratingsKodi Kodi Minnalakal Rating: 0 out of 5 stars0 ratingsNovember Nalliravu Narmatha Rating: 0 out of 5 stars0 ratingsநவம்பர், நள்ளிரவு... நர்மதா! Rating: 0 out of 5 stars0 ratingsநாளைய தேசம் Rating: 0 out of 5 stars0 ratingsNalaiya Thesam Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for அந்த ரத்த நாட்கள்
0 ratings0 reviews
Book preview
அந்த ரத்த நாட்கள் - ராஜேஷ்குமார்
1
இந்தியாவின் தலைநகரம்.
காலை ஆறுமணி, பிப்ரவரி மாத குளிரில் உறைந்து போயிருந்த தெருக்களில் - தொப்பைகள் ஜாக்கிங்கிலும் வாக்கிங்கிலும் இருக்க - கிழக்கு திசையை சூரியன் கொஞ்சம் கொஞ்சமாய் பிறாண்டிக் கொண்டிருந்தான்.
ஆங்காங்கே துளியூண்டு ரத்த வெளிச்சம். ஜஹாங்கீர் பாதுஷா ரோட்டின் வளைவில் - பிரம்மாண்டமாய் - உட்கார்ந்திருந்த பிரதமரின் வீட்டுக்கு முன்னால் NSF (நேஷ்னல் செக்யூரிடி ஃபோர்ஸ்) காக்கி பச்சை யூனிஃபார்ம் அணிந்த டைகர் சோல்ஜர்ஸ் ஏகே47 இயந்திர சங்கதிகளோடு நின்று கொண்டிருக்க - உ...ள்...ளே... இருந்த பெரிய புல்வெளி பரப்பில் பிரதமர் ஆகாஷ் குர்தா போன்ற உடைக்குள் நுழைந்து - மெல்ல நடை பயின்று கொண்டிருந்தார். பக்கத்திலேயே உல்லன் சால்வையை போர்த்திக் கொண்டு அவருடைய மனைவி செளரபா..
ஆகாஷ் நாற்பத்தைந்து வயதில் - செர்ரி பழ நிறத்தில் - அளவாய் சதை போட்டிருந்தார். தொப்பை கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. ஏறிய நெற்றியில் மெலிதாய்ப் ரெளன்நிற ரோமம். பின்மண்டையில் கையளவு வழுக்கை. காதோர கிருதாக்களில் பளீர் பளீர் என்று கண் சிமிட்டும் சில்வர் ரோமங்கள். தினசரி ஷேவிங்கில் முகம் மழமழ. உச்ச பட்ச தீட்சண்யக் கண்களுக்கு கீழே கூர்ந்த நாசியும் அளவான உதடுகளும் - அவருடைய முக வசீகரத்துக்கு ‘ஜே’ போட்டன. பல்வரிசை ரெண்டு ‘ஜே’ போட்டது.
சௌரபா கணவரின் நிறத்துக்கு ஈடு கொடுத்தாள். அவருடைய தோள் உயரத்துக்கு செழிப்பாய் இருந்தாள். முப்பத்தேழு வயது. பதினைந்து வயதிலும், பனிரெண்டு வயதிலும் இரண்டு மகன்கள் இருக்கிறார்கள் என்பதை சற்றே தளர்ந்த உடற்கட்டு சொல்லியது. நேற்று மாலை நெற்றி வகிட்டில் வைத்த குங்குமம் அந்த காலை நேரத்திலும் அப்படியே இருந்தது.
இருவரின் உதட்டிலும் ஆக்ஸ்போர்ட் யூனிவர்ஸிடியின் ஆங்கிலம் உரையாடலில் இருந்தது. செளரபா கேட்டாள்.
"என்ன இன்றைக்கு பலமான யோசனை...?’’
பாராளுமன்றத்தில் இன்றைக்கு கொண்டு வரப்போகும் மசோதா சட்டமாக்கப்பட ஆதரவு கிடைக்குமா... என்று சந்தேகமாக இருக்கிறது...
"ஏன்... ஆளும் கட்சி எம்.பி.க்கள் அத்தனை பேரும் மசோதாவுக்கு ஆதரவாக வோட்டுப் போட்டால் தீர்ந்தது...’’
"போட்டால்தானே...?’’
"என்ன சொல்கிறீர்கள்...?’’
"இது ரகசிய ஓட்டெடுப்பு... நம் கட்சி எம்.பிக்களில் ஒரு சாரார் இதை மறைமுகமாக எதிர்க்கிறார்கள்... அவர்களின் ஒட்டு விழாவிட்டால் மசோதா தோற்றுவிடும்...’’
‘‘நம் கட்சி எம்.பிக்கள் அத்தனை பேரையும் கூப்பிட்டு அவர்களுடைய கருத்தை கேட்ட பிறகு அந்த மசோதாவை கொண்டு வந்திருக்கலாமே...?’’
"சென்ற மாதம் கூட்டம் போட்டு பேசியாயிற்று. இந்த முக்கியமான மசோதாவை சட்டமாக்கினால்தான்... அடுத்த இரண்டு வருஷங்களில் வரப்போகும் பொதுத் தேர்தலில் மக்களை சந்தித்து - துணிச்சலாய் ஓட்டு கேட்க முடியும் என்று நான் சொன்னேன். நான் சொன்னதை அப்போது ஏற்றுக் கொண்டவர்கள் இப்போது லேசாய் சலசலப்பு காட்டுகிறார்கள்.’’
"மசோதாவையே கொண்டு வராமல் இருந்து விட்டால்...?’’
அது கோழைத்தனம்... கட்சிக்கும் நான் வகிக்கிற பிரதமர் பதவிக்கும் அது அவமானம்... ஆட்சிக்கு எதிராக இருக்கும் அனைத்து பத்திரிகைகளும் கட்டுரைகளை எழுதி கார்ட்டூன்களைப் போட்டு நார் நாராய் கிழித்து விடுவார்கள்.
‘‘மசோதா தோற்றுவிட்டால்... அது ஆட்சிக்கு ஆபத்து ஆயிற்றே இதை தவிர்க்கப் பாருங்கள்..."
பிரதமர் ஆகாஷ் மேற்கொண்டு ஏதோ பேச முயற்சிப்பதற்குள் -
பிரதமரின் இரண்டாவது நிலை பி.ஏ.கெய்க்வாட் வயர்லெஸ் டெலிபோனை தூக்கிக் கொண்டு வீட்டின் முகப்பிலிருந்து வெளிப்பட்டு வேகவேகமாய் பிரதமரை நோக்கி வந்தார்.
"ஸார்...’’
‘‘எஸ்...’’
"பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் காந்திலால் குளியலறையில் வழுக்கி விழுந்து பலத்த காயத்துக்கு உள்ளாகியிருக்கிறார்... அட்மினிஷ்ட்ரேஷன் சென்டரிலிருந்து உங்களுக்கு பிரதம செயலாளர் வாத்வா உங்களுக்கு போன் செய்தார்...’’
இப்போது லைனில் இருக்கிறாரா...?
‘‘ஆமாம்...’’
ரிஸீவரை எடுத்து காதுக்குக் கொடுத்தார் பிரதமர்.
‘‘மிஸ்டர் வாத்வா...?"
"ஸார்...’’
"தகவல் கேள்விப்பட்டேன்... மிஸ்டர் காந்திலாலுக்கு என்னாயிற்று...?’’
‘‘காலையில் எழுந்ததும் குளியலறைக்கு குளிக்கப் போனவர் வழுக்கி விழுந்து அடிபட்டு விட்டார்...’’
"பலத்த அடியா...?’’
"ஆமாம்... இரும்பு பைப் குழாயின் முனை, நெற்றியில் பட்டு பலத்த காயம். ரத்தச் சேதம் அதிகம்...’’
"உயிர்க்கு ஆபத்து இல்லையே...?’’
ஹாஸ்பிடலுக்கு கொண்டு போயிருக்கிறார்கள். நிலவரம் தெரியவில்லை...
எந்த ஹாஸ்பிடல்...?
பாலகங்காதர திலகர் ஹாஸ்பிடல்...
வாத்வா! நீங்கள் ஒரு காரியம் செய்ய வேண்டும்
"சொல்லுங்கள் ஸார்...’’
"ஹாஸ்பிடலுக்கு போய் சீஃப் டாக்டரைப் பார்த்து மிஸ்டர் காந்திலாலுக்கு மிகுந்த கவனமுடைய ட்ரீட்மெண்ட்டை கொடுக்கச் சொல்லுங்கள்... உடனடியாய் ஒரு டாக்டர் குழுவை நியமித்து - வேண்டிய ஏற்பாடுகளை செய்யச் சொல்லுங்கள்.’’
"எஸ்... ஸார்...’’
"அவருடைய உடல் நிலை பற்றிய நிலவரம் அரைமணி நேரத்திற்கு ஒருதடவை எனக்கு