Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Idhaya Regai
Idhaya Regai
Idhaya Regai
Ebook99 pages33 minutes

Idhaya Regai

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

திவாகர் பெரிய பணக்கார வீட்டுப் பையன். இவன் மரியா என்ற ஏழைப்பெண்ணை காதலிக்கிறான். இவர்களது காதல் திவாகரின் பெற்றோருக்குப் பிடிக்காமல் போகவே அவனை மிரட்டி தேவி என்ற பெண்ணோடு திருமணம் செய்து வைக்கிறார்கள். திவாகர் தேவியுடன் வாழ்ந்தானா, அல்லது மரியாவுடன் காதல் வாழ்க்கையை தொடர்ந்தானா? என்பதை வாசிப்போம் பட்டுக்கோட்டை பிரபாகரின் விறுவிறுப்பான பாணியில்

Languageதமிழ்
Release dateAug 28, 2021
ISBN6580100906997
Idhaya Regai

Read more from Pattukottai Prabakar

Related to Idhaya Regai

Related ebooks

Reviews for Idhaya Regai

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Idhaya Regai - Pattukottai Prabakar

    https://www.pustaka.co.in

    இதயரேகை

    Idhaya Regai

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    1

    இருளின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக கீழ்வானத்தில் சூரியரேகைகள் கூடி சதி ஆலோசனை நடத்திக்கொண்டிருந்தன.

    தரையில் அமர்ந்து சுவரில் சாய்ந்து ழுழங்கால்களைக் கட்டியபடி அமர்ந்திருந்த தேவியின் கண்களில் கண்ணீர் உறைந்துபோயிருந்தது.

    அலங்கரிக்கப்பட்ட கட்டிலில் கால்களுக்கிடையில் தலையணை செருகி குப்புறப்படுத்து சன்னக்குறட்டையுடன் உறங்கும் திவாகரைப் பார்த்தான்.

    ‘இவனால் எப்படி உறங்கமுடிகிறது?'

    எத்தனை பெரிய அதிர்ச்சியை நேற்றிரவு என் தலையில் இறக்கி வைத்தான்!’

    ‘எத்தனை கனவுகளுடன் இந்த அறைக்குள் வந்தேன்!

    ‘எத்தனை கோவில்களில் எத்தனை சாமிகளுக்கு வேண்டிக்கொண்டேன்! எத்தனை நோட்டுப்புத்தகங்கள் ழுழுக்க ஸ்ரீராம ஜெயம் எழுதினேன்!

    என்ன கேட்டேன்? கார், பங்களா, பத்து வேலையாட்கள் என்று என் கனவு என்றுமே விரிந்ததில்லையே...’

    ‘கடவுளே, எனக்கு அமையற புருஷன் ஒரு நல்ல புருஷனா அமையணும்!

    இதைத்தானே எல்லா சந்நிதிகளிலும் என் உதடுகள் மந்திரம்போல திரும்பத்திரும்ப உச்சரித்தன!’

    'எனக்கு ஏன் இப்படி ஒருவன் வந்து வாய்க்கவேண்டும்?’

    ‘ழுதலிரவில் எப்படி இதைப்பற்றி இவனால் பேசமுடிந்தது? என் அதிர்ச்சியைப்பற்றியோ, என் உணர்ச்சியைப்பற்றியோ கொஞ்சம்கூட கவலைப்படாத இவன் என்ன ஜென்மம்!’

    ‘நேந்து காலை தாலிகட்டிக்கொண்டபோது இவன்மேல் எத்தனை மரியாதை இருந்தது!’

    ‘அந்த தங்கத்தருணத்தில் என்னவெல்லாம் நினைத்தேன்!’

    ‘எனக்கு தாலிகட்டியிருக்கிற இவர்தான் இனிமேல் என் வாழ்வின் துணை, இனி என் இறுதி மூச்சுவரை இவரோடு மகிழ்ச்சியாக வாழவேண்டும். என் கரம் பிடித்திருக்கும் இவர் மனசுநோகாமல் நான் நடந்துகொள்ளவேண்டும்.’

    இன்னும் என்னென்னவோ எண்ணத்ததும்பல்கள்.

    ‘பெண் பார்க்க வந்தபோதே கொஞ்சம்கூட சிரிக்கவில்லை.’

    ‘என் பையன் கொஞ்சம் கூச்சசுபாவம், நல்லா பழகினப்புறம்தான் யார்கிட்டயும் கலகலப்பாய் பேசுவான்' என்றார்கள். நம்பினேன்.

    ‘நிச்சயதார்த்தத்தின்போது என்பக்கம் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. அந்த கூச்சசுபாவத்தை காரணமாக்கி சமாதானப்படுத்திக்கொண்டேன்.

    நிச்சயத்திற்கும் திருமணத்திற்கும் நடுவில் ஐம்பது நாட்கள்!’

    ‘நடுவில் ஒருமுறை ஏதாவது ஒரு சாக்கு வைத்து உன்னைப் பார்ப்பதற்காக உன் வீட்டுக்கு வருவார் பார்!’ - என்று தோழிகள் எதிர்பார்ப்பு ஏற்படுத்தினார்களே ஒழிய... இவன் வரவில்லை.

    அதுதான் கூச்சசுபாவமாயிற்றே...

    ‘சரி, ஒரு கடிதமாவது எழுதுவார் என்று பார்த்தால், அதுவுமில்லை.’

    இதுக்கெல்லாம் யாராச்சும் வருத்தப்படுவாங்களா? அந்த அளவுக்கு அவங்க பையனை பண்பாட்டோட வளர்த்திருக்காங்க என்று எனக்கு ஆறுதல் சொன்னாள் என் அம்மா.

    நேற்று மதியம் கல்யாண மண்டபத்தில் பெற்றோர்களிடம் சொல்லிவிட்டு நான் புறப்படும் சமயத்தில் அம்மாகூட கண் கலகங்கித்தான் இருந்தாள். தாரை தாரையாக அழுதது அப்பாதான்.

    இவன் கையைப் பிடித்துக்கொண்டு, மாப்பிள்ளை, என் பொண்ணு ரொம்ப வெகுளி. நாலு வார்த்தை படபடன்னு பேசத்தெரியாது. எல்லாத்தையும் மனசுலயே முழுங்கிக்குவா. உங்களை நம்பித்தான்... வாக்கியம் முடிக்காமல் மீண்டும் அழ...

    ஆறுதலாக எதாவது சொல்லாமல், பஸ் புறப்பட லேட்டாச்சு என்ற இந்த பிரகஸ்பதிமேல் அப்போதே எனக்கு சுர்ரென்று கோபம் வந்தது.

    இங்கே இவர்கள் வீட்டுக்கு பஸ்சில் பயணப்பட்டபோது, மற்ற உறவினர்கள் எல்லாம் எங்களை கிண்டல் செய்து, பாட்டுப்பாடி கலாட்டாசெய்ய... ஒரு வார்த்தை என்றால் ஒரு வார்த்தை பேசவில்லை.

    முதல் வார்த்தையே முதலிரவில்தான் பேசவேண்டும் என்று திட்டம் வைத்திருக்கிறார் போலிருக்கிறது என்று அப்போதும் நான் அசடுமாதிரி நினைத்துக்கொண்டேனே...’

    நேற்றிரவு இந்த அறைக்குள் நுழையும் முன்பாக அத்தை என்னைத் தனியாக அழைத்துப் பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றிலும் வேறு அர்த்தம் இருப்பதாக நான் உணரவில்லை - அப்போது...

    "தேவி, நாங்க வசதியான

    Enjoying the preview?
    Page 1 of 1