Kanavu Payanam
5/5
()
About this ebook
திருமணம் என்றாலே கனவுகளையும், எதிர்பார்ப்புகளையும் கொண்டிருக்கும் சுதாவிற்கு இராணுவ வீரனுடன் திருமணம் நடைபெறுகிறது. ஆனால் சில மாதங்கள் கழித்து எதிர்பாராவிதமாக அவள் கணவன் இறந்த தகவலை அறிகிறாள். பின் சில சூழ்நிலையால் தன் குழந்தையுடன் வெளியூர் பயணம் மேற்கொள்கிறாள். அங்கு பிரசாத் இளைஞனை சந்திக்கிறாள். இருவருக்கிடையும் ஏற்படும் நட்பு பின்பு புரிதலாக மாறுகிறது. இவர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தும் நேரத்தில் யாரும் எதிர்பாரா திடீர் திருப்பம் ஒன்று ஏற்படுகிறது. வாருங்கள் அத்திருப்பத்தை வாசித்து தெரிந்து கொள்வோம். சுதாவின் கனவு பயணம் யாருடன்...
Read more from Pattukottai Prabakar
Oor Urangum Velai Rating: 5 out of 5 stars5/5Bharath Rajyam Rating: 5 out of 5 stars5/5Bharath And Pattampoochi Rating: 5 out of 5 stars5/5Bharath VS Susila Rating: 4 out of 5 stars4/5Thottal Thodarum Rating: 4 out of 5 stars4/5Kaadhalna Enna Prakash? Rating: 0 out of 5 stars0 ratingsPuthi Munai Vithai Rating: 5 out of 5 stars5/5Narukkendru Naalu Varthai Rating: 0 out of 5 stars0 ratingsSeptember, October, Christopher! Rating: 5 out of 5 stars5/5Thappikka Thadaiyillai Rating: 5 out of 5 stars5/5Iravu Pathu Rating: 0 out of 5 stars0 ratingsThirumbi Vaa! Theerpai Thaa! Rating: 0 out of 5 stars0 ratingsUyirodu Vendum… Rating: 5 out of 5 stars5/5Ini... Iniya... Rating: 5 out of 5 stars5/5Tick... Tick... Lipstick! Rating: 5 out of 5 stars5/5Yaarukkum Mugam Illai Rating: 0 out of 5 stars0 ratingsPushpa Rating: 5 out of 5 stars5/5Kuttra Surangam Rating: 0 out of 5 stars0 ratingsMazhai Vidum Neram Rating: 5 out of 5 stars5/5Varuvean! Velvean! Rating: 0 out of 5 stars0 ratingsNer Meley Nila Rating: 5 out of 5 stars5/5
Related to Kanavu Payanam
Related ebooks
Idhaya Regai Rating: 5 out of 5 stars5/5Anamikavuku Anjali Rating: 5 out of 5 stars5/5Irappathu Sugam... Rating: 5 out of 5 stars5/5Tick... Tick... Lipstick! Rating: 5 out of 5 stars5/5Puthiya Sathurangam Rating: 0 out of 5 stars0 ratingsUnakku Mattum Solvean Rating: 5 out of 5 stars5/5Iranthavane, Vanakkam Rating: 5 out of 5 stars5/5Kathi Mel Payanam Rating: 0 out of 5 stars0 ratingsVaruvean! Velvean! Rating: 0 out of 5 stars0 ratingsIppadikku Indhu... Rating: 0 out of 5 stars0 ratingsKekkathey - Kidaikkathu! Rating: 0 out of 5 stars0 ratingsPushpa Rating: 5 out of 5 stars5/5Piragu Oru Maalaiyil... Rating: 3 out of 5 stars3/5Nizhal Mugam Rating: 0 out of 5 stars0 ratingsNerungathey Neruppu Rating: 5 out of 5 stars5/5Pinniravil Nathiyarugil Rating: 0 out of 5 stars0 ratingsVithaithal Vilaiyum! Rating: 5 out of 5 stars5/5December Poo Teacher Rating: 0 out of 5 stars0 ratingsKuttra Surangam Rating: 0 out of 5 stars0 ratingsOru Coffee Kudikalama? Rating: 4 out of 5 stars4/5Oru Koodai Punnagai Rating: 0 out of 5 stars0 ratingsAyokyan Rating: 4 out of 5 stars4/5Azhagiya Penney Rating: 0 out of 5 stars0 ratingsMazhai Vidum Neram Rating: 5 out of 5 stars5/5Andha Moondru Naatkal Rating: 0 out of 5 stars0 ratingsMutham, Nizhal Mutham Rating: 5 out of 5 stars5/5Nilaa... Kuthirai... Aval Rating: 4 out of 5 stars4/5Ore Oru Karanam Rating: 0 out of 5 stars0 ratingsVetrikku Vilai! Rating: 0 out of 5 stars0 ratingsDecember Punnagai Rating: 5 out of 5 stars5/5
Reviews for Kanavu Payanam
1 rating0 reviews
Book preview
Kanavu Payanam - Pattukottai Prabakar
https://www.pustaka.co.in
கனவுப் பயணம்
Kanavu Payanam
Author:
பட்டுக்கோட்டை பிரபாகர்
Pattukottai Prabakar
For more books
https://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
1
சுதா:
ரயிலின் வேகத்தில் காற்று கிழிபட்டு கோபத்தை எல்லா ஜன்னல்களிலும் காட்டிக் கொண்டிருந்தது. கொக்கியில் மாட்டியிருந்த வார் வைத்த தண்ணீர் பாட்டில் மெதுவாக அசைந்து கொண்டிருந்தது.
மடியில் இடுங்கிக்கொண்டு உலகம் மறந்து உறங்கிக்கொண்டிருந்த பாபுவின் கட்டை விரலை மெதுவாக அவன் வாயிலிருந்து விலக்கினேன். ஸ்பிரிங் ஆக்ஷனாக உடனே மறுபடி விரலை வாயில் நுழைத்துக் கொண்டு உறக்கத்தைத் தொடர்ந்தான் அவன். அவனின் ஒரு பிஞ்சுக் கை எனது வளையல்களை உறுதியாகப் பிடித்திருந்தது.
படித்துக்கொண்டிருந்த புத்தகத்தில் கவனம் படியவில்லை. படித்த வரிகளையே இரண்டு, மூன்று முறை படித்தும் மனம் ஒன்றி மேலே தொடர முடியாமல் அருகில் கவிழ்த்து வைத்தேன்.
எக்ஸ்க்யூஸ் மி மேடம். படிச்சிட்டு தரட்டுமா?
எனக்கு எதிர்புறம் மேல் பெர்த்தில் இருந்து கை நீட்டியபடி கேட்டான் - அதற்காகவே காத்திருந்தவன் போல கொடுத்தேன். கொஞ்ச நேரமாக அவன் என்னை கவனித்திருக்க வேண்டும் என்று நினைத்த போது காரணமில்லாமல் அவன் மேல் ஒரு சின்ன வெறுப்பு துளிர்த்தது.
எனது பகுதியில் எதிர்புறம் அந்த அம்மாவும், மேல் பெர்த்தில் ஸ்வெட்டர் அணிந்து, காக்கி நிற ஏர் பில்லோவை தலைக்கு வைத்துப்படுத்திருந்த அவனும் தவிர வேறு யாருமில்லை என்பதையே அப்போதுதான் உணர்ந்தேன்.
அந்த அம்மாவுக்கு நாற்பத்தி ஐந்து வயதிருக்கும். கால் ரூபாய் சைசில் குங்குமப் பொட்டு வைத்து, கொண்டையில் அரை வட்டமாக மல்லிகை சரம் வைத்து, நிறைய நகைகள் போட்டு ஜாடையில் என் அத்தை நினைவூட்டினாள். சாய்ந்து அமர்ந்தபடி உறங்கிக்கொண்டிருந்த அவளின் அருகில் வைத்திருந்த லெதர் பேகை அனைத்தபடி இருந்தது.
இதை வேணும்னா படிக்கிறீங்களா?
மேல் பெர்த் இளைஞன் பெண்களுக்கான ஆங்கில வார இதழை சுருட்டியபடி நீட்டினான். எதையும் படிக்கிற மனநிலை இல்லை என்றாலும் மறுப்பது அநாகரீகமோ என்று தோன்றியதால் வாங்கிக் கொண்டேன்.
எனக்கு அருகில் ஏற்கெனவே பாபுவுக்காக விரித்து வைத்திருந்த துணியின் மேல் மெதுவாக, அசங்காமல் அவனை எடுத்து படுக்க வைத்தேன். மற்றொரு துணியால் அவனைப் போர்த்தி விட்டு மீண்டும் வாயிலிருந்து அவன் விரலை எடுத்துவிட்டேன். அனிச்சையாக மறுபடி போட்டுக்கொண்டான்.
விரல் வேப்பெண்ணெய் தேய்ச்சி விட்டிங்கன்னா, கசப்பு பிடிக்காம உடனே விரல் போடறதை விட்டுடுவாங்க.
நான் ஒரு முறை நிமிர்ந்து அவனைப் பார்த்துவிட்டு, குனிந்து பாபுவைப் படுக்க வைத்தபோது நெகிழ்த்திருந்த என் மார்புச் சேலையை சரி செய்து கொண்டேன். பதில் எதுவும் சொல்லவில்லை. நன்றி என்று சொல்லுவதா?
புத்தகம் படிக்காமல் மறுபடி என்னையே கவனித்திருக்கிறான். இப்போது எனக்கு அவன் மேல் சற்று கோபமே வந்தது. உன் வேலையைப் பார்த்துவிட்டுப் போடா! மனசு சொல்லிவிட்டது. உதடு சொல்லாது. அதை பண்பாடு, நாகரீகம் என்று பலவித பசைகள் போட்டு ஒட்டியிருக்கிறோம்.
அவன் கொடுத்த புத்தகத்தைப் புரட்டினேன். புத்தகம் படிப்பதை விட அவன் பார்வையில் இருந்து என்னை மறைத்துக் கொள்வதே என் நோக்கமாக இருந்தது.
பாபு சற்று முன் குடித்த பால் பாட்டிலின் நிப்பிள் மேல் வந்தமர்ந்த ஈயை விரட்டினேன். கழுவவேண்டும். எழுந்து பாத்ரூம் சென்று கழுவி வருவதற்குள் பாபு புரண்டு விடலாம். அந்த அம்மா விழித்திருந்தால் பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டுச் செல்லலாம்.
சின்ன விஷயங்களுக்கெல்லாம் எனக்கு பிறரின் உதவி அவசியமாக தேவைப்படுகிறது. எனக்குக் கோபமாக வந்தது. யார் மீது என்பது தெரியவில்லை. என்மீதா? வாசுதேவன் மீதா? அதென்னவோ கணவன் என்று உறவு வார்த்தை மனதில் பதியாமல் போய்விட்டது. நினைக்கும் போதெல்லாம் வாசுதேவன், வாசுதேவன் என்று பெயராகத்தான் நினைக்கிறேன். நினைப்பு என்பது தானாக வருவது. இப்படி நினைக்க வேண்டும் என்று திட்டமிட்டு வருவதல்ல. என் இதயத்தில் ஒரு மூன்றாவது மனிதனாகவே சஞ்சரித்துவிட்டு சென்றுவிட்டான்.
விட்டான்? அட ஒருமை! இது உரிமையா, வெறுப்பா?
இரண்டு மாதங்களில் என்ன புரிந்து கொண்டேன்? என்ன புரிய வைத்தேன்? எவ்வளவு பேசினான்? பதிலுக்கு நான் எத்தனை வார்த்தைகள் பேசினேன்? சற்றுமுன் பார்த்த மேகம் குனிந்து நிமிரும் போது கரைந்து காணாமல் போவதைப் போல… நல்லதொரு காட்சியை வளைகின்ற இந்த ரயில் அபகரித்துக் கொள்வதைப் போல... இனிய இசையின் நடுவில் தந்தி அறுந்ததைப் போல… படித்துக் கொண்டிருக்கும் புத்தகத்தைப் பாதியில் பிடுங்கிக் கொண்டதைப் போல... என் வாசுதேவன் அத்தனை சீக்கிரம் தொலைந்து போனாய்?
‘நாட்டுக்காக உயிர் தியாகம்’ – ‘இந்திய மண்ணின் மானம் காக்க' – என்று கூட்டத்தில் ஏதேதோ பேசினார்கள். இரண்டு நிமிட மௌன அஞ்சலியின் போது அதிகாரிகள் சத்தியமாக உன்னைப் பற்றித்தான் நினைத்துக் கொண்டிருந்தார்களா அல்லது வீட்டில் சினிமாவுக்குத் தயாராகிக் காத்திருக்கும் மனைவிகளைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தார்களா என்றுதான் நான் நினைத்துக்கொண்டிருந்தேன்.
உன் கடைசி நிமிடங்களில்