Chutti Miththuvum Pattabi Thathavum
()
About this ebook
மித்து என்கிற மித்தேஷ் மூன்றாம் வகுப்பு படிக்கிறான். படிப்பில் கெட்டி. மிகவும் சுட்டி. அவனுடைய அப்பா அரவிந்த் ஒரு வங்கி அதிகாரி. அவனுடைய அம்மா மீனாட்சி ஒரு பள்ளி ஆசிரியை. சென்னை வேளச்சேரியில் ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் அவர்கள் வசிக்கிறார்கள். அவர்கள் வீடு, மூன்றாம் தளத்தில் உள்ளது. அவனுடைய பக்கத்து வீட்டில் பார்வதிப் பாட்டியும் பட்டாபி தாத்தாவும் வசிக்கிறார்கள். மித்துவும் பட்டாபி தாத்தாவும் நெருங்கிய நண்பர்கள். அவன் அவரை பட்டு என்றுதான் அழைப்பான். பட்டு தாத்தா அவனுக்கு நல்ல நல்ல கதைகளை கற்பனை வளத்துடன் கூறி அவனுடன் விளையாடுவது வழக்கம். அதோடு கூட தினமும் கதை சொல்லும் போது அந்தக் கதை சம்மந்தமான குட்டி குட்டி பொருட்களை அந்தக் கதை மாந்தர்களே தருவது போல அவனுக்குத் தெரியாமலேயே பரிசாக வழங்குவார்.
சுட்டி மித்துவும் பட்டு தாத்தாவும் தினமும் தங்கள் கற்பனையில் வெவ்வேறு உலகத்துக்கு போய் வருவார்கள். இது அவர்களுக்கு மிகவும் பிடித்த விளையாட்டு. இன்றும் அவர்கள் எங்கே போகிறார்கள் என்று பார்க்கலாமா!
Related to Chutti Miththuvum Pattabi Thathavum
Related ebooks
Minnalin Oru Thuli Rating: 0 out of 5 stars0 ratingsThappithu Vidu... Kanmani! Rating: 0 out of 5 stars0 ratingsNandhini Oru Nandhavanam Rating: 5 out of 5 stars5/5இரும்பு கனவுகள் Rating: 0 out of 5 stars0 ratingsIrumbu Kanavugal Rating: 5 out of 5 stars5/5Uyirodu Vilayadu Rating: 5 out of 5 stars5/5Aaruyire... En Oruyire... Rating: 5 out of 5 stars5/5விவேக் vs விவேக் Rating: 0 out of 5 stars0 ratingsVivek VS Vivek Rating: 5 out of 5 stars5/5Poisugam Rating: 0 out of 5 stars0 ratingsPriyangaludan Naane Rating: 5 out of 5 stars5/5Kaadhalenum Theevinile… Rating: 5 out of 5 stars5/5Marupadiyum Padikkalam Rating: 0 out of 5 stars0 ratingsVithiyin Kaigal Maaruma? Rating: 0 out of 5 stars0 ratingsAalayamagum Mangai Manathu Rating: 0 out of 5 stars0 ratingsUnnai Kanatha Kannum Kannala Rating: 4 out of 5 stars4/5பொன் வானம் பன்னீர் தூவுது... Rating: 0 out of 5 stars0 ratingsPon Vaanam Panneer Thuvuthu Rating: 0 out of 5 stars0 ratingsMuththazhagi Rating: 0 out of 5 stars0 ratingsமுத்தழகி Rating: 0 out of 5 stars0 ratingsMalarndha Malarchudare! Rating: 0 out of 5 stars0 ratingsAnbulla Maan Vizhiye Rating: 5 out of 5 stars5/5Mullum Naane...! Malar Naane! Rating: 0 out of 5 stars0 ratingsVilagava? Vilagiva..! Rating: 5 out of 5 stars5/5Kannellaam Un Vannam Rating: 0 out of 5 stars0 ratingsகண்ணெல்லாம் உன் வண்ணம்..! Rating: 0 out of 5 stars0 ratingsVanam Vasapadum Thooram Rating: 0 out of 5 stars0 ratingsAyyayiram Plus Ainooru Rating: 0 out of 5 stars0 ratingsNee Engey? En Anbe! Rating: 0 out of 5 stars0 ratingsKurunkathaigal 40 Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Chutti Miththuvum Pattabi Thathavum
0 ratings0 reviews
Book preview
Chutti Miththuvum Pattabi Thathavum - Annapurani Dhandapani
https://www.pustaka.co.in
சுட்டி மித்துவும் பட்டாபி தாத்தாவும்
Chutti Miththuvum Pattabi Thathavum
Author:
அன்னபூரணி தண்டபாணி
Annapurani Dhandapani
For more books
https://www.pustaka.co.in/home/author/annapurani-dhandapani
பொருளடக்கம்
இறகு
தீப்பெட்டியும் நூலும்...
குழந்தைகளின் குதூகலம்
பொக்கிஷத்தைத் தேடி...
காகிதத்தில் கை வண்ணம்!
ஓடு! ஓடு! இடத்தைப் பிடி!
டூடுல் ஆர்ட்
கதைப்போமா...
வென்ட்ரிலோக்விசம்
கதை சுருக்கம்
மித்து என்கிற மித்தேஷ் மூன்றாம் வகுப்பு படிக்கிறான். படிப்பில் கெட்டி. மிகவும் சுட்டி. அவனுடைய அப்பா அரவிந்த் ஒரு வங்கி அதிகாரி. அவனுடைய அம்மா மீனாட்சி ஒரு பள்ளி ஆசிரியை. சென்னை வேளச்சேரியில் ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் அவர்கள் வசிக்கிறார்கள். அவர்கள் வீடு, மூன்றாம் தளத்தில் உள்ளது. அவனுடைய பக்கத்து வீட்டில் பார்வதிப் பாட்டியும் பட்டாபி தாத்தாவும் வசிக்கிறார்கள். மித்துவும் பட்டாபி தாத்தாவும் நெருங்கிய நண்பர்கள். அவன் அவரை பட்டு என்றுதான் அழைப்பான். பட்டு தாத்தா அவனுக்கு நல்ல நல்ல கதைகளை கற்பனை வளத்துடன் கூறி அவனுடன் விளையாடுவது வழக்கம். அதோடு கூட தினமும் கதை சொல்லும் போது அந்தக் கதை சம்மந்தமான குட்டி குட்டி பொருட்களை அந்தக் கதை மாந்தர்களே தருவது போல அவனுக்குத் தெரியாமலேயே பரிசாக வழங்குவார்.
சுட்டி மித்துவும் பட்டு தாத்தாவும் தினமும் தங்கள் கற்பனையில் வெவ்வேறு உலகத்துக்கு போய் வருவார்கள். இது அவர்களுக்கு மிகவும் பிடித்த விளையாட்டு. இன்றும் அவர்கள் எங்கே போகிறார்கள் என்று பார்க்கலாமா!
இறகு
மித்து ஆன்லைன் வகுப்பு முடிந்து கணிணி முன்னாலிருந்து எழுந்து வீட்டு ஹாலுக்கு வந்தான்.
அம்மா கொடுத்த சிற்றுண்டியை சாப்பிட்டுவிட்டு தன் வீடியோ கேம்ஸை கையில் எடுக்க, அவனுடைய அம்மா,
நோ மித்து! சும்மா வீடியோ கேம்ஸ் விளையாடாத... இவ்ளோ நேரம் கம்ப்யூட்டர் பார்த்தல்ல... கண்ணு கெட்டுப் போகும்...
என்றாள்.
ம்மா... ம்ச்...
மித்து தன் கோபத்தைக் காட்ட, பக்கத்து வீட்டு பட்டாபி தாத்தா தன் வீட்டு பால்கனியிலிருந்து அவனை சைகை செய்து அழைத்தார்.
அவன் மெதுவாக தன் வீட்டு பால்கனிக்குச் சென்று என்னவென்று கேட்டான்.
மித்து... நம்ம ரெண்டு பேரும் வௌாடலாமா...
என்று யாருக்கும் கேட்டு விடாமல் கிசுகிசுப்பான குரலில் தாத்தா கேட்க, மித்து குதூகலமானான்.
ம்...
என்று தலையாட்டிவிட்டு, இருங்க... அம்மா கிட்ட சொல்லிட்டு வரேன்...
என்று அவரைப் போலவே மெல்லிய குரலில் கூறிவிட்டு ஓடினான்.
தாத்தா தன் கையில் எதையோ தயாராய் வைத்துக் கொண்டார்.
ம்மா... நா ட்ராயிங் வரைய போறேன்... என்ன டிஸ்டப் பண்ணாதீங்க...
என்று சொல்லிவிட்டு மீண்டும் பால்கனிக்கு ஓடினான்.
பட்டு... நா வண்ட்டேன்...
என்று கூறி பால்கனியின் மூலையில் சென்று அமர, தாத்தா தன் வீட்டு பால்கனியிலிருந்து அவனருகே எதையோ