Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mullum Naane...! Malar Naane!
Mullum Naane...! Malar Naane!
Mullum Naane...! Malar Naane!
Ebook145 pages52 minutes

Mullum Naane...! Malar Naane!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அசிஸ்டெண்ட் கமிஷனர் தீனதயாளுவின் மகள் சம்யுக்தா பிரியமாய் வளர்த்து வந்த ரேம்போ என்னும் நாய்க்கு திடீரென வெறி பிடித்து தெருவில் போவோர் வருவோர் எல்லோரையும் தாறுமாறாய்க் கடிக்கின்றது. ஊர் மக்கள் அவர் வீட்டின் முன்னால் வந்து நின்று ஆர்ப்பாட்டம் செய்ய, தனது கைத் துப்பாக்கியால் அதைச் சுட்டுக் கொல்கிறார் தீனதயாளு.

அதன் காரணமாய், கோபம் கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறாள் சம்யுக்தா. தனது போலீஸ் செல்வாக்கை வைத்துத் தேடியும் அவள் இருக்குமிடத்தை யாராலும் கண்டு பிடிக்க முடியவில்லை.

பல வருடங்களுக்குப் பிறகு, ஒரு சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் தந்த காரணத்திற்காய் ஒரு ஆளை சுட்டுக் கொல்கிறார் தீனதயாள்.

அந்தச் சாவுக்கு நீதி கேட்க அவர் வீடு தேடி வருகிறாள் சம்யுக்தா....

தீனதயாளுவால் சுட்டுக் கொல்லப்பட்ட நபர் யார்?

தந்தையும் மகளும் மோதினார்களா...? போன்ற வினாக்களுக்கு கதையும் விடையளிக்கின்றார் கதாசிரியர்.

Languageதமிழ்
Release dateDec 11, 2019
ISBN6580130004834
Mullum Naane...! Malar Naane!

Read more from Mukil Dinakaran

Related to Mullum Naane...! Malar Naane!

Related ebooks

Reviews for Mullum Naane...! Malar Naane!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mullum Naane...! Malar Naane! - Mukil Dinakaran

    http://www.pustaka.co.in

    முள்ளும் நானே...! மலர் நானே!

    Mullum Naane…! Malar Naane!

    Author:

    முகில் தினகரன்

    Mukil Dinakaran

    For more books

    http://www.pustaka.co.in/home/author/mukil-dinakaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் - 1

    அத்தியாயம் - 2

    அத்தியாயம் - 3

    அத்தியாயம் - 4

    அத்தியாயம் - 5

    அத்தியாயம் - 6

    அத்தியாயம் - 7

    அத்தியாயம் - 8

    அத்தியாயம் - 9

    அத்தியாயம் - 10

    அத்தியாயம் - 11

    அத்தியாயம் - 12

    அத்தியாயம் - 13

    அத்தியாயம் - 14

    அத்தியாயம் - 15

    அத்தியாயம் - 16

    அத்தியாயம் - 17

    அத்தியாயம் - 18

    அத்தியாயம் - 19

    அத்தியாயம் - 20

    அத்தியாயம் - 21

    அத்தியாயம் - 22

    அத்தியாயம் - 23

    அத்தியாயம் - 24

    அத்தியாயம் - 25

    அத்தியாயம் - 26

    அத்தியாயம் - 27

    அத்தியாயம் - 1

    தன் வீட்டின் எதிரே நின்று கொண்டு, காச்... மூச்சென்று தன்னையும், தன் கணவரையும் ஏக வசனத்தில் திட்டிக் கொண்டிருக்கும் அந்த ஏரியா மக்களைப் பார்த்து அதிர்ந்தாள் சூடாமணி.

    அம்மா... ரொம்பத்தான் துள்ளறானுக...! நீ அப்பாவுக்குப் போன் பண்ணி அவரை உடனே கிளம்பி வரச் சொல்லும்மா...! வரும் போது துப்பாக்கில புல்லட்களை நிரப்பிட்டு வரச் சொல்லும்மா... வந்து இவனுகள்ல ஒரு ரெண்டு மூணு பேரையாச்சும் சுட்டுத் தள்ளினாத்தான் அடங்குவானுக! மகள் சம்யுக்தா தன் கோபத்தைக் கொட்டினாள்.

    ச்சீ... வாயை மூடுடி... எல்லாம் உன்னால் வந்தது... ராம்போ... ராம்போன்னு அதைக் கொஞ்சுனே...? இப்ப அது நம்மை படுத்தியெடுக்குது...! நாய்க்குப் பேர் வெச்சிருக்கே பாரு... ராம்போ... பெரிய சில்வஸ்டர் ஸ்டாலோன் அது?! என்று மகளைக் கரித்துக் கொட்டி விட்டு, வீட்டுத் தொலைபேசியை எடுத்து தன் கணவரின் மொபைலுக்கு கால் செய்தாள் சூடாமணி.

    என்ன சூடாமணி... என்ன விஷயம்...? நான் கலெக்டர் மீட்டிற்க்காக சில ரெக்கார்ட்ஸ்களைத் தயார் பண்ணிட்டிருக்கேன்... என்னை எதுக்கு இப்ப டிஸ்டர்ப் பண்றே? இன்ஸ்பெக்டர் தீனதயாள் சன்னக் குரலில் கேட்டார்.

    இங்க அதை விடப் பெரிய பிரச்சினை ஓடிட்டிருக்குங்க... அதான் கால் பண்ணினேன்! என்றாள் சூடாமணி.

    என்ன... என்ன பிரச்சினை அங்க? பதட்டமாய்க் கேட்டார் இன்ஸ்பெக்டர் தீனதயாள்.

    உங்க அருமை மகளோட நாய்... அதான் ராம்போ இதுவரைக்கும் கிட்டத்தட்ட ஏழு பேரைக் கடிச்சிட்டுது...! இன்னும் எத்தனை பேரைக் கடிக்கப் போகுதோ? தெரியலை!

    ப்ச்... ஏன்...? அதுக்கு என்னாச்சு?

    வெறி பிடிச்சிருச்சு போலிருக்கு...! அதை பார்த்தாலே வித்தியாசமாயிருக்கு...! வாயெல்லாம் ஜொள் வடியுது...! கண்ணெல்லாம் பூஞ்சை பிடிச்ச மாதிரி இருக்கு...! எங்களுக்கே அடங்க மாட்டேங்குது...! சொல்லும் போதே சூடாமணியின் குரலில் நடுக்கம் தெரிந்தது.

    சரி... அதை உள்ளாரதானே கட்டிப் போட்டிருந்தோம்...? அது எப்படி வெளிய போச்சு? கோபமாய்க் கேட்டார் இன்ஸ்பெக்டர்.

    என்னமோ தெரியலைங்க... இன்னிக்கு அதுக்கு அசுர பலம்...! இரும்புச் சங்கிலியையே அறுத்துட்டு ஓடிப் போயிடுச்சு!

    ப்ச்... ஹோ மை காட்...! நான் ஸ்டேஷன் வேலையை பார்ப்பேனா...? இல்லை வீட்டு வேலையைப் பார்ப்பேனா...? ம்ம்ம்ம்... நான் லேட்டாத்தான் வருவேன்... பரவாயில்லையா? அவர் கேட்க,

    இதுவரைக்கும் ஏழு பேரைக் கடிச்சிருக்கு... அநேகமா நீங்க வர்றதுக்குள்ளார இன்னும் ஏழு பேரையாவது கடிச்சிடும்... அது உங்களுக்குப் பரவாயில்லைன்னா... நீங்க லேட்டா வர்றதும் எனக்குப் பரவாயில்லை! என்றாள் சூடாமணி சூடாக.

    அடக் கஷ்ட காலமே...? சரி... நான் வர்றேன்... என்று நிதானமாய்ச் சொன்னவரிடம்,

    எவ்வளவு சீக்கிரம் வர முடியுமோ... அவ்வளவு சீக்கிரத்துல வந்திடுங்க... ஏன்னா இங்க நம்ம வீட்டுக்கு முன்னால பெரிய படையே நின்னு கத்திட்டிருக்கு...! ஒண்ணு ரெண்டு கெட்ட வார்த்தைகளும் காதுல விழுந்திச்சு! என்றாள் சூடாமணி.

    யாரு...? யாரு... அவங்கெல்லாம்... அவங்க எதுக்கு நம்ம வீட்டுக்கு முன்னாடி வந்து நின்னு கத்திட்டிருக்காங்க...? போகச் சொல்லு அவங்களை இன்ஸ்பெக்டர் தீனதயாள் கத்தலாய்ச் சொல்ல,

    உங்க செல்ல மகளோட செல்ல நாய்கிட்ட கடி பட்டவங்களும்... அவங்களோட உறவுக்காரங்களும் கும்பலா வந்து நின்னுட்டிருக்காங்க...! எங்களுக்கு ஒரு நியாயம் கிடைக்காம இந்த இடத்தை விட்டுப் போக மாட்டோம்!னு கோஷம் வேற போடறாங்க...! அய்யோ சாமீ... என்னால சமாளிக்க முடியாதுடா சாமீ! மொத்தமாய் சரண்டர் ஆனாள் சூடாமணி.

    ஏய்... அவனுக என்ன பெரிய இவனுங்களா...? இப்ப நீங்களா போறீங்களா... இல்லை ஸ்டேஷன்ல இருந்து கான்ஸ்டபிள்ஸை வரச் சொல்லட்டுமா?ன்னு கேளு... ஓடிடுவானுக! தன் போலீஸ் அதட்டலைக் காட்டினார் தீனதயாள்.

    அய்யோ... நான் மாட்டேன்... எனக்கு பயமாயிருக்கு!

    கர்மம்... கர்மம்... நீயெல்லாம் ஒரு இன்ஸ்பெக்டர் பொண்டாட்டியா...? இந்த நடுங்கு நடுங்கறியே...! சரி... சம்யுக்தா இருந்தா அவ கிட்டக் குடு... நான் அவளைப் போய்ச் சொல்லச் சொல்றேன்... அவ தைரியமாய்ப் போய் சொல்லுவா! என்றார் தீனதயாள்.

    சற்றுத் தள்ளி நின்று, ஜன்னல் வழியே அந்தக் கும்பலைக் கண்காணித்துக் கொண்டிருந்த மகள் சம்யுக்தாவை உரத்த குரலில் அழைத்தாள் சூடாமணி.

    இந்தா உங்க டாடி பேசறார்! போனை அவளிடம் நீட்டினாள்.

    வாங்கிய சம்யுக்தா, என்ன டாடி? என்று கேட்க,

    த பாரு சம்யுக்தா... உங்கம்மா அந்தக் கூட்டத்தைப் பார்த்துப் பயப்படறா... அதனால நீ போய்... ஒழுங்கா போறீங்களா இல்லை எங்கப்பா கிட்ட சொல்லி கான்ஸ்டபிள்ஸை வரச் சொல்லி நாலு சாத்து சாத்தச் சொல்லவா?ன்னு மிரட்டும்மா!

    நீங்க கட் பண்ணுங்க டாடி... நான் போய் அவனுகளை மிரட்டிட்டு வந்து என்னாச்சு?ன்னு சொல்றேன்! இணைப்பைத் துண்டித்தாள் சம்யுக்தா.

    போனை வைத்து விட்டு, வேக வேகமாக வாசலை நோக்கிச் செல்லும் மகளிடம், என்னடி... உங்கப்பா சொன்ன மாதிரியே போய் அவங்க கிட்ட சொல்லப் போறியா? சூடாமணி அச்சத்தோடு கேட்க,

    அவங்க கிட்ட சொல்லப் போகலை... அவங்களை மிரட்டிட்டு வரப் போறேன்!

    தாய் கூப்பிடக் கூப்பிடக் காதில் கூட வாங்கிக் கொள்ளாமல் வெளியே சென்ற சம்யுக்தா போன வேகத்தில் பீதியடித்த முகத்துடன் திரும்பி வந்தாள்.

    என்னடி... மிரட்டிட்டியா?

    அவங்க என்னை மிரட்டிட்டாங்க...! கான்ஸ்டபிள்ஸ் என்ன...? மிலிட்டரியையே வரச் சொன்னாலும்... நாங்க போற மாதிரி ஐடியா இல்லை...! உங்கப்பா... அதான் இன்ஸ்பெக்டர் சார்... அவர் வரட்டும் அவர்கிட்டேயே நியாயம் கேட்டுட்டுப் போறோம்!ன்னு ஸ்டிராங்க சொல்லிட்டாங்கம்மா! சம்யுக்தா சோகமாய்ச் சொன்னாள்.

    சொல்லிட்டாங்கல்ல...? அப்புறமென்ன...? கூப்பிடு உங்க அப்பாவை... வரச் சொல்லு உடனே! என்றாள் சூடாமணி.

    மறுபடியும் தந்தைக்கு கால் செய்து சம்யுக்தா விஷயத்தைச் சொல்ல,

    ஓ... அப்படியா...? சரி... நான் இப்ப உடனே கிளம்பி வர்றேன்னு சொல்லு!

    அடுத்த பதினைந்தாவது நிமிடம் வந்து நின்ற ஜீப்பிலிருந்து இறங்கிய இன்ஸ்பெக்டர் தீனதயாள், தன் வீட்டிற்கு முன்னால் நின்று கொண்டிருந்த அந்தக் கும்பலைப் பார்த்ததும் கடும் கோபமானார்.

    வேக வேகமாய் நடந்து அவர்கள் முன்னால் போய் நின்றவர், என்ன உங்க பிரச்சினை? கடுப்பான முகத்தோடு கேட்க,

    நாய்க்கடி வாங்கிய ஏழு பேரும் கூட்டத்தின் முன்னால் வந்து தங்கள் காயத்தைக் காட்டினர்.

    அந்தக் காயங்களைப் பார்த்த இன்ஸ்பெக்டர் ஆடிப் போனார். ஆஹா... ராம்போ வெறி கொண்டு கடிச்சிருக்கு

    "ஓ காட்...! என் பொண்ணு போன்ல சொன்னப்ப நான் ஏதோ சின்னதா பல்லு பட்டிருக்கும்னுதான்

    Enjoying the preview?
    Page 1 of 1