Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

En Manam Ennidam Illai
En Manam Ennidam Illai
En Manam Ennidam Illai
Ebook148 pages54 minutes

En Manam Ennidam Illai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சமூகவியலில் முதுகலைப் பட்டம் (M.A.,Sociology) பெற்றுள்ள எழுத்தாளர் “முகில் தினகரன்” தான் வாழும் சமூகத்தை ஊன்றிக் கவனித்து, தனக்குள் ஏற்படும் தாக்கங்களையும், பாதிப்புக்களையும் கதை வடிவில் உருமாற்றி வாசகர்களுக்கு சிறுகதைகளாகவும், நாவல்களாகவும் படைத்துக் கொண்டிருக்கின்றார்.

தனது எழுத்துப் பாட்டையில் இதுவரை 1020 சிறுகதைகளும், 125 நாவல்களும் எழுதி சாதனை படைத்துள்ள இவர், கவிதை, தன்னம்பிக்கை கட்டுரைகள், பட்டி மன்றப் பேச்சு, சுயமுன்னேற்றப் பயிலரங்கம், எழுத்து பயிற்சிப்பட்டறை, தொலைக்காட்சி சீரியல்களில் நடிப்பு, என பல்வேறு துறைகளிலும் தனது முத்திரையைப் பதித்து வருகின்றார். இவரது சிறுகதைகளில், சமூகப் பார்வை கொண்ட படைப்புக்களை ஆய்வு செய்து மாணவரொருவர் முனைவர் பட்டம் (பி.ஹெச்.டி) பெற்றுள்ளார்.

சிறுகதைப் போட்டி, நாவல் போட்டி, கவிதைப் போட்டி, என பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு, பல பரிசுகளை வென்றுள்ளார். எழுத்துச் சிற்பி, கதைக்களத் திலகம், நாவல் நாயகன், நாவல் நாபதி, சிந்தனைச் செங்கதிர், சிறுகதைச் செம்மல், கவிதைக் கலைமாமணி, தமிழ்ச்சிற்பி, உட்பட இருபத்தைந்துக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.

மேலும், தில்லி தமிழ்ச் சங்கம், கல்கத்தா தமிழ்ச் சங்கம், மும்பைத் தமிழ்ச் சங்கம், புவனேஷ்வர் தமிழ்ச் சங்கம், திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம், புதுச்சேரி தமிழ்ச் சங்கம், பெங்களூரு தமிழ்ச்சங்கம், ஹைதராபாத் தமிழ்ச் சங்கம், பொன்ற வெளி மாநில தமிழ்ச்சங்கங்களில் உரையாற்றி விருதுகளைப் பெற்றுள்ளார்.

கோவையைச் சேர்ந்த பிரபல கிரைம் எழுத்தாளர் ராஜேஸ் குமார் அவர்கள், இவரைத் தன் சிஷ்யர் என்று கூறி பெருமைப்படுத்தியுள்ளார்.

Languageதமிழ்
Release dateNov 23, 2019
ISBN6580130004753
En Manam Ennidam Illai

Read more from Mukil Dinakaran

Related to En Manam Ennidam Illai

Related ebooks

Reviews for En Manam Ennidam Illai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    En Manam Ennidam Illai - Mukil Dinakaran

    http://www.pustaka.co.in

    என் மனம் என்னிடம் இல்லை

    En Manam Ennidam Illai

    Author:

    முகில் தினகரன்

    Mukil Dinakaran

    For more books

    http://www.pustaka.co.in/home/author/mukil-dinakaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் – 1

    அத்தியாயம் – 2

    அத்தியாயம் – 3

    அத்தியாயம் – 4

    அத்தியாயம் – 5

    அத்தியாயம் – 6

    அத்தியாயம் – 7

    அத்தியாயம் – 8

    அத்தியாயம் – 9

    அத்தியாயம் – 10

    அத்தியாயம் – 11

    அத்தியாயம் – 12

    அத்தியாயம் – 13

    அத்தியாயம் – 14

    அத்தியாயம் – 15

    அத்தியாயம் – 16

    அத்தியாயம் – 17

    அத்தியாயம் – 18

    அத்தியாயம் – 19

    அத்தியாயம் – 20

    அத்தியாயம் – 21

    அத்தியாயம் – 22

    அத்தியாயம் – 23

    அத்தியாயம் – 24

    அத்தியாயம் – 1

    அந்தக் கட்டிடத்தின் பிரம்மாண்டத்தைப் பார்த்ததும் சவிதாவின் அச்ச உணர்வு மேலும் அதிகரித்தது. சென்ற மாதம், இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இண்டர்வியூவில், எப்படியோ தட்டுத் தடுமாறி கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லி, பதிமூன்று போட்டியாளர்களைத் தோற்கடித்து, அந்த வேலையை வென்று, இன்று இந்த பிராஞ்ச்சில் பணியில் சேரவும் வந்து விட்டாள். கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு முதன் முதலில் வேலைக்குச்செல்லும் எல்லோருக்கும் இருக்கும் அதே பயம்... அதே கூச்சம்... சவிதாவிற்கும் இருந்தது.

    நுழை வாயிலை அடைந்ததும், யாருக்கும் தெரியாத வண்ணம் கீழே குனிந்து தரையைத் தொட்டுக் கும்பிட்டுக் கொண்டாள். கடவுளே!... உன்னை நம்பித்தான் நுழைகிறேன்!... நீதான் எல்லாத்தையும் நல்லவிதமாய் இயக்கணும்!

    இரண்டாவது தளத்தில் அமைந்திருந்த அலுவலகத்திற்கு ஏனோ லிப்டை உபயோகிக்காமல், படிகளிலேயே ஏறிச் சென்றாள்.

    ஆதித்யா அசோஸியேட்ஸ் என்ற பெயர்ப்பலகை கண்ணில் பட, அதை நோக்கி நடந்தாள்.

    ரிசப்ஷனில் இருந்த பெண் இவளைப் பார்த்து, அழகாய்ச் சிரித்து, நியூ அப்பாயிண்ட்மெண்டா? கேட்டாள்.

    யெஸ் மேடம்

    வெய்ட் பண்ணுங்க!

    அவள் காட்டிய சோபாவில் மெத்தென்று அமர்ந்து, அந்த அலுவலகத்தை நோட்டமிட்டாள் சவிதா. அதன் பகட்டு அவளை மிரளச் செய்தது. ரிசப்ஷன் பகுதிக்குப் பின்னால், கண்ணாடித் தடுப்பிற்கு அப்பால் அலுவலகம் படு சுறுசுறுப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது. எல்லோரும் இங்குமங்கும் ஓடிக் கொண்டிருந்தனர்.

    ரிசப்ஷன்காரி, ஒரு போனை எடுத்து ஹலோ என்றும்... இன்னொரு போனை எடுத்து யெஸ் என்றும்... மாற்றி மாற்றிச் சொல்லிக் கொண்டிருந்தாள். அவ்வளவு டென்ஷனிலும் அவள் முகத்தில் அந்தப் புன்னகை சற்றும் மாறாமல் இருந்தது. இந்தத் தகுதியால்தான் இவள் செலக்ட் ஆகியிருப்பாளோ?... என்று தோன்றியது சவிதாவிற்கு.

    தன்னைக் கடந்து சென்ற ஓரிரு மனிதர்கள் தன்னை ஒரு வினோதப் பார்வை பார்த்து விட்டுச் செல்வதை உணர்ந்த சவிதா உள்ளுக்குள் சுயபச்சாதாபம் கொண்டாள். ப்ச்!... எனக்கு இந்தச் சூழ்நிலைக்கு ஏற்ற தோற்றமுமில்லை... உடையுமில்லை...! ஹூம்... எப்படித்தான் நான் இங்கே குப்பை கொட்டப் போறேனோ?

    மேடம்... யுவர் குட் நேம் ப்ளீஸ்? ரிசப்ஷனிஸ்ட் ஒரு கையால் ரிஸீவரை அடைத்துக் கொண்டு இவளிடம் கேட்க,

    சவிதா! என்றாள்.

    தொடர்ந்து யாரிடமோ பேசி முடித்த அந்த ரிசப்ஷனிஸ்ட், போனை வைத்து விட்டு, உள்ளார போங்க மேடம்!... லெப்ட் சைடுல நாலாவது கேபின்ல... மிஸ்டர்.ராஜேந்திரன்... அக்கவுண்ட்ஸ் மேனேஜர் இருப்பார்... அவரைப் போய்ப் பாருங்க!

    கண்ணாடித் தடுப்பைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தாள் சவிதா. நேரே அந்த நாலாவது கேபினை நோக்கிச் சென்று, எஸ்.ராஜேந்திரன், அக்கவுண்ட்ஸ் மேனேஜர் என்று பெயர் பொறிக்கப்பட்டிருந்த கேபின் முன் நின்றாள்.

    யெஸ்!... யூ ஆர் மிஸ்.சவிதா? சோம்பேறித்தனத்தின் மொத்த உருவமாய் இருந்த அவர், மெல்லத் தலையைத் தூக்கி, சன்னக் குரலில் கேட்டார்.

    யெஸ் சார்! என்றாள் இவள்.

    ம்... உட்காருங்க!

    உட்கார்ந்தவள் தன் கையிலிருந்த அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரை எடுத்து அவரிடம் நீட்டினாள்.

    அதை வாங்கிப் பார்த்து விட்டுத் திருப்பிக் கொடுத்தவர், அந்தக் கேபினுக்கு வெளியே காலியாய் இருந்த ஒரு மேஜையைக் காட்டி, ம்... அந்த சீட்ல உட்கார்ந்துக்கங்க!... அதுதான் உங்க சீட்! என்றார்.

    தேங்க்யூ சார்! என்று சொல்லி விட்டு எழுந்து சென்று, அவர் காட்டிய மேஜையில் அமர்ந்து கொண்டாள் சவிதா.

    கிட்டத்தட்ட அரை மணி நேரம் அவரும் அவளைக் கண்டு கொள்ளவில்லை, மற்ற யாருமே அவளைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. சவிதாவிற்கு என்னவோ போலிருந்தது. ச்சை!... என்ன ஆபீஸ் இது?... புதுசா ஒருத்தர் வேலைக்கு வந்து சேர்ந்தா... அவங்களை இப்படியா வரவேற்பாங்க?... அட வரவேற்கக் கூட வேண்டாம்... அட்லீஸ்ட்... முக்கியமானவங்க ரெண்டு மூணு பேருக்காவது அறிமுகம் செய்து வைக்க வேண்டாமா?

    நீண்ட நேரக் காத்திருப்பிற்குப் பின், அட்டெண்டர் வந்து, மேடம்!... உங்களை ஏ.எம். சார் கூப்பிடறார்! என்று சொல்ல,

    ஏ.எம்... என்றால்... அக்கவுண்ட்ஸ் மேனேஜராத்தான் இருக்கும்! என்று தனக்குள் நினைத்துக் கொண்டு, எழுந்து அக்கவுண்ட்ஸ் மேனேஜர் ராஜேந்திரன் கேபினுக்குள் வந்தாள்.

    அவர் தலையைக் கூட நிமிராமல், ஒரு கற்றைப் பேப்பரை அவளிடம் தந்து, தன் கேபினின் வலது மூலையிலிருந்த கம்ப்யூட்டரைக் காட்டி, அதுல உட்கார்ந்து... இந்த பேலன்ஸ் கன்ஃபர்மேஸன் லெட்டர்ஸ் எல்லாம் கரெக்டா?... ன்னு வெரிஃபை பண்ணுமா! என்றார்.

    வாங்கிக் கொண்ட சவிதா அந்தக் கம்ப்யூட்டரின் முன் அமர்ந்து, மனதில் ஒரு முறை ஆண்டவனை நினைத்துக் கொண்டு, தன் வேலையைத் துவக்கினாள்.

    அரை மணி நேரத்திற்கு மேலாகியும், ஒரு லெட்டரைக் கூட அவளால் ஓ.கே செய்ய முடியவில்லை. கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் தொகைக்கும், கம்ப்யூட்டர் காட்டும் தொகைக்கும் ஏக வித்தியாசம். போராடிப் பார்த்து விட்டு, முடியாத நிலையில் எழுந்து அக்கவுண்ட்ஸ் மேனேஜரிடமே வந்தாள்.

    என்னம்மா?... கன்ஃப்யூஸா இருக்கா?... அதோ அந்தக் கடைசில ஒருத்தர் இருக்காரு பாரு?... அவர்கிட்டக் கேள்... அவருக்குத்தான் அதெல்லாம் தெரியும்! எப்படியோ அவள் அங்கிருந்து நகர்ந்தால் போதும் என்கிற ரீதியில் அடுத்தவரைக் கை காட்டி விட்டு, தலையைக் கவிழ்த்துக் கொண்டார் அந்த அக்கவுண்ட்ஸ் மேனேஜர்.

    அவர் காட்டிய நபரை நோக்கிச் சென்று, தன் குழப்பத்தை அவரிடம் தெரிவித்தாள் சவிதா. கிட்டத்தட்ட ஐம்பது... ஐம்பத்தி ரெண்டு வயதிருக்கும் அவர் பதிலேதும் பேசாமல், சில நிமிடங்கள் அவளையே கூர்ந்து பார்த்தார்.

    தர்ம சங்கடத்தில் நெளிந்தாள் சவிதா. அந்தப் பார்வையில் இருந்தது பரிதாபமா?... பரிகாசமா?... இல்லை பாலியல் கிலேசமா?... எதுவும் புரியவில்லை அவளுக்கு.

    சட்டென்று புன்னகைத்த அந்த மனிதர், அதோ... அந்தச் சேரை எடுத்து வந்து போட்டு... இப்படி உட்காரு! என்று சொல்ல,

    அச்சத்துடன் எழுந்து சென்று, அந்தச் சேரை எடுத்து வந்து அவருக்கு எதிரில் போட்டு, ஒரு கலவரத்துடனே அமர்ந்தாள்.

    ம்... சொல்லும்மா... என்ன குழப்பம் இதுல?

    அவள் சொல்வதை முழுதும் கேட்டு முடித்து விட்டு, ம்... நீ... இதை என் கிட்டக் கேட்கறதை விட... அதோ அந்த சோமுகிட்டக் கேளு!... சரியாய் சொல்லுவான்! என்றார். தன் கோர்ட்டுக்குள் வந்த பந்தை எளிதாய் தட்டி விட்டார்.

    சவிதா அடுத்ததாய் அந்த சோமுவை நாடினாள். இளைஞனான அவன் புதுப் பெண்ணிடம் தன் பந்தாவைக் காட்டும் விதமாய், "ம்... மேடம்... நான் கொஞ்சம் அர்ஜென்ட் வொர்க்ல இருக்கேன்!... இப்ப என்னைய எந்த டீடெய்ல்ஸும் சொல்ல முடியாது!...

    Enjoying the preview?
    Page 1 of 1