Athu Oru Porkaalam
()
About this ebook
தன் வீட்டு வேலைக்காரியான சாய்ராபானு வேறு மதத்தைச் சேர்ந்தவள் என்பதால் அவளை வேலையிலிருந்து துரத்தி விடும்படி மனைவியிடம் எப்போதும் சொல்லிக் கொண்டே இருப்பார் நாராயணசாமி. “நம்ம வீடு இருப்பது புறநகர்ப் பகுதி…இந்த ஏரியாவுக்கு வர எந்த வேலைக்காரியும் சம்மதிப்பதில்லை…அதனால இவளைத் துரத்த முடியாது” என்று தீர்மானமாய் மனைவி சொல்லிவிட, அந்த வேலைக்காரி மீதும் அவளுடன் வரும் அவள் மகள் சிறுமி ஷெரீன் மீது அளவு கடந்த கோபத்தையும் வெறுப்பையும் காட்டுவார் நாராயணசாமி. தங்கள் மகள் குழந்தை காயத்ரி அந்த வேலைக்காரி மகளோடு விளையாடுவதையே தடை செய்தவர் அவர். ஒரு முறை காயத்ரி காணாமல் போகிறார். இரவு வரை அவள் வராமல் போக பதட்டமாகிறார். சற்றுத் தொலைவிலுள்ள ஒரு ஆழ்துளைக் கிணற்றிற்குள் அவள் விழுந்து விட்ட தகவல் கிடைத்ததும் தன் செல்வாக்கைப் பயன்படுத்தி, பேரிடர் மீட்புக்குழு ஆட்களையும், ராட்சத எந்திரங்களையும் வரவழைத்து, இரவு முழுவதும் படாதபாடு பட்டு குழந்தையை அதிகாலை வேளையில் வெளிக் கொணர,
அக்குழந்தை வேலைக்காரியின் மகள் ஷெரீன்.
அப்படியென்றால்…..காயத்ரி எங்கே?
கதையை முழுவதும் படியுங்கள்.
Read more from Mukil Dinakaran
Thanga Thamarai Malare! Rating: 5 out of 5 stars5/5Ezhu Janmam Vendinean Rating: 0 out of 5 stars0 ratingsSiragai Viri!!... Sigaram Thodu!! Rating: 0 out of 5 stars0 ratingsEnnil Neeyadi!... Unnil Naanadi! Rating: 0 out of 5 stars0 ratingsAthu Oru Varam! Rating: 0 out of 5 stars0 ratingsUn Nizhalum Naanthane? Rating: 0 out of 5 stars0 ratingsUyirulla Bommaigal Rating: 0 out of 5 stars0 ratingsVinnai Thodalam Unthan Siragu Rating: 0 out of 5 stars0 ratingsDubai Kizhavi! Rating: 0 out of 5 stars0 ratingsIndha Mannil Anandham Rating: 0 out of 5 stars0 ratingsMulloduthan Muthangala? Rating: 0 out of 5 stars0 ratingsAval Oru Azhagana Thee Rating: 0 out of 5 stars0 ratingsAval Oru Haikku Rating: 0 out of 5 stars0 ratingsThoorigai Erigindra Poothu…! Rating: 0 out of 5 stars0 ratingsEngiruntho Vanthal! Rating: 5 out of 5 stars5/5Endha Moongil Pullankuzhal? Rating: 0 out of 5 stars0 ratingsMedhuvaga Sellum Ambulancegal Rating: 0 out of 5 stars0 ratingsAttaikathi Rajakkal Rating: 0 out of 5 stars0 ratingsUyiraal Inainthirupean Rating: 0 out of 5 stars0 ratingsOru Kathavum... Innoru Kathavum! Rating: 0 out of 5 stars0 ratingsInnoru Idhayam Rating: 0 out of 5 stars0 ratingsMul Naduve Malar Valarthu! Rating: 0 out of 5 stars0 ratingsNaalellam Pournami Rating: 0 out of 5 stars0 ratingsInnarkku Innarendru! Rating: 4 out of 5 stars4/5Malarum Sudugindrathu Rating: 0 out of 5 stars0 ratingsOotha Colouru Helmet! Rating: 0 out of 5 stars0 ratingsTherodi Ointha Theru Rating: 0 out of 5 stars0 ratingsUravugal Enbathu Poithane? Rating: 0 out of 5 stars0 ratingsVarum Kaalam… Vasantha Kaalam! Rating: 0 out of 5 stars0 ratingsVidiyalukku Illai Thooram Rating: 0 out of 5 stars0 ratings
Related to Athu Oru Porkaalam
Related ebooks
Kiligalai Parakka Vidungal Rating: 0 out of 5 stars0 ratingsOru Paarvai Paarthalenna? Rating: 0 out of 5 stars0 ratingsManitha Subavam Rating: 0 out of 5 stars0 ratingsDevathai Vaazhum Veedu! Rating: 0 out of 5 stars0 ratingsKozhaigal Rating: 0 out of 5 stars0 ratingsEn Uyir Thunaiye...! Rating: 0 out of 5 stars0 ratingsNandha Rating: 0 out of 5 stars0 ratingsManasellam Banthalitten! Rating: 0 out of 5 stars0 ratingsNadanthathu Nadanthapadiye! Rating: 0 out of 5 stars0 ratingsNesapoovin Narumanam Rating: 5 out of 5 stars5/5Thoorigai Erigindra Poothu…! Rating: 0 out of 5 stars0 ratingsSakkaram Nirpathillai Rating: 0 out of 5 stars0 ratingsOru Iniya Manathu Naadagam Rating: 0 out of 5 stars0 ratingsArugil Miga Arugil... Rating: 5 out of 5 stars5/5Oru Thappu Thaalam Oru Sariyaana Raagam Rating: 5 out of 5 stars5/5ஒரு தப்புத் தாளம் ஒரு சரியான ராகம் Rating: 0 out of 5 stars0 ratingsKalavadinean Kanapozhuthil! Rating: 0 out of 5 stars0 ratingsபுதிய பூ பூத்தது Rating: 0 out of 5 stars0 ratingsPuthiya Poo Poothathu Rating: 0 out of 5 stars0 ratingsThai Maasam...! Poo Vaasam...! Rating: 0 out of 5 stars0 ratingsEnnennavo En Nenjile... Rating: 0 out of 5 stars0 ratingsAndha Nimidam Sorgam Rating: 0 out of 5 stars0 ratingsUllathai Kollathey! Rating: 0 out of 5 stars0 ratingsTick... Tick... Lipstick! Rating: 5 out of 5 stars5/5Ninaikka Therindha Manamey! Rating: 0 out of 5 stars0 ratingsUn Thol Sera Aasaithan Rating: 0 out of 5 stars0 ratingsஉன் தோள் சேர ஆசைதான்! Rating: 0 out of 5 stars0 ratingsIvale En Manaivi Rating: 5 out of 5 stars5/5Aasai Nenjin Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsPasithalum Puli... Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Athu Oru Porkaalam
0 ratings0 reviews
Book preview
Athu Oru Porkaalam - Mukil Dinakaran
http://www.pustaka.co.in
அது ஒரு பொற்காலம்
Athu Oru Porkaalam
Author:
முகில் தினகரன்
Mukil Dinakaran
For more books
http://www.pustaka.co.in/home/author/mukil-dinakaran
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் - 1
அத்தியாயம் - 2
அத்தியாயம் - 3
அத்தியாயம் - 4
அத்தியாயம் - 5
அத்தியாயம் - 6
அத்தியாயம் - 7
அத்தியாயம் - 8
அத்தியாயம் - 9
அத்தியாயம் - 10
அத்தியாயம் - 11
அத்தியாயம் - 12
அத்தியாயம் - 13
அத்தியாயம் - 14
அத்தியாயம் - 15
அத்தியாயம் - 16
அத்தியாயம் - 17
அத்தியாயம் - 18
அத்தியாயம் - 1
அது கோவை மாவட்டத்தின் புறநகர்ப் பகுதியில் மெல்ல மெல்ல வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு புதுக் குடியிருப்புப் பகுதி. இப்போதுதான் அங்கொன்றும் இங்கொன்றுமாய் வீடுகள் முளைக்கத் துவங்கியிருந்தன. பல சைட்டுக்கள் கம்பி வேலிக்குள் அடைபட்டிருந்தன. அதன் உரிமையாளர்கள் அப்ளை செய்திருக்கும் லோன்கள் சாங்ஷன் ஆனதும் அவைகளும் வீட்டைச் சுமக்கத் தயாராகிவிடும்.
எட்டிப் பிடித்து விடும் தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலை இருந்ததால், அந்த ஏரியாவில் இதமான குளிர் காற்று நிரந்தரமாய் சுழன்று கொண்டிருந்தது. அந்த லே-அவுட்டை விற்பவர் கூட அதையே தன்னுடைய பிரதான பிளஸ் பாயிண்ட்டாய்த்தான் சொல்லி விற்றுக் கொண்டிருந்தார்.
அங்கிருந்து மூன்று கிலோ மீட்டர் தள்ளி கேரளா நோக்கிச் செல்லும் பிரதான சாலை. இரவு நேரங்களில் அந்தப் பிரதான சாலையில் கேரளாவை நோக்கிச் செல்லும், சரக்கு லாரிகளின் பேரிரைச்சல் அந்தக் குடியிருப்புப் பகுதி மக்களின் தூக்கத்தைக் கெடுத்து, துக்கத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது.
"உருவாய் அருவாய் உளதாய் இலதாய்...
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்...
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்...
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!"
அருணகிரிநாதர் வரிகளை ராகத்தோடு இசைத்தபடி வீட்டிற்குள்ளிருந்து வெளியே வந்த வெற்றுடம்பு நாராயணசாமி, போர்ட்டிகோவை விட்டு கீழிறங்கி, கிழக்கு திசை நோக்கி நின்று, வழக்கம் போல் கண்களை மூடி, தனது சூரிய வழிபாட்டை நிகழ்த்தினார். பொதுப்பணித் துறையில் எழுத்தராகப் பணியாற்றிக் கொண்டிருப்பவர். மிகுந்த பக்திமான். திருமணமாகி எட்டு வருஷம் குழந்தை இல்லாமல் இருந்து, பல வேண்டுதல்களையும், விரதங்களையும் கடைப் பிடித்து ஒரேயொரு பெண் குழந்தையைப் பெற்றவர். அதன் காரணமாகவே ஆன்மீகத்தில் அதீத ஈடுபாடு. வெளியில் பேசும் போது பொதுப்படையாகப் பேசினாலும், இனப்பற்று உள்ளுக்குள் நிறையவே உண்டு. தன் பதவி கருதி அதை வெளிக் காட்டாமல் அமைதியாய் நடந்து கொள்வார்.
பத்து நிமிட வழிபாட்டிற்குப் பின், அடுத்த பணியாய் பூக்கூடையைக் கையில் எடுத்துக் கொண்டு, தன் வீட்டுக் காம்பௌண்டிற்குள் தானே அமைத்திருந்த அந்தச் சிறிய நந்தவனத்திற்குள் புகுந்து, அன்றைய பூஜைக்குத் தேவையான அரளிப் பூக்களைக் கொய்ய ஆரம்பித்தார் அந்த பக்திமான். வாய் ஏதோ ஒரு சாமி பாட்டை முணுமுணுத்துக் கொண்டேயிருந்தது.
சமையலறையிலிருந்து புறப்பட்டிருந்த காஃபி வாசனை போர்ட்டிகோவைக் கடந்து, நந்தவனத்தில் நின்று கொண்டிருந்த நாராயணசாமியின் நாசிக்குள் பிரவேசிக்க, ஆஹா... சிவகாமியின் காஃபி மணத்திற்கு ஈரேழு லோகத்திலும் ஈடேயில்லை!
மனதிற்குள் பாராட்டிக் கொண்டார்.
அப்போது யாரோ கேட்டைத் திறக்கும் சப்தம் கேட்க, அங்கிருந்தே தலையைத் தூக்கிப் பார்த்தார். மூன்றாவது சைட்டில் வீடு கட்டிக் குடி வந்திருக்கும் ஐராவதம் சார், பேப்பர்க்காரன் கேட்டில் செருகி வைத்து விட்டுப் போயிருந்த அன்றைய நியூஸ் பேப்பரைக் கையிலெடுத்துக் கொண்டு உள்ளே வந்தார். ஹூம்... எங்கள் வீட்டு நியூஸ் பேப்பரை நாங்கள் படிக்கிறோமோ இல்லையோ இந்த ஐராவதம் சார் மட்டும் ஒரு வரி விடாமல் படித்து முடித்து விடுகிறார்
என எண்ணிக் கொண்ட நாராயணசாமி, குட்மார்னிங் சார்
என்றார்.
குட் மார்னிங்!... குட் மார்னிங்!... என்ன ஓய்... உடம்பெல்லாம் வரி வரியாய்த் திருநீர்ப்பட்டை போட்டு கிட்டத்தட்ட வரிக் குதிரை மாதிரியே ஆயிட்டீர்?
என்றி தமாஷாய்ச் சொல்லியபடியே போர்ட்டிகோ சோபாவில் அமர்ந்து, நியூஸ் பேப்பரை மேய ஆரம்பித்தார் ஐராவதம் சார். இந்த வயதிலும் டீ-ஷர்ட்-ஜீன்ஸ் அவரது ஸ்பெஷாலிட்டி. அந்த ஐம்பத்தியெட்டு வயதிற்கு அவருக்கு கொஞ்சமாவது வழுக்கை விழுந்திருக்கணும். ஏனோ விழவில்லை. ஆனால் நரை மட்டும் அவரது வயதைப் பறை சாற்றிக் கொண்டிருந்தது. அதற்கும் அவ்வப்போது டை அடிப்பார்.
பூக்களைப் பறித்து முடித்த நாராயணசாமி, பூக்கூடையை வீட்டிற்குள் கொண்டு போய் வைத்து விட்டு வந்து போர்ட்டிகோ சோபாவில் ஐராவதம் சாருடன் அமர்ந்தார். அப்புறம் பேப்பர்ல என்ன விசேஷம் சார்?
என்னத்தைச் சொல்ல?... தெனமும் நியூஸ் பேப்பர் படிச்சு முடிச்சதும் ஆத்துக்குப் போய் இன்னொரு தடவை ஸ்நானம் பண்ணிட்டுத்தான் உள்ளாரவே போகணும் போலிருக்கு!... அத்தனை அநியாயங்கள்... அக்கிரமங்கள்... அசிங்கங்கள்... எல்லாம் சர்வ சாதாரணமாய் நடந்திட்டேயிருக்குது!... சேச்சே... லோகம் ரொம்பவே கெட்டுப் போயிடுத்து!... பொள்ளாச்சி சம்பவம் ஒண்ணு போட்டிருக்கான்... சிவ... சிவா... நெஞ்சே வெடிச்சிடும் போலிருக்கு!
அப்படியென்ன சார் பொள்ளாச்சி சம்பவம்?
ஒரு டிரேயில் இரண்டு காஃபி டம்ளர்களோடு வந்தாள் சிவகாமி.
நாராயணசாமிவாள்... உம்ம ஆத்துக்காரி போடுற காஃபி மணம்... நாலு சைட் தாண்டி எங்க ஆத்து வரைக்கும் வருது ஓய்!...
சொல்லி விட்டு ஐராவதம் சார் வாய் விட்டுச் சிரிக்க,
உங்களோட இந்தப் பாராட்டெல்லாம் என்னோட குரு நாதருக்குத்தான் சேரணும்
என்றாள் சிவகாமி லேசான வெட்கத்துடன்.
அப்படியா?... யார் உங்க குரு நாதர்?
வேற யாருமில்லை உங்க எதிரில் சத்தமில்லாமல் உட்கார்ந்திருக்காரே என் வீட்டுக்காரர்... சாட்சாத் அவர்தான் எனக்கு குருநாதர்!... கல்யாணம் பண்ணிட்டு வந்தப்ப எனக்கு காஃபி போடக் கூடத் தெரியாது!... இவர்தான் சொல்லிக் குடுத்தார்!... இப்ப சமையல்லே நான் எக்ஸ்பர்ட் ஆயிருக்கேன்!ன்னா அதுக்கு மொத்தக் காரணம் இவர்தான்!... என் ஆசான்!
அடடே... நாராயணசாமிவாள்... நீங்க நள பாகச் சக்கரவர்த்தியோ?... எனக்கு இத்தனை நாள் தெரியாமல் போச்சே?
சத்தம் போட்டுச் சிரித்தார் ஐராவதம் சார்.
இருவரும் பருகி முடித்த காஃபி டம்ளர்களை வாங்கிக் கொண்டு சிவகாமி மீண்டும் வீட்டிற்குள் சென்று விட, நாராயணசாமி மீண்டும் கேட்டார்.
என்னமோ பொள்ளாச்சி சம்பவம்!னு சொன்னீங்களே?... அது என்ன?
கொடூரம் சாமி!... எல்லாம் இந்த செல்போன் குட்டிப்பிசாசு பண்ற வேலை!... ஃபேஸ் புக் நண்பனோட ஓவராய்ப் பழகப் போய் பெரிய விபரீதத்தில மாட்டிக்கிச்சு ஒரு பொண்ணு!... அவன் சுயரூபத்தைக் காட்ட ஆரம்பிச்சிட்டான்!
தலையிலடித்துக் கொண்டே சொன்னார் ஐராவதம்.
இது என்ன புதுசா?..இது மாதிரி... ஏற்கனவே பல இடங்கள்ல நடந்திருக்கு!... என்ன?... இது வெளிய வந்திருக்கு... மத்ததெல்லாம் இன்னும் வரலை!... ஆனா... வரும்... வரும்... வராமல் போயிடாது!..அப்புறம்... வேற என்ன நியூஸ்?
நாராயணசாமி கேட்க,
"வேறென்ன?... எந்தப் பக்கம் திருப்பினாலும் திருட்டு... கொள்ளை... கொலை... கள்ளக்காதல்... சிலைக் கடத்தல் விவகாரம்தான்!... ஒரு