Aval Oru Azhagana Thee
()
About this ebook
தன் தம்பி ரவி, திவ்யா என்னும் மோசடிப் பெண்ணை நல்லவள் என்று எண்ணி தீவிரமாய்க் காதலிக்க, அவனை அப்பெண்ணின் வலையிலிருந்து மீட்க நினைக்கும் அண்ணன், அவளால் ஏற்கனவே பாதிக்கப்பட்ட இளைஞன் சங்கரை அழைத்து வந்து உண்மையைச் சொல்ல வைக்கிறான்.
அந்த இளைஞன், திவ்யாவிற்கும், அவள் தாய் மற்றும் தாய் மாமனுக்கும் இதுதான் பிழைப்பே, என்றும் அவளால் தான் தன் சொத்துக்கள் முழுவதை இழந்து விட்டதையும், அடுத்ததாய் உங்களிடம் வந்திருக்கிறார்கள், என்பதையும் எடுத்துரைக்கிறான். ஆனால் அதை நம்ப மறுத்த ரவி, தன் காதலைத் தொடர்கிறான்.
“அந்த திவ்யாவை நான் காதலிப்பது போல் நடித்து...என் காதல் வலையில் அவளை விழ வைத்தால் நம்புவாயா?” என்று அண்ணன் சவாலாய்க் கேட்க, ஏற்கிறான் ரவி.
தன் சவாலில் அண்ணன் வெற்றி பெற்றானா...? தம்பியை மீட்டானா?
கதையை நாசூக்காக நகர்த்திச் சென்று, இடையில் ஒரு கொலைச் சம்பவத்தையும் இணைத்து, சற்றும் சுவாரஸியம் குறையா வண்ணம் எழுதிப் படைத்திருக்கின்றார் நாவலாசிரியர்.
Read more from Mukil Dinakaran
Vinnai Thodalam Unthan Siragu Rating: 0 out of 5 stars0 ratingsEzhu Janmam Vendinean Rating: 0 out of 5 stars0 ratingsEnnil Neeyadi!... Unnil Naanadi! Rating: 0 out of 5 stars0 ratingsAthu Oru Varam! Rating: 0 out of 5 stars0 ratingsThanga Thamarai Malare! Rating: 5 out of 5 stars5/5Siragai Viri!!... Sigaram Thodu!! Rating: 0 out of 5 stars0 ratingsMullum Naane...! Malar Naane! Rating: 0 out of 5 stars0 ratingsEn Vazhvile Deepam Yetru...! Rating: 0 out of 5 stars0 ratingsUn Nizhalum Naanthane? Rating: 0 out of 5 stars0 ratingsKaanal Sorgam Rating: 0 out of 5 stars0 ratingsThee Kozhunthil Pani Thuliyai..!!! Rating: 0 out of 5 stars0 ratingsJeevan Oyum Munney! Rating: 0 out of 5 stars0 ratingsSugamana Kaathirupu! Rating: 0 out of 5 stars0 ratingsKanneer Varaintha Oviyam Rating: 0 out of 5 stars0 ratingsUllil Yeriyuthu Oru Kanal Rating: 0 out of 5 stars0 ratingsUruthi Konda Nenjinaai... Vaa Rating: 0 out of 5 stars0 ratingsMr And Mrs Pei Rating: 0 out of 5 stars0 ratingsKanavaana Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsInge Oru Shahjahan Rating: 0 out of 5 stars0 ratingsEn Manam Ennidam Illai Rating: 0 out of 5 stars0 ratingsMannithu Vidu... Magane...! Rating: 0 out of 5 stars0 ratingsKaatrin Viralgal! Rating: 0 out of 5 stars0 ratings"Rendum Rendum Moonu" Rating: 0 out of 5 stars0 ratingsIndrum Theriyavillai Natchathirangal! Rating: 0 out of 5 stars0 ratingsPaathai Marantha Payanangal Rating: 0 out of 5 stars0 ratingsIthu Mattum Kadanthu Pogathu! Rating: 0 out of 5 stars0 ratingsUnakke Vechurikean Moochu! Rating: 0 out of 5 stars0 ratingsVarum Kaalam… Vasantha Kaalam! Rating: 0 out of 5 stars0 ratingsAatuvithal Yaaroruvar? Rating: 0 out of 5 stars0 ratings
Related to Aval Oru Azhagana Thee
Related ebooks
Mangai Enthan Nenjukkul! Rating: 0 out of 5 stars0 ratingsAnbil Ullathu Vazhkai Rating: 0 out of 5 stars0 ratingsNeedhan... Nee Mattum Dhan! Rating: 0 out of 5 stars0 ratingsArathanai Rating: 0 out of 5 stars0 ratingsPuthiya Paadal Paadu Rating: 5 out of 5 stars5/5புதிய பாடல் பாடு Rating: 0 out of 5 stars0 ratingsKaathirukka Neramillai Rating: 5 out of 5 stars5/5Naalellam Pournami Rating: 0 out of 5 stars0 ratingsNaan Endral Athu... Avanum Naanum! Rating: 0 out of 5 stars0 ratingsMayakkam Enna... Undhan Mounam Enna... Rating: 0 out of 5 stars0 ratingsNatchathira Iravu Rating: 0 out of 5 stars0 ratingsAasaiye Alai Polea...! Rating: 0 out of 5 stars0 ratingsManasukkul Neruppu Rating: 0 out of 5 stars0 ratingsNaan Thediya Vanavil Rating: 0 out of 5 stars0 ratingsDubai Kizhavi! Rating: 0 out of 5 stars0 ratingsTheeyiniley Valar Jyothiye Rating: 5 out of 5 stars5/5Mella Mella Oru Thigil Rating: 5 out of 5 stars5/5Pesu... Malarey... Pesu! Rating: 0 out of 5 stars0 ratingsKavithai Sirippinile... Rating: 0 out of 5 stars0 ratingsAasai Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsKanavaana Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsAaruyire... En Oruyire... Rating: 5 out of 5 stars5/5Kuliratha Margazhi Rating: 0 out of 5 stars0 ratingsEngey Aval En Devathai Rating: 0 out of 5 stars0 ratingsEngey En Jeevan Rating: 5 out of 5 stars5/5Ezhavathu Jenmam Rating: 4 out of 5 stars4/5Manathukkuthan Karpu Rating: 0 out of 5 stars0 ratingsUn Ullam Naanariven Rating: 0 out of 5 stars0 ratingsNaan Nee….Aathma! Rating: 5 out of 5 stars5/5Pookalin Mozhi Puriyalaye? Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Aval Oru Azhagana Thee
0 ratings0 reviews
Book preview
Aval Oru Azhagana Thee - Mukil Dinakaran
http://www.pustaka.co.in
அவள் ஒரு அழகான தீ
Aval Oru Azhagana Thee
Author:
முகில் தினகரன்
Mukil Dinakaran
For more books
http://www.pustaka.co.in/home/author/mukil-dinakaran
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் – 1
அத்தியாயம் – 2
அத்தியாயம் – 3
அத்தியாயம் – 4
அத்தியாயம் – 5
அத்தியாயம் – 6
அத்தியாயம் – 7
அத்தியாயம் – 8
அத்தியாயம் – 9
அத்தியாயம் – 10
அத்தியாயம் – 11
அத்தியாயம் – 12
அத்தியாயம் – 13
அத்தியாயம் – 14
அத்தியாயம் – 15
அத்தியாயம் – 16
அத்தியாயம் – 17
அத்தியாயம் – 18
அத்தியாயம் – 19
அத்தியாயம் – 1
அந்தப் பேருந்து நிறுத்தத்தில் கிட்டத்தட்ட அரை மணி நேரத்திற்கும் மேல் நின்று கொண்டிருந்தாள் பூங்கொடி. மாலை நேர வெயில் சூடு குறைவாக இருந்த போதிலும் அவள் நெற்றிப் பொட்டில் வியர்வை மொட்டுக்களை விளைத்துக் கொண்டேயிருந்தன. விஸ்வத்தை இன்னும் காணோம். டென்ஷனின் உச்சத்தில் நகத்தைக் கடித்துக் கடித்துத் துப்பினாள். ஹும்... ஆறு மணிக்கு
டாண்னு அங்கிருப்பேன்!
னு சொன்னவன் மணி இப்ப ஆறு முப்பத்தியஞ்சு... இதுவரைக்கும் ஆளைக் காணோம்...! ராஸ்கல்... வரட்டும் கவனிச்சுக்கறேன்!" உள்ளுக்குள் பொருமித் தீர்த்தாள். அளவுக்கதிகமாய்க் கடித்து விட்டதில் ஒரு விரலில் ரத்தமே வந்து விட்ட்து.
எந்த பஸ் வந்தாலும் அதில் ஏறாமல் நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருந்தவளை சிலர் ஆச்சரியமாகவும், குழப்பத்தோடும் பார்த்தனர். சற்றுத் தள்ளியிருந்த பெட்டிக்கடையில் புகை மண்டலம் ஏற்படுத்திக் கொண்டிருந்த இளைஞர்கள் மனதிற்குள் வேறு மாதிரியான கணக்குப் போட்டனர்.
சர்
ரென்று வந்து நின்ற பல்ஸர் பைக்கில் புன்னகை முகத்துடன் விஸ்வம்.
அப்போது எதுவும் பேசாமல் அமைதியாய் பின் இருக்கையில் ஏறியமர்ந்தவள், வண்டி கிளம்பிய பின் தன் கோபத்தை கொட்டினாள். ஏண்டா கொரங்கு... இதுதான் ஆறு மணிக்கு
டாண்னு வர்ற லட்சணமா?... உன்னைக் காதலிச்சதுக்குப் பதிலா அந்த டிராபிக் கான்ஸ்டபிளைக் காதலிச்சிருக்கலாம்...! கடந்த முக்கால் மணி நேரமா அவர்தான் என்னைக் கண்ணும் கருத்துமாய்க் கவனிச்சுக்கிட்டிருந்தார்
அடிப்பாவி... அவருக்கு உங்கப்பா வயசுடி
இருக்கட்டுமே... பொறுப்பாய் கவனிச்சிட்டாரல்ல?... அப்புறம் வேறென்ன வேணும்?
அப்ப வண்டியைத் திருப்பி அங்கேயே கொண்டு போய் விடறேன்... அந்த கான்ஸ்டபிள் கிட்டப் பேசி... ஒரு முடிவுக்கு வருவோம்
சொல்லி விட்டு பைக்கின் வேகத்தை அவன் குறைக்க,
க்கும்... எப்படியாவது என்னைக் கழற்றி விடறதிலேயே இரு
என்று செல்லமாய் அவன் முதுகில் குத்தி விட்டு, சரி... சொல்லு ஏன் லேட்டு?
கேட்டாள்.
அது... வந்து... கிளம்பற நேரத்துல முதலாளி கூப்பிட்டு, வேண்டுமென்றே ஒரு வேலையைக் குடுத்திட்டார்...! அதை முடிச்சிட்டு வர்றதுக்குள்ளார லேட் ஆயிடுச்சு...!
போடா... ஆபீஸ் டைம் முடிஞ்சு போச்சு... இனி நாளைக்கு வந்துதான் செய்வேன்ன்னு சொல்லிட்டு வந்திடலாம்...! அடுத்த நாள் போனா என் டேபிள்ல... எனக்கு பதிலா வேறொரு ஆள் உட்கார்ந்து அந்த வேலையை பார்த்திட்டிருப்பான்!
சமாளித்தான்.
ஆஹாஹ்ஹா... தெனமும் இப்படியே ஏதோவொரு பொய்யைச் சொல்லி என்னை பேச விடாமல் பண்ணிடு
என்றவள் சரி... இப்ப வண்டி எங்க போகுது?
கேட்டாள்.
ம்ம்... நேரா ஜோசியர் வீட்டுக்குப் போகுது
என்றான்.
என்னது?... ஜோசியர் வீட்டுக்கா?... எதுக்கு?... எதுக்கு?
நம்ம கல்யாணத்துக்கு நாள் குறிக்க... சாந்தி முகூர்த்தத்துக்கு நேரம் குறிக்க...
சிரிப்புடன் சொன்னான்.
அது செரி... இன்னமும் வீட்டுப் பெரியவங்க கிட்டயே நம்ம காதல் விஷயத்தை ஓப்பன் பண்ணத் துப்பில்லை...! அதுக்குள்ளார ஐயா போறாராம்... ஜோசியர் வீட்டுக்கு...
கடுப்படித்தாள் பூங்கொடி.
ஏய்... ஏய்... எதுக்கு இப்ப அவசரப்படறே?... கொஞ்ச நாளைக்கு ஜாலியா லவ் பண்ணிட்டு... அப்புறமா கல்யாணத்தைப் பண்ணிக்கிட்டு... இம்சைகள் நிரம்பிய குடும்ப வாழ்க்கைக்குள் நுழைவோமே?
என்றான் விஸ்வம்.
அப்புறம் எதுக்குடா
ஜோசியர் வீட்டுக்குப் போறேன்... ஜோக்கர் வீட்டுக்குப் போறேன்!ன்னு கதை விடறே?
அடச் சும்மா உன்னை வம்பிழுக்கத்தான்
வேண்டுமென்றேபைக்கின் ஹேண்டில் பாரை ஆட்டி அவளைப் பயமுறுத்தினான். அதன் காரணமாய் அவள் அவனை இறுகக் கட்டிக் கொண்டாள்.
சரி... இப்ப உண்மையைச் சொல்லு... எங்க தள்ளிட்டுப் போறே என்னைய?
பூங்கொடி கேட்க,
வேற எங்க போவேன்?... வழக்கம் போல வ... உ.சி... பார்க்...! வழக்கம் போல் அதே செடி... ம்ம்ம்... அப்புறம் வழ்க்கம் போல்...
சொல்லி விட்டு வேண்டுமென்றே ஒரு பிரேக் அடித்து பயணத்தைக் கிளுகிளுப்பாக்கினான்.
அதானே பார்த்தேன்
என்றவள் அவன் முதுகைக் கிள்ளி, த பாரு... இப்ப நீ ஏன் பிரேக் போட்டே?... எதுக்கு பிரேக் போட்டே?... எல்லாம் எனக்குத் தெரியும்...! இப்பவே சொல்லிட்டேன்... அங்க போயி கையையும்... காலையும் வெச்சுக்கிட்டு சும்மா இருக்கணும்...! என்ன?
ம்... முயற்சி பண்றேன்
படவா... அங்கேயும் வந்து என்னைச் சீண்டு... அப்புறம் கவனிச்சுக்கறேன் உன்னை
சொல்லி விட்டு அவன் முதுகில் செல்லமாய் அடித்தாள் பூங்கொடி.
"உன் பூங்கரத்தால் அடித்தாலும் சுகம்...!
அணைத்தாலும் சுகம்...! ஓ அதனால்தான்
உன் பெயர் பூங்கொடியோ?"
என்று அவன் கவிதை பாட,
ஆச்சரியக் குறி
என்று சொல்லிச் சிரித்தாள் பூங்கொடி.
வ.உ.சி.பூங்காவை அடைந்ததும், தன் பைக்கை டூ வீலர் ஸ்டாண்டில் நிறுத்தி விட்டு விஸ்வம் வர, இருவரும் வழக்கமாய் அமரும் செடி மறையில் சென்று அமர்ந்தனர்.
விஸ்வம்... இன்னும் எத்தனை காலத்துக்கு இப்படியே செடி மறைவிலும்... இருட்டிலும் ஒளிஞ்சிக்கிட்டே காதலிக்கறது?... எனக்கே போரடிக்குது...! சீக்கிரமே ஒரு கல்யாணத்தைப் பண்ணிக்கிட்டு குழந்தை குட்டிகளைப் பெத்துக்கிட்டு யதார்த்த வாழ்க்கைக்குப் போவோம்டா!
என்று பூங்கொடி சொல்ல,
அதான் சொன்னேனே?... கொஞ்சம் வெய்ட் பண்ணு
ன்னு" அவள் தாடையைத் தொட்டு கொஞ்சுவது போல் அவன் சொன்னான்.
அவன் கையைத் தட்டி விட்டவள், எனக்குப் புரியலை விஸ்வம்...! நீயும் நல்ல வேலைல இருக்கே... போதிய அளவுக்கு சம்பளமும் வாங்கறே...! அதே மாதிரி நானும் நல்ல வேலைல இருக்கேன்... ஓரளவுக்கு சம்பாதிக்கறேன்...! ரெண்டு பேருக்குமே லைன் கிளியர்...! அப்புறம் ஏன்
வெய்ட் பண்ணலாம்...! வெய்ட் பண்ணலாம்"னு சொல்லிட்டே இருக்கே?... என்னதான் இருக்கு உன் மனசுல?... ஒவ்வொரு நாளும் கடந்து போகப்