Innarkku Innarendru!
3.5/5
()
About this ebook
ஒரு சாதாரண கம்பெனியில் கிளார்க் உத்தியோகம் பார்க்கும் பரந்தாமன் தரகரிடம் தனக்கொரு பெண் பார்க்கச் சொல்ல, அவரோ தரகு ஆசையில் சென்னையில் வாழும் ஒரு பெரிய பணக்கார வீட்டுப் பெண்ணான வைதேகியிடம், பரந்தாமன் ஒரு செல்வந்தர் வீட்டு ஒரே வாரிசு என்றும், பெரிய கம்பெனியில் சேல்ஸ் எக்ஸிக்யூடிவ் என்றும் பொய் சொல்லி திருமணம் செய்து வைக்கிறார்.
திருமணத்திற்குப் பின் உண்மை தெரிந்ததும், வைதேகி அவனை விட்டுப் பிரிந்து தந்தாய் வீட்டிற்கே சென்று விடுகிறாள். அவள் பிரிவைத் தாங்க முடியாமல் வேறு ஊருக்குச் சென்று வாழ்கிறான் பரந்தாமன். அங்கே தனக்கு உதவி செய்தவரின் விதவைத் தங்கைக்கு வாழ்வு கொடுக்கிறான்.
வைதேகியும் தான் பேராசிரியராக பணி புரியும் கல்லூரியின் சக பேராசிரியர் ஒருவரைத் திருமண செய்து கொள்கிறாள்.
இரு ஜோடிகளும் தேனிலவுக்காக கொடைக்கானல் வருகின்றனர்.
வந்த இடத்தில் பரந்தாமனும் வைதேயும் ஒருவரையொருவர் பார்த்து அதிர,
பரந்தாமனின் புது மனைவியும் அதிர்கிறாள்.
காரணம்?
நாவலைப் படியுங்கள்.
Read more from Mukil Dinakaran
Siragai Viri!!... Sigaram Thodu!! Rating: 0 out of 5 stars0 ratingsPaaraikkul Panneer Pushpam Rating: 0 out of 5 stars0 ratingsUyirulla Bommaigal Rating: 0 out of 5 stars0 ratingsVinnai Thodalam Unthan Siragu Rating: 0 out of 5 stars0 ratingsThanga Thamarai Malare! Rating: 5 out of 5 stars5/5Ennil Neeyadi!... Unnil Naanadi! Rating: 0 out of 5 stars0 ratingsMulloduthan Muthangala? Rating: 0 out of 5 stars0 ratingsAnbai Thedi... Rating: 0 out of 5 stars0 ratingsAthu Oru Varam! Rating: 0 out of 5 stars0 ratings"Rendum Rendum Moonu" Rating: 0 out of 5 stars0 ratingsAttaikathi Rajakkal Rating: 0 out of 5 stars0 ratingsSaathan Sollai Thattu Rating: 0 out of 5 stars0 ratingsCylinder Niraya Anbu Rating: 0 out of 5 stars0 ratingsVarum Kaalam… Vasantha Kaalam! Rating: 0 out of 5 stars0 ratingsSoftware Kuttrangal! Rating: 0 out of 5 stars0 ratingsOru Kathavum... Innoru Kathavum! Rating: 0 out of 5 stars0 ratingsEn Manam Ennidam Illai Rating: 0 out of 5 stars0 ratingsEzhu Janmam Vendinean Rating: 0 out of 5 stars0 ratingsTherodi Ointha Theru Rating: 0 out of 5 stars0 ratingsUn Nizhalum Naanthane? Rating: 0 out of 5 stars0 ratingsAatuvithal Yaaroruvar? Rating: 0 out of 5 stars0 ratingsNaalellam Pournami Rating: 0 out of 5 stars0 ratingsAval Oru Azhagana Thee Rating: 0 out of 5 stars0 ratingsEn Vazhvile Deepam Yetru...! Rating: 0 out of 5 stars0 ratingsInge Oru Shahjahan Rating: 0 out of 5 stars0 ratingsUruthi Konda Nenjinaai... Vaa Rating: 0 out of 5 stars0 ratingsUyiraal Inainthirupean Rating: 0 out of 5 stars0 ratingsOotha Colouru Helmet! Rating: 0 out of 5 stars0 ratingsInnoru Idhayam Rating: 0 out of 5 stars0 ratings
Related to Innarkku Innarendru!
Related ebooks
Anbin Niram Maarathu Rating: 0 out of 5 stars0 ratingsIdhayaraagam Rating: 5 out of 5 stars5/5Kaadhal Enbathu Mayavalai Rating: 4 out of 5 stars4/5Azhagin Sirippu Rating: 0 out of 5 stars0 ratingsNandhini Oru Nandhavanam Rating: 5 out of 5 stars5/5Megangal Illatha Vaanam Rating: 0 out of 5 stars0 ratingsKaatrukenna Veli Rating: 0 out of 5 stars0 ratingsThedinen Vanthathu Rating: 5 out of 5 stars5/5Maapillai Maariyatchu Rating: 0 out of 5 stars0 ratingsNeeyum Naanum Ondru Than Rating: 0 out of 5 stars0 ratingsIlamai Kaatru Rating: 5 out of 5 stars5/5Vanaththil Oru Thevathai Rating: 5 out of 5 stars5/5Neeyiruntha Manasu Rating: 4 out of 5 stars4/5Janani Jagam Nee Rating: 0 out of 5 stars0 ratingsThenralaga Nee Varuvaayaa Rating: 5 out of 5 stars5/5Kadhal Kalam Idhu Rating: 0 out of 5 stars0 ratingsAvalukkendru Oru Manam Rating: 4 out of 5 stars4/5Vinnaivittu Vaa Kanne Rating: 0 out of 5 stars0 ratingsSuvaril Nuzhaintha Vergal Rating: 4 out of 5 stars4/5Unnai Virumbinen Uyire.. Rating: 5 out of 5 stars5/5Yaarukku Mappillai Yaaro? Rating: 0 out of 5 stars0 ratingsKanne Ethirkkaathe Rating: 4 out of 5 stars4/5Neelakuyile Kannamma Rating: 5 out of 5 stars5/5Enakkaakave Vanthaai Rating: 3 out of 5 stars3/5Maanbumigu Maapillai Rating: 0 out of 5 stars0 ratingsThottu Kolla Aasai Rating: 0 out of 5 stars0 ratingsKai Arugil Thendral Rating: 5 out of 5 stars5/5Vaigarai Vidiyal Rating: 0 out of 5 stars0 ratingsKaathalaal Thavikkiren Rating: 5 out of 5 stars5/5Nilavai Thedum Vaanam Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Innarkku Innarendru!
2 ratings0 reviews
Book preview
Innarkku Innarendru! - Mukil Dinakaran
http://www.pustaka.co.in
இன்னார்க்கு இன்னாரென்று!
Innarkku Innarendru!
Author:
முகில் தினகரன்
Mukil Dinakaran
For more books
http://www.pustaka.co.in/home/author/mukil-dinakaran
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
அத்தியாயம் 30
அத்தியாயம் 31
அத்தியாயம் 32
1
பரந்தாமன்:
எனக்கு பிரமிப்பாயிருந்தது. நடப்பதெல்லாம் கனவா?... இல்லை நிஜமா?
. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன். அட..வலிக்குது!
அப்படின்னா இது நிஜம்தான்.
என்ன தம்பி... அப்படியே சிலையாட்டம் உட்கார்ந்துட்டீங்க?... வர்ற பதினாலாம் தேதி உங்களுக்கு சௌகரியப்படுமல்ல?... அன்னிக்கே நிச்சயதார்த்தம் வெச்சுக்கலாமல்ல?... நீங்க
சரின்னு சொன்னதுக்கப்புறம்தான் நான் பெண் வீட்டார்க கிட்ட சொல்லணும்!
கல்யாணத்தரகர் சற்று உரக்கக் கேட்க, சிந்தனை வலை அறுந்து சுயநினைவுக்கு வந்தேன்.
ம்..ம்..தாராளமா வெச்சுக்கலாம்!
என்றேன். என்னுள்ளிருந்த பிரமிப்பு இன்னும் மாறாமலேயிருந்தது. கடந்த மூணு வருஷமா அலையோ... அலைன்னு அலைஞ்சு, கிட்டத்தட்ட அம்பது... அறுபதுக்கும் மேலான ஜாதகங்களைப் பார்த்துப் பேசி ஒண்ணு கூடப் பொருந்தாம... அப்படிப் பொருந்தி வந்த ஒண்ணு ரெண்டும் வேறு சில காரணங்களால் அமையாமப் போய், கடைசில பொண்ணுங்கற பேர்ல ஏதோவொன்னு கெடைச்சாப் போதும்கற நிலைமைக்கு வந்த நேரத்துல இப்படியொரு அதிர்ஷ்டமா எனக்கு?... ஒருவேளை இப்படியொண்ணு அமையணும்கறதுக்காகத்தான் ஆண்டவன் இவ்வளவு தாமதப்படுத்தினானோ?... வெறும் பி.ஏ.டிகிரி... அதுவும் கரஸ்பாண்டென்ஸுல படிச்சுட்டு..ஒரு சின்ன பிரைவேட் கம்பெனில சாதாரண கிளார்க்கா, பிசாத்துக்காசு எட்டாயிரம் சம்பாதிக்கற எனக்கு... எம்.ஏ., எம்.பில்., படிச்சிட்டு காலேஜ்ல லெக்சரரா இருக்கற பொண்ணு அமையறதுன்னா?...
டேய்... பரந்தாமா... உனக்கு எங்கியோ மச்சம் இருக்குடா" என்னை நான் பாராட்டிக் கொண்டேன்.
அப்பாவைப் பார்த்தேன், அவர் முகத்தில் எந்தவித ரீயாக்ஷனையும் காணோம். இந்த அப்பாவிடம் எனக்குப் பிடிக்காததே இதுதான். எந்த விஷயத்திலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளவே மாட்டார், பட்டும் படாமலே இருப்பார். அதை ஒரு வகை எஸ்கேப்பிஸம்
ன்னு நான் சொல்லுவேன். இல்லையென்றால் முப்பத்தியொன்பது வயசான என் அண்ணனுக்கு இத்தனை நாளு கல்யாணம் பண்ணாமல் விட்டு வைத்திருப்பாரா?... நாந்தான் ஒன்றிரண்டு தரகர்களை அணுகி அவனுக்காக வரன் பார்க்கச் சொன்னேன். ப்ச்!... என் முயற்சி கனவாகத்தான் போனதே தவிர, காரியம் கை கூடவில்லை.
பத்தாம் வகுப்பு பெயிலாகி, ஆறு மாதத்திற்கு ஒரு கம்பெனி என மாறி மறி வேலை பார்க்கும் அவனைக் கல்யாண மார்க்கெட்டில் விற்பனை செய்ய அவர்களாலும் முடியவில்லை, என்னாலும் முடியவில்லை.
தளர்ந்து போன தரகர்கள், எனக்கு வரன் பார்க்க, விழைய, யோசித்தேன், வயது போனால் திரும்பி வருமா?... இப்ப வயதாகி விட்டது என்கிற காரணத்தினால்தானே அண்ணனுக்குப் பெண் கிடைக்க மாட்டேங்குது... நாளைக்கு எனக்கும் இதே நிலைமைதானே வரும்?
சரி... பாருங்கள்
என்றேன்.
அப்போதும் கூட அப்பா தன் எதிர்ப்பைக் காட்டவில்லை. ஏண்டா... மூத்தவன் இருக்கும் போது உனக்கு நீ வரன் பார்க்கச் சொல்லியிருக்கியே இது நியாயமடா?
என்று கத்துவார் என நினைத்தேன். அவரோ, தன் மோன நிலையை அப்போதும் உறுதிப்படுத்தினார்.
எனக்காக நாலைந்து தரகர்கள் முட்டி மோதியதில் ஒரு தரகர் வெற்றி கண்டார். சென்னையில் தனியார் கல்லூரியொன்றில் லெக்சரராகப் பணி புரியும் வைதேகியை எனக்க்க முயற்சித்து, சாதித்தே விட்டார். இதோ பதினாலாம் தேதி நிச்சயதார்த்தம் வைத்துக் கொள்ளலாமா? என்று என்னிடம் கேட்கிறார்.
ம்..சொல்லிடுங்க!
என்றேன் நான்.
ரொம்ப சந்தோஷம்!... அப்ப நான் கிளம்பறேன் தம்பி!... இன்னிக்கே சென்னைக்குப் பேசி... அவங்களுக்கு தகவல் சொல்லிட்டு... அப்புறம் உங்ககிட்ட பேசறேன்!... வரட்டுமா?
தரகர் கிளம்பினார்.
அந்த விநாடியில் அந்த தரகர் எனக்கு தெய்வம் போல் தெரிந்தார். ஆனால். அந்த தெய்வத்தின் தொழில் புரட்டு என் வாழ்க்கையையே புரட்டிப் போடும் ஒரு பேரிடியாய் மாறிப் போகும், என்பது எனக்கு இப்போது தெரியாதல்லவா?.
அவர் சென்ற பிறகாவது அப்பா என்னிடம் ஏதாவது பேசுவார், என எதிர்பார்த்தேன். அவர் துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தார்.
ச்சை!... என்ன மனுஷர் இவர்?... இவர் செய்ய வேண்டிய காரியங்களையெல்லாம் நானே செய்துக்கறேன்!... அட்லீஸ்ட் அதைப் பற்றி ஒரு வார்த்தையாவது கேட்கலாமல்ல?... இவர்கிட்ட நானென்ன பனம்... காசா... எதிர்பார்க்கிறேன்?... எனக்குத் தெரியாதா இவரோட பொருளாதார பலம்?
வெறுப்பாயிருந்தது. ஆனாலும் அடிமனதில் ஒரு சந்தோஷச் சிராய்ப்பு இருந்து கொண்டேயிருந்த்து. எல்லா வாலிப உள்ளங்களும் திருமண காலங்களில் அனுபவிப்பதுதானே இந்தச் சந்தோஷம்?... ஆமாம்... நானென்ன வாலிபனா?..முப்பத்தியஞ்சு ஆரம்பிச்சாச்சு... இன்னேரம் ரெண்டு குழந்தைகளைப் பெத்து அதுகளைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பியிருக்கணும்... நான் இப்பத்தான் நிச்சயதார்த்தத்தையே எட்டியிருக்கேன்!... சரி... எல்லாம் நடக்க வேண்டிய காலத்துலதானே நடக்கும்?... இந்த அப்பா ஏன் இப்படி இருக்கிறார்?... இது என்ன வகை குணாதிசயம்?" குழம்பினேன்.
மறுநாள் மாலை ஏழு மணி வாக்கில் வந்த தரகர் சொன்ன செய்தி என்னை மேலும் குழப்பத்திலாழ்த்தியது.
அது... வந்து... தம்பி!... பொண்ணு வீடு கொஞ்சம் பெரிய இடம்... வசதியானவங்க!... அதனால நிச்சயதார்த்தத்தை சென்னைல ஒரு பெரிய ஆடிட்டோரியம் பார்த்து வெச்சுக்கலாம்னு பிரியப்படறாங்க!... நான் உடனே சம்மதிக்கலை!... உங்ககிட்ட கேட்டுட்டு வந்து சொல்றேன்னுட்டேன்!... இனி நீங்கதான் சொல்லணும்!
என்னது நிச்சயதார்த்தத்துக்கே மண்டபமா?
எனக்குள் புது அச்சம் ஊடுருவியது. ஆழம் தெரியாம காலை விடறோமா?..நம்ம தகுதிக்கு மீறிய பெரிய எடத்துல சம்மந்தம் பண்றோமா?"
என்ன தரகரே... நீங்க சொல்றதைப் பார்க்கும் போது பொண்ணு வீடு ரொம்ப்ப் பெரிய இடம் போலிருக்கே?... என்னைப் பற்றி... எங்க குடும்பத்தைப் பற்றி எல்லா விபரங்களையும் சரியாச் சொல்லியிருக்கீங்கல்ல?...
சந்தேகமாய்க் கேட்டேன்.
ம்..ம்... அதெல்லாம் தெளிவாச் சொல்லியிருக்கேன்!... ஏன்... ஏன் இப்படிக் கேட்கறீங்க?
இல்லை... சில தரகர்கள் காரியம் ஆகணும்கறதுக்காக இல்லாத்தையும்... பொல்லாததையும்..மிகைப் படுத்திச் சொல்லி... பின்னாடி குழப்பம் வரப் பண்ணிடுவாங்க!... அதான்!
என் அச்சத்தை வெளிப்படையாகவே