Thedinen Vanthathu
By R.Sumathi
5/5
()
About this ebook
Read more from R.Sumathi
Uravillai Pirivillai Rating: 0 out of 5 stars0 ratingsMaaya Thottrangal Rating: 0 out of 5 stars0 ratingsSinnakkili Rating: 4 out of 5 stars4/5Kadhal Kalamadi Kanne Rating: 5 out of 5 stars5/5Theeyai Sudum Thendral Rating: 0 out of 5 stars0 ratingsEppadi Solvenadi Rating: 4 out of 5 stars4/5Kunguma Kolangal Rating: 0 out of 5 stars0 ratingsInimai Ninaiuvgal Thodarattume Rating: 4 out of 5 stars4/5Puthiraaga Oru Poo Rating: 5 out of 5 stars5/5Malare Mayangaathe Rating: 0 out of 5 stars0 ratingsKannoram Minsaaram Rating: 0 out of 5 stars0 ratingsKaanalai Thedum Kaveri Rating: 0 out of 5 stars0 ratingsKathal Suvadukal Rating: 0 out of 5 stars0 ratingsYenazhuthaai Ennuyire Rating: 0 out of 5 stars0 ratingsManoratham Rating: 4 out of 5 stars4/5Paarvaikal Puthithaa Rating: 0 out of 5 stars0 ratingsPovomaa Ponnulagam Rating: 5 out of 5 stars5/5En Iniya Ilamaane Rating: 0 out of 5 stars0 ratingsEn Malar Madiyile Rating: 4 out of 5 stars4/5Paasa Malargal Rating: 0 out of 5 stars0 ratingsMayakkathirkuriya Manthirame Rating: 5 out of 5 stars5/5Oreedam Nee Tharuvaai Rating: 4 out of 5 stars4/5Niram Maarum Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsKetkkum Varam Kidaikkum Varai Rating: 0 out of 5 stars0 ratingsThendrale Ennai Thodu Rating: 5 out of 5 stars5/5Kannan Varum Neramithu Rating: 0 out of 5 stars0 ratingsSinthanaiye... En Siththame! Rating: 0 out of 5 stars0 ratingsVaazhnthaal Unthan Madiyil Rating: 5 out of 5 stars5/5Acham Vidu Pachai Kiliye Rating: 0 out of 5 stars0 ratingsThaai Paravai Rating: 5 out of 5 stars5/5
Related to Thedinen Vanthathu
Related ebooks
Vanaththil Oru Thevathai Rating: 5 out of 5 stars5/5Neeyedhaan En Manaivi Rating: 5 out of 5 stars5/5Unnai Virumbinen Uyire.. Rating: 5 out of 5 stars5/5Athisayam Adhu Rakasiyam Rating: 0 out of 5 stars0 ratingsAasai Mugam Maranthayo Rating: 0 out of 5 stars0 ratingsAayiram Nilavae Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsMalargal Malarkindrana! Rating: 0 out of 5 stars0 ratingsEllaik Kodukal Rating: 5 out of 5 stars5/5Inimai Ninaiuvgal Thodarattume Rating: 4 out of 5 stars4/5Kaadhal Vaithu Kaathirunthean! Rating: 0 out of 5 stars0 ratingsMalai Soodiya Velai... Rating: 3 out of 5 stars3/5Vaa Ini Vasanthame Rating: 5 out of 5 stars5/5Vasanthame Varuga Rating: 5 out of 5 stars5/5Natchathira Poonthottathil Rating: 0 out of 5 stars0 ratingsNilavai Thedum Vaanam Rating: 0 out of 5 stars0 ratingsEnakkaakave Vanthaai Rating: 3 out of 5 stars3/5Nandhini Oru Nandhavanam Rating: 5 out of 5 stars5/5Ennavale...! Rating: 5 out of 5 stars5/5Uyirin Uyire Rating: 4 out of 5 stars4/5Thenralaga Nee Varuvaayaa Rating: 5 out of 5 stars5/5Thanga Thamarai Malare! Rating: 5 out of 5 stars5/5Poongatru Sangeetham Aanathu! Rating: 0 out of 5 stars0 ratingsJanani Jagam Nee Rating: 0 out of 5 stars0 ratingsAmuthai Pozhiyum Nilavey! Rating: 0 out of 5 stars0 ratingsIlamai Kaatru Rating: 5 out of 5 stars5/5Kanne Ethirkkaathe Rating: 4 out of 5 stars4/5Anal Mele Panithuli Rating: 5 out of 5 stars5/5Nallathor Veenai Seithe...! - Part 1 Rating: 5 out of 5 stars5/5Anbin Niram Maarathu Rating: 0 out of 5 stars0 ratingsSanthithome Kanakkalil...! Rating: 3 out of 5 stars3/5
Reviews for Thedinen Vanthathu
2 ratings0 reviews
Book preview
Thedinen Vanthathu - R.Sumathi
16
1
விமான நிலையத்தில் வந்து இறங்கியதும் இரண்டாவது முறையாக சந்தனுவிற்கு படபடப்பாகயிருந்தது.
எந்தக் கவலையும் இல்லாமல் அமெரிக்காவின் தலைநகரத்தில் புகழ்பெற்ற கார் நிறுவனம் ஒன்றின் முக்கிய பொறுப்பில் கம்ப்யூட்டர் எதிரே அமர்ந்து பட்டன்களை தட்டிக் கொண்டிருந்த போது வந்த தந்தியின் வாசகங்களினால் உண்டான படபடப்பின் தொடர்ச்சி இந்தியா வந்து இறங்கியும் நிற்கவில்லை.
மாறாக அதிகரித்தது.
அனாலும் நிம்மதிப் பெருமூச்சு பிறந்தது.
வந்து விட்டோம். அம்மாவுக்கு அருகே வந்துவிட்டோம். கடவுளே...உன் பிம்பமானவள் தாய். அந்தத் தாய்க்கு எதுவும் ஆகக்கூடாது.
மனம் அவசர அவசரமாக பிரார்த்தித்தது. அது அவசரப் பிரார்த்தனையாகயிருந்தாலும் ஒரு ஆழ்நிலை தியானத்திற்கு சமமாகயிருந்தது.
அவசரமாக டாக்ஸி ஒன்றை அமர்த்திக் கொண்டான். அமர்ந்தான். அட்ரஸ் சொன்னான். கார் நகர ஆரம்பித்ததும் சீட்டில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டான்.
கண்ணுக்குள் அம்மாவின் முகம் உதயமானது அமைதியான அந்த முகமும் கனிவு தேக்கிய விழிகளும் இதயப் படபடப்பைக் கூட்டின.
‘அம்மாவுக்கு சீரியஸ், உடனே புறப்பட்டு வரவும். படபடப்பை உண்டாக்கிய இந்த வாசகம் மறுபடி மறுபடி மனதில் தோன்றி பயத்தை நெஞ்சு முழுவதும் புகை போல் பரப்பியது.
அம்மா!
இப்பொழுதுதான் சிரிக்க ஆரம்பித்திருக்கிறாள். அதற்குள் எந்தப் பிரச்சினையும் அந்த சிரிப்பிற்குத் தடையாகி விடாக்கூடாது. அப்பாவை பறி கொடுத்து விட்டு அவள் சோகத்தை மட்டுமே சுமந்து கொண்டாள்.
இந்தக் கம்ப்யூட்டர் அறிவு, அமெரிக்க வாழ்க்கை கைநிறைய சம்பளம்...
எல்லாவற்றிற்கும் பின்னே நிற்பது அம்மாவின் உழைப்பு சேமிப்பு, தியாகம்!
எல்லாவற்றிற்கும் மேல் அவளுடைய கனவு!
உயர்த்திப் பார்க்க வேண்டுமென்ற கனவு. சாதித்து விட்டாள். மகனையும் சாதிக்க வைத்தாள்.
அவனுக்கும் கனவு இருக்கிறது.
உயர்த்திப் பார்த்த அம்மாவை உற்சாகப்படுத்திப் பார்க்க வேண்டும். உள்ளம் உருக சந்தோஷப்படுத்திப் பார்க்க வேண்டும். மகனுக்காகவே வாழும் அந்த மாதாவை மகாராணியாக வைத்திருக்க வேண்டும்.
கடவுளே என்னுடைய கனவுக் கோட்டைகள் சரிந்திடா வண்ணம் நீயே காக்கவேண்டும். சினிமாக்களில் வருவதைப் போல் ‘உன்னை பார்க்கணும் போலிருந்தது அதனால்தான் சும்மா அப்படி ஒரு தந்தியடிச்சேன்’ என அழகாக சிரிக்க வேண்டும்.
சிரிப்பாளா?
வீட்டு வாசலில் காரை நிறுத்தி இந்த வீடு தானே?
என டிரைவர் கேட்டதும்தான் சுயஉணர்வு வந்தது. அவசரமாக இறங்கி பணத்தைக் கொடுத்து மீதியை வாங்கிக் கொள்ள மறந்து உள்ளே ஓடினான். கதவு திறந்தது.
‘என்ன ஆச்சரியம்?’
கற்பனை நிஜமானதைப் போல் அம்மா தமயந்தி சிரித்துக் கொண்டு நின்றிருந்தாள்.
கண்களை பலமுறை சிமிட்டினான். நம்ப முடியாமல்தான் இருந்தது. ஆனால் நம்ப வேண்டியிருந்தது.
அம்மா ஐந்து வயது குறைந்ததைப் போலிருந்தாள். அழகாக கொண்டை போட்டுப் பளிச்சென புத்தம் புது புடவையில் நின்றிருந்தாள்.
அம்மா...
ஆச்சரியத்தால் வாய் பிளந்து மகனைப் பார்த்து சிரித்தாள்.
வாப்பா...
அம்மா... என்னம்மா இது? சீரியஸ்னு தந்தியடிச்சுட்டு இப்படி நிக்கறே... ஏம்மா... ஏம்மா இப்படிப் பண்ணினே?
உன்னை வரவழைக்கத்தான்.
கையிலிருந்த சூட்கேஸை சோபாவின் மீது விட்டெறிந்தான்.
அம்மா... அதுக்காக இப்படியா? நான் எப்படி பயந்து போய்ட்டேன் தெரியுமா? பதறியடிச்சுக்கிட்டு ஓடி வந்திருக்கேன்.
எனக்கு வேற வழி தெரியலைப்பா. நீ போய் ரெண்டு வருஷம் ஆகுது. பார்க்கணும்னு ஆசையாயிருக்கு வான்னா, லீவு இல்லை நேரம் இல்லை அப்படி இப்படின்னு ஆயிரத்தெட்டு காரணம் சொல்றே. அதான் உன்னை வரவழைச்சேன்.
நல்லாயிருக்கும்மா! ரொம்ப நல்லாயிருக்கு.
இந்த தடவை பொய்யா தந்தியடிச்சேன். என் பேச்சை நீ கேட்காட்டா அடுத்த முறை உண்மையாவே தந்தியடிக்க வேண்டி வரும்.
என்ன... என்ன உன் பேச்சை நான் கேட்கலை?...
இதுவரை நான் கிழிச்ச கோட்டை நீ தாண்டாமத்தான் இருந்திருக்கே. ஒத்துக்கறேன். இனிமேலும் அப்படியே இருக்கணும். என் பேச்சைக் கேட்கணும். நான் சொல்றபடி கேட்கணும்.
என்ன கேட்கணும் சொல்லு?
சொல்றேன், முதல்ல போய் குளிச்சிட்டு சாப்பிட்டு ரெஸ்ட் எடு. அப்புறம் பேசுவோம்.
குளித்து விட்டு சாப்பிட வந்த போது தமயந்தி வகைவகையாக சமைத்து மேஜை முழுவதும் பரப்பி வைத்திருந்தாள்.
பார்த்துப் பார்த்துப் பரிமாறினாள்.
சந்தனுவிற்கு கண்கள் கலங்கி விட்டன. பாசத்துடன் அம்மாவின் கைகளைப் பற்றிக் கொண்டான்.
அம்மா நினைச்சுக் கூட பார்க்கலைம்மா, இப்படி உன் கையால வகை வகையா சாப்பிடுவேன்னு. நீ எந்த ஹாஸ்பிடல்ல எந்த நிலைமையில கிடக்கறியோன்னு ஓடி வந்தேன்.
அவனுடைய தலையை அன்புடன் கோதினாள் தமயந்தி.
சந்தனு... உன் அம்மா அதுக்குள்ளே செத்துட மாட்டா. என் பேரன்பேத்திகளுக்கு கல்யாணம் செய்து வச்சு அதுங்களோட குழந்தையை எடுத்து கொஞ்சிட்டுத்தான் சாவேன்...
அம்மா...சுத்தி வளைச்சு கல்யாண பேச்சை எடுக்கறியா?
புடலங்காய் கூட்டை ருசித்தவாறே சிரித்தான் சந்தனு.
புரிஞ்சுக்கிட்டா சரிதான். கல்யாணப் பேச்சை எடுக்கும் போதெல்லாம் என்ன அவசரம் என்ன அவசரம்னு அலட்சியப் படுத்தினியே! அதனாலதான் நேர்ல வரவழைச்சேன். உனக்காக நிறையப் பொண்ணுங்களைப் பார்த்து வச்சிருக்கேன்.
நிறையவா? ஐய்யோ... நான் என்ன கோகுல கண்ணனா? கோபிகை கூட்டத்தோடு சுத்த...?
அடிவாங்கப் போறே! அதுல ஒரு பொண்ணை நீ செலக்ட் பண்ணணும்.
"அதையும் நீயே செலக்ட்