Uyiril Pooparikkum Devathaiyum Neethan
()
About this ebook
கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியிலிருக்கும் அந்த விஸ்வா காம்ப்ளக்ஸில் தொடர்ந்து இரவுக் காவலர்கள் மரணமடைந்து கொண்டேயிருக்க, காவல் துறை துப்புத் துலக்குகின்றது. பக்கத்து காம்ப்ளக்ஸ் செக்யூரிட்டி அதெல்லாம் பேய்களின் வேலை என்கிறான். முதலில் மறுக்கும் ஏ.சி.தீனதயாள் அங்கு நடக்கும் நிகழ்வுகளை தொடர்ந்து பார்த்து நம்ப ஆரம்பிக்கிறார். பேய் மற்றும் ஆவி ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் முகிலனையும், அவன் காதலி ராதிகாவையும் உண்மை கண்டறியும் ஆராய்ச்சியில் ஈடுபடுத்துகிறார்.
அந்தப் பணியின் போது முகிலன் பேய்களால் சாகடிக்கப்படுகிறான். ஆனால், அவன் சாகடிக்கப்படும் காட்சிகள் மொத்தமும் காமிராவில் பதிவாகியிருக்க, பேய்களின் வேலைதான் என்பது உறுதியாகின்றது.
கேரளாவிலிருந்து நம்பூதிரி வரவழைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட, காம்ப்ளக்ஸ் சுவர்களுக்குள் பிணங்களை வைத்துக் கட்டிய உண்மை தெரிய வருகின்றது. போலீஸ் காம்ப்ளக்ஸின் கட்டுமானப் பணிகளை செய்த எஞ்சினீயரை சிங்கப்பூரிலிருந்து வரவழைக்கின்றது.....
சஸ்பென்ஸ் கதையின் இறுதியில் வெளிவருகின்றது. நாவலைப் படியுங்கள்.
Read more from Mukil Dinakaran
Paaraikkul Panneer Pushpam Rating: 0 out of 5 stars0 ratingsThanga Thamarai Malare! Rating: 5 out of 5 stars5/5Ennil Neeyadi!... Unnil Naanadi! Rating: 0 out of 5 stars0 ratingsUyirulla Bommaigal Rating: 0 out of 5 stars0 ratingsSiragai Viri!!... Sigaram Thodu!! Rating: 0 out of 5 stars0 ratingsAthu Oru Varam! Rating: 0 out of 5 stars0 ratingsInnoru Idhayam Rating: 0 out of 5 stars0 ratingsSugamana Kaathirupu! Rating: 0 out of 5 stars0 ratingsVinnai Thodalam Unthan Siragu Rating: 0 out of 5 stars0 ratingsJeevan Oyum Munney! Rating: 0 out of 5 stars0 ratingsUravugal Enbathu Poithane? Rating: 0 out of 5 stars0 ratingsCylinder Niraya Anbu Rating: 0 out of 5 stars0 ratingsThoorigai Erigindra Poothu…! Rating: 0 out of 5 stars0 ratingsInnarkku Innarendru! Rating: 4 out of 5 stars4/5Ootha Colouru Helmet! Rating: 0 out of 5 stars0 ratingsEngiruntho Vanthal! Rating: 5 out of 5 stars5/5Uyirgalidathu Anbu Vendum! Rating: 0 out of 5 stars0 ratingsIppadikku... Un Uyir! Rating: 0 out of 5 stars0 ratingsSuzhal Rating: 0 out of 5 stars0 ratingsAnbil Ullathu Vazhkai Rating: 0 out of 5 stars0 ratingsNaalellam Pournami Rating: 0 out of 5 stars0 ratingsPanthaya Purakkal Rating: 0 out of 5 stars0 ratingsAasaiye Alai Polea...! Rating: 0 out of 5 stars0 ratingsOru Panthu... Aaru Run... Oru Aavi Rating: 0 out of 5 stars0 ratingsAthu Oru Porkaalam Rating: 0 out of 5 stars0 ratingsPoochuduthe En Vaalibam! Rating: 0 out of 5 stars0 ratingsPoovizhi Vaasalile! Rating: 0 out of 5 stars0 ratingsPetraalthan Magala? Rating: 0 out of 5 stars0 ratingsIthuve Iruthi Aagattum...! Rating: 0 out of 5 stars0 ratingsThee Kozhunthil Pani Thuliyai..!!! Rating: 0 out of 5 stars0 ratings
Related to Uyiril Pooparikkum Devathaiyum Neethan
Related ebooks
Mella Mella Oru Thigil Rating: 5 out of 5 stars5/5Neethana... Nijamthana? Rating: 0 out of 5 stars0 ratingsVirainthu Vaa, Vivek! Rating: 5 out of 5 stars5/5Dinasari Moondru Kolaigal Rating: 4 out of 5 stars4/5Mullum Naane...! Malar Naane! Rating: 0 out of 5 stars0 ratingsCheckka Sivantha Thangam Rating: 0 out of 5 stars0 ratingsSila Vellai Iravugalum Oru Karuppu Pakalum Rating: 0 out of 5 stars0 ratingsSorgam Rating: 5 out of 5 stars5/5Panthaya Kuthirai Rating: 0 out of 5 stars0 ratingsKonjam Sirikkalame... Rating: 0 out of 5 stars0 ratingsKaruppu Neruppu! Rating: 3 out of 5 stars3/5Matroru Mahaabaratham Rating: 3 out of 5 stars3/5மற்றொரு மகாபாரதம் Rating: 0 out of 5 stars0 ratingsOotha Nira Devathai Rating: 5 out of 5 stars5/5Thalaiyuthir Paruvam Rating: 0 out of 5 stars0 ratingsUdhaa Nizhal Rating: 0 out of 5 stars0 ratings9-vathu Thisai Rating: 4 out of 5 stars4/5Attaikathi Rajakkal Rating: 0 out of 5 stars0 ratingsYaaro Oru X Rating: 0 out of 5 stars0 ratingsPogap Pogath Theriyum and Ootha Nira Thevathai Rating: 0 out of 5 stars0 ratingsபோகப் போகத் தெரியும் or ஊதா நிற தேவதை Rating: 0 out of 5 stars0 ratingsIngeydhan Irappargal Rating: 5 out of 5 stars5/5Neethana Nejamthana Rating: 0 out of 5 stars0 ratingsKuttrala Kolai Season Rating: 4 out of 5 stars4/5கண்ணை நம்பாதே Rating: 0 out of 5 stars0 ratingsThedathey Tholayathey! Rating: 5 out of 5 stars5/5Kannai Nambathey Rating: 3 out of 5 stars3/5Aagayathil Bhoogambam Rating: 0 out of 5 stars0 ratingsUnnidam Oru Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsAthe Athe... Saba Pathe... Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Uyiril Pooparikkum Devathaiyum Neethan
0 ratings0 reviews
Book preview
Uyiril Pooparikkum Devathaiyum Neethan - Mukil Dinakaran
https://www.pustaka.co.in
உயிரில் பூப்பறிக்கும் தேவதையும் நீதான்
(இது பேய்களையே மிரள வைக்கும் பேய் நாவல்)
Uyiril Pooparikkum Devathaiyum Neethan
(Ithu Peigaliye Mirala Vaikkum Pei Novel)
Author:
முகில் தினகரன்
Mukil Dinakaran
For more books
https://www.pustaka.co.in/home/author/mukil-dinakaran
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் - 1
அத்தியாயம் - 2
அத்தியாயம் - 3
அத்தியாயம் - 4
அத்தியாயம் – 5
அத்தியாயம் - 6
அத்தியாயம் - 7
அத்தியாயம் - 8
அத்தியாயம் - 9
அத்தியாயம் – 10
அத்தியாயம் - 11
அத்தியாயம் - 12
அத்தியாயம் - 13
அத்தியாயம் - 14
அத்தியாயம் - 15
அத்தியாயம் - 16
அத்தியாயம் - 17
அத்தியாயம் - 18
அத்தியாயம் - 19
அத்தியாயம் - 20
அத்தியாயம் - 21
அத்தியாயம் - 22
அத்தியாயம் - 23
அத்தியாயம் - 1
கோவை ரேஸ் கோர்ஸ் ஏரியா. நகரின் சுத்தத்திற்கு உதாரணமாய்த் திகழும் அந்தக் குடியிருப்புப் பகுதி மொத்தமாய் மேல்தட்டு மக்களின் வாசஸ்தலம். வரிசையாய் பங்களாக்கள். ஒவ்வொரு பங்களாவின் முகப்பிலும் தூங்கி வழியும் வாட்ச்மேன்கள். சில பங்களாக்களில் யூனிஃபார்ம் அணிந்த இளம் வயது காவலாளிகள். பல வீடுகளில் யூனிஃபார்ம் இல்லாமல் தலைக்குக் குல்லா மட்டும் அணிந்திருக்கும் வயதான காவலாளிகள்.
அதிகாலையின் இதமான குளிர் காற்று இளையராஜாவின் இசை போல் இதயம் தொட்டு வருடியது.
காவியம் பாட வா தென்றலே!..புது மலர் பூத்திடும் வேளை....இனிதான பொழுது எனதாகுமோ?...புரியாத புதிர்தான் எதிர்காலமோ?
எங்கிருந்தோ வந்த பாட்டுச் சத்தம் குருதி நாளங்களில் சுருதி சேர்த்தன.
நெரிசலில்லா சாலையில் வாய் வழியே மூச்சு விட்டுக் கொண்டே வாக்கிங் சென்று கொண்டிருந்தது பருத்தோர் கூட்டம். நின்ற இடத்திலேயே நின்று உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தது இளையோர் கூட்டம். அடுத்த வருட ஆணழகன் போட்டியில் வென்றே தீருவது என்கிற வெறியுடன் சில இளைஞர்கள் ஆவேசமாய் எக்சர்ஸைஸ் செய்து கொண்டிருந்தனர்.
சுக்குக் காபி விற்பவர்களும் அருகம்புல் ஜூஸ் விற்பவர்களும் சுறுசுறுப்பாகினர். அவர்களது கல்லா களை கட்டத் துவங்கியிருந்தது.
பள்ளி ஆட்டோ ஒன்று அந்த நேரத்திலேயே சில யூனிஃபார்ம் வாண்டுகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்தது. வெளியே எட்டிப்பார்த்து ததக்கா...புதக்கா
என்று நடந்து செல்லும் தொப்பை மனிதர்களைக் காட்டிச் சிரித்துக் கொண்டே சென்ற அந்த வாண்டுகளை எரிச்சலுடன் பார்த்தனர் பெரிசுகள்.
இரண்டு பெருசுகள் ஓய்ந்து போய், சாலையோர மரத்தடி பெஞ்சில் உட்கார்ந்து செய்தித்தாளை மேய்ந்தன.
கர்மம்...கர்மம்! படத்துக்கு பேர் வெச்சிருக்கானுக பாருங்க!
துண்டுபீடின்னு...த்தூ! வேற பேரே கிடைக்கலையா இவனுகளுக்கு?
செய்தித்தாளில் வந்திருந்த சினிமா விளம்பரத்தைப் பார்த்து விட்டு ஒரு பெருசு புலம்ப
என்னது..
துண்டு பீடின்னு ஒரு படமா?..காலக் கொடுமை!.....ஹூம்...அந்தக் காலத்திலும் படத்துக்குப் பேர் வெச்சாங்க...எப்படி?...
மணாளனே மங்கையின் பாக்கியம்!..
தாய்ச் சொல்லைத் தட்டாதே!ன்னு!
இன்னொரு பெருசு தன் பிலாக்கணத்தைத் துவங்கியது.
அப்போது....
சர்...சர்
ரென்று அந்தச் சூழ்நிலையின் ரம்மியத்தைக் குலைக்கும் விதமாய் கடந்து சென்றன இரண்டு போலீஸ் ஜீப்புகள். அந்த ஜீப்களின் வேகமே ஏதோ ஒரு அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கின்றது என்பதை உணர்த்தும் விதமாய் இருந்தது.
சற்றுத் தள்ளியிருந்த அந்த விஸ்வா டவர்ஸ்
காம்ப்ளக்ஸின் கீழே க்ரீச்
என்ற ஓசையுடன் அந்த ஜீப்களிரண்டும் நிற்க, பருத்தோர் கூட்டமும், இளையோர் கூட்டமும், தங்கள் வேலையை நிறுத்தி விட்டு, நெற்றியை சுருக்கிக் கொண்டு திரும்பிப் பார்த்தன.
என்ன சார்...காலங்காத்தால போலீஸ் ஜீப்புக வந்து நிக்கிதுக?.. ஏதாச்சும் பிரச்சினையா?
இரு கைகளையும் வேகமாய் ஆட்டியபடி நடந்து கொண்டிருந்த சமீபத்தில்தான் ரிட்டையர்டு ஆகியிருந்த கலால் துறை அதிகாரி கோகுல் தாஸ் தன் சக வாக்கிங் நண்பரான ரிட்டையர்டு கல்லூரி பிரின்ஸிபால் வர்கீஸிடம் கேட்டார்.
யாருக்குத் தெரியும் ஸ்வாமி?... நானும் உங்க கூடத்தானே வந்திட்டிருக்கேன்?...வேணா வாங்க என்ன?ன்னு போய்ப் பார்த்திட்டே வந்திடுவோம்
கோகுல்தாஸ் சொல்ல
தங்கள் வாக்கிங் திசையை மாற்றிக் கொண்டு இருவரும் விஸ்வா டவர்ஸ்
இருக்கும் திசை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.
அவர்கள் அங்கு போய்ச் சேரும் முன்னரே ஏகப்பட்ட கூட்டம் கூடி விட்டது. கூட்டத்தில் கிட்டத்தட்ட எல்லோர் முகத்திலுமே ஏதோ இனம் புரியாத ஒரு பீதி அப்பியிருந்தது.
ஒரு போலீஸ்காரர் கூட்டத்தை விரட்டிக் கொண்டிருந்தார், போங்கப்பா..போங்கப்பா!...கூட்டம் போடாதீங்கப்பா..
வெறும் காற்றில் லத்தியைச் சுழற்றி வீரம் காட்டிக் கொண்டிருந்த அந்த போலீஸ்காரரின் விரட்டலுக்குப் பணிந்து கூட்டம் லேசாய்க் கலைய, கோகுல் தாஸும், வர்கீஸும் கூட்டத்தின் முன் பகுதிக்குச் சென்று எட்டிப் பார்த்தனர்.
அங்கே....
சிமெண்டுத் தரையில்...கைகளையும், கால்களையும் தாறுமாறாக விரித்துக் கொண்டு குப்புறக் கிடந்தான் ஒரு மனிதன். அவன் தலைப் பகுதியில் உற்பத்தியாகியிருந்த ரத்த நதி மெல்ல ஊர்ந்து சில அடிகள் வரை சென்று, வறண்டு போயிருந்தது. பக்கவாட்டில் திருகிக் கிடந்த அவன் முகத்தில் திறந்திருந்த கண்களில் இன்னமும் அந்த கடைசி நேர பீதி மிச்சமிருந்தது. பாவம்...அந்தக் கடைசி விநாடியில் என்ன நினைத்திருப்பானோ?
பார்த்ததுமே புரிந்து கொண்டார் கோகுல்தாஸ், இது மேலேயிருந்து விழுந்த கேஸ் என்று. உடனே அனிச்சையாய் தன் தலையை உயரத் தூக்கி மேலே பார்த்தார். அவருடைய மிடுக்கான தோற்றத்தையும், மிகவும் ஷார்ட்டாக வெட்டப்பட்டிருந்த ஹேர் கட்டிங்கையும் பார்த்து விட்டு, அவரை நெருங்கி வந்த ஒரு போலீஸ்காரர், சார்...நீங்க டிப்பார்ட்மெண்ட் ஆளா?
கேட்டார்.
நோ...நோ...நான் உங்க டிப்பார்ட்மெண்ட் இல்லை...சென்ட்ரல் எக்ஸைஸ் டிப்பார்ட்மெண்ட்!...அது சரி...இது எப்படி?...
கீழே கிடக்கும் அந்தச் சவத்தைக் காட்டிக் கேட்டார் கோகுல்தாஸ்.
தெரியலை சார்!... விசாரிக்கணும்!... ஏ.சி.வந்திட்டிருக்கார்
என்றார் அந்தப் போலீஸ்காரர்.
யாரு இப்ப ஏ.சி?.. பேரு என்ன?
தீனதயாள் சார்!... இதுக்கு முன்னாடி சேலத்துல இருந்தார் சார்!
இந்த ஆளோட டிரஸ்ஸைப் பார்க்கும் போது இவன் ஒரு செக்யூரிட்டி போலத் தெரியறான்.
பிரின்ஸிபால் வர்கீஸ் தன் அபிப்பிராயத்தைச் சொல்ல
கரெக்ட்...கரெக்ட்
என்று அந்தப் போலீஸ்காரர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அந்தக் கார் வந்து நின்றது.
அதிலிருந்து இறங்கி வேக வேகமாய் நடந்து வந்த அசிஸ்டெண்ட் கமிஷனர் தீனதயாள், கொஞ்சம் விக்ரம் நிறைய அஜீத்.
வந்தவர் குப்புறக் கிடந்த அந்தப் பிணத்தருகே நின்று சில நிமிடங்கள் யோசித்து விட்டு, சொல்லி வைத்தாற் போல் மேலே அண்ணாந்து பார்த்தார்.
அவருடைய அந்தச் செய்கையைப் பார்த்த போலீஸ்காரர்